Friday, February 11, 2011

பாக்கில் அமெரிக்க தூதர் கைது?

பாக்கில் இருவரை பாக்கிற்கான அமெரிக்கதூதர் சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்படலாம் என்று செய்தி வந்திருக்கிறது.

"அவிக சுடப்பார்த்தாய்ங்க அதனால தற்காப்புக்கு சுட்டேனு தூதர் சொல்லியிருக்காரு. ஆனால் சுட வந்தவுகள்ள ஒருத்தன் கிட்டத்தான் துப்பாக்கி இருந்திருக்கு. அதுவும் காலி ( நோ புல்லெட்ஸ்) தூதர் கையில துப்பாக்கி எப்படி வந்தது? பையில மாறுவேடத்துக்கு தேவையான ஐட்டங்க ஏன் இருந்தது? ன்னுட்டு பாக் போலீஸ் கேட்குது.

அமெரிக்கா முன்னாடி பாக் அரசு நாலு காலையும் தூக்கிட்டதால பாக் மக்கள் அரசை செல்லா காசுக்கு கூட மதிக்கிறதில்லையாம். அதனால இருக்கிற இத்துனூண்டு மருவாதியனா காப்பாத்திக்க இந்த கேஸை பாக் சீரியஸா டீல் பண்ணுது. அமெரிக்க பெரியண்ணன் "வார்னிங் மேல வார்னிங்" விட்டுக்கிட்டிருக்காரு.

பாக் என்னமோ நடவடிக்கையில உறுதியா இருக்காம். ஹும்.. பார்ப்போம்!

கடவுளுக்கு தர்மத்தை காக்கும் மூட் வந்தா அநியாயத்துக்காக கை கோர்த்த கூட்டாளிக மத்தியில தகராறை உண்டு பண்ணி அவனனவனே அடிச்சிக்கிட்டு சாகிறாப்ல பண்ணுவாராம். (உ.ம் மகிந்திர பட்சே, பொன்சேகா - இப்ப கலைஞர் -சோனியா)

ஆமா நான் பாப்பாத்திதானு கர்ஜனை செய்த ஜெயலலிதா அம்மையாரை கொண்டே ஜெயேந்திர சரஸ்வதியை களி திங்க வச்ச கடவுளுக்கு இதெல்லாம் பெரிய காரியம்னு நான் நினைக்கலை