Monday, February 4, 2008

மக்கள் எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத postal ஸ்டாம்புக்கு கூட revenue இல்லாத திவாலா அரசு


அகில உலகமே தலையில் வைத்து கொண்டாடிய அன்றைய ஆந்திர முதல்வர் (ச)தந்திர பாபு நாயுடுவுக்கு ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை 1997 முதல் தொடர்ந்து அனுப்பி வந்தேன். 2002 ஏப்ரல் வரை பதிலே இல்லை. கடுப்பாகி மக்கள் எழுதும் கடிதங்களுக்கு பதில் எழுத postal ஸ்டாம்புக்கு கூட revenue இல்லாத திவாலா அரசு உங்கள் அரசு என்று தெரியும். எனவே இந்த 10 ரூ எம்.ஓ வை வாங்கிக்கொண்டாவது பதில் தாருங்கள் என்று எம்.ஓ அனுப்பினேன். அதை வாங்கிகொண்டும் முதல்வர் அலுவலகம் மவுனத்தையே பதிலாக்கியது.

இந்த விஷயத்தை அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்தவரும் ,இன்று முதல்வராக இருப்பவருமான ஒய்.எஸ் .ராஜசேகர ரெட்டிக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். ஜனாதிபதிக்கும் புகார் செய்து அதன் பிரதியை முதல்வர் அலுவலகத்துக்கு ஃபாக்ஸ் மூலம் அனுப்பினேன். அதன் மீது முதல்வரின் செயலாளர் எழுதிய ஃபுட்நோட் இது.

ஐ.நா.சபை எழுதிய கடிதம்


எனது ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை பாராட்டி ஐ.நா.சபை எழுதிய கடிதம். த‌ம‌க்கு தொட‌ர்ப‌ற்ற‌ விஷ‌ய‌த்தில் கூட‌ பொருத்த‌மான‌ பதில் த‌ரும் மேனாட்டின‌ரின் நாக‌ரிக‌த்தையும், 9 வ‌ருட‌ங்க‌ள் தொட‌ர்ந்து திட்ட‌த்தை அனுப்பியும் எவ‌னோ செத்தான் என‌க்கென்ன‌ போச்சு என்றிருக்கும் ஆந்திர‌ முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம்,லோக்ச‌பா ஸ்பீக்க‌ர் அலுவ‌ல‌க‌ங்க‌ளின் அநாக‌ரிக‌த்தையும் ஒப்பிட்டு பாருங்க‌ள்.

ஆன்மீகம் மாத இதழில் தேர்வாகி பிரசுரிக்கப்பட்டு முன் கூட்டிய தகவல் ஏதுமின்றி பாதியில் நிறுத்தப்பட்ட சீரியல்களில் இரண்டாவது சீரியலின் ஒரு அத்தியாயம் இது . பரிகாரங்கள் சீரியல் ஜோதிட பூமி மாத இதழிலும், நிலாச்சாரல் இணைய இதழிலும் பிரசுரமாகிவிட்டது. ஸ்ரீ பிரம்மங்காரு சீரியல் எதில் பிரசுரமாகுமோ அது ஆண்டவன் விருப்பம்.

ஜெ. எதிர்காலம் குறித்து நான் எழுதி சரித்திர நாயகியில் பிரசுரமான கட்டுரை


தமிழக முன்னாள் ஜெயலலிதாவுக்கு நீங்கள் முதல்வராவது உறுதி என்று கூரியர் மூலம் தெரிவித்தேன். என் கணிப்பு நிஜமாகி அவர் தேங்க்ஸ் கார்டு அனுப்பினார். இந்த விவரங்களை சரித்திர நாயகி ஆசிரியருக்கு நான் கடிதம் மூலம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஜெயலலிதா மீதான (அப்போதைய) வழக்குகள் என்னாகும் என்று கணித்து எழுதச்சொன்னார் .அவர் வேண்டுகோளின் படி ஜெ. எதிர்காலம் குறித்து நான் எழுதி சரித்திர நாயகியில் பிரசுரமான கட்டுரையின் ஸ்கான் இது.

