Showing posts with label kethu. Show all posts
Showing posts with label kethu. Show all posts

Friday, February 18, 2011

2011,மே16, ராகு கேது பெயர்ச்சி பலன்


மே16, ராகு கேது பெயர்ச்சி பலன்
அண்ணே வணக்கம்ணே,
என்னடா .. ராசிபலனோட எஃபெக்டே 15 டு 30 பர்சென்ட் தானு சொன்ன முருகேசன் ராசிபலனை வச்சே காலத்தை ஓட்டிர்ராப்ல இருக்குனு நினைச்சிராதிங்க. நம்ம நோக்கம் வெறுமனே பலன் சொல்லிட்டு போறதில்லிங்கோ. அடுத்த ராகு கேது பெயர்ச்சிக்கு நீங்க நம்ம சைட்ல பலன் எழுதற ரேஞ்சுக்கு உங்களை ப்ரிப்பேர் பண்றதுதான் நம்ம நோக்கம். ராகு கேதுவை பத்தி நம்ம ப்ளாக்ல நிறையவே எழுதியிருக்கன். அதையெல்லாம் ஒரு ரவுண்டு படிச்சிங்கனா ஒரு ஐடியா வரும்.

தற்சமயத்துக்கு ராகு கேதுவை பத்தி சின்ன அறிமுகம் கொடுத்துட்டு பலனை பார்க்க போயிருவம். இவிக ஒரு ராசில ஒன்னரை வருச காலம் இருப்பாய்ங்க. ஒருத்தருக்கொருத்தர் 7 ஆவது வீட்ல இருப்பாய்ங்க. மத்த கிரகங்கள் இவிக மத்தில மாட்டினா அது கால சர்ப்பதோஷம். இது கோசாரத்துல எப்ப வருதுனு பாருங்க. கால சர்ப்பதோஷத்தோட ட்ரெய்லரை பார்க்கலாம்.

இவிகளுக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. தாங்கள் நின்ன ராசி,அதனோட அதிபதி,தங்களோட சேர்ந்த கிரகங்களை பொருத்து பலன் தருவாய்ங்க. இதர கிரகங்களை போலவே இவிகளுக்கு காரகத்வம் எல்லாம் உண்டு. (போர்ட் ஃபோலியோ)

உங்களுக்கு ராகு கேதுக்கள் அனுகூலமா இருந்தா அவிக போர்ட் ஃபோலியோல வெற்றிக்கொடி கட்டலாம் . இல்லைன்னா அவிக போர்ட் ஃபோலியோல இருக்கிற அம்சங்கள் உங்களுக்கு டின் கட்டலாம். மொதல்ல போர்ட் ஃபோலியோவ பார்ப்போம்.

போர்ட் ஃபோலியோ ஆஃப் ராகு: (அவரே சொல்றாருங்கோ)
மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே.
ராகு சரியில்லின்னா செய்யவேண்டிய பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்
கேதுவோட போர்ட் ஃபோலியோ:
நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.
கேது சரியில்லைன்னா செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பி.கு:
ராகு கேதுக்கள் இந்திய அரசியலும் ஊழலும் போல பிரிக்கப்பட முடியாத கிரகங்கள் பாஸ்! அதனால உங்களுக்கு ஒருத்தர் சரியில்லைன்னா கூட ரெண்டு பேரோட பரிகாரங்களையும் செய்யறது பெட்டர். ஒய் பிக்காஸ் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிடறதால ஒருத்தர் நல்லாருந்தாலும்,அடுத்தவர் இவரை பார்க்க இவரே இம்சை பண்ணாலும் பண்ணிருவாரு.

மேலும் கேது சுக்கிரனுடைய ராசியிலும், ராகு செவ்வாயுடைய ராசிலயும் இருக்கிறதால கேது சரியில்லாதவுக சுக்கிரன், ராகு சரியில்லாதவுக செவ்வாய் தொடர்பான பரிகாரங்களையும் செய்துக்கறது பெட்டர். ( நம்ம ப்ளாக்லயே தேடுங்க. கிடைக்கும். தேடவேண்டிய வார்த்தை : " நவீன பரிகாரங்கள்"


பெண்கள்:
இன்னொரு முக்கியமான மேட்டருங்கண்ணா கீழே ராகு,கேது ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய பெண்களின் அடையாளங்களை தந்திருக்கன்.ராகு பலம்,கேதுபலம் இல்லாத சமயத்துல இவிகளை டீல் பண்ணா பல்பு வாங்கிருவிங்க டேக் கேர்.

ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்

கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்:

தொடர்ந்துபடிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, February 10, 2011

ராகு கேதுக்கள் கில்மா : 2


எச்சரிக்கை:

நமக்குனு அனுபவஜோதிடம்ங்கற பேர்ல ஒரு வெப்சைட் க்ரியேட் ஆயிருச்சுங்கண்ணா . உபயம் திரு.சரண் . கொஞ்ச நாளைக்கு பழக்கதோஷத்துல ப்ளாகராவே தொடரலாம்னு ஒரு எண்ணம். ( ஹி ஹி அதுக்குள்ளாற இங்கன உள்ள சரக்கையெல்லாம் அங்கன அடுக்கி வைக்கனும்ல)

ஜாதகத்துல ராகு கேதுக்கள் சரியில்லைன்னா தாம்பத்யம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்னு சின்ன ட்ரெய்லரை பார்த்தே அரண்டு போயிருப்பிங்க. ஆனாலும் இந்த பதிவை படிக்க வந்த உங்களுக்கு இன்னம் சில க்ளூஸ் தரேன். அதுவே க்ளூக்கோசா உங்களை உற்சாக படுத்தும்.

ஆல்கஹாலிக்ஸ், ட்ரக் அடிக்ட்ஸ், கள்ள காதல்/கள்ள உறவு , சூதாட்ட பைத்தியம்,கள்ளக்கடத்தல் பண்ணி வரிசையா மாட்டி போண்டியாகிறவன் ஜாதகத்துல எல்லாம் நிச்சயமா ராகு கேது சரியிருக்கமாட்டாய்ங்க.
இவிக செக்ஸ் லைஃப் எந்த லட்சணத்துல இருக்கும்னு சொல்லனுமா என்ன?

ஆமாங்கண்ணா குங்குமத்துல டெக்காமெரான் கதைகள்னு கில்மா கதைகள் தொடரா வந்ததை எத்தீனி பேரு ஞா வச்சிருக்கிங்க ( எனக்கு சுத்தமா மறந்து போச்சு) பை தி பை முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது.

சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. இதுக்கு பின்னாடி அனேக காரண காரியங்கள் இருக்கு. ஆனால் இதையெல்லாம் அறியாத பிராமணர்கள் ( முக்கியமா சம கால) இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிக்கிறதை சகிக்க முடியலை.

பாம்புக்கும் ராகு கேதுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்.

பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இது ஒரு பக்கம்னா பாடில அசிமிலேஷன் ,எலிமினேஷன் ப்ராசஸ்ல கக்கா,மூச்சா, வெளி மூச்சு முழுமையா வெளியேறாம பாடில கேம்ப் அடிச்சுருதுங்க.

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை.

இந்த விஷங்களுக்கான குறியீடுதான் பாம்பு. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும்ங்கறதுதான் விஷயமே.. இதுதான் அசலான சங்கதி.


மேலும் ராகு கேது சரியில்லாதவுகளுகு சர்ப்பத்தின் குணம் மெல்ல மெல்ல ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரக் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. ( நன்றி : ஓஷோ) பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி "இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க " என்று ஆரம்பித்த நொடியிலேயே " ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு" என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது. அதாவது ஜாதகரோட பாடி நேச்சர், வே ஆஃப் திங்கிங் மாறவே மாறாது, அதை மாத்தனும்னா அவிக லைஃப் ஸ்டைலை மாத்திக்கனும். என்விரான்மென்டை மாத்திக்கனும். சர்ப்பதோஷம் என்னெல்லாம் செய்யுமோ அதை வாலண்டியரா நடக்கவிடனும். அதான் உண்மையான பரிகாரம்.


மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.

