Thursday, February 10, 2011

ராகு கேதுக்கள் கில்மா : 2


எச்சரிக்கை:

நமக்குனு அனுபவஜோதிடம்ங்கற பேர்ல ஒரு வெப்சைட் க்ரியேட் ஆயிருச்சுங்கண்ணா . உபயம் திரு.சரண் . கொஞ்ச நாளைக்கு பழக்கதோஷத்துல ப்ளாகராவே தொடரலாம்னு ஒரு எண்ணம். ( ஹி ஹி அதுக்குள்ளாற இங்கன உள்ள சரக்கையெல்லாம் அங்கன அடுக்கி வைக்கனும்ல)

ஜாதகத்துல ராகு கேதுக்கள் சரியில்லைன்னா தாம்பத்யம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்னு சின்ன ட்ரெய்லரை பார்த்தே அரண்டு போயிருப்பிங்க. ஆனாலும் இந்த பதிவை படிக்க வந்த உங்களுக்கு இன்னம் சில க்ளூஸ் தரேன். அதுவே க்ளூக்கோசா உங்களை உற்சாக படுத்தும்.

ஆல்கஹாலிக்ஸ், ட்ரக் அடிக்ட்ஸ், கள்ள காதல்/கள்ள உறவு , சூதாட்ட பைத்தியம்,கள்ளக்கடத்தல் பண்ணி வரிசையா மாட்டி போண்டியாகிறவன் ஜாதகத்துல எல்லாம் நிச்சயமா ராகு கேது சரியிருக்கமாட்டாய்ங்க.
இவிக செக்ஸ் லைஃப் எந்த லட்சணத்துல இருக்கும்னு சொல்லனுமா என்ன?

ஆமாங்கண்ணா குங்குமத்துல டெக்காமெரான் கதைகள்னு கில்மா கதைகள் தொடரா வந்ததை எத்தீனி பேரு ஞா வச்சிருக்கிங்க ( எனக்கு சுத்தமா மறந்து போச்சு) பை தி பை முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது.

சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. இதுக்கு பின்னாடி அனேக காரண காரியங்கள் இருக்கு. ஆனால் இதையெல்லாம் அறியாத பிராமணர்கள் ( முக்கியமா சம கால) இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிக்கிறதை சகிக்க முடியலை.

பாம்புக்கும் ராகு கேதுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.

பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இது ஒரு பக்கம்னா பாடில அசிமிலேஷன் ,எலிமினேஷன் ப்ராசஸ்ல கக்கா,மூச்சா, வெளி மூச்சு முழுமையா வெளியேறாம பாடில கேம்ப் அடிச்சுருதுங்க.

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை.

இந்த விஷங்களுக்கான குறியீடுதான் பாம்பு. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும்ங்கறதுதான் விஷயமே.. இதுதான் அசலான சங்கதி.


மேலும் ராகு கேது சரியில்லாதவுகளுகு சர்ப்பத்தின் குணம் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரக் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. ( நன்றி : ஓஷோ) பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி "இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க " என்று ஆரம்பித்த நொடியிலேயே " ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு" என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது. அதாவது ஜாதகரோட பாடி நேச்சர், வே ஆஃப் திங்கிங் மாறவே மாறாது, அதை மாத்தனும்னா அவிக லைஃப் ஸ்டைலை மாத்திக்கனும். என்விரான்மென்டை மாத்திக்கனும். சர்ப்பதோஷம் என்னெல்லாம் செய்யுமோ அதை வாலண்டியரா நடக்கவிடனும். அதான் உண்மையான பரிகாரம்.


மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.

இத்தீனி இம்சைய வச்சிக்கிட்டு என்னத்தை கண்ணாலம்? என்னத்த தாம்பத்யம்? அதனால மொதல்ல உங்க குடும்ப ஜோசியரை பார்த்து உங்க ஜாதகத்துல ராகு கேது நல்ல இடத்துல இருக்காய்ங்களானு பார்த்துக்கங்க.

அடடா.. ஜாதகம் இல்லியா? ஜாதகம் இல்லாமயே உங்க ஜாதகத்துல சர்ப்பதோஷம் இருக்கா இல்லியானு தெரிஞ்சிக்க ஒரு வழி இருக்கு .. டட்ட டாஆஆஆஆஆஆஆஆஆய்ங்க் அது அடுத்த பதிவுல