Showing posts with label பிரளயம். Show all posts
Showing posts with label பிரளயம். Show all posts

Monday, November 5, 2012

21,டிசம்பர் ,2012 : ஒரு ஸ்கான் பார்வை

அண்ணே வணக்கம்ணே ! 21,டிசம்பர் ,2012 அன்னைக்கு பிரளயம் வரும்ங்கறாய்ங்க. எல்லாம் ஃபணால் ஆயிருங்கறாய்ங்க. எங்க என்.டி.ஆர் மாதிரி ஒரு வேனை சைதன்ய ரதமாக்கிக்கிட்டு கு.ப ஆந்திரம்,தமிழ் நாடு மட்டுமாச்சு ஒரு டூர் அடிச்சு ஆ.இ.2000 பத்தி பிரசாரம் பண்ணனும்னு ப்ளான் பண்ணியிருந்தம்.

இப்பம் இவிக சொல்றதை பார்த்தா  எல்லாம் அம்பேல் தானா? சரி அன்னைக்கு  நாள் நட்சத்திரம்லாம் எப்படின்னு பார்ப்போம்.

கிழமை வெள்ளிக்கிழமை ; திதி: சுக்ல பட்ச அவமி (இரவு 12.46 வரை)
நட்சத்திரம்: உத்தராபாத்ரா (உத்திரட்டாதி) பகல் 9.49 வரை அதன் பிறகு ரேவதி சந்திரன் மீனத்துல
துர்முகூர்த்தம்: காலை 8.56 முதல் 9.40 மற்றும் பகல் 12.35 முதல் 1.19 வரை
வர்ஜியம்: இரவு 10.55 முதல் ,12.40 வரை

ஞா கிழமை,கிரகணம் பிடிச்சு ,அன்னைக்கு அமாவாசை ,பவுர்ணமி எதுனா கோ இன்சைட் ஆனா பூகம்பம் இத்யாதிக்கு வாய்ப்புண்டுனு ஒரு விதி இருக்கு.21,டிசம்பர் ,2012 அன்னைக்கு இது எதுவுமே கோ இன்சைட் ஆகலை.உஸ் அப்பாடா ..மினிம கியாரண்டி..

இட்ஸ் ஓகே அன்னைக்கு என்ன கிரகஸ்திதின்னு பார்ப்போம். ரிஷபத்துல  வக்ர குரு +கேது சேர்க்கை (குரு வக்ரம்ங்கறதால அஜீஸ்மென்டு) சனி துலாமில் உச்சம் (ஆயுள் காரகர்) விருச்சிகத்துல புதன்,சுக்கிரன்,ராகு.

புதனோட ராகு சேர்ந்தா யாவாரிங்க,கல்வியாளர்கள், ஆடிட்டர்,டாக்டர்களுக்கு தலைவலி. சுக்கிர ராகு சேர்க்கை பெண்களுக்கு பிரச்சினைய தரும்.  பொதுவாவே வெனிரியல் டிசீஸ் அட்டாக் ஆக வாய்ப்பு அதிகமா இருக்கும். ஹவுசிங்,ஆட்டோ மொபைல் துறைகளுக்கு நல்லதில்லை. சூரியன் தனுசுல, செவ் மகரத்தி உச்சம். சனி சூரியனை பார்க்கிறாரு. ஆட்சியாளர்களுக்கு தலைவலி.

ஒன்னும் அந்தளவுக்கு வில்லங்கமான கிரக நிலையா தோனலை. நம்ம நாட்டோட லக்னம் ரிஷபம்,ராசி கடகம். சுதந்திர இந்தியாவின் ஜாதகம் :

லக்னம் ரிஷபம். 1-7 ல ராகு கேது , ரெண்டுல செவ்( ராணுவ செலவு கழுத்தை நெறிக்க இதுவும் ஒரு காரணம்) 3ஆம் பாவத்துல சுக்கிரன் சூரியன் , சனி ,புதன்,சந்திரன், 6ல குரு,

2012-7-15 முதல் 2013-6-27 வரை சூரியதசையில சனி புக்தி .. சூரியன் 3 ல் ஓகே. சனியோட சேர்ந்து 3 ல் நின்றதுதான் கொஞ்சம் போல வவுத்தை கலக்குது.

