Monday, June 22, 2009

அவ‌ன் ம‌னைவியை அனுப‌விச்சே,அவ‌னுக்கு தெரிஞ்சு போய் வெட்ட‌ வ‌ந்தான்

வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி

ஆம். நாம் அனைவருமே திட்டமிடுகிறோம். நம் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால் வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி
எங்கள் சந்திரபாபு முதல்வராக இருந்த போது விஷன் 2020 என்று ஒரு உட்டாலக்கடியை பற்றி தொண்டை வறள பேசிக்கொண்டிருந்தார். கம்யூனிஸ்டுகள் அதை விஷன் 420 என்று கிண்டலடித்து வந்தனர்.

நிற்க என் நண்பன் ஒருவனின் திட்டமிடல் பற்றியும் வாழ்க்கை அவனை எப்படி லொள்ளு செய்தது என்பதை பற்றியும் சில வரிகள். அவன் பெயர் ..வேண்டாம். ஏடுகொண்டலு என்று வைத்து கொள்வோம். பட்சி தோஷம்(?) காரணமாய் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாத உருவம். பள்ளி ஆசிரியரான அப்பா. உப தொழில் இலவசமாய் வரன் பார்த்தல். அம்மா ஹவுஸ் வைஃப். அந்த காலத்து கலப்பு திருமண தம்பதி. கச்சாமுச்சான்னு பசங்க. நம்ம ஏடுகொண்டலு சின்ன வயசுலயே வறுமை நிலைக்கு பயந்துட்டான். திறமை இருக்குங்கறதை மறந்துட்டான்.

இதில் அவன் ராசி வேறு ரிஷப ராசியாச்சா.. பேச்சுன்னா வெல்லம். பெண்கள் என்றால் ஜொள், தீனிப்பண்டாரம்,கல்யாணம், காரியம் ஒன்னு விடமாட்டான். மேலும் வேலி தாண்டி மேய்வதில் ஒரு ருசி. பாகாலாவில் ரயில்வே எம்ப்ளாயியின் ஆசைநாயகி, தங்கள் காலனி லாரி ட்ரைவரின் மனைவி,(அந்த நேரம் நம் ஏடு கொண்டலு பிரைவேட் லைன் மேனிடம் உதவியாள்தான்),பாகாலாவிலேயே கோர்ட்டு குமாஸ்தாவின் மனைவி. அவன் மேய்வதும்,பிடிபட்டு அவதி படுதல்,உதைபடுதல் ஏதோ ஒரு வகையில் நான் காப்பாற்றியோ,ஒப்பேற்றியோ விடுதல் நடந்து வந்தது.

இதெல்லாம் ஒரு புறம் என்றால் அவன் திட்டமிடல் தான் எரிச்சலூட்டும் விஷயம். காலனிக்கு செல்லும் டவுன் பஸ்ஸின் நேரத்தை கூட தெரிந்து வைத்துக் கொண்டு பத்து முறை நேரம் பார்த்து பார்த்து பேசுவது நம்மை பைல்ஸ் நோயாளி போலாக்கிவிடும். சரி ஒழியட்டும்.

லாரி ட்ரைவ‌ர் ம‌னைவி விஷ‌ய‌த்தில் கால‌னிக்கே போக‌ முடியாத‌ நிலைமை ஆகிவிட்ட‌து. நான் பாகாலாவில் ஏடுகொண்ட‌லு குட் வில்லில் வீடு பிடித்து வாழ்ந்து வ‌ந்த‌ க‌ட்ட‌ம். ப‌ய‌ங்க‌ர‌மாய் சாமி கும்பிடுவான் . என்ன‌டா வேண்ட‌றே என்றால் லாரி ட்ரைவ‌ர் செத்துட‌னும்னு வேண்ட‌றேன் என்றான்.

"ச‌ரிப்பா நீ அவ‌ன் ம‌னைவியை அனுப‌விச்சே,அவ‌னுக்கு தெரிஞ்சு போய் வெட்ட‌ வ‌ந்தான் ஓடி வ‌ந்துட்டே..இப்போ அவ‌ன் சாக‌னும்னு சாமி கும்பிட‌றே, அவ‌ன் செத்துட்டா அவ‌ன் பெண்டாட்டிய‌ நீ க‌ட்டிக்க‌ற‌யா/இல்லை வ‌ச்சுக்க‌றயா/ச‌ரி போவ‌ட்டும் அவ‌ளுக்கு ப‌ச‌ங்க‌ வேற‌ இருக்காங்க‌ அதுல‌ யாரையாவ‌து த‌த்தெடுத்துக்க‌ற‌யா/ உன் டீல் என்ன‌ சொல்லு நானும் உன‌க்கு ச‌ப்போர்ட்டா வேண்டிக்கிறேன்."என்றேன்.

ஊஹூம் என்று விட்டான். இன்று மின் துறையில் வேலை வ‌ந்து,திரும‌ண‌மாகி ஒரு பெட்டை குட்டி போட்டு,சுக‌ர் வாங்கி க‌டைக‌ளில் தூசு த‌ட்டும் குச்சி மாதிரி ஆகிவிட்டிருக்கிறான். ஊரில் உள்ள‌ எல்.ஐ.சி. எல்லாம் க‌ட்டி (சாவு ப‌ய‌ம்?) குடும்ப‌ செல‌வுக்கு கூட‌ யோசிக்க‌ வேண்டிய‌ நிலை .


