Showing posts with label moon. Show all posts
Showing posts with label moon. Show all posts

Sunday, December 23, 2012

சந்திரனுடன் பேட்டி : இறுதி பகுதி



அண்ணே வணக்கம்ணே !
சந்திரனுடன் பேட்டிங்கற தலைப்புல சில பதிவுகள் போட்டுக்கிட்டு வந்தம். சந்திரன்னாலே அன்செர்ட்டெனிட்டி தானே. (நிச்சயமற்ற தன்மை)

நம்முது கலப்பு திருமணம்ங்கறது ஞா இருக்கலாம். என்னைக்கு நடந்ததுன்னு கேளுங்களேன். அட சொம்மா கேளுங்களேன்

தேதி 29 ,மாசம் 11 (நவம்பர்) .வருசம் 1991. தேதி,மாசம்,வருசம் இந்த 3 ஐயும் தனித்தனியே கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா 2 வரும். இது சந்திர காரகம் கொண்ட எண்.

ஒரு 14 வருசம் .. லைஃப் எந்த ரூட்ல போகுதுன்னே சுதாரிச்சுக்க  முடியாத அளவுக்கு திடீர் தன்மை.

எல்லாத்தையும் கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா 6 வரும் .இது சுக்கிர காரகம்ங்கறதால தப்பிச்சம்.

  துவங்கும்போது முடியும் –முடியும் போது துவங்கும். அதனாலதேன் இந்த இழுபறி. எப்படியோ இந்த மேட்டர் இந்த பதிவோட முடியுது.  அடுத்தது செவ்வாய் தான். பேட்டிக்கு போயிரலாமா?

நான்:

பாஸ் ! இன்னைக்கு ஒரு நாள் மட்டும் கோ ஆப்பரேட் பண்ணிருங்க. ஜஸ்ட் சில கேள்விகள் மட்டும் தான்.

சந்திரன்:  கேளுப்பா

நான்:

ஜாதகத்துல உங்களோட பலம் இல்லேன்னு வைங்க .என்ன ஆகும்?

சந்திரன்:

விருச்சிக ராசிக்காரன் பொளப்பாயிரும்.

நான்:
அதென்ன பாஸ் இப்டி சொல்ட்டிங்க..அப்பம் சனத்தொகையில ஒன் பை ட்வல்வ்  பொளப்பு நாறிப் போன பொளப்பு  தானா?

சந்திரன்:
நாற பொளப்புன்னு சொன்னேனா?  அவிக ஜாதகத்துல நான் நீசமாறதால - மத்த கிரகங்களோட பலத்தால அந்த கிரகங்களோட காரகத்வம் கொண்ட மத்த எல்லாமே இருந்தாலும் . அவிக மனசு மட்டும்  இல்லாததுக்கே ஏங்கிக்கிட்டிருக்கும்.

நான்:

இல்லாததுக்கு ஏங்கறது சகஜம் தானே பாஸூ..ஹ்யூமன் சைக்காலஜி இதானே

சந்திரன்:

இல்லாததுக்கு ஏங்கறது வேற .. ஆனால் இவிக இல்லாததை நினைச்சு இருக்கிறதை எல்லாம் மறந்துட்டு எல்லாரையும் கடுப்படிச்சுக்கிட்டிருப்பாய்ங்க.


நான்:
அது எப்படி?

சந்திரன்:
எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு  பப்பா மாதிரி கேள்வி கேட்டா எனக்கு கடுப்பாயிரும். உன்னை சுத்தி எத்தீனி விருச்சிக ராசி காரவுக இருக்காய்ங்க. அவிகளை கன்வின்ஸ் பண்ண முடியாம எத்தீனி தாட்டி நீ கடுப்பாகியிருப்பே.

நான்:
ஓ நீங்க அப்படி வர்ரிங்களா? செரி செரி..இந்த விருச்சிக ராசிக்காரவுக லைஃப்ல முக்கியமா நான் கவனிச்சது என்னடான்னா எப்பவும் அதிருப்தியிலயே இருப்பாய்ங்க. அசந்தர்ப்ப ப்ரலாபணம் சாஸ்தி . எப்பம் என்ன பேசறதுங்கற விவஸ்தையே இருக்காது. செய்றதென்னமோ நல்லதாவே கூட இருக்கும்.ஆனால்   ஒவ்வொரு பேச்சும் தேள் கொட்டறாப்ல இருக்கும். பஜார்ல விஜாரிச்சா ஒருத்தங்கூட இவிகளை நெல்லவன்னு சொல்லமாட்டாய்ங்க. அதே போல இவனும் எவனையும் நெல்லவன்னு சொல்லமாட்டான். உங்க பலம் இல்லின்னா சனம் நிலைமை இப்படி ஆயிரும். அதானே ?