சரித்திர நாயகி ஆசிரியர் எனக்கு எழுதிய கடிதம்



தமிழக முன்னாள் ஜெயலலிதாவுக்கு நீங்கள் முதல்வராவது உறுதி என்று கூரியர் மூலம் தெரிவித்தேன். என் கணிப்பு நிஜமாகி அவர் தேங்க்ஸ் கார்டு அனுப்பினார். இந்த விவரங்களை சரித்திர நாயகி ஆசிரியருக்கு நான் கடிதம் மூலம் தெரிவித்தேன். அதற்கு அவர் ஜெயலலிதா மீதான (அப்போதைய) வழக்குகள் என்னாகும் என்று கணித்து எழுதச்சொன்னார் .அவர் வேண்டுகோளின் படி ஜெ. எதிர்காலம் குறித்து கட்டுரை ஒன்று எழுதி அனுப்பினேன். அது சரித்திர நாயகியில் பிரசுரமானது. அதன் பிரதியை ஜெயலலிதாவுக்கு அனுப்பும்படி அவரை கோரினேன். அதற்கு எதிர்வினையாக ஆசிரியர் எழுதிய கடிதம்தான் இது

கிரக பலம்:



கிரகங்கள் தாம் உச்சம் பெறும் ராசிக்கு 7 ஆவது ராசியில் நீசம் பெறும் என்பது விதி.
எந்த கிரகம் எந்த ராசியில் உச்சம் பெறும் என்பதை பார்ப்போம்!

சூரியன்‍‍:மேஷம்
சந்திரன்: ரிஷபம்
செவ்வாய்:மகரம்
குரு:கடகம்
சனி:துலா
புதன்:கன்னி
சுக்கிரன்:மீனம்

எந்த கிரகம் பலம் பெற்றால் நல்லது:
லக்னத்திலிருந்து 1,5,9 ஆவது அதிபதிகள் உச்ச பட்சபலம் பெறவேண்டும்.
4,7,10 அதிபதிகள் மத்தியதர பலம் பெற்றால் போதுமானது.
6,8,12 அதிபதிகள் முழுமையாக பலவீனப்பட வேண்டும்

எந்த கிரகம்,எந்த கிரகத்தோடு சேர்ந்தால் நல்லது:

1,5,9 அதிப‌திக‌ள் ப‌ர‌ஸ்ப‌ர‌ம் க‌ல‌ந்தால் 100 ச‌த‌வீத‌ம் ந‌ல்ல‌து
இவ‌ர்க‌ள் 4,7,10 அதிப‌திக‌ளோடு சேர்ந்தால் 75 ச‌த‌வீத‌ம் ந‌ன்மை.
4,7,10 அதிப‌திக‌ளே ப‌ர‌ஸ்ப‌ர‌ம் க‌ல‌ந்திருந்தால் 50 ச‌த‌வீத‌ம் ந‌ல‌ம்.
1,5,9,4,7,10 அதிப‌திக‌ள் 2,11அதிப‌திக‌ளுட‌ன் சேர்ந்தால் 35 ச‌த‌வீத‌ம் ந‌ல்ல‌து. ஆனால் இவ‌ர்க‌ளுக்கு 6,8,12 அதிப‌திக‌ளுட‌ன் எவ்வித‌ தொட‌ர்பும் இருக்க‌ கூடாது. மேற்கூறிய‌ விதியை த‌ங்க‌ள் ஜாத‌க‌ ச‌க்க‌ர‌த்துக்கு ம‌ட்டுமே அல்லாது த‌ற்போதுள்ள‌ கிர‌க‌ நிலைக்கும் அப்ளை செய்து ப‌ல‌னைய‌றிய‌லாம்.

