Sunday, July 27, 2008

மதம் லங்கோடு மாதிரி. அது உள்ளத்தான் அணியப்படனும்

குண்டு வெடிப்புகளுக்கு குண்டு வைக்கனும்னா அதுக்கு ஒரு வழி இருக்கு

1.வேலையில்லாத மூளை சாத்தானின் பட்டறை. எனவே நாட்டில் உள்ள இந்து முஸ்லீம் இளைஞர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை தரவேண்டும். என்ன வேலை? நதிகளை இணைக்க கால்வாய் வெட்டும் வேலை.(வட நாட்டுல வெள்ளம்..தென்னாட்டுல குண்டி கழுவ தண்ணி கிடையாதுங்கோவ்)
2.இந்தியாவில் பொது இடங்களில் மதம்,மத நிகழ்ச்சிகளை தடை செய்துரனும். மதம் தனிப்பட்டவரின்,தனிப்பட்ட விஷயம். அந்தரங்கமா மலம் கழிக்கறாப்பல உடலுறவு கொள்வது போல மத நிகழ்ச்சிகள் நடை பெறணும். க்ரூப் செக்ஸுக்கு எப்படி அனுமதியில்லையோ அதே போல கூட்டு வழிபாடு,பொரியல் வழிபாட்டுக்கெல்லாம்தடை போட்டுரனும்(அப்பவாச்சும் உண்மையான ஆன்மீகம் தழைக்குதா பார்ப்போம்).

3.மதம் லங்கோடு மாதிரி. அது உள்ளத்தான் அணியப்படனும். அணியாட்டா விரை நசுங்கிரும். அதே நேரத்துல சூப்பர்மேன் பேண்டுக்கு மேல ஜட்டி அணியறாப்பல அலப்பறை பண்றாங்கப்பா..

4. பண்டிகைக்கு லீவு,தாடி வளர்ப்பு ,மொட்டை இத்யாதிக்கெல்லாம் தடை.(மண்டையில ஆப்பரேஷன்னா விதிவிலக்கு)

5.மனிதனை மனிதனா நினைச்சு ஆட்சி செய்யறாங்க(கொஞ்சமாச்சும்) அதனால தான் இந்த குண்டுவெடிப்பெல்லாம் நடந்துகிட்டே இருக்குது. மனிதன் மிருகம். என்னதான் பேண்ட்,சட்டை போட்டாலும் உள்ள மணி அடிச்சுட்டுதான் இருக்கு. உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் தான் வன்முறையா வெடிக்குது. முதல்ல விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும், மாவட்டத்துக்கு ஒரு மண்டலத்தை அதுக்குன்னே ஒதுக்கிரனும் (அவிங்களுக்கு/அதாங்க அழகிகளுக்கு செக்ஸ் கல்வி,நோய் தடுப்பு,எய்ட்ஸ் பத்தியெல்லாம் நல்லா ட்ரெயினிங் கொடுத்து வுட்டுரனும்