சந்திரன்:  ஆமாப்பா..

நான்:
இட்ஸ் ஓகே .. நெக்ஸ்ட் க்வஸ்டியன். உங்க பலம் இல்லின்னா இன்னம் என்னெல்லாம் நடக்கும் சொல்லுங்க

சந்திரன்:
இவிக போர் போட்டா தண்ணி வராது -வந்து தொலைச்சா இவிகளுக்கு நுரையீரல் -சிறு நீரகம் தொடர்பான வியாதி வரும். புகை , தூசு, நெடி இருக்கிற தொழில்ல இருப்பாய்ங்க. அது தொடர்பான வியாதிகள் வரும்.
எப்பயும் சண்டைக்கு காலை பிறாண்டிக்கிட்டே இருப்பாய்ங்க. சைக்கியாட் ரிஸ்டுகளை வாழ வைக்கிறதே இவிக தான். ஒன்னு தண்ணியை பயங்கரமா வீணாக்குவாய்ங்க .இல்லின்னா குளிக்க கூட மாட்டாய்ங்க. நாறும்.

ஓவர் டு மீ:
பாஸ் ! சந்திரனை பத்தி எழுதனும்னா 365 நாள் தொடர்ந்து ஒவ்வொரு பதிவு போடலாம். ஆனால் இந்த விடியல் நேரத்துலயாவது –எந்த இமிசையும் இல்லாம -  சில ஜாதகங்களுக்காவது பலன் பதிவு பண்ணிட்டாதேன் அடுத்து ரெப் அவதாரம் எடுக்க முடியும். அதனால அம்பேல்

சந்திரனுடன் இன்ன பிற கிரகங்கள் சேர்வதை வைத்து உங்க ஐக்யூவை சாஸ்தி பண்ணிக்க சில க்ளூஸ் தரேன். ஆக்சுவல் பலன் என்னவா இருக்கும்னு கெஸ் பண்ணி கமெண்ட் போடுங்க.



சந்திரன்+சூரியன்: 
சந்திரன்னா மனம்+ சூரியன்னா அறிவு , சந்திரன்னா அடித்தட்டு மக்கள் ,சூரியன்னா தானகுணம்

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+செவ்வாய்:
சந்திரன்னா நிலையற்ற தன்மை ,செவ்வாய்னா ரியல் எஸ்டேட் சந்திரன் = நீர், செவ் = நெருப்பு

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+ராகு
சந்திரன்னா  நுரையீரல்,சிறு நீரகம்,  ராகுன்னா கிருமிகள், சந்திரன்னா சிறு நீரகம் ராகுன்னா லிக்கர் , சந்திரன்னா நுரையீரல் , ராகுன்னா டொபேக்கோ புகையிலை
சந்திரன்னா மனசு , ராகுன்னா சதிகள், ரகசிய எதிரிகள்

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+ குரு
சந்திரன்னா  நிச்சயமற்ற தன்மை குருன்னா பணம், சந்திரன்னா மனசு ,குருன்னா தெய்வீக சிந்தனைகள், சந்திரன்னா மனசு ,குருன்னா ஞா சக்தி,திட்டமிடல்,குருன்னா புத்திரகாரகன், சந்திரன் ரெண்டேகால் நாள்ள ஓடிப்போற கிரகம்.

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+சனி
சந்திரன்னா இன்ஸ்டெபிலிட்டி ,சனின்னா நெவஸ் செட் அப், சந்திரன்னா திரவம் ,எதிர்பாராத்தன்மை ,சனின்னா ஆசனம், சந்திரன்னா மனசு , அப் அண்ட் டவுன்ஸ் சனின்னா லாங் டெர்ம் ப்ராஜக்ட்ஸ் ,

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+புதன்
சந்திரன்னா இன்ஸ்டெபிலிட்டி  புதன்னா வியாபாரம், சந்திரன்னா மனசு புதன்னா கல்வி , சந்திரன்னா மனசு  புதன்னா வைத்தியம்

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+கேது
சந்திரன்+ராகுவுக்கான க்ளூஸையே ரிப்பீட் பண்ணிக்கங்க. கூடுதலா  சந்திரன்னா மனசு கேதுன்னா விரக்தி.

இதனோட விளைவு என்னவா இருக்கும்?

