Thursday, August 28, 2008

உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒரு ஆசிரமம்

தஸ்லிமாவின் தந்தைக்கு மொத்தம் 6 பெண் குழந்தைகள்,அனைவருக்கும் திருமணமாகிகுழந்தை குட்டிகளுடன் வசித்து வருகின்றனர். தஸ்மாவுக்கும் ரயில்வே ஊழியரான லத்தீஃப்(45) என்பருடன் 1993 ல் திருமணம் நடந்தது. ஆனால் 10 வருடங்கள் வரை தஸ்லிமா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தஸ்லிமா உடல் ஊனமுற்றவர்களுக்காக ஒரு ஆசிரமம் அமைத்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் போலும். அந்த பணிக்கு தேவையான படிப்பை அவர் எவ்வித தடங்கலும் இன்றி படித்து முடிக்க வேண்டும் என்று தானோ என்னவோ எம்.எஸ்.சி,எம்.இடி,பி.ஹெச் டி , என்று சரமாரியாக படித்துமுடிக்கும் வரை அவருக்கு இறைவன் பிள்ளைவரம் தரவேயில்லை. //Spl.Edu.Hearing impaired//படித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றார். அதன் பிறகு தஸ்லிமாவுக்கு ஆணும்,பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன.இப்போது ஆண் குழந்தை முதல் வகுப்பும்,பெண் குழந்தை எல்.கே.ஜியும் படித்து வருகின்றனர்.
அரசின் நிதி உதவி ஏதுமின்றி உங்களால் எப்படி இந்த நிறுவனத்தை எப்படி நடத்த முடிகிறது என்று கேட்டால் சூப்பர்ஸ்டாரி ரஜினி காந்த்தை போல் ஆகாயத்தை காட்டுகிறார்