இந்நிலையில் திருவ‌ள்ளூரில் ஒரு திரும‌ண‌த்துக்கு போக‌ வேண்டிவ‌ந்த‌து. நான் ஒன்றும் கூகுள் எர்த் மேதை இல்லாவிட்டாலும் குன்ஸாக‌ ஒரு குன்ஸ் வைத்திருப்பேன். நாய‌க்க‌ரே! திருத்த‌ணி போயிட்டு ர‌யில் பிடிச்சுர‌லாம் என்றேன். த‌னியார் ப‌ஸ் நின்னு போவான் அர‌சு ப‌ஸ் அடிச்சுகிட்டு போயிடுவான் ,ரோடு ந‌ல்லாருக்காது அது இது என்று டூர் புரோக்ராம‌ர் ஆகிவிட்டான். என‌க்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை. நீதான் டீம் லீட‌ர் ,நீ சொல்லு நாய‌க்க‌ரே..நீ எப்ப‌டி சொன்னா அப்ப‌டி என்று விட்டேன். பிற‌கு பாருங்க‌ளேன் நாயடி.

வ‌யா திருத்த‌ணி சென்னை ப‌ஸ் என்றான்/பின் காட்பாடி போய் அர‌க்கோண‌ம் ட்ரெயின், அங்கிருந்து ப‌ஸ்ஸுல‌ திருவ‌ள்ளூர் என்றான். எல்லாத்துக்கும் ஓகே என்றேன். காட்பாடி ஸ்டேஷன் போனோம் ம‌ணி ம‌திய‌ம் 2.40. இனி 6 ம‌ணிக்குத்தான் ர‌யில் என்று விட்டார்க‌ள். பின் வேலூர் ப‌ஸ் ஸ்டாண்டு. அங்கிருந்து அர‌க்கோண‌ம் . ர‌யிலில் திருவ‌ள்ளூர். திரும‌ண‌ம‌ண்ட‌ப‌ம் சென்ற‌தும் மூக்குக்கு நேராய் ரூம் சாவி கேட்டு அரிக்க‌ ஆர‌ம்பித்து விட்டான். வாங்கியும் விட்டான்.ரிச‌ப்ஷ‌ன் ஆச்சு.விடிய‌ல்
திரும‌ண‌ம். நான் ந‌ள்ளிர‌வு வ‌ரை சென்னை ந‌ண்ப‌ரை வ‌ர‌வ‌ழைத்து வைத்துக் கொண்டு அவ‌ர் க‌தைக‌ளை கேட்டுக் கொண்டிருந்து விட்டேன்.

குடித்த‌ காப்பி தொண்டை குழிவ‌ரையாவ‌து இற‌ங்கிய‌தோ இல்லையோ..ர‌யில் ர‌யில் என்று ஜெபிக்க‌ துவ‌ங்கினான். அதென்ன‌மோ என‌க்கு ர‌யில் என்றாலே அல‌ர்ஜி. என்னைப்பொருத்த‌வ‌ரை அந்த‌ உல‌க‌மே புராதன‌மான‌து,ம‌ர்ம‌ம் நிறைந்த‌து. ஆப‌த்து நிறைந்த‌து.நம் செல்வாக்கு எதுவும் வேலை செய்யாத தீவு அது .

க‌டைசி பெட்டியில் ஒரு எக்ஸ் சிம்ப‌ல் இருக்கும் அது எத‌ற்கு தெரியுமா ஒவ்வொரு ஸ்டேஷ‌னிலும் டார்ச் அடித்து பார்க்கும் போது எக்ஸ் இல்லாவிட்டால் பெட்டி ஏதோ க‌ழ‌ன்டுகிச்சு என்று தேட‌ ஆர‌ம்பிப்பார்க‌ளாம்.இது போன்ற‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளால் என‌க்கு ர‌யில் ப‌ய‌ண‌ம் என்றாலே வ‌யிறு க‌ல‌ங்கும் (அந்த‌ க‌ல‌க்க‌ம் இல்லிங்க‌)

நான் சொல்லி பார்த்தேன் நாய‌க்க‌ரே ரொம்ப‌ சுக‌ம் தேடாதே.. இண்டிய‌ன் ரோட்ஸ் எப்ப‌டி இருக்குனு தெரிஞ்சுக்க‌லாம் ப‌ஸ்ல‌யே போலாம் என்றேன் ப‌ல‌வீன‌ குர‌லில். ஊஹூம். அலைந்து ப‌றை சாற்றி டிக்க‌ட் வாங்கினான். சென்னை ந‌ண்ப‌ர் வில்லிவாக்க‌ம் செல்ல‌ ர‌யிலேறினார். அர‌க்கோண‌ம் செல்லும் ர‌யில் வ‌ந்த‌து. வில்லிலிருந்து புற‌ப்ப‌ட்ட‌ அம்பு மாதிரி ஏறிக்கொண்டு என்னையும் டென்ஷ‌ன்ப‌டுத்தி ஏற்றினான்.