சந்திரன்+சுக்கிரன்
சந்திரன்னா மனசு ,சுக்கிரன்னா கில்மா,  சந்திரன் ரெண்டே கால் நாள்ள ராசி மாறிரக்கூடிய கிரகம், 14 நாட்கள்ள தன் நேச்சரை மாத்திக்கக்கூடிய கிரகம்.
செக்ஸ்ங்கறது ? ஆசை 60 மோகம் 30 ன்னு வச்சுக்கிட்டாலும் 90 நாள் ஒரே மாதிரி மெயின்டெய்ன் பண்ணவேண்டிய மேட்டர்.

 இதனோட விளைவு என்னவா இருக்கும்?

எல்லாத்தையும் ரோசிச்சு கமெண்டா போடுங்க… நாளைக்கு நம்ம வெர்சனை கொடுத்துட்டு செவ்வாயை பேட்டி எடுக்க போயிரலாம். ஓகேவா? உடுங்க ஜூட்டு.

ப்ளாகர்ல தோழமைகளையும் -அவிக பக்கங்களையும் குறிப்பிடற வசதி வந்துருக்காமே.. நாம குறிப்பிட வேண்டிய மொத பார்ட்டி @கோவி.கண்ணன்

Sunday, February 6, 2011

கில்மாவும் சந்திரபலமும்:2

கடந்த பதிவுல சந்திரன் இல்லாட்டி கில்மாவே இல்லேங்கற ரேஞ்சுக்கு எஸ்டாப்ளிஷ் பண்ணியிருந்தேன். அதுக்கு முந்தின பதிவு சூரியபலமும் கில்மாவும். அதுல சூரியன் இல்லாட்டி கில்மாவே இல்லைனு எஸ்டாப்ளிஷ் பண்ணியிருந்தேன். எல்லா ஜாதகர்களோட வாழ்க்கையிலயும் சூரிய,சந்திரர்களோட பலம் இல்லைன்னா இழந்த சக்தி வைத்தியர்களை அணுக வேண்டிவரும்தான் இல்லேங்கலை. அதுலயும் மனிதர்களில் சூரிய மனிதர்கள் ,சந்திர மனிதர்கள்னு ரெண்டு கேட்டகிரி இருக்கு. சூரிய மனிதன் ஜாதகத்துலயோ அ அவனுக்கு கோசாரத்துலயோ சூரியபலம் இல்லேன்னா நாஸ்திதேன். இன் தி சேம் வே சந்திர மனிதனோட ஜாதகத்துலயோ அ அவனுக்கு கோசாரத்துலயோ சந்திர பலம் இல்லேன்னா டங்குவார் அறுந்துரும்.

மொதல்ல சந்திர மனிதர்களோட கேரக்டரிஸ்டிக்ஸை பார்த்துருவம்.

ஒருவித குளுமை ( இவிக மனசுலயும் இருக்கும் -இவிக கிட்ட கொஞ்ச நேரம் பேசினா அது நமக்குள்ளயும் பரவும்) , தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும்)

தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும்.

எவரேனும் ஏற்கெனவே போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம்.

பெரிய பிரச்சினை வந்துவிட்டால் நம்பியவரை கைவிட்டு தப்பித்துக்கொள்ளுதல் இந்த சந்திரமனிதர்களின் இயல்பு. சிக்கனம். இன் செக்யூரிட்டி , சந்தேகம் இவர்களுடன் பிறந்தவையாகும். குடும்பபாசம், க்ஷணிக காதல்கள் (கண்டதும் காதல்?). பெரிய மனிதர் வீட்டு பெண்கள் இவர்களால் சீக்கிரம் கவரப்படுவார்கள். சுருக்கமாய் சொன்னால் பெண்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.

இவிக விருச்சிக ராசில பிறந்து தொலைச்சா (அங்கன சந்திரன் நீசம்) அல்லது சந்திரனொட ராகு,கேது,சனி, அல்லது 6,8,12 அதிபதிகள் சேர்ந்த ஜாதகத்தில் பிறந்தா என்ன ஆகும். டப்பா டான்ஸ் ஆடும்.

சூரிய மனிதர்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.

பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.

தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் ஆண்மை நிரம்பிய குணம். ஃபாதர்லி நேச்சர்.

இதுல நீங்க எந்த கேட்டகிரில வர்ரிங்கனு பாருங்க. சூரிய மனிதனா இருந்தா சூரியன் சுப பலமா இருக்கனும். சந்திர மனிதனா இருந்தா சந்திரன் சுபபலமா இருக்கனும். ஜாதகத்துல மட்டும் இப்படி ஒரு அமைப்பு இருந்துட்டா போதாது.