ரிஷப லக்னத்துக்கு சனி யோக காரகன். 3 ங்கறது மாரக ஸ்தானம். இதுல சூரிய தசையில சனி புக்தி வேற நடக்குது.

சூரியன் +சனி/ராகு தொடர்பு ஏற்பட்டா ஆட்சியாளர்களுக்கு ஆப்புன்னு அருத்தம்.கோசாரத்துலயும் சனி சூரியனை பார்க்கிறாரு.

ஆக  21,டிசம்பர் ,2012 க்கு முன்னே பின்னே அரசுகள் கவிழலாம்.தலைவர்கள் சாகலாம்னு சொல்ல முடியுதே தவிர புரட்டிப்போடற அளவுக்கு பிரளயம் வரும்னெல்லாம் சொல்ல முடியலை..

நம்ம நாட்டோட ராசியான கடகத்தை வச்சுப்பார்த்தாலும் லக்னாதிபதி  சந்திரன்  பாக்யத்துல , 7/8 க்கு அதிபதியான சனி 4 ல் உச்சம் ( ஆட்சியாளர்கள் நீச சகவாசம் செய்து அதனால நாறலாம் -ஆளுங்கட்சியில உட்கட்சி பூசல் வரலாம் - தொழிலாளர்கள் பெரிய அளவுல வேலை நிறுத்தத்துல ஈடுபடலாம்.

3/12 க்கு அதிபதி 5 ல் . ஆட்சியாளர்கள் மக்களை இவிக எவ்ள அடிச்சாலும் தாங்கறாய்ங்க .ரெம்ப நல்லவுங்கனுட்டு எதுனா உபரியா பளுவை ஏத்த ,மக்கள் திரஸ்கரிச்சு ரோட்டுக்கு வரலாம். ஆட்சியாளர்களுக்கு அவப்பேர் வரலாம். 4,11 க்கு அதிபதியான சுக்கிரன் 5 ல் வருவதால் ஒரு பெண் அரசியல் வாதி (சோனியா தவிர்த்து ) லைம் லைட்டுக்கு வரலாம்.

புத,சுக்கிரர்களோடு ராகு சேர்வதால் அந்த பெண் ஆண் லட்சணங்களுடன் இருக்கலாம் . விதவையா இருக்கலாம். தனித்து வாழ்பவராக இருக்கலாம்.

புதன் =வியாபாரம் ; ராகு =ஊழல் , சுக்கிரன் =ஹவுசிங்,ஆட்டோ மொபைல் ,ராகு =ஊழல் எனவே இது தொடர்பான ஊழல்கள் எதாவது வெடிக்கலாம்.

ரெண்டுக்கதிபதியான சூரியன் 6ல் நிற்பதால் ஷேர்மார்க்கெட் தொபுக்கடீர் ஆகலாம். 5,10 க்கு அதிபதியான செவ் 7 ல் உச்சம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் சீனத்துடன் (எதிரி) உரசல் அதிகரிக்கலாம். பெரிய தீவிபத்து அ பூகம்பம் நடக்கலாம்.

11ல் வக்ர குரு  நல்லதில்லை.இவரோட கேது சேர்ந்ததால நாடு ஒரு நல்ல பாடத்தை படிக்க வேண்டியிருக்கும்.ஞானோதயம்?

என்னதான் முக்கி முக்கி ரோசிச்சாலும் பிரளயம்ங்கற வாசனை கூட வரலிங்கணா.. ஜோதிடன் பலனை சொல்லத்தான் முடியும்.அந்த பலனை தர்ரது ஆத்தா தானே..