Friday, March 11, 2011

தனபாவம் Vs ஆயுள் பாவம் « Anubavajothidam.com


ஜாதகத்துல லக்னத்துக்கு ரெண்டாமிடத்தை தனபாவம்ங்கறாய்ங்க. எட்டாமிடத்தை ஆயுள் பாவங்கறாய்ங்க.
ரெண்டு வாயை காட்டுது எட்டு மர்மஸ்தானத்தை காட்டுது. ரெண்டு குடும்பத்தை காட்டுது எட்டு தீர்க்க முடியாத கடனை காட்டுது. ரெண்டு பேச்சை காட்டுது எட்டு கொலை,கொலை முயற்சி, சிறைப்படல் தற்கொலை,விபத்து இத்யாதியகாட்டுது.

எல்லா கிரகங்களுக்கும் 7 ஆமிடத்தை பார்க்கிற சக்தி உண்டு. ( அதாவது தன் அதிர்வுகளை செலுத்துதல்). ரெண்டுக்கு ஏழாமிடம்னா அது எட்டாமிடம். எட்டுக்கு ஏழாமிடம்னா அது ரெண்டாமிடம்.இப்ப லிங்க் புரியுதா? இல்லியா சரி மொதல்ல .....

தனபாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு:
தனபாவத்துல சுபகிரகம் இருந்தா ஜாதகருக்கு லீகலா, ப்ளஸ் மோரல் வேல்யூஸோட தன சேர்க்கை ஏற்படும். இவர் லக்னத்துக்கு எட்டை பார்த்தாலும் ஏதோ மருந்து மாயத்துல குணமாயிர்ர நோயா வரும். ஒரு வேளை பாபகிரகம் இருந்ததுனு வைங்க. இல்லீகலா இம்மாரல் வேஸ்ல பணம் வந்து கொட்டும். ஆனா அதே கிரகம் எட்டையும் பார்க்கிறதால பாப கிரகத்தோட காரகத்வத்துல உள்ள நோய்கள் வரும். பில்லு எகிறும், சனி செவ் சம்பந்தப்பட்டிருந்தா அறுவை சிகிச்சை ,அங்க ஹீனம் கூட ஏற்படலாம். இதான் தன பாவத்துக்கும் ஆயுள் பாவத்துக்கும் உள்ள தொடர்பு.Read More