Wednesday, June 29, 2011

காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா :2


நாரத பக்தி சூத்திரத்துல சொல்றாப்ல (எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான பக்தி உண்டாம்) எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான காதல் இருக்கு.

எதையுமே ஒரு சித்தாந்தத்துக்குள்ள அடைக்க கூடாதுங்கறது நம்ம சித்தாந்தம். ஆனால் என்ன பண்றது கடல் நீரை கூட ஒரு டெஸ்ட் ட்யூப்ல அடைச்சு அதை ஷூட் பண்ணி யு ட்யூப்ல விட்டாத்தான் பார்ப்போம்னு சனம் சொல்லுது.

அதனாலதான் நம்ம பாலிசிக்கு விரோதமா காதலை மொதல்ல சித்தாந்தப்படுத்தறேன். அப்பாறம் காதலித்தால் செக்ஸ் பவர் எப்படி கோவிந்தா ஆகும்னு சொல்றேன்.

காதலை பற்றி மட்டுமில்லே. ஒட்டு மொத்த படைப்பை -மனிதர்களை -உலகத்தை பிரிஞ்சிக்கிடனும்னா ஒரு அடிப்படை உண்மைய புரிஞ்சுக்கனும்.

*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.

*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது

*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்

*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை

*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு

*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.

*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு

*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு


(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)

*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே

*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது

*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்

*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது

*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு

*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா தனக்கே தனக்குன்னு ஒரு பெண் வேணும்ங்கற நிலை வந்துருச்சு.

அந்த தனக்கே தனக்கான பெண்ணுக்கான தேடலுக்கான துடிப்புத்தான் காதல்.

மேலும் மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு செக்ஸ்ல ஓரளவு - கொஞ்சம் நேரமாச்சும் நிறைவேறுது

செக்ஸ்ல கொல்லும் -கொல்லப்படும் இச்சை ஓரளவு நிறைவேறுது.

உடைச்சு சொன்னா ஆணுக்கு விந்து வெளியேறும் வரை கொல்லும் இச்சையும் விந்து வெளியேறிய பின் கொல்லப்படும் இச்சையும் நிறைவேறுது.

பெண்ணை பொருத்தவரை உச்சம் என்பது ரேரஸ்ட் ஆஃப் தி ரேரா இருக்கு. அதனால அவனுக்கு விந்து வெளியேறும் வரை இவளின் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. அவனுக்கு விந்து வெளியேறிய பின் இவளது கொல்லும் இச்சை நிறைவேறுது.

இந்த இழவெல்லாம் மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட். இதுக்கான பைலட் ப்ராஜக்டுதான் காதல்.

சோகம் என்னன்னா ஓருயிர் பல்லுயிரா மாறினாலும் எல்லா உயிரும் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. அந்த இணைப்பை உணர முடியாம ஈகோ தடுக்குது. ஈகோவை விட்டொழிச்சா உயிர்களிடையிலான இணைப்பை உள்ளபடி உணரலாம்.

ஆனால் ஆன்மாவை ஈகோ மூடி ஈகோவே ஆன்மா - ஈகோவே தான் என்ற மாயா உருவாகிவிட்டது.( நன்றி:ஓஷோ)

ஈகோ சுமக்கமுடியாத பாரமாயிருச்சு. அதை கழட்டி வைக்கிற இடமா மனசு காதலை நினைக்குது. அதனாலதான் காதலிக்கிறாய்ங்க.

இதான் காதல் கத்திரிக்காயோட செனெரியோ.

இப்பம் காதல்ல எத்தனை வகை இருக்குன்னு ஒரு குன்ஸா பார்ப்போம்:

1.தன் மீதான காதலால தன்னை காதலிக்கவும் ஒருத்தி வேணம்ங்கற ஈகோவால காதலிக்கிற காதல்

2.ஈகோவை சுமக்கமுடியாம ஆருக்காகவாச்சும் இந்த 'பாரத்தை" கொஞ்சம் போல இறக்கிவச்சா நல்லாருக்குமேங்கற எண்ணத்துல வர்ர காதல்

3.இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸால - தனிமை உணர்வால - சுய பரிதாபம் - தன்னவர்களால் நிராகரிக்கப்பட்ட உணர்வால வர்ர காதல்

