Sunday, October 30, 2011

பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு மூலம் செக்ஸ்



( முந்தா நாளு தாய்குலத்தின் மிரட்டல் மெயில்னு ஒரு பதிவை போட்டிருந்தம். ஒரு தாய்க்குலம் நாம சகட்டுமேனிக்கு ப்ளாக்ல எழுதினதையெல்லாம் படிச்சுட்டு தொடர்ந்து எடக்கு மடக்கா நம்மை மடக்கி மெயில் போட்டதையும் சொல்லியிருந்தம் . அந்த மகராசிக்கு பதில் கொடுக்கிறதுக்குள்ள உன்னைப்பிடி என்னைப்பிடின்னு ஆயிப்போச்சு. இப்பம் தேவையில்லாத மேட்டரையெல்லாம் வடிக்கட்டி கேள்வி பதில் கணக்கா மாத்தி இங்கன தந்திருக்கோம். வெறுமனே படிச்சுட்டு போயிராம நம்ம வாதத்துல தப்பு தவறு இருந்தா குட்டி சொல்லுங்க. )

1. நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் பத்தி எரியறச்ச வெறுமனே ஆண் -பெண் , செக்ஸாலஜி,சைக்காலஜின்னு ஜல்லி அடிக்கிறிங்களே.. இதெல்லாம் எஸ்கேப்பிசமில்லையா?

வரேன்.வரேன். இன்னைக்கு மனித குலத்தை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாமே ஒரே பிரச்சினையின் விளைவுகளே.

அந்த ஒரே பிரச்சினை எதுன்னா மனிதகுலம் இயற்கையிலிருந்து விலகிவிட்டது தான். அடிப்படையில் பார்த்தா மனிதன் கூட ஒரு மிருகம் தான்.ஆனால் அவன் மனிதனா நடிக்கிறான்.

ஒவ்வொரு மன்சனுக்குள்ளவும் ஒரு மிருகம் லேசான சங்கிலியால் பிணைக்கப்பட்டு எந்த கணமும் அது தெறிச்சு -வெளிய வந்துர்ர நிலையில இருக்கு. மனிதன் ஒரு மிருகம் இது இயற்கையின் விதி. ஆனால் அவன் மனிதனா நடிக்கிறான். இது சமுதாயத்தின் சதி.

சரி ஒழிஞ்சு போவட்டும் அட்லீஸ்ட் அந்த மிருகத்தை ரெண்டு நாளைக்கொருதரமாச்சும் காலாற நடக்கவிட்டு கக்கா,உச்சா போக வச்சு சீசன் சீசனுக்கு கிராசிங் அனுப்பி வச்சு மறுபடி கட்டி வச்சாலும் பரவால்லை.

அது பாவம் மூத்திரப்பை நிரம்பி, மூத்திரம் முட்ட,மலக்குடல் கனத்து ,விந்துப்பை பிதுங்கி யோனி உதடுகள் லூப்ரிக்கேட் ஆகி மினு மினுத்து கனிஞ்சு ,க்ளிட்டோரிஸ் விரைத்து ஏங்கி தவிச்சிட்டிருக்கு.

அதை இந்த சமூகத்தை போலவே தனிமனிதனும் கண்டுக்கிடறதில்லை. இதன் விளைவு ? செக்ஸுக்கு மாற்றா வன்முறை -பணம் -பதவின்னு தவிக்குது. எத்தனை உசரத்துக்கு போனாலும் அடியை பிடிடா பரதப்பட்டான்னு மறுபடி செக்ஸுலயே வந்து முட்டி நிக்குது.

மனிதர்களில் பலருக்கு வன்முறைக்கான உடல் வலிமையோ ,பணம் சம்பாதிக்கிறதுக்கு தேவையான திறமை , தகுதி ,சாலாக்கு, மானங்கெட்ட தனம் ,பதவியை பெறுவதற்கான தலைமை பண்புகள்,தியாகம் ,கூட்டி/காட்டி கொடுக்கும் கயவாளித்தனம் இல்லாம இருக்கலாம்.

ஆனால் கொஞ்சமே கொஞ்சம் பேரை தவிர அல்லாருக்கும் செக்ஸை பெறுவதற்கான தகுதியை இயற்கை தந்திருக்கு. இவிகளுக்கு செக்ஸ் மட்டும் எவ்வித குற்ற உணர்வோ ,பக்கவிளைவு குறித்த அச்சமோ (எய்ட்ஸ்/கர்பம்/கல்யாணம்) இல்லாம கிடைச்சுட்டா இவிக வன்முறை -பணம் -பதவியை நினைச்சுக்கூட பார்க்கமாட்டாய்ங்க.

இன்னைக்கும் மனிதனை இயற்கையோடு இணைக்கும் வல்லமை பெற்றிருப்பது செக்ஸ் ஒன்னுதான். ஆனால் அது எவ்வித குற்ற உணர்வுமில்லாம -குறிப்பிட்ட இடைவெளியில கிடைக்கனும் -எப்போதைக்கும் அவெய்லபிளா இருக்கனும். இது மட்டும் சாத்தியமாகி போனா நீங்க சொல்ற பற்றி எரியும் பிரச்சினைகள் எல்லாம் தானா அணைஞ்சு போயிரும்.

