Thursday, December 27, 2012

செவ்வாயுடன் பேட்டி: 2

அண்ணே வணக்கம்ணே !
நவகிரகங்களுடன் பேட்டி வரிசையில செவ்வாயுடனான பேட்டி இந்த பதிவிலும் தொடர்கிறது.

நான்: வணக்கம் செவ்வாய் சார் ! பேட்டியை தொடரலாமா?

செவ்: கேள்விகளை கேள் !

நான்:
பாஸ் ! ஒரு ஜாதகத்துல மத்த கிரகங்கள் கெட்டிருந்தா அந்த கிரகம் கெட்டுப்போச்சு –இந்த கிரகம் கெட்டுப்போச்சுன்னு தான் சொல்றாய்ங்க. நீங்க கெட்டிருந்தா மட்டும் தோஷ ஜாதகம்னு தனியா எடுத்து வச்சுர்ராய்ங்க - அதே மாதிரி தோ.ஜாதகத்துக்குத்தான் இதை கண்ணாலம் பண்ணனும்னு சொல்றாய்ங்களே ஏன்?

செவ்:
நைனா! என்னோட காரகங்கள்ள முக்கியமானது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜை. அங்கன தான் வெள்ளையணுக்கள் உருவாகுது. இந்த வெள்ளை அணுக்கள் தான் நோய் கிருமிகளை எதிர்த்து போராடி மன்சனை நோய்லருந்து காப்பாத்துது. ஒரு ஜாதகத்துல  நானே  பல்பு வாங்கியிருந்தேன்னு வை. அப்பம் அவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியிலயே தகராறு இருக்கும்.  சின்ன நோய் கூட சீக்கிரத்துல குணமாகாது. மறுபடி மறுபடி வரும். உசுருக்கே கூட உலை வச்சுரலாம். அதனாலதேன் தோஷ ஜாதகம்னு சொல்லி பக்கத்துல எடுத்து வச்சுர்ராய்ங்க.

நான்:
இது ஓகே பாஸூ.. தோஷ ஜாதகத்தை தோஷ ஜாதகத்துக்கு கட்டி வச்சுட்டா தோஷத்தை காக்கா தூக்கிட்டு போயிருமா?

செவ்:
9 விதமான விஷங்களை போகர் கலந்து நவபாஷாணம் தயாரித்து அதுல பழனி முருகன் சிலையை செய்து வச்சிருக்காரு.அது எல்லா நோயையும் குணமாக்குதுன்னு சொல்றாய்ங்களே அதே ஃபார்முலா தான் இங்கனயும் ஒர்க் அவுட் ஆகும். ரெண்டு தோஷம் சேரும்போது தோஷம் யோகமா மாறிருதுன்னு சொன்னா துள்ளி குதிக்க இங்கன சனம் காத்திருக்காய்ங்க.ஆனா அஸ்கு புஸ்கு .. அந்த பப்பெல்லாம் வேகாது.

நான்:
பின்னே என்ன ம னாவுக்கு தோஷத்தை தோஷத்தோட சேர்க்கிறாய்ங்க.

செவ்:
ரெண்டும் அல்ப்பாயுசு .முன்னே பின்னே போய் சேரட்டும்னுதேன். மேலும் சுத்த ஜாதகம் தோஷ ஜாதகத்தோட சேர்ந்தா ஒருத்தர் டிக்கெட் போட்டுர இன்னொருத்தரு விதவனாவோ/விதவையாவோ இருக்க வேண்டி வரும். இதனால கள்ளத்தொடர்பு அது இதுன்னு ரூட்டு மாறிரும் இல்லியா.. அதனாலதேன் இந்த ஏற்பாடு. மேலும் பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னுங்கறாப்ல தோஷ ஜாதகத்தை கட்டிக்கிட்ட பார்ட்டியும் தோஷத்தை அனுபவிக்க வேண்டி வந்துருமில்லியா அதை அவாய்ட் பண்ணத்தேன் இந்த ஏற்பாடு

நான்:
அது சரி பாஸூ..இப்பத்தேன் சகட்டுமேனிக்கு ஆன்டிபயாடிக்ஸ் தயாரிச்சு வச்சுருக்கமில்லை ..அதெப்படி சாக விட்டுருவம்?
   
செவ்:
உங்காளுங்க தயாரிச்சு ஏத்தற ஆன்டிபயாடிக்ஸுதேன் ஹ்யூமன் பாடியில இயற்கையா உள்ள இம்யூன் சிஸ்டத்தையே ஒழிச்சுட்டு இருக்குன்னு தெரியாதா உனக்கு . மேலும்  நான் கெட்டா ஜஸ்ட் இம்யூன் பவர் தான் குறையும்னு நினைச்சா எப்படி?

நான்:
இன்னம் என்னெல்லாம் பல்பு வாங்கும் பாஸூ..

செவ்:
நான் ரத்தத்துக்கு காரகன். ஒரு ஜாதகத்துல நான் கெட்டா ரத்தம் கெடும். ரத்தம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையும் வரலாம். ரத்தததோட வேலை என்ன? செல்களுக்கு ஆக்சிஜன் சப்ளை பண்றது.  நான் கெட்டா ரத்தம் சரியா பம்ப் ஆகாம போகலாம். அடைப்புகள் ஏற்படலாம். இதனால செல்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கலின்னா என்னாகும்? முக்கியமா மூளைக்கு கிடைக்கலின்னா என்னாகும்?