முக்கிய முயற்சிகள்ள ஈடுபடும்போது கோசாரத்துலயும் அந்த கிரகங்கள் நல்ல நிலையில இருக்கனும்ங்கறதை மறந்துராதிங்க.

கோசாரத்துல சந்திர பலம் இல்லைன்னா ரெண்டேகால் நாள்ள வந்துரும் .இவிக பலான மேட்டரை விட்டு விலகியிருக்கலாம்.

சூரிய பலம் இல்லேன்னா அது வர மாசக்கணக்குல ஆகுமே அப்ப என்ன செய்ய? பகல்ல ஈடுபடறதை தவிர்க்கலாம். ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்லாம, கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இல்லாம ஈடுபடலாம். ஐ மீன் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிரனும்.

Monday, October 11, 2010

சுகுமார்ஜி பக்கங்கள்_ Sugumarje's Page_3

ராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? மூன்று...

இந்த புவி காலம், இயக்க ஒழுங்குக்கு கட்டுப்பட்டது. என்னைப்போல வாரம் மூன்று பதிவு என்று சொல்லிவிட்டு இரண்டை தருகிற ஏமாற்று அதற்கு தெரியாது.
இப்புவியில் மனிதம் உட்பட எல்லா உயிரினங்களும் நிலை பெற்றிருக்க வேண்டிய கட்டாயமும் அதற்கு உண்டு. நிலை பெறுதல் என்றால் சாகாவரமெனெபதல்ல. இறவா வாழ்வுதான் நாம் நினைக்கிறோம்... இறந்தும் வாழ்வதுதான் நமக்கு கிடைத்த வரம். அந்த நிலைபெறுவதற்காக நாம் செய்யத்தகுந்தது என்ன?

இப்புவியில் பிறந்தோர்க்கெல்லாம் ஒரு கடமை இருக்கிறது. அது இப்புவியை நிலைபெறுவதற்காக உயிர்க்கச்செய்தல். நாம் வாழ்கின்ற இப்புவி வரப்போகிற இளைய தலைமுறைக்கானது. இந்த பதிவு கூட அப்படித்தான் (ரொம்ப ஆசைதான்!?). அப்படியான அக்கறைதான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்தாக வேண்டும். அத்தகைய அக்கறைதான் இப்புவியை மேன்மேலும் உயிர்க்கச்செய்யும்.

இந்த உயிர்க்கச்செய்தலில் குழந்தைப்பேறு முதன்மையானது. அதற்கு இன்னொரு துணையும் அவசியமாகிறது. இந்த சமூகம் இதை திருமண பந்தத்தின் வழியே முறைப்படுத்தி இருக்கிறது. யாரோடும், யாரும் இல்லவே இல்லை. அப்படி செயல்பட மிருகங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. மனிதம் எனச்சொல்லில் புனிதம் என்பதும் கலந்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

குழந்தைப்பேறு மிக நீண்ட வரலாறு, முடிவில்லா தன்மை கொண்டது. பதின்வயதில் நம்மை இந்த இயற்கை நம்மை தயார்படுத்துவதே இதற்குத்தானே. ஒரு பையன் தன்னை ஆணாக உணர்வதும், சிறுமி தன்னை பெண்ணாக உணர்வதும் பதின் வயதுகளில்தானே. காமத்தால் பிறந்த நாம், காமத்தில் உழல்வது அதிசயம் அல்லவே. நிச்சயிக்கப்படும் திருமணத்தைவிட இந்த உயிர்க்கச்செய்தலில் காதல் திருமணம் செய்யும் பங்கு வேகமானது. இந்த விளக்கங்கள் திரு. முருகேசன் பதிவுகளில் நிறைய இருக்கின்றன.

சரி. இப்பொழுது இயற்கை, புவி, உயிர்க்கச்செய்தல் விளக்கமறிந்தோம்... தலைப்புக்கான காமத்திற்கு வரலாம்.

நம்மை ஒரு பெண்ணாக, ஆணாக, திருநங்கை ஆக உருவாக்குதலில் குடும்ப சூழல் மட்டுமல்ல, கிரகச்சூழலும் தான். தோற்றத்தில் ஆணாக, செயற்பாடுகளில் பெண்ணாக இருப்போரையும், தோற்றத்தில் பெண்ணாக, செயற்பாடுகளில் ஆணாக இருப்போரையும் நம் வாழ்வில் காண்கிறோம். இந்த வேலையை புதன், சனி, மற்றும் சந்திரன் செய்யவிழைகின்றர். சுக்கிரன் இதற்கு, இவர்களுக்கு உதவதயாராகிறான்...

இன்னமும் காண்போம்...