உதாரணத்துக்கு ஒன்னை மட்டும் டச் பண்றேன்.

மின்சார பற்றாக்குறைய ஓவர் லுக் பண்றதுக்கு அணுமின்சாரத்தை உற்பத்தி செய்ய அவுட் டேட்டட் ஃபார்முலாவை கொண்டு அணு உலைகளை ஸ்தாபிக்க துடிக்கிறாய்ங்க. லேட்டஸ்டா பிரதமரே அணு உலை எதிர்ப்பாளர்கள் வன்முறைய தூண்டுவதா புகார் சொல்லியிருக்காரு.அடுத்தது என்ன? அடக்குறைதேன்.

மின்சாரம். இதன் உபயோகங்கள் பலப்பலவா இருந்தாலும் அம்பானி முதல் கிறிஸ்டியான் பேட்டை அம்புரோஸ் வரை மின்சாரத்தை தேடறது ஒளி மற்றும் ஒலிக்காக.

ஒளியில்லேன்னா இருட்டு மண்டும். இது மரணத்தை ஞா படுத்தும். ஒலி இல்லேன்னா பேரமைதி நிலவும். இதுவும் மரணத்தை ஞா படுத்தும். செல் ஃபோனை சார்ஜ் பண்ண முடியாது. கம்யூனிகேஷன் பாதிக்கும். தனிமை மரணத்தை ஞா படுத்தும்.

மன்சன் அரண்டு போயிர்ரான். என்ன வேணம்னா செய்துக்க எனக்கு மின்சாரத்தை கொடுங்கற நிலைக்கு வந்துர்ரான்.

செக்ஸிலான உச்சத்தை அடையும் வாய்ப்பு பெற்றவன் /தன் செக்ஸ் பார்ட்னருக்கும் உச்சத்தை தரும் திறம் படைத்தவன் மரணத்தையே தரிசிச்சவனாயிர்ரான். அவன் மரணத்தின் நிழல்களான அமைதிக்கோ ,தனிமைக்கோ, இருட்டுக்கோ அஞ்சவே மாட்டான்.

நான் வேணம்னா சேலஞ்ச் பண்ணி சொல்றேன். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தை கொடுக்க சொல்லுங்க. மின் உபயோகம் பாதிக்கு மேல குறைஞ்சுரும்.

மின்சாரத்தை வச்சு உற்பத்தி செய்யறாய்ங்க. ஏன்? இயற்கை அவனுக்கு தந்த ஆணை உருவாக்கம் -பரவுதல் . இதை செக்ஸுவலா செய்யமுடியாத குறைக்கு உற்பத்தி.

அந்த உற்பத்திகளை வாங்கி வீட்டை நிறைக்கறாய்ங்க.ஏன்? அவிகளுக்குள்ள ஒரு வெற்றிடம். இயற்கையின் முழுமுதல் எதிர்ப்பார்ப்பு உருவாக்கம் - பரவுதல். இதை நிறைவேற்ற முடியாத காரணத்தால் சப்காஷியஸா அவிக இன்ஃபிரியரா ஃபீல் ஆகறாங்க. கில்ட்டியா ஃபீல் பண்றாங்க.

அதனால தான் ப்ளாஸ்டிக்,எலக்ட்ரானிக் குப்பைகள் ஹாட் கேக்கா சேல் ஆகி வீடுகளை நிறைக்குது. இந்த குப்பைகள் வீட்டை குப்பை மேடாக்க முடியுமே தவிர மனிதனில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவே முடியாது.

அது சரி மின்சாரம் போதலின்னா காற்றாலை, கடல் அலைன்னு என்னென்னமோ சொல்றாய்ங்களே அது எதையாவது ட்ரை பண்ணாம ஆட்சியாளர்கள் எதுக்கு அணுமின்சாரத்தை ஆப்ட் பண்றாய்ங்கன்னு கேப்பிக. சொல்றேன்.

மனிதர்கள் ஸ்தூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை உந்துவது இரண்டு இச்சைகளே. ஒன்று : கொல்வது இரண்டு: கொல்லத்துடிப்பது.

இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் . மக்களை போலவே ஆட்சியாளர்களுக்கும் செக்ஸ் நாட் அவெய்லபிள். ஆகவே அவிகளோட கொல்லும்-கொல்லப்படும் இச்சை செக்ஸ்ல நிறைவேற வாய்ப்பில்லாததால நேரடியா கொல்லப்பார்க்கிறாய்ங்க. தேர்தல் வந்தா அரசியல் ரீதியா கொல்லப்பட துடிக்கிறாய்ங்க.

இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூல காரணம் செக்ஸ் செக்ஸ் செக்ஸ். செக்ஸ் தவிர வேறில்லை. அதனாலதான் நான் செக்ஸை பத்தி எழுதறேன்.

பிரச்சினைகளோட சில்லிவேர்களை பிடிச்சுக்கிட்டு சில்லியா ஊசலாட நம்மால முடியலிங்க. சாரி..