Friday, April 18, 2014

"உணவெடுத்தான்" -இந்த வார்த்தை சரியா?

எழுத்தாளர் பாலா தமிழ் பண்டிதை வயிற்றில் பிறந்து " உணவெடுத்தான்" என்று எழுதுகிறார். மிருகங்கள்தான் உணவெடுக்கும்.

மனிதன் உணவு உட்கொள்வான். (அ) உண்பான் (அ) தின்பான் (அ) துன்னுவான். தமிழ் என்பது வளமான மொழி. ஒரே பொருள் தருவதாய் தோன்றினாலும் மேற்சொன்ன வார்த்தைகளை சமயோசிதமாய் உபயோகித்தால் சாப்பிடுபவனின் சமூக, பொருளாதார, கலாச்சார, பண்பாட்டு மதிப்பையும் ஒரே வரியில் கோடி காட்டிவிட முடியும்.

நிறைய எழுதிவிட்டதால் பாலாவுக்கே தமது எழுத்துக்களின் மீது சலிப்பு ஏற்பட்டு ஸ்டீரியோதனமாக தோன்றிதான் உணவெடுத்தான் போன்ற வார்த்தைகளை உபயோகித்திருக்க வேண்டும்.

பாலாவை தெய்வமாகவே கொண்டாடும் இளைஞர், இளைஞிகளும் அவரை பின்பற்றத்துவங்கிவிட்டால் எழுதப்படாத விதிகள், மனிதனின் மூளையின் சப்கான்ஷியசில் ரஸ்னா பவுடர் தனமாய் பொதிந்திருக்கும் சூட்சுமமான வேறுபாடுகள் மறைந்து கழுதையும் - குதிரையும் ஒரே கொட்டிலில் கட்டப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது. ஓ.கே...