துவாத‌ச‌(10+2=12)பாவ‌ கார‌க‌த்துவ‌ம்:
ஜாத‌க‌ ச‌க்க‌ர‌ம் 12 க‌ட்ட‌ங்க‌ளாக‌ பிரிக்க‌ப்ப‌டும் என்று ஏற்கென‌வே கூறினோம். இந்த‌ 12 க‌ட்ட‌ங்க‌ளும் உங்க‌ள் வாழ்க்கை என்னும் போர்ட்ட‌பிள் டி.வி.யில் ஒளிப‌ர‌ப்பாகும் 12 சேன‌ல்க‌ளை காட்டுவ‌ன‌வாகும். இந்த‌ பாவ‌ங்க‌ளுக்கு,பாவாதிப‌திக‌ளுக்கு மேற்சொன்ன‌ விதிக‌ளை அப்ளை செய்து பாருங்க‌ள். இவை எந்த‌ அள‌வுக்கு ப‌ல‌ம் பெற்றிருந்தால் அந்த‌ அள‌வுக்கு இவை காட்டும் விஷ‌ய‌ங்க‌ளில் நீங்க‌ள் வெற்றிய‌டைய‌லாம்.
முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)
உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குணம்

2ஆவது சேன‌ல்:
(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்

3 ஆவது சேனல்:
சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில் பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்

4ஆவது சேனல்:
தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்

5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு

6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு

7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்

8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்

9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.

10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்

11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.

ஏழுமலையான் மீது பாடப்பட்ட பாடல்களின் அச்சு,எழுத்து பிரதிகள் மீது ஆராய்ச்சி


திருப்பதி திருமலை தேவஸ்தானத்தார் சப்தகிரி என்று ஒரு பத்திரிக்கை வெளியிடுகிறார்கள். அதில் ஒரு அறிவிப்பை கண்டேன். ஏழுமலையான் மீது பாடப்பட்ட பாடல்களின் அச்சு,எழுத்து பிரதிகள் மீது ஆராய்ச்சி நடக்கிறது. அவற்றை வைத்திருப்பவர்கள் அனுப்பினால் ஆராய்ச்சிக்கு பிறகு ஜாக்கிரதையாக திருப்பி அனுப்பப்படும். என்பது அதன் சாராம்சம். நான் எனது படிஐப்புகளை அனுப்பினேன். அந்த பிராஜக்டின் தலைவர் டாக்டர்.Raghavachari என்பவர் பாடல்கள் அற்புதமாக இருப்பதாகவும் தேவஸ்தானம் நிதி உதவியுடன் அச்சிட முயற்சி செய்யும்படியும் கடிதம் எழுதினார். அதற்கான படிவத்தை கூட அனுப்பினார். நானும் விண்ணப்பித்தேன் . அதற்கு வந்த பதிலைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள்.

Sunday, February 3, 2008

ரஜினி பெட்டர். காரணம் ரஜினி தம் மகளை நடிகையாக்கவில்லை.


அந்த நாள் முதல் இந்த நாள் வரை நான் ஒரே விதமாகத்தான் யோசிக்கிறேன், முடிவெடுக்கிறேன்,செயல் படுத்துகிறேன். அன்று அவை யாவும் படு தோல்வியுற்றன. இன்றோ வெற்றி என் வீட்டுக் கதவை தட்டியபடியே இருக்கிறது. ஒரு நாளில்லை ஒரு நாள் நானும் லைம் லைட்டுக்கு வருவேன்.இன்றைய பெரிய மனிதர்களை சந்திக்கு இழுப்பேன்.

அது ரஜினியாகட்டும்,சிரஞ்சீவியாகட்டும். சுஜாதாவாகட்டும்,பாலகுமாரனாகட்டும். வி.ஐ.பி.க்களை விமர்சிப்பது ஒரு மனவியாதி,பிரபலமாக ஒரு குறுக்கு வழி என்றெல்லாம் ஆர்குட்டில் கூட பலர் என்னை விமர்சித்தார்கள்.

