Monday, January 23, 2012

அம்மனின் வாகனம் ஆடு


அண்ணே வணக்கம்ணே !

பக்த சனங்க சைக்காலஜி என்னன்னா இவியளுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் சாமிய கண்ணில்லையா, கையில்லயா காலில்லியான்னு ஏகத்துக்கும் கிராஸ் பண்ணுவாய்ங்க.ஆனால் இவிகளுக்கு நல்லது நடக்கும் போது டீல்ல விட்டுருவாய்ங்க.

அது என்னமோ நாம தேன் விசித்திரமான கேரக்டராச்சே. பிரச்சினைன்னு வரும்போது "மட்டும்" ஜேஜிக்கு சோப்பு போடறது நமக்கு பிடிக்காது. சனங்களையும் இப்படித்தேன் டீல் பண்றோம். சோத்துக்கில்லாத நாள்ளயே ஆறு மாசத்துக்கு ஒருக்கா வசதி வந்தாலும் மொதல்ல ஃபுல் டாக் டைம் போட்டுக்கிட்டு "ஒன்னுமில்லை பாஸ்.. ச்சொம்மாதேன்.. டச்ல இருக்கனுமில்லையா"ன்னு பேசற கேஸு நாம.ஜேஜிகிட்டயா வேற மாதிரி நடப்போம்.

நம்ம அம்பறாத்துணியில கச்சாமுச்சான்னு அம்புகள் இருக்கு.பிரச்சினைன்னு வரும்போது அல்லாத்தையும் ஒன்னு பின்னாடி ஒன்னு விட்டுட்டு ..அம்புகள் தீர்ந்த பின்னாடி அம்பறாத்துணியை வீசி ,வில்லை எடுத்து வாத்யார் கணக்கா சுழற்றி அப்பயும் வேலைக்காகலின்னாதான் ஆத்தாளை கூப்டுவம். என்னதான் கேடு கெட்ட மன்ச ஜன்மம்னாலும் பெரியார் ,என்.டி.ஆர் ஊட்டிவிட்ட செல்ஃப் ரெஸ்பெக்ட்னு ஒன்னு இருக்கில்லை.

அப்பம்..ஆத்தாளும்.. சே பாவம் என்னைக்கும் கூப்டாத புள்ளை கூப்டுது. நெஜமாலுமே கிரிட்டிக்கல் போலன்னு பட்டுன்னு புலிமேலயோ ,சிங்கத்து மேலயோ ஏறி ஆஜராயிருவா. இந்த தாட்டி ஆட்டுமேல ஏறி வந்திருக்கா.

அஸ்கு புஸ்கு ஆத்தாளுக்கு ஆட்டுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா பெத்த அழகான புள்ளை முருகன். முருகனுக்கு ஆரம்பத்துல வாகனம் ஆடுதேன். மயில் எல்லாம் அப்பாறம் பேங்க்ல லோன் போட்டு வாங்கினது.

நம்ம வீட்ல ரெண்டு வண்டி ,ஒரு பழைய சைக்கிள் இருக்கு. ஜா.ரா @ சுந்து சித்தூர் பஸ் ஸ்டாண்ட்லருந்து ஃபோன் போடறாரு.

"அண்ணே.. முருகேசண்ணே .. எப்படி சித்தூர் வந்தேன்னே தெரியலை. ஏதோ ஒரு சக்தி சித்தூர் பஸ் ஸ்டாண்ட் வரை தள்ளிக்கிட்டு வந்துருச்சு.. உங்க வீட்டுக்கு வழி தெரியல்லை. பட படன்னு வருது.. கண்ணை இருட்டுது ..விளுந்துருவன் போல இருக்கு.. சீக்கிரம் வாங்கண்ணே"

இப்படி ஒரு ஃபோன் வந்ததும் .. நமக்குள்ள இருக்கிற முகமது (சல்) சீறி கிளம்பறாரு. ரெண்டு வண்டியையும் கிளப்ப பார்க்கிறோம். குளிருக்கு ஜா.ரா மூளை மாதிரி விறைச்சுக்கிடக்கு. அப்பம் என்ன பண்ணுவோம்.

படக்குன்னு சைக்கிளை எடுத்துக்கிட்டு கிளம்பிருவம். அப்படித்தேன் .. நம்ம சுந்து பண்ண அலப்பறையையும் - அதுக்கு நாம கொடுத்துக்கிட்டிருந்த கவுண்டர்களையும் பார்த்து கடுப்பான ஆத்தா ஷெட்ல மூலையில.. துணி போர்த்தி வச்சிருந்த முருகனோட வாகனமான ஆடு மேல ஏறி வந்துட்டா..
இப்பம் ஒத்துக்கிடறிங்களா? ஆத்தாவோட வாகனம் ஆடுன்னு.

அவன் அவள் அதுங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு டீல்ல விட்டிருந்தம். இப்பம் ஜோதிடம் 360 ஸ்க்ரிப்டை எத்தீனி தபா ட்ரிம் பண்ணி எத்தீனி தபா எடிட் பண்ணாலும் கண்ணைதான் கட்டுதே தவிர அது ஜா.ரா மாதிரியே கிடக்கு.

நம்ம முயற்சியெல்லாம் ஓவர். இனி ஆத்தா கண் பார்த்தாதான் வேலைக்காகும்னு தோனிருச்சு.அதனாலதேன் இந்த பதிவு.

அவன் அவள் அது தொடரோட கடந்த அத்யாயத்தை படிக்காதவுக இங்கன அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டுங்க. அப்பத்தேன் லிங்க் வரும்.

மேற்படி நிருபர் குல திலகத்தோட பெருமையையெல்லாம் படிச்சிங்கல்ல. இந்த கேரக்டரோட நமக்கு முட்டிக்கிச்சி.அப்பம் ஆத்தா எப்படி நம்மை சேஃப் பண்ணாள்னுட்டு அடுத்த பதிவுல சொல்றேன்.

ஆத்தா ஆடு மேல வந்தாள் சரி ..வந்து என்ன பண்ணாள்னு கேட்கிறவுகளுக்கு சுன்டரேசங்கற பேர்ல வந்து ஜா.ரா பண்ண அழிச்சாட்டியம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

மணி அண்ணனோட முத்துச்சிதறல்கள் வலைப்பூவுல இருந்து அண்ணன் மேஷ லக்னத்தை பத்தி மாங்கு மாங்குன்னு எளுதினதை இந்த ஜந்து எளுத்துக்கு எளுத்து காப்பி பண்ணி நம்ம சைட்ல பேஸ்ட் பண்ணிருச்சு. வசம்மா மாட்டி வாங்கி கட்டிக்கிட்டு காணாம போயிருச்சு. இதான் மேட்டர்.

இந்த சந்தர்ப்பம் வரும்னு நமக்கு எப்பமோ தெரியும். இருந்தாலும் இந்த சுந்தரேசன் ஜா.ராவா இல்லாம இருந்தா ஒரு புதிய திறமை வெளிச்சத்துக்கு வர்ரதை தடுத்த பாவம் வந்துருமேன்னு நூல் விட்டுட்டம்.

நம்ம போதைக்கு ( நியாய உணர்வு) மணி அண்ணன் ஊறுகாய் ஆயிட்டாரு. அதனால மணி அண்ணன் கிட்டே இந்த பதிவு மூலமா மன்னிப்பு கேட்டுக்கறோம்