Tuesday, July 1, 2008

மனிதனின் ஒவ்வொரு செயலிலும் செக்ஸ் இருக்கிறது.

மனிதனின் ஒவ்வொரு செயலிலும் செக்ஸ் இருக்கிறது. எழுத்துக்கு உபயோகிக்கும் பேனா, ஓவியத்துக்கு உபயோகிக்கும் பிரஷ்,சிற்ப வேலைக்கு உபயோகிக்கும் உளி இப்படி மேஜரான கருவிகள் யாவும் ஆண்குறி வடிவிலேயே இருப்பதை கவனியுங்கள். அதனால் தான் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பெண்கள் பேனா,பிரஷ்,உளியை பிடிக்கிறார்கள். ஆனால் பிறப்பிலேயே ஆண்மை மிக்க ஆண்கள் மேற்படி பேனா,பிரஷ்,உளியை ஆணுறுப்புக்கு மாற்றாக பயன் படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது தண்ணீர் பாக்கெட்,ஜூஸ் பாக்கட் இத்யாதி அதிகம் விற்க காரணம் அவற்றில் தண்ணீர் அல்லது ஜூஸ் அருந்தும்போது முலையிலிருந்து பாலருந்தும் திருப்தி கிடைப்பதே என்று நினைக்கிறேன். ஆக்சுவலி ஆண் பெண்ணின் கருப்பைக்குள் புக விரும்புகிறான். (யோனி வழி தன் உறுப்பை செலுத்தி முயற்சிக்கிறான்.) அதே போல் பெண்ணும் ஆணை தன் கருப்பைக்குள் புதைத்துக் கொள்ளத்தான் விரும்புகிறாள். இதற்கெல்லாம் அடிப்படை நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்பதே !
ஒவ்வொரு பெண்ணும் ஒரு தாய். ஒவ்வொரு ஆணும் ஒரு மகன். இதை உணர்ந்து பெண்களை தாயாக பாவிக்க கற்றுக்கொண்டுவிட்டால் செக்ஸ் என்பது வம்ச விருத்திக்கும், வீரியம் புரளும்போது ஆஸ்வாசப்படுத்திக்கொள்ளவும் மட்டும் போதும் என்ற நிலை ஏற்படும்.

ஒரு பெண்ணை தாயாக பாவிப்பதில் பிராக்டிக்கலாய் சில பிரச்சினைகள் இருக்கலாம் எனவே அந்த "சக்தி"யையே தாயாய் பாவித்து, பெண்களில் அந்த சக்தியை காணக்கற்றுக்கொண்டு விட்டால் "கறந்த இடத்தை நோக்குவதும், பிறந்த இடத்தை பார்ப்பதும் " நின்று விடும்.