Showing posts with label elections. Show all posts
Showing posts with label elections. Show all posts

Saturday, February 26, 2011

ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்


அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட "வீடு வரை உறவு - வீதி வரை மனைவி - காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்"னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல - கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா - அதாங்க ரூ 250)

Thursday, July 15, 2010

தேர்தல் செலவை இரட்டிப்பா திருப்பி தரனும்

இன்றைய செய்திகளின் சாரம் ஒன்றுதான். மக்கள் குறித்த பொறுப்பிலிருந்து அரசுகள் நழுவுகின்றன.

வருமானம் தேவையா டாஸ்மாக். எவன் குடிச்சு  நாசமா போனா என்ன ? பெண்டாட்டிய அடிச்சு உதைச்சு பணம் கேட்டு அவள் இல்லைனா போடி லாட்ஜுக்கு போய் எவன் கூடயாச்சும் படுத்து பணம் வாங்கியானு விரட்டினா இவிகளுக்கு என்ன? இவிக வீட்டு மகராசிங்க எல்லாம் கற்போட இருந்துட்டா போதுமில்லியா?

பெட்ரோ டீசல் உயர்வை எடுத்துக்கங்க. சாதாரணமா விற்பனை உயர்ந்தா லாபம் அதிகரிக்கனும். ஆனால் இந்த ரெண்டு ஐட்டத்துல விற்பனை உயர்ந்தா நஷ்டம் உயரும்ங்கற விசித்திரமான நிலை. நஷ்டத்தை கட்டுப்படுத்த வினியோகத்தை கட்டுப்படுத்தனும். அது இவிகளால  முடியாது . ஒரு மந்திரி சின்ன வீட்டுக்கு போனா கூட பின்னாடி கான்வாய் போகனும். போங்கடா...............ங்க

கேள்வி கேட்க ஆரம்பிச்சா ஒரு ரூபாய்க்கே ஒரு கிலோ அரிசி தரோம்ல. அட டுபுக்குங்களா ஜப்பான் மாதிரி எரிமலைகள் இல்லே,ரஷ்யா மாதிரி பனியில்லை,  அரபு நாடுகள் மாதிரி பாலைவனமில்லே. கங்கா சிந்து பிரம்மபுத்திரானு ஜீவ நதிகள் இருக்கு. 120 கோடி சனம் இருக்கு. இதுல 70 சதவீதம் நிலத்துல இறங்கி பாடுபட தயாரா இருக்கு. இந்த நாட்ல மார்க்கெட் ரேட்ல அரிசி வாங்க முடியாத நிலைல சனம் இருக்குன்னா/ சாரி..அந்த நிலைல சனத்தை  வச்சிருக்கிங்கன்னா நாண்டுகிட்டு சாகவேணாம். இதுல பெருமை வேற அடிச்சிக்கிறாய்ங்க.

அடுத்த கேள்வி   "இலவச கலர் டிவி கொடுத்தோமில்லை". (இந்த டிவி எல்லாம் ஆந்திரா பக்கம் சீப்பா விக்குது.இதை ஒரு தொழிலாவே செய்றாய்ங்க). எதுக்குங்கண்ணா கலர் டிவி. ராத்திரி பத்துக்கு மேல எஃப் டிவி பார்த்து விரைச்சுக்கிட்டா பெண்டாட்டி மேல பாயவா? சனத்தொகைய பெருக்கவா? டிவி விளம்பரத்துல வர்ர பிளாஸ்டிக், காஸ்மெடிக் குப்பைகளை வாங்க பத்து வட்டிக்கு கடன் வாங்கி அதை திருப்ப முடியாம நாண்டுக்கிட்டு சாகவா?