ந‌ம‌க்கு ஏற்கென‌வே அல‌ர்ஜி. ர‌யில் உல‌க‌ ச‌மாச்சார‌ம்னாலே மூளை க‌த‌வு ஹ‌வுஸ் புல் போர்டு போட்டுரும். வ‌ந்தாருயா டிக்க‌ட் செக்க‌ர் நீ ஆர்டின‌ரிக்கு டிக்க‌ட் வாங்கி,எக்ஸ்பிர‌ஸ்ல‌ வ‌ந்துட்ட‌ வைய்யா ஆளுக்கு 265 னுட்டார். கூட‌ என் ம‌க‌ள் வேறு.

அவ‌ன் முக‌த்தை பார்க்க‌ வேண்டுமே அப்ப‌டியே பேஸ்த‌டித்து,க‌ருத்து..பே பே என் கிறான். பின் நான் க‌ள‌மிற‌ங்கி லாலு நமக்கு க்ளையண்டு,வேலு நமக்கு க்ளோஸ் அது இதுன்னு பேச்சு வார்த்தை ந‌ட‌த்தி ஒரு 265க்கு செட்டில் செய்து வெளி வ‌ந்தோம்.கையில் கால‌ணா இல்லை. அதுவ‌ரை அவ‌ன் காட்டிய‌ க‌ம்பீர‌ம்,த‌ன்ன‌ம்பிக்கை,திட்ட‌மிட‌ல்,அலைய‌ல் எல்லாமே புஸ் ஆகிவிட்ட‌து.

ந‌ம‌க்கு அட‌கு வ‌ச்சு காசு வாங்கிற‌துல‌ எக்க‌ச்ச‌க்க‌ அனுப‌வ‌மாச்சே ! கையில‌ செல் இருக்கு சேட்டு க‌டை யில்லாத‌ ஊர் எதுங்க‌ற‌து என் தைரிய‌ம். ஏடுகொண்ட‌லுவுக்கு பேதியாகிவிட்ட‌து. பின் எப்ப‌டியோ ஒரு பாவாவுக்கு (வைசிய‌ ந‌ண்ப‌ன்) போன் போட்டு அவ‌ன் அர‌க்கோண‌ம் பாவாவுக்கு போன் போட்டு 150 வாங்கி ஊர் வ‌ந்து சேர்ந்தோம். தாளி ..திட்ட‌மிட‌ற‌வ‌ன் நாஸ்திக‌ன். வாழ்க்கையைப் ப‌ற்றிய‌ புரித‌ல் இல்லாத‌வ‌ன் என்ற‌ என் க‌ருத்து உறுதிப்ப‌ட்ட‌து.


ரூ.150 கைக்கு வ‌ந்த‌துமே ஸ்டார்ட் ப‌ண்ணிட்டான்யா! க‌ணேஷ் ப‌வ‌ன்ல‌ 3 இட்லி ம‌ட்டும் சாப்பிட‌னுமாம். திருத்த‌ முடியாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள்.

Sunday, June 21, 2009

கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்

மனிதர்கள் எந்த செயலை செய்தாலும் அதன் பின்னுள்ள் விருப்பம் ஒன்றே .அது கொல்வது அல்லது கொல்லப்படுவதே ! இது மனவியல் கூறும் உண்மை . மனவியல் மேலும் கூறுவது என்னவென்றால்:
கொல்லவும்,கொல்லப்படவும் தைரியம் போதாதவன் அதற்கு ஆல்ட்டர்னேடிவ் வழிகளை தேடுகிறான். அவை யாவன செக்ஸ்,பணம்,அதிகாரம்,புகழ்

எல்லாம் சரி ஆறறிவு படைத்த மனிதன் ஏன் கொல்வதும் கொல்லப்படுவதுமாயிருக்கிறான்.

இங்குதான் முடிவான தத்துவம் வருகிறது. நாமனைவரும் இல்லாதிருந்த காலமே கிடையாது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு கல்பத்தில்,ஏதோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு வடிவில் சேர்ந்திருந்தோம். அப்போது அந்த இணைவில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தோம். பின் ப்ரிந்தோம். மீண்டும் இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடல் தடையாக இருப்பதாக பிரமிக்கிறோம்.

மாமிசம் உண்பவனை பாருங்கள். அவன் என்ன செய்கிறான். அவன் கொன்ற கோழியையோ,ஆட்டையோ தன்னுள் ஐக்கியம் செய்துகொள்கிறான். ஆண் பெண்ணில் ஐக்கியமாகிறான். பெண் ஆணை தன்னில் ஐக்கியம் செய்து கொள்கிறாள். இணைப்புக்கான கோரிக்கை அவர்களை ஊக்கு (சட்டைக்கு போடறதில்லிங்க) விக்கிறது. ஆனால் இணைப்புக்கு வழி உடல்களை இணைப்பதோ ? உடல்களை உதிர்ப்பதோ அல்ல.

