Saturday, June 21, 2008

சர்வ மத சாரம்

அபய க்ஷேத்திரம் உடல் ஊனமுற்றோருக்கு வரம்

"ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" இதற்கு பொருள் இறைவன் மனிதர்கள் ரூபத்தில் எதிர்படுவான் என்பதே. இதனால் தான் பெரியோர் " மக்கள் சேவையே மகேசன் சேவை" என்று கூறியுள்ளனர். முழுமையான உடல்,மன நலம் கொண்ட மனிதர்களுகு புரியும் சேவையே மகேசன் சேவை என்றால் .. சமூகத்தால்,பெற்ற தாய் தந்தையரால் கூட நிராகரிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு புரியும் சேவையை என்னைன்பது? மனித வாழ்வின் பொருள் என்பதா? கருப்பொருள் என்பதா?

சித்தூர் மாவட்டம், திருப்பதி புறநகர் பகுதியான ரேணிகுண்டா ரயில்வே கேட் அருகில் உள்ள அபயக்ஷேத்திரம் ஆசிரமத்தையும், சிறகொடிந்த பறவைகளாய் இருக்கும் 40 உடல் ஊனமுற்றோர்,மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளோரையும், அவர்களது தொண்டுக்கே தமது வாழ்வை அர்ப்பணித்துகொண்ட தஸ்லிமாவையும் பார்க்கும் பொழுது ஒரு கணத்தில் இத்தனை எண்ணங்கள் உங்கள் மனதில் வட்டமிடும். சர்வ மத சாரம் இது தானா என்ற ஞானோதயமும் ஏற்பட்டுவிடும்.