ஒரு பொறுப்புள்ள அரசாங்கம்னா  என்ன செய்யனும் ? விலைவாசிய கட்டுப்படுத்தனும். மார்க்கெட் ரேட்ல அரிசி வாங்கற அளவுக்கு ஏழை மக்களோட வருமானத்தை உயர்த்த திட்டம் போடனும். அமல் செய்யனும். இதெல்லாம் பொறுப்புலருந்து நழுவறதுதானே

இது மட்டுமில்லிங்கண்ணா தொழில் வளர்ச்சி,வேலை வாய்ப்பு பெருக்கத்துக்கு பாடுபட வேண்டிய பொறுப்புலருந்து நழுவி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால விளை நிலங்களை விவசாயிங்க கிட்டருந்து  சல்லீஸா  பிடுங்கி பன்னாட்டு கம்பெனிகள் ஆசனத்துல செருகறாய்ங்க. அவிக நோகாம ரியல் எஸ்டேட் வியாபாரத்துல இறங்கிர்ராய்ங்க.

எனக்கு தெரிஞ்சு ஒரு பார்ட்டி அவன் பெண்டாட்டிய வேலையெடுக்கவே ஒரு ஆளை போட்டுவச்சிருந்தான். அந்த ரேஞ்சுக்கு  ஆட்சியாளருங்க  வந்துட்டாய்ங்க. எது செய்யனும்னாலும் தனியார் .ரோடு போடனுமா தனியார், கக்கூஸ் கட்டனுமா தனியார்.

நேரு காலத்துல எதுக்கெடுத்தாலும் அரசாங்கம். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் கட்டனுமா அரசாங்கம். அந்த ஹோட்டல்ல சலூன் வைக்கனுமா அரசாங்கம். தூத்தேரிக்க..

உண்மை அந்த முனைலயும் இல்லே. இந்த முனைல இல்லே. சென்டர்ல கீதுனு இவிகளுக்கு உறைக்கவே உறைக்காதா?

முதல் கோணல் முற்றும் கோணலுங்கறாப்ல ஒரு எம்.எல்.ஏ வேட்பாளன் தேர்தலுக்காக  ஒரு கோடி செலவழிக்கிறான்.  நாலு எம்.எல்.ஏ தொகுதி சேர்ந்தது ஒரு எம்.பின்னா ஒரு எம்.பிக்கு நாலு கோடி . 500 எம்.பினு வச்சா கூட ரூ.2000 கோடி செலவழிக்கிறாய்ங்க. ( ஜெயிச்சு வந்தவன் கதை மட்டும் இது. செல்வாக்கான தோத்த கேஸுங்களுது இன்னொரு 2000 கோடி போட்டா நாலாயிரம் கோடி.

இந்த நாலாயிரம் கோடியை  இருபத்தஞ்சு இருபத்தஞ்சு பர்சன்டா அஞ்சு வருஷத்துல பீராய அவன் எத்தனை லட்சம் கோடிகள் மதிப்புள்ள அரசு திட்டங்களை சீர்குலைக்கனும் கணக்கு போட்டுப்பாருங்க.

என்னை கேட்டா உங்களால எதை ஒழிக்கவே முடியாதோ அதை ரெகக்னைஸ் பண்ணிருங்க. ( உ.ம்: விபச்சாரம்). தேர்தல் செலவுக்கு ஒரு எம்.எல்.ஏ ஒரு கோடி வரை , ஒரு எம்.பி.வேட்பாளன் 4 கோடி வரை அஃபிஷியலா   நன்கொடை வசூலிக்கவோ ,செலவழிக்கவோ அனுமதிக்கனும்.