நாம் பிரிந்திருக்கிறோம் என்பது நம் பிரமை. ஏற்கெனவே இணைந்தேதானிருக்கிறோம். நாமனைவரும் இப்படைப்பில் ஒரு அங்கமாகத்தானிருக்கிறோம். ஆனால் நம்மை இந்த படைப்பிலிருந்து பிரித்துக் காட்டுவது நமது அகந்தை ஒன்றே. பிறந்த குழந்தைக்கு தன்னை தனது பொம்மைகளிலிருந்து கூட பிரித்துக்காண முடிவதில்லை. ஆனால் நாம் ?

பெற்ற தாயை, தந்தையை, கூடப்பிறந்த சகோதர சகோதிரிகளையும் நம்மிலிருந்து பிரித்து காண்கிறோம். முஸ்லீம் இந்துவை, இந்து முஸ்லீமை பிரித்துக் காண்கிறான். இதனால் மனிதனில் பாதுகாப்பின்மை வளர்கிறது.

இதனால் மனிதன் இணைய துடிக்கிறான். மாமிசம் உண்ணும்பழக்கம், செக்ஸ் மீதான வேட்கை அதிகரிக்க மனிதருள் பெருகி வரும் பிரிவினையே முதல் காரணம். இதனால் தான் மனிதர்கள் சாகத்துடிக்கிறார்கள்.கொலை தற்கொலைக்கெல்லாம் ஸ்தூலமான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் சூட்சுமமாக பார்க்கும்போது அவனது நோக்கம் தன் உடலை உதிர்ப்பதும் இந்த அண்டத்துடன் இரண்டற கலப்பதுமே.

மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்தில் குழுவாய் வாழ்ந்தான் (இணைந்து வாழ்ந்தான்) மேலும் உடல் உதிர்ந்து போக-அவன் இந்த அண்டத்துடன் இரண்டறா கலக்க எந்த நேரமும் வாய்ப்பிருந்தது. எனவே அவன் தற்கொலைக்கோ ,கொலைக்கோ பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. இப்போது காலம் மாறிப்போச்சு. மரணம் ஏறக்குறைய அசாத்தியமாகி விட்டது. எனவே தானாய் வராத சாவை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறான் மனிதன்.

செக்ஸில் ஆண் பெண்களுக்கு சுக்கில சுரோணிதங்கள் ஸ்கலிதமாகும்போது காலம் தெரியாத மரணமொத்த ப்ளாக் அவுட் ஏற்படுகிறது. எனவேதான் மனிதன் செக்ஸ் மீது அதிக ஆர்வம் காட்டுகிறான். 100 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் கூடி வாழ்ந்தனர், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். எனவே படைப்புடனான உறவு நெருக்கமாகவே இருந்தது. மனிதன் பாதுக்காப்புணர்வுடன் வாழ்ந்தான்.

இப்போது ? இயற்கையிலிருந்து ஓடினான் ஓடினான் ஓடிக்கொண்டே இருக்கிறான். இந்த விலகல் அவனில் பாதுகாப்பின்மையை அதிகரிக்கிறது எனவே அவன் சமுதாயத்துடன் இணைய துடிக்கிறான். ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள துடிக்கிறான். சாதி சங்கம்,கட்சிகள் பெருக இதுவே காரணம். ஓயாமல் செல் பேசுவதும் இதன் அடையாளம் தான்.


பின்னே இதற்கு என்னதான் தீர்வு ? மனிதன் சமுதாயத்துடன்,இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும். அதற்கு தடையாக இருப்பது அவன் உடலல்ல். அவனது அகந்தை. ஆண் பெண் இயற்கையின் இரண்டு பாகங்கள். இவை பிரிந்து கிடக்கும் வரை மனிதன் அபத்திரமாகத்தான் உணர்வான். பெண் இயற்கையின் பிரதி.+ நிதி. பெண்ணே இயற்கைதான். சந்திரனின் வளர்ச்சி,தளர்ச்சிக்கும் பெண்ணின் மாதாந்திர ருதுவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவளுடன் ஆண் உறவாட வேண்டும். ஸ்கலிதத்தின் போது காலாதீத நிலயை உணரவேண்டும். அதுவே யோகத்துக்கான திறவு கோல்.

(தொடரும்

பெண்டாட்டி," நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல "

பெருமாளை பத்தி 1சதம் தெரிஞ்சவன் கூட அந்தப்பக்கம் தலை வச்சு படுக்கமாட்டான். பெருமாள் கூப்டாரா இவனுங்க்ளை ? ஊரை அடிச்சு உலைல போட வேண்டியது. பெண்டுக பட்டும்,பவிசுமா புறப்பட வேண்டியது. பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி,கூல் ட்ரிங்க் . வழில ஒரு கை காலில்லாத பிச்சைக்காரனுக்கு 10 பைசா தர்மம் பண்ண மாட்டானுங்க.