என்னை பொருத்தவரை என் கையில் இன்றிருப்பது கப்பறையாகவேகூட இருக்கலாம். அவர்கள் தலைகளில் இருப்பது கிரீடங்களாகவே கூட இருக்கலாம். இந்த கப்பறைக்கான காரணம் என் கடந்த காலத்தில் இருக்கிறது. இவர்களின் கிரீடங்களுக்கான காரணமும் கடந்தகாலத்தில் தான் இருக்கிறது. என் இருண்ட காலத்தில் என்னை நானே வெளுத்து சுத்திகரித்துக்கொண்டுவிட்டேன். இவர்களோ லைம் லைட்டின் வெளிச்சத்தில் அழுக்காகிவிட்டார்கள்.

என் அளவு கோல் ரொம்ப சிம்பிள். வெற்றிக்கும் திறமைக்கும் தொடர்பு கிடையாது. இந்த நவீனயுகத்தில் வெற்றி என்பது ஒரு விபத்து மாதிரி. நம்மை விட தகுதி படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் ஒரு துண்டு பீடிக்கு கூட கதியில்லாமல் இருப்பார்கள். இதை மறந்து என் வெற்றிக்கு காரணம் என் தகுதி,உழைப்பு என்று ஜல்லியடிப்பது மதியீனம்.

ரஜினியை மக்கள் அங்கீகரித்துவிட்டார்கள். இதற்கு நன்றி தெரிவிக்க ரஜினி செய்ய வேண்டியது என்ன? எந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொல்வதா ? நிச்சயமாக இல்லை. ரஜினியை ரஜினியாக்கி உய்ரத்தியது சினிமா. ஆனால் அந்த சினிமாத்துறைக்கு ரஜினியால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர் நினைத்தால்

சினிமாவுக்கு ஏதோ செய்யவேண்டும் என்ற தவிப்பில் இருப்பவர்களுக்கு உதவலாம். இதுஒன்றுதான் ரஜினி செய்யக் கூடியது. ஆனால் அவரோ மீண்டும் மீண்டும் மற்றொரு சிவாஜிக்கு முயற்சி செய்தபடி சர்வைவல் பிரச்சினைகளிலேயே மூழ்கியிருக்கிறார்.

சிரஞ்சீவி பிழைப்பும் இதுதான். அவருக்கு வாழ்வு தந்த சினிமாவுக்கு அவரால் ஒரு இழவும் செய்ய முடியாது. அவர் தகுதி அப்படிப்பட்டது. வென்றவன் அதிர்ஷ்டத்தால் வெல்கிறான். திறமையால் வெல்ல முடியாதவர்களுக்கு அவன் வழி காட்ட வேண்டும் அதுதான் அவன் அவனை வாழவைத்த‌ துறைக்கு காட்டும் நன்றி.

இதை என் வாழ்வில் சிறுவயதிலிருந்தே கடைபிடித்து வருகிறேண். கடை பிடிப்பேன். இதனால் என் கையில் உள்ள கப்பறை கிரீடமாக மாறும். இவர்கள் அதை கடை பிடிப்பதில்லை. எனவே இவர்களின் கிரீடங்கள் கப்பறையாக மாறுவது உறுதி. ரஜினியுடன் சிரஞ்சீவியை ஒப்பிட்டால் ரஜினி பெட்டர். காரணம் ரஜினி தம் மகளை நடிகையாக்கவில்லை. அவரது காதலை அங்கீகரித்து சைடு கொடுத்து பெரியமனிதராகிவிட்டார். ஆனால் சிரஞ்சீவி தன் மகனை திணித்துவிட்டார். அதுவும் தன் ஜிராக்ஸ் பிரதியாக. மகள் விஷயத்தில் தலைப்பு செய்தியாகிவிட்டார்.