மேற்படி தொகை எப்படி வந்ததுன்னு கேட்க கூடாது. செலவழிக்கட்டும். ஜெயிச்சு வந்தவன் ஊழல் குற்றச்சாட்டில்லாம பதவி காலத்தை முடிச்சா ஒத்தைக்கு ரெட்டையா கொடுத்து ஒழிச்சுருவம். இந்த பன்னாடை நாலணா லஞ்சம் வாங்கினா அங்கன மொத்தமா ஒரு ரூபா வேலை கெட்டுப்போயிருதுல்ல. மக்கள் வரிப்பணம் நாசமா போயிருதுல்ல. அஞ்சு வருஷத்துல இந்த பிக்காலி 25% லஞ்சம் வாங்க வாங்க எத்தனை லட்சம் கோடி ரூபாய் அரசுபணம்  நாசமா போகும்னு கணக்கு போட்டு பாருங்க. அதோட ஒப்பிட்டா அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் அரசாங்கம் திருப்பி கொடுக்கப்போற எட்டு கோடி ஒரு கணக்கே கிடையாது. பதவில இருக்கிறச்ச லஞ்சம் வாங்கினது ப்ரூவ் ஆயிட்டா முதற்கண் அவன் செலவழிச்ச தொகை கோவிந்தான்னிரனும். அதே மாதிரி அவனுக்கு ரெண்டாவது இடத்துல வந்த வேட்பாளனுக்கு அவன் செலவழிச்ச தொகைய 24% வட்டி போட்டு திருப்பிரனும் (அஞ்சு வருஷத்துக்கப்புறம்) . இன்னம் சொல்லப்போனா போஸ்ட் டேட்டட் செக்கே தரலாம். வங்கிகள் அதன் பேர்ல கடன் தர்ரதை கூட அனுமதிக்கலாம்.

இல்லாட்டி அந்த எம்.எல்.ஏ ,எம்.பி பொறுப்புல செலவழிக்க பெரிய அளவுல  நிதி ஒதுக்கீடு பண்ணிரனும்.  அஞ்சு வருசத்துல 25% கமிஷனாவே அந்தாளு பண்ண தேர்தல் செலவை ( ரூ . நாலு கோடி)   ரிக்கவரி பண்ணிக்கிறாப்ல செய்துரலாம்.

இப்படி செய்துட்டா  அரசியலும் ஒரு தொழிலா மாறிரும். வங்கிகள் கடன் கொடுக்கலாம். கார்ப்போரேட் கம்பெனிகள் ஸ்பான்ஸர் செய்யலாம். எப்படிங்கண்ணா நம்ம ஐடியா?  விலைவாசியெல்லாம் ஏறிருச்சுங்கண்ணா. சனம் வேற முழிச்சிக்கிட்டாய்ங்க. மிந்தியெல்லாம் சிங்கிள் டீ குடிச்சுட்டு தேர்தல் வேலை செய்யற தொண்டர்கள் இருந்தாய்ங்க.

இன்னைக்கு அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர் போட்டு தினசரி பணம் பட்டுவாடா பண்ணவேண்டியதாயிருக்கு. குவார்ட்டர், மட்டன் பிரியாணி எக்ஸ்ட்ரா. பொதுக்கூட்டம்னா ஒரு ரேட்டிருக்கு. மறியல்னா ஒரு ரேட்டு. அட ஒரு ப்ரஸ் மீட்டை எடுத்துக்கங்க.

சாதாரண மீட்டுன்னா நிருபர் எல்லாம் அம்பேலாயிர்ரான். ஃபாலோட் பை டின்னர்னா டின்னர் டேபிள் எல்லாம் ஹவுஸ் ஃபுல் ஆகுது.  அதுமட்டுமா விளம்பரம் கொடுத்த பத்திரிக்கைல டபுள் காலம் வரும். விளம்பரம் தராத பேபப்ர்ல பிட்டா போடுவான். செலவு இருக்குல்ல. ( தேர்தல் செலவு அதிகரிக்க, ஊழல் அதிகரிக்க மீடியாவின் டைனோசர் தனமான வளர்ச்சி கூட ஒரு காரணம்தான்.)

இந்த இழவெடுத்த நிலைல சொந்தப்பணத்தை செலவழிச்சு பதவிக்கு வந்து ஈர கோவணம் இழுத்துக்கட்டிக்கிட்டிருக்க இவிகல்லாம் காண்டா ..அதனால் தான் சொல்றேன். உன் பணம் நாட்டுக்கு வேணா. உன் பணத்தை (தேர்தலுக்கு செலவழிச்ச பணத்தை) ஒத்தைக்கு ரெட்டையா வாங்கிக்க. ஊழல் பண்ணா மட்டும் விரையடிச்சுரனும்.

இப்படி ஒரு பிரப்போசல் வந்தா அரசியல் ஓப்பன் புக்காயிரும்.