மலை மேல போய் அய்ய்ப்புண்டைங்க ஆசனத்துல ஆயிரம் ஆயிரமா செருகிட்டு வருவானுங்க. உங்களுக்கு திருமலைல தரிசனம் ஏறபாடு பண்ண தெரிஞ்சா போதும் உங்க நிறுவனத்துல எல்லா அதிகாரியும் உங்க பேக்கட்ல். அது பெரிய ராக்கெட் . ஜட்ஜாகட்டும், எம்.டி.யாகட்டும் பெருமாளை பார்த்துட்டா ஜன்மம் சாபல்யமாயிரும்.

அட பாவிகளா ? ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா ,மானவ சேவா மாதவ சேவா -இதெல்லாம் உங்க மரமண்டைக்கு ஏறவே ஏறாதா ? இப்படி சல்லீசா புண்ணியம் தேட வழி யிருக்கும்போது ஆயிரம் கிலோ மீட்டர் பிரயாணம் எதுக்கு ? ஹை வேல அனாதை சாவு எதுக்கு ?

1983லனு நினைக்கிறேன் . என்.டி.ஆர் சித்தூர் வந்தார். கட்டமஞ்சி ரயில்வே பிரிட்ஜை தாண்டும்போது பிரசார ரதம் மேலே உட்கார்ந்து வந்த என்.டி.ஆருக்கு தலைல அடி பட்டுருச்சு. அந்த ஆளு அந்த காலத்து ஆசாமி. அரசு மருத்துவ மனைல தான் தையல் போட்டுக்குவேனு ராத்திரி நேரம் ஜி.ஹெச்சுக்கு வண்டிய விடச்சொன்னாரு, ஒரு தையல் போட தேவையான சாமான் கூட சரியாயில்லே.

பின்னாடி அவர் சி.எம். ஆன பிறகு பல கோடி ரூபா சித்தூர் ஜி.ஹெச்சுக்கு சேங்க்ஷன் பண்ணாரு. இன்னிக்கும் என்னடா நிலைன்னா ? தாளி காயங்களை துடைக்க வென்னீருக்கு கதி கிடையாது. சும்மா அப்படி இப்படி பம்மாத்து பண்ணிட்டு வேலூர் சி.எம்.சி போ/ திருப்பதி ஸ்விம்ஸ் போம்பான்.
இவனுகளையெல்லாம் நிக்கவச்சு சுடவேண்டாமா?

இவனுங்களை சொல்லி என்ன ? இவனுங்க பெண்டாட்டிகளை சொல்லனும். இவனுகளுக்கு அந்த விஷயத்துல தாக்கத் கம்மி போல. பெண்டாட்டி நாயே நீ அதுலதான் ஒன்னத்தையும் கழட்டறதில்ல வாஷிங்க் மெஷினாச்சும் கொண்டா ,ஏ.சி கொண்டாங்கறாளுகளோ என்னமோ ?

இப்படி கொள்ளையடிச்ச பணத்தை பீரோல வச்சுக்கிட்டு எவன் எப்ப வந்து பிடிப்பானோங்கற நிலல இவனுகளுக்கு அந்த சமாச்சாரத்துல விரைப்பாச்சும் ஏற்படுதானு ஒரு சம்சயம் ?



எவன் செத்தாலும் ஆறடிதான்..ஆனாலும் கொள்ளையடிக்கிறத மட்டும் விட மாட்டேங்கறானுங்க . எனக்கு தெரிஞ்ச்சு பணத்துக்கே மதிப்பில்லாம ஆக்கிரணும். ஒரு தனி மனிதனால சமுதாயத்துக்கு என்ன லாபமோ , அத கணக்கிட்டு அவனுக்கு ஒரு அட்டை கொடுத்துரனும். அத காட்டி அவனுக்கு வேண்டியதை பெற வழி செய்யனும்.

எனக்கு நம்பிக்கை இருக்கு ஒரு நாளில்லே ஒரு நாள் என் ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாகும். ஜனாதிபதி ஜன நாயகம் பிறக்கும். 10 கோடி வேலையில்லா வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் அமைக்கப்படும். சிறப்பு ராணுவம் அனைத்து நதிகளையும் இணைக்கும். வடக்கே வெள்ளம், தெற்கே வறட்சி ஓடிப்போகும். அனைத்து விவசாயிகளை கொண்டு கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும் .எல்லா விளை நிலங்களும் அந்த கூ.ச.த்துக்கு நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கப்படும். கூட்டுறவு பண்ணை விவசாயம் அமலாகும். ஸ்விட்ஜர்லாந்து மாதிரி "கேப்பார் மேப்பார் இல்லாத பேங்க் வரும். இங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் இங்கேயே வந்து சேரும். தற்போதைய கரன்சி ரத்தாகும். புதிய கரன்சி அமலாகும்.

காட்டுல புலிகளை கணக்கெடுத்தமாதிரி மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும். நல்லாட்சி நடக்கும். ஆனால் இந்த நாய மகனுங்க நிர்வாகத்துல இருக்கிற ஜனமெல்லாம் செத்துப்போகும் போலிருக்கே ..அதனாலதான் இந்த பதிவு.

அடுத்த பதிவுல கொலை, தற்கொலைய பத்தி சொல்றேன்.