நான்:
இதுவும் மெடிக்கல் ப்ராப்ளம் தான். நாங்க தான் என்னெனமோ தகிடுதத்தம்லாம் செய்து மேனேஜ் பண்றோமே.

செவ்:
இங்கதான் பரிகாரம்ங்கற பாய்ண்டு வருது. நான் 3,6,10,11 தவிர எங்கருந்தாலும் தோஷம்னு சொல்றாய்ங்க.அதே நேரம் இன்னின்ன அமைப்பு இருந்தா தோஷம் பரிகாரம் ஆகும்னு சொல்றாய்ங்கல்ல .. உ.ம் நான் குருவோட சேர்ந்தா தோஷம் பரிகாரம்னு சொல்றாய்ங்க. குரு = தனகாரகன். பைசா இருக்கிறவனுக்கு மெடிக்கல் ரெமிடி கிடைக்கும்.

நான்:
அப்போ ஒரு ஜாதகத்துல நீங்க கெட்டா ஆவிசுக்கு கியாரண்டி இல்லேங்கறிங்க.

செவ்:
ஆமா நைனா.. நானு கோபத்துக்கு காரகன். நெருப்பு,மின்சாரம் , ஃப்யூயல்ஸுக்கு நான் தான் காரகன்.

ரத்தம் கெட்டவனுக்கு இயலாமை இருக்கும்.இயலாமைதான் கோபத்துக்கு காரணம்.கோபம் வந்தா மன்சன் என்னா பண்றான்னு அவனுக்கே தெரியாது. அவன் கொலை பண்ணுவானோ -தற்கொலை பண்ணிக்குவானோ இதர கிரகங்களோட பலத்தை பொருத்து டிசைட் ஆயிருது.

நெருப்புங்கறியா? என்னதான் தீயணைப்பு படை இருந்தாலும் தீப்பிடிச்ச வீட்டுக்காரனோட ஜாதகத்துல சந்திரன் நெல்ல இடத்துல இருந்து என்னை பார்த்தாலோ அ என்னோட சேர்ந்தாலோதான் தீ-அ.படை வந்து சேரும். இல்லாட்டி சாம்பல்தான்.

இதையே மின்சாரம் ,ஃப்யூயல்ஸுக்கும் பொருத்திப்பார்த்துக்க

நான்: பாஸூ.. ஷ்ரீராஜன்ங்கறவரு சில கேள்விகள் கேட்டிருக்காரு .உங்க பதிலை எதிர்ப்பார்க்கிறாரு .

செவ்: ச்சொம்மா கேளு கண்ணா ..காசா பணமா..? இல்லை சனந்தான் இதை எல்லாம் படிச்சுட்டு தெளிஞ்சுரப்போறாய்ங்களா.. கேளு

நான்: logic உள்ள இடங்கள் -உங்களுக்கு சொந்தம் என்றால் தர்க்க சாத்திரம் புதனுக்கு எப்படி சொந்தமாகும்?

செவ்: புதன் வித்யாகாரகன் .வியாபாரகாரகன்,கணிதத்துக்கு காரகன்.வித்தை,வியாபாரம்,கணிதத்துக்கு தேவையான அளவு லாஜிக்கல் நாலெட்ஜை அவரு கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கை ஒரு போர்களம். நான் யுத்தகாரகன். யுத்தத்துல தேவைப்படற லாஜிக்கல் நாலெட்ஜுக்கும் வித்தை,வியாபாரம்,கணிதத்துல தேவைப்படற லாஜிக்குக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.

நான்:
மலைக்கு அதிபதி சூரியன் குறிஞ்சி கடவுள் முருகன் எப்படி உங்கள் தெய்வம் ஆனாரு?

செவ்:
கண்ணா நான் நெருப்புக்கு காரகன் .முருகன் மொதல்ல 6 தீப்பொறிகளா வெளிப்பட்டவரு. நான் யுத்தகாரகன்.அவரு தேவ சேனாதிபதி. இப்படி பல காரணம் இருக்கு. அதனாலதேன் எனக்குரிய கடவுளா முருகனை வச்சுருக்காய்ங்க

நான்:
logic+mech செவ்+சனி எஞ்சினீயர் logic+computer செவ்+ராகு- ப்ரோகிராம் -எஞ்சினீயர் செவ்+ராகு+சுக்- சினிமா டைக்டரர் logic+தரகர்-செவ்+புதனுக்கு ஷேர் மார்கெட் புரோக்கர் செவ்+கேது-மருத்துவர்? செவ்+சூரி-? செவ்+சந்_

செவ்:
இது ஒன்னோட வேலை .செவ்வாயோடு கிரகங்கள் சேரும்பலன்னு தலைப்பு கொடுத்து தீர்பபட்டா எளுதிக்க.  நிறைய வேலை இருக்கு. நாளைக்கு பார்ப்போம்.

நான்:
ஓகே பாஸ்..