இத்தீனி இம்சைய வச்சிக்கிட்டு என்னத்தை கண்ணாலம்? என்னத்த தாம்பத்யம்? அதனால மொதல்ல உங்க குடும்ப ஜோசியரை பார்த்து உங்க ஜாதகத்துல ராகு கேது நல்ல இடத்துல இருக்காய்ங்களானு பார்த்துக்கங்க.

அடடா.. ஜாதகம் இல்லியா? ஜாதகம் இல்லாமயே உங்க ஜாதகத்துல சர்ப்பதோஷம் இருக்கா இல்லியானு தெரிஞ்சிக்க ஒரு வழி இருக்கு .. டட்ட டாஆஆஆஆஆஆஆஆஆய்ங்க் அது அடுத்த பதிவுல

Wednesday, February 9, 2011

ராகு -கேதுக்களும் கில்மாவும்


இன்னாபா நீ அல்லாத்தையும் கில்மாவோட முடிச்சு போடறேனு அலுத்துக்கிடாதிங்க. நம்ம எல்லா செயல்களுக்கும் பின்னாடி உள்ள விருப்பங்கள் ரெண்டே (அது என்னான்னு இத்தீனி பதிவுக்கப்பாறமும் சொன்னா நான் உங்களை அறிவாளினு மதிக்கலைனு அர்த்தம்) அந்த ரெண்டு விருப்பமும் செக்ஸுல தான் நிறைவேறுது. இதுக்கு ஒரு ஆல்ட்டர் நேட்டிவ் தான் பணம். பணம் வருங்கறதுக்காக பதவி, கில்மா கிடைக்குங்கறதுக்காகத்தேன் பணம்,பதவினு அலையறது. ஆக இந்த லோகத்துல கில்மாவுக்கு தொடர்பில்லாத மேட்டரே கிடையாதுங்கோ ..

கில்மாவுக்கு ராகு - கேதுக்கள் எப்படி சப்போர்ட் தர்ராய்ங்க - ராகு கேது பலம் இல்லைன்னா கில்மா என்னாகும்னு இந்த பதிவுல பார்த்துரலாம்.

ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் உங்களுக்கு ராகு கேது பலமில்லேனு அருத்தம். இதான் சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாட்டா இம்சைதானு ஜோதிடம் சொல்லுது.

தோஷத்தை தோஷம் மணந்தா தோஷத்தை காக்காயா தூக்கிட்டு போவும். ஒரு ம..ரும் கிடையாது. சுத்த ஜாதகர்களோட பொழப்பு கெடக்கூடாது + இனம் இனத்தோட சேர்ந்தா பெருசா அதிர்ச்சி , நிராசை ஏற்படாது . கெட்டு அழிஞ்சாலும் ஒழியட்டும்னுதேன் இந்த விதி.


சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும். இதெல்லாம் ஒரு வகையில நிஜமா கூட இருக்கலாம். இல்லேங்கலை. ஆனால் இதெல்லாம் கட்டுச்சோற்று சித்தாந்தங்கள். கொஞ்சம் முக்கினா நிறைய மேட்டர் வெளியவருமுங்கோ.. வெய்ட் அண்ட் சீ.


என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன்.