Friday, June 19, 2009

நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஆங்கிலத்தில் ஒரு பொன் மொழி " நல்ல வேலையை செய்ய கெட்ட நேரம் என்பது கிடையாது"

ஒரு சோதிட ஆய்வாளனாக இருந்தும் இந்த வரிகளைஎழுதுகிறேன் என்றால் இதில் உள்ள உண்மையை , ஜோதிட ரீதியான ஆதாரத்தை புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.


ஆம். நவகிரகங்கள் என்பவை இறைவன் எனும் பிரதமரின் மந்திரி சபையிலான மந்திரிகள் தாம். நீங்கள் சுய நலத்துடனோ,பிறருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடனோ செயல்படும்போதுதான் கிரகங்கள் உங்களை பாதிக்கும். உங்களில் சுய நலமில்லாத போது நீங்களே கடவுளாகிறீர்கள். நல்ல வேலையை தவிர வேறெதையும் செய்ய முடியாது. பின் எப்படி கிரகங்கள் உங்கள் மேல் வேலை செய்ய முடியும்.

Tuesday, June 16, 2009

நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம்

தேரு எங்க சுத்தினாலும் தேரடிக்குத்தான் வரனுங்கற மாதிரி மறுபடி தமிழ் வலைப்பூ மேல கான்சன்ட்ரேட் பண்றதா முடிவு பண்ணியிருக்கேன். தமிழ்மணத்தோட கருவிப்பட்டைய இணைக்காததால காட்டில் காய்ந்த நிலவாய் போயின என் எழுத்துக்கள். நிற்க கடந்த டிசம்பர் மாதம் தெலுங்கில் ஒரு பதிவை ஆரம்பித்தேன் ஸ்வாமி 7867 என்பது அதன் எயர். இந்த 7 மாத காலத்தில் 16000 பேர் பார்த்தாங்க. ஆந்திர முதல்வரே சந்திரபாபுவை நான் செய்த ரவுசுக்கு ரெஸ்பாண்ட் ஆகிட்டாரு.

இருந்தாலும் என்ன குடுமிகள் பற்றி தெரியாத்தனமா ஒரு பதிவுல மென்ஷன் ப‌ண்ணிட்டேன். தினம் தினம் சுமார் 200 பேர் பார்த்துக்கிட்டிருந்த என் வலைப்பூவை சதி செய்து துஷ்பிரசாரம் செய்து ஒரு தடவை தடை கூட பண்ணிட்டாங்க. விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தால் ஜனத்தொகை பெருக்கம்,செக்ஸ் குற்றங்கள்,வன்முறை இத்யாதியை தவிர்க்கலாம்னு எழுதியிருந்தேன் அதை சாக்கா வச்சு துஷ்பிரச்சாரம் செய்தானுங்க.

ஆளை விடுங்கடான்னிட்டு வெப்துனியால இந்தில ஒரு ப்ளாக் ஆரம்பிச்சுட்டன்.

என் சித்தாந்தம் ரொம்ப சிம்பிள். நாம எல்லாம் ஏதோ ஒரு காலத்துல,ஏதோ ஒரு வடிவத்துல சேர்ந்திருந்தோம் . இப்போ சிதறிட்டோம். மறுபடி இணைய துடிக்கிறோம். அந்த இணைப்புக்கு இந்த உடலை தடையா நினக்கிறோம். கொலை தற்கொலை எல்லாத்துக்கும் காரணம் இந்த இணைவதற்கான துடிப்புத்தான்.(மாமிசம் உண்பவர்கள் கதையும் இதுதான்)

ஆனால் இந்த இணைவுக்கு தடையா இருக்கிறது நம்ம உடலில்லே..அகம்பாவம். இதை மறந்துட்டு உடலினை கொண்டே இணையபார்க்கிறோம். உடல்களை உதிர்க்கத்துடிக்கிறோம். நாம எல்லாம் ஒண்ணு. (ஒரு தாய் பிள்ளைன்னு ஜல்லியைக்க முடியாதுன்னாலும் நம்ம எல்லாருக்குமிடையில் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கு.

கொல்றோம். கொல்லப்படறோம். இதுக்கு துடிக்கிறோம். காரணம் இணைப்புக்கு தடையா நாம தவறா நினைக்கிற உடலை உதிர்ப்பதே.

ஆனால் அகத்தை (ஈகோ) உதிர்த்தால் போதும் எல்லோரும் இணையலாம். இப்போ ஜெயா கலைஞரை எடுத்துக்கங்க ரெண்டுபேருக்கும் என்ன வித்யாசம் ? ஒரு ரோமமுல்லே. ரெண்டு கழகத்தையும் சேர்த்து தொலைக்கலாமில்லையா.
ராஜ பக்ஷே வை பாருங்க சிங்கள, தமிழ் பிரிவினையை தமிழர்களை ஒழித்துக்கட்டி கருவறுத்துவிட பார்க்கிறார். எப்படியோ என்னால முடிஞ்சவரைக்கும் என் சித்தாந்தத்தை விளக்கிட்டேன்னு (குழப்பிட்டேன்னு) நினைக்கிறேன்.