4.தாய் மீதான காதலால் - தாயால் தள்ளி வைக்கப்பட்டு - தாய்க்கு மாற்றாக ஒரு பெண்ணை தேடும் காதல்

5.காமத்தை அங்கீகரித்து - அது குறித்த குற்ற உணர்வு ஏதுமின்றி - நேர்மையாய் அதை நிறைவேற்றிக்கொள்ள செய்யும் காதல்

6.காமத்தை ஓவர் லுக் செய்ய செக்ஸ் அப்பீலே இல்லாத சேப்பாக் கிரிக்கெட் கிரவுண்ட் தனமான சோடாபுட்டி பெண்ணை காதலிக்கும் காதல்

7.பிஞ்சிலே பழுத்து அல்லது மெச்சூர்ட் மைண்ட் காரணமாக தன் தந்தைக்கு நகலாக மாறி பெரிய மனுஷத்தனமாக விளையாட்டுத்தனம் மிக்க பெண்ணை காதலிக்கும் காதல்

8. தானும் முதலியார் -அவளும் முதலியார் - அவிகளுக்கு சினிமா தியேட்டருங்க இருக்கு -தங்களுக்கு சினிமா டிஸ்ட் ரிப்யூஷன் இருக்குன்னு கணக்கு போட்டு காதலிக்கு காதல்

9. யதார்த்த வாழ்க்கை நரகமாக இருக்க நிலத்தில் கால் பாவாத பிரதேசத்தில் சஞ்சரிக்க - சொந்த நரகத்தை மறக்க செய்யும் எஸ்கேப்பிஸ்ட் காதல்

10.சம்மதிச்சா செக்ஸ் இல்லாங்காட்டி தெய்வீகக்காதல்ங்கற சந்தர்ப்ப வாத காதல்

11.காதலிப்போம் - எல்லாம் கை கூடி வந்தா கண்ணாலமும் கட்டிக்குவோம் -இல்லாட்டி ஆருக்கு எங்கன போட்டுவச்சிருக்கோ அப்படியே நடக்கட்டும்ங்கற வேதாந்த காதல்

இப்படி நூத்துக்கணக்கான காதல்கள் நாட்ல இருக்கு. ங்கொய்யால இந்த காதல்கள் சைவமோ அசைவமோ க்ளைமேக்ஸுல கில்மான்னு ஒன்னு நிச்சயம் உண்டு.

மேட்டர் இன்னாடான்னா லவ்வுன்னு இறங்கி லந்து பண்ணிக்கிட்டிருந்தா பேட்டரி வீக் ஆயிருதுங்ணா .. அது ஏன் எப்படி எந்த் அளவுக்குங்கறதை அடுத்த பதிவுல பார்ப்போம்.

ஜோதிடம் என்ன சொல்லுது:

ஜாதகத்துல களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை பெற்று - லக்னாத் சுபர்களா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா பிரச்சினை இல்லை.

அதுக்கு மாறா மேற்சொன்ன களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை இழந்து - லக்னாத் பாபிகளா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா
பேட்டரி அவுட்டுதேன். (கண்ணாலமே கட்டினாலும் பல்பு வாங்க வேண்டியதுதேன்)

அனுபவத்துல பார்க்கும் போது லவ் பண்ற பார்ட்டியெல்லாம் எந்த கிரகம் தனக்கு ஆப்பு வைக்க பைனாகுலர்ல வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கோ அந்த கிரகத்தோட காரகத்வமுள்ள பெண்ணைத்தேன் லவ் பண்ண ஆரம்பிக்கிறான்.

காதலில் வெற்றி விதிக்கப்பட்டுள்ள ஜாதகன் லவ் பண்ணாமயே கூட இருந்துரலாம். ஆனால் காதலால காயடிக்கப்படனும்னு இருக்கிற பார்ட்டி மட்டும் நிச்சயம் லவ் பண்றான். இம்சைய அனுபவிக்கிறான்.

ஓகே இதுல தொட்டு காட்டின காதல் வகைகள் ஒவ்வொன்னையும் அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுப்போம்.

எந்தெந்த காதல்ல பேட்டரி அவுட்டாயிரும். எந்தெந்த காதலால பேட்டரி வீக்காயிரும்ங்கறதை எல்லாம் விலாவாரியா பார்ப்போம். டோன்ட் ஒர்ரி..