Friday, February 1, 2008

ஆப்பரேஷன் இந்தியா 2000 ம்னா என்னண்ணே?



இது ஒரு திட்டம் இந்தியாவை பணக்கார நாடாக்குறதுக்காக நான் போட்ட திட்டம். இதுல அஞ்சு பார்ட் இருக்கு.

ஒன்னொன்னா சொல்லுண்ணே கேக்கலாம்

சொல்றம்பா.. இப்போ நம்ம நாட்டு தலையெழுத்தை நிர்ணயிக்கிறது யாரு?


பிரதம மந்திரி.


இப்போ இருக்கிற பிரதம‌ மந்திரிய‌ ம‌க்க‌ள் விரும்பி தேர்ந்தெடுத்தாங்க‌ளா ? இல்லே . ம‌க்க‌ள் சோனியா பிர‌த‌ம‌ராக‌னும்னு ஓட்டு போட்டாங்க‌ . சோனியா மேல் நாட்டு ம‌ரும‌க‌ள்னு எதிரி க‌ட்சிக‌ள் கூப்பாடு போட்ட‌தால‌ அந்த‌ம்மா ந‌ம்ம‌ ம‌ன்மோக‌னை கை காட்டிட்டாங்க‌ ..இதுக்கு கார‌ண‌ம் ந‌ம்ம‌ நாட்டுல‌ ம‌றைமுக‌ ஜ‌ன‌நாய‌க‌ம் அம‌ல்ல‌ இருக்கு. அதாவ‌து ம‌க்க‌ள் எம்.பி க்க‌ளை தேர்ந்தெடுக்குறாங்க‌, எம்.பி க்க‌ள் பிர‌த‌ம‌ரை தேர்ந்தெடுக்குறாங்க‌. ம‌க்க‌ளே பிர‌த‌ம‌ரை நேர‌டியா தேர்ந்தெடுக்க‌னும்கிற‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துல‌ முத‌ல் பார்ட்டு

இத‌னால‌ என்ன‌ண்ணே லாப‌ம்?

நிறைய‌ இருக்கு த‌ம்பி. எம்.பி க்க‌ளால் தேர்வாகும் பிர‌த‌ம‌ருக்கு எம்.பி க்க‌ளோட‌ த‌ய‌வு இருந்தாதான் அவ‌ர் பிர‌த‌மரா தொட‌ர‌ முடியும். எம்பி க்கள் நினைச்சா ஒரு ந‌ம்பிக்கையில்லா தீர்மான‌ம் கொண்டு வ‌ந்து க‌ல்தா கொடுக்க‌ முடியும். இத‌னால் பிர‌த‌ம‌ருக்கு ம‌க்க‌ளை விட‌ எம்.பி.க்க‌ளோட‌ த‌ய‌வு அதிக‌மா தேவை ப‌டுது.அத‌னால‌

அர‌சாங்க‌த்தோட‌ ஸ்திர‌த்த‌ன்மை பாதிக்க‌ப்ப‌டுது. பிர‌த‌ம‌ர் த‌ன் நேர‌த்தை அதிக‌மா எம்.பி.க்க‌ளை திருப்தி ப‌டுத்த‌ற‌துல‌ செல‌வ‌ழிக்க‌ வேண்டி வ‌ருது.. இன்னும் ஒரு லாப‌ம் இருக்கு காதை கிட்டே கொண்டா சொல்றேன். இன்னைக்கு நாட்ல‌ பி.சி,எஸ்.சி,எஸ்.டி,மைனாரிட்டிக‌ள் 53 ச‌த‌வீத‌ம் இருக்காங்க‌. நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம் அமுலாகி மும்முனை போட்டி ஏற்ப‌ட்டால் இந்த‌ 53ல‌ பாதி பேர் ச‌ப்போர்ட் ப‌ண்ணா போதும் மேற்ப‌டி ம‌க்க‌ளுக்கு ந‌ன்மை செய்ற‌ அர‌சு ஏற்ப‌ட‌ வாய்ப்புண்டு.

