Friday, April 18, 2014

அவளுக்கு ஒரு கடிதம்

தாயே ஒரு தரம் எண்ணிப்பார்!
வேறு யார்தான் உன்னை மன்னிப்பார்
பாரதி முதலாய் பாரதத்திலே பாவலர்
வாழ்வை வதைத்திட்டய்
உயிருடன் அவரை புதைத்திட்டாய்
சுடர்மிகு அறிவு தந்திட்டாய்
இடர் பல வாழ்வில் கலந்திட்டாய்

வறுமையொன்றால் என் உயிரை
தாயே நீயும் குடிக்கின்றாய்.
வறுமை ஒழிக்க களம் புகுந்தால்.
வறுமை மேலெனும் நிலை தந்தாய்
பாட்டால் உன்னை பூசிக்கும்
நிலை தந்தாய் நான் மகிழ்கிறேன்.
உன்னையன்றி திக்காரு...
என் மதியில வந்து உட்காரு.