Monday, June 15, 2009

ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு

டவுனுக்கு வந்த கிராமத்தானைப்போல் இவர்கள் ஆஸ்திரேலியாவில் ஓவர் ஆக்ஷன் செய்கிறார்களா என்று ஒரு சம்சயம். கிராமத்தான் அப்படித்தான் அவன் காலை 6 மணீக்கு புறப்பட்டால்தான் டவுனுக்கு பத்துமணிக்கு வரமுடியும். மீண்டும் எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு மாலை 5 மணீ பஸ்ஸை பிடித்தால்தான் ஊர் போய் சேரமுடியும்.(கடைசி பஸ்)

மேற்சொன்ன காரணங்களால் அவன் ஊர் வம்பில் ஈடுபடமாட்டான். எவனாவது துப்பினாலும் சரிண்ணே சரிண்ணே என்பான். தன் வேலையே முக்கியம் என்றிருப்பான். இதரர் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்கமாட்டான்.(அலையல்,பரபரப்புடனே இருப்பான்)

இது டவுனிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு அருவறுப்பாக இருக்கும். அதே சமயத்தில் காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்றால் வீரியம் தான் பெரிதென்று டவுன் காரன் கோட்டை விட்டிருக்க காரியம் தான் பெரிதென்று கிராமத்தான் க்ளிக் ஆகி விடுகிறான்.

ஒரு டெயிலரையே எடுத்துக்கொள்ளுங்கள். டவுனிலிருக்கும் டெயிலர் ஆன பில்டப்புகள் கொடுத்துக்கொண்டிருப்பான். ரோத்மன் சிகரட் எட்ஸெட்ரா. கிராம பின்னணீயில் வந்தவன் பீடி குடிப்பதும் பத்து ரூபாய் குறைவாய் சார்ஜ் பண்ணுவதுமாய் டவுன் பிழைப்பை கெடுத்துக்கொண்டிருப்பான். மேலும் இந்த ஃபீலிங் கூட இருக்காது அவனுக்கு.


ஆஸ்திரேலியா போன இந்தியர் கதையும் இதுதான் போலும் .ஆஸ்திரேலிய காவலர் மீது இந்திய மாணவர் துப்பாக்கிச்சூடு என்பதெல்லாம் ஓவராக படவில்லையா ! ஆஸ்திரேலியா என்ன பாரதம் போன்று மானம் கெட்டா இருக்கிறது?

Sunday, June 7, 2009

பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?

குடிமக்களை காத்திட ,சமத்துவத்தை காத்திட,மனித உரிமைகளை காத்திட எந்த நாடும் எந்த நாட்டை வேண்டுமானால் வற்புறுத்தும் உரிமை உள்ளது. உலகமயமாக்கல் காரணமாக உலகமே ஒரு பட்டிக்காடாக மாறும் என்று கூறினார்கள். நாடுகள் காடுகளாகவும் ஆட்சியாளர்கள் காட்டுமிராண்டிகளாகவும் இருப்பது சோகம்.
ராஜ பக்ஷேவை போர் குற்றவாளியாக தீர்மானிக்கும் அமெரிக்க பிரிட்டன் முயற்சிக்கு பஞ்சகச்சத்தை அவிழ்த்து காட்டி விட்ட இந்திய ராஜதந்திரிகளை நாடு கடத்தவேண்டாமோ ?

Thursday, June 4, 2009

இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.

அது அவரவர் உடல் நலத்தை ,வலிமையை பொறுத்த விஷயம். வெயில் காலத்தில் ஆற்றோரம் குழி பறித்து அதிலிருந்து ஆற்று (ஊற்று) நீரை முகர்வார்கள். அப்போது மேலோட்டமாக ,தண்ணீர் கலங்கி விடாது எச்சரிக்கையுடன் சிறிய பாத்திரத்தில் எடுப்பார்கள். சுய இன்பமும் அப்படித்தான் அனுபவிக்கப்படவேண்டும். இந்த விதி சுய இன்பத்துக்கு மட்டுமல்ல, உடலுறவுக்கும் பொருந்தும்.
இதனை பொழுது போக்காகவோ,வேலையற்றதுகளின் வேலையாகவோ செய்தால் வம்புதான். உறுப்பே சில்க்கின் இடுப்பு போல் பல வளைவுகளுக்கு உட்பட்டு விடும்.
அதே நேரத்தில் இதேதோ பஞ்சமா பாதகம் என்றெண்ணி ஈர கோவணம் உடுத்தி கட்டுப்படுத்தினால் வேறு வகையான தொல்லைகள் ஏற்பட்டுவிடும். பஸ் நெரிசலில் கைபோட்டு உதை வாங்குவது. பப்ளிக்கில் லங்கோட்டா நனைவது முதலானவை

உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும் (இது சாதாரணமாக ஆரோக்கியமான இளைஞனுக்கு வாரம்,பத்து நாளைக்கொருமுறை ஏற்படும். அந்த சமயத்தில் சுய இன்பம் அனுபவிப்பது நலமே. (எமர்ஜென்சி கேட் மாதிரி)