உதாரணமா 1-7 ல் ராகு கேது:
இந்த அமைப்பு அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதையை தருது . ( என்னதான் காதலுக்கு கண்ணில்லேன்னாலும் அந்த மாதிரி ஒரு "குருட்டு" காதலி/காதலன் இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு வர்ரதுக்குள்ள கிடைக்கிறதுக்குள்ள பயங்கர டீலாயிருவாய்ங்க
சந்தேக புத்தி:
இது காதல்,காமத்துக்கு மட்டுமே இல்லை. நட்புக்கு கூட ஒதகாத சமாசாரம்.
அனைவரையும் நம்பி மோசம் போவது:
பக்கத்து வீட்டு பையனை ஒரு நாள் ஆணியடிக்க கூப்டா பரவாயில்லை. தினம்தினம் கூப்டா
ஈஸி மணி மீது கவர்ச்சி:
இன்னைக்கு பங்கு மார்க்கெட் தூக்கறதும் விழறதுமா இருக்கு. ஒவ்வொரு தாட்டி விழும்போதும் லட்சக்கணக்கான பார்ட்டிங்க ரங்க நாதன் தெரு நடைபாதையில கர்சீஃப் விக்கிற ஸ்டேஜுக்கு வந்துர்ராய்ங்க. அவிக செக்ஸ் லைஃப் என்ன கதியாகும் ரோசிங்க. குரோஸ் கணக்கா வயாக்ரா உபயோகிச்சாலும் காரியம் நடக்காது.
நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டறது:
தெனாலி ராமன் பூனைக்கு பால் வச்ச கதை தெரியும்ல - அட சூடுகண்ட பூனைங்கற பழமொழியாச்சும் தெரியும்ல. இதே கதை தான் இவிகளோடதும்.ஒரு தாட்டி பிரச்சினைல மாட்டினாலே ( முக்கியமா சென்சிட்டிவ் பார்ட்டிங்களுக்கு ) எல்லாமே ஒடுங்கி போயிரும்.
மனைவி /கணவர் நோயாளியாகவோ, உங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம்:
ஜவஹர்லால் நேரு ஹோமோ செக்ஸுனு ஒரு புஸ்தவத்துல படிச்சேன். கமலா நேருவோட ஹெல்த் கண்டிஷன் அப்படி..

மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு:
எண்ணங்களுக்கு சக்தி அதிகம். ஓஷோ சொல்வாரு .. நீ சாகப்போறேனு ஒருத்தனுக்கு சொல்ட்டா சில மாசத்துல அவனோட ஆயுள் ரேகையில வெட்டு விழுந்துருமாம். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"னு சொம்மாவா சொன்னாய்ங்க.


தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் - இதரரின் சந்தேகத்திற்கு ஆளாதல்:
புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.

பிரச்சினைனு வந்தாலே அது மொதல்ல தன்னோட எஃபெக்ட் காட்டறது பேட்டரிமேல தான்.

2ல் ராகு 8ல்கேது :
ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.

இந்த மாதிரி தின்னது ஃபெவிகாலையே கலந்து குடிச்சாலும் பாடில ஒட்டுமா? ரத்தம் விருத்தியாகுமா? பலான இடத்துக்கு பாயுமா? அப்பாறம் எங்கத்து கில்மா?

பெண் ஜாதத்துல இதை மாங்கல்ய தோஷம்ங்கறாய்ங்க கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
ஆத்துக்காரருக்கு டிக்கெட் கொடுத்த ராகு கேது இத்தோட விட்டா பரவாயில்லை - இதர கிரகங்கள்+பாவங்களும் கெட்டிருந்தா அவரு ஆவி ரூபத்துல " பட்டுவண்ண ரோசாவாம் -பார்த்த கண்ணு மூடாதாம் .. பச்சை மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாய்ங்க"னு பாடவேண்டி வந்துரும்.
பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள்:
என்ன தான் மாற்றுத்திறனாளிகள்னு தலையில வச்சு கொண்டாடினாலும் அவிகளோட செக்ஸ் லைஃப் பத்தி ஆராச்சும் ரோசிச்சமா?
சதா சர்வ காலம் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல்:
தம்பதியில ஆரோ ஒருத்தரு இந்த மாதிரி கேரக்டரா அமைஞ்சுட்டா அவிக லைஃப் என்னாகும்? ஆகே பீச்சே புண்ணாகும்.
குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம்:
கடன் உடன் பகைனு மொட்டையா போடறாய்ங்க. கடன் கில்மாவுக்கு உடன் பகைனு போடனும்ங்கோ..
குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்:
இந்த கலகச்சூழல்ல கில்மா சாத்தியமா?
அண்ணே ! இதெல்லாம் ஜஸ்ட் ட்ரெயிலருதேன். இன்னம் பலான பலான மேட்டர்லாம் மஸ்தா கீது. முக்கியமா "அவாள்". இந்த பாய்ண்டை வச்சு எப்படியெல்லாம் கேஷ் பண்ராய்ங்க - பொழப்பை கெடுக்கிறாய்ங்கங்கற மேட்டர் எல்லாம் அடுத்த பதிவில பார்ப்போம்..