முக்கியமான விஷயம் என்னன்னா ... இது குற்றமல்ல ,கெட்டப்பழக்கமல்ல ,மேலும் சொல்லப்போனால் ஒரு தற்காப்பு நடவடிக்கை (அளவுடனிருக்கும்போது)

Tuesday, May 26, 2009

தமிழர்களில் எனக்கு பிடிக்காத குணங்கள்

1.தாம் வாழும் நாட்டை,மானிலத்தை, விட்டு தமிழ் நாட்டு அரசியல் மீதே நாட்டம் காட்டுவது
2.தாம் வாழும் பிரதேசத்தின் மொழியை கற்க மறுப்பது
3.இதர மொழியினருடன் இரண்டற கலக்க மறுப்பது
4.இன்ன பிற மொழியினரெல்லாம் காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம்
5.மானம் கெட்டு போய் கன்னடனை சூப்பர் ஸ்டாராக்குவது
6.பார்ப்பனர்களை எதிர்த்து துவங்கிய திராவிட இயக்கத்தை பார்ப்பன மங்கையிடமே ஒப்படைத்திருப்பது(ஜெயா)
7.தமிழீழத்தில் தமிழர்கள் ஹோல்சேலாய் செத்துக்கொண்டிருக்க இங்கே ரீடெயிலில் வெள்ளை சாம்பார்களாய் சொதப்புவது
8.பிரபாகரனை ஆதரிக்கும் ஆவேசத்தில் ராஜீவை இழிவு படுத்தி ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிப்பது

இப்படி நிறைய‌

Thursday, May 14, 2009

இவர் கவிதை எ...ழு...த........வே கத்து தர்ராராஆஆஆஆஆஆஆஆம்

எனது திரையுலக நண்பர் ஒருவர் பற்றிய குறிப்பு. பிராமணரான இவர் சித்தூரை சேர்ந்தவர். டிகிரி படிக்கும் காலத்தில் தமிழில் புதுசு என்ற பத்திரிக்கை ஆரம்பித்திருந்த காலத்தில் நவதா என்ற பெயரில் தெலுங்கிலும் துவக்க வைத்து வீண் சக்தி விரயத்துக்காளாக்கி புதுசு நின்று போக காரணமானவர். நவதாவில் அவர் துவங்கிய இந்த புண்ணிய பூமியில் பிறந்தது எங்கள் தப்பா என்ற தொடர் கதையும் அல்பாயுசில் நின்று போனது.
இங்கே ஷாட் கட் செய்தால் எல்.ஐ.சி.யில் வேலை வருகிறது. இவர் நான் கே.விஸ்வ நாத்திடம் சேரப்போகிறேன் என்று சொல்ல அவரது அப்பாவும் ஓகெ. கே.விஸ்வ நாத்திடம் சேர ரூட் க்ளியரன்ஸுக்காக தணிக்கள்ள பரணியிடம் இலை எடுக்கிறார். சில்லறை புரள ஆரம்பிக்க விஸ்வனாத் கனவு காலி. செங்க‌ல்வ பூ தண்டா என்ற படம் இயக்குகிறார். தன் வலி யறிந்து கதாசிரியராகிறார்.

வீடு ,பங்களா எல்லாம் கட்டுகிறார். திடீர் என்று சரித்திரத்தில் இடம் பிடிக்கும் எண்ணம் பிறக்கிறது.(அடங்கொப்புராண சரித்திரம்னா சத்திரமாடா). சினிமாவுக்கு எழுதுவதை விட்டு விடுகிறார். (எவனும் கேக்கலை) கோயில்

என்ற பெயரில் ஒரு கதை எழுதுகிறார். இது 100 வருடங்களுக்கு நிற்குமாம். வயாக்ரா போட்டவன்...போலவா?

தாளி ! இந்தியாவுல எழுத்தறிவு சதவீதம் என்ன? இதுல ஆங்கிலம் மட்டும் பீசும் ரகம் எத்தனை? இந்தியாவில் 18 மொழியிருக்கு. தமிழே என்றாலும் ஜோதிடம்,கொக்கோகம் ,சமையல், நீச்சலடிப்பது எப்படி யோடு நின்று போகும் ஜனம் எத்தனை? இதுல இலக்கியம் வரை வர்ரவன் எத்தனை பேரு.

சரி ஒழியட்டும் சுதந்திர பாரதத்தில் கனவு காண்பதுஅவரவர் பிறப்புரிமை. இதெல்லாம் ஜுஜுபி. க்ளைமேக்ஸே இப்பதான் ஆரம்பம்:

ரெண்டு பெண் குழந்தைகள். காலை 4 மணீக்கு தியானம், 5 மணிக்கு யோகா 6 மணீக்கு குச்சி புடி(குச்சி பிடிச்சுகிட்டே ஆடறதா ..பாட்டிகள் நடனமா?) 7 மணிக்கு தாளி..இவரு அதுகளுக்கு கவிதை எழுத கத்து தருவாராம் ஆண்டவா !

கவிதைய ரசிக்க கத்து தரவே சரஸ்வதி வரனும் கிட்டார் எடுத்துக்கிட்டு..இவர் கவிதை எ...ழு...த........வே கத்து தர்ராராஆஆஆஆஆஆஆஆம்