அர‌சிய‌ல் ஆர்வ‌ம் இல்லாத‌வ‌ங்க‌, ஆனால் மேதைக‌ள் இருப்பாங்க‌ இவ‌ங்க‌ளோட‌ ஆலோச‌னை அரசாங்க‌த்துக்கு தேவைப்ப‌டும். ஆனால் இவ‌ங்க‌ தேர்த‌ல்ல‌ நிக்க‌ பிரிய‌ப்ப‌ட‌மாட்டாங்க‌ . இப்ப‌டிப் ப‌ட்ட‌ பார்ட்டிக‌ளை பாராளும‌ன்ற‌த்துக்கு கொண்டுவ‌ர‌த்தான் அந்த‌ கால‌த்துல‌ ராஜ்ய‌ ச‌பா ஏற்ப‌டுத்தினாங்க‌. ஆனால் கால‌த்தின் கொடுமையால‌ ம‌க்க‌ளால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ அர‌சிய‌ல்வாதிக‌ளை திருப்பி கொண்டுவ‌ர்ர‌ கொல்லைப்புற‌ வ‌ழியாக‌ இன்றைய‌ ராஜ்ய‌ ச‌பா மாறியிருக்கு.


நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம் அம‌லாகி,ம‌க்க‌ளால் நேரிடையாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌த‌ம‌ர் தான் விரும்பிய‌ மேதைக‌ளை ராஜ்ய‌ச‌பாவுக்கு நாமினேட் ப‌ண்ணிக்கிற‌ வாய்ப்பு ஏற்ப‌டும்.


இன்னைக்கு ஒரு எம்.எல்.ஏ ,எம்.எல்.ஏ வா ஜெயிக்க‌னும்னா 1 கோடி ரூபா செல‌வ‌ழிக்க‌ வேண்டியிருக்கு. 4 எம்.எல்.ஏ தொகுதி சேர்ந்த‌து ஒரு எம்.பி., தொகுதி. ஆக‌ ஒரு ஆசாமி எம்.பி யா தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட‌னும்னா அவ‌ர் கு.ப‌.4 கோடி ரூ. செல‌வ‌ழிக்க‌னும். ஜெயிச்சு வ‌ந்த‌ பிறகு அவ‌ர் விட்ட‌தை பிடிக்க‌ பார்ப்பாரா ம‌க்க‌ளுக்கு சேவை செய்ய‌ பார்ப்பாரா?

நேரிடை தேர்த‌ல் வ‌ரும்போது எம்.பி ப‌த‌விக்கான‌ முக்கிய‌த்துவ‌ம் குறைஞ்சு போயிரும். போட்டி குறையும். செல‌வும் குறையும். அர‌சாங்க‌ம் செய்யும் தேர்த‌ல் செல‌வும் குறையும். எங்க‌யோ தில்லில‌ இருக்கிற‌ அத்வானியோ,சோனியாவோ ஜெய‌க்க‌னுங்க‌ற‌துக்காக‌ இங்க‌ இருக்கிற‌ ரெட்டி,நாயுடு ல‌ட்ச‌ங்க‌ளை வாரியிறைக்க‌ வாய்ப்பு இல்லை. முக்கிய‌மா வ‌ன்முறையும் குறையும். க‌ட்சிக‌ள் வெற்றிக்குதிரைக‌ளை க‌ண்டு பிடித்து க‌ள‌ம் இற‌க்கியாக‌னும். இத‌னால் உட் க‌ட்சி ஜ‌ன‌நாய‌க‌ம் கூட‌ பிக் அப் ஆக‌லாம்.


(தொட‌ரும்)

இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து.

உலக வரலாற்றை அறியாதவனுக்கு தாய்நாட்டின் பெருமை தெரியாது. கு.ப.வெளி வெளிநாட்டிலாவது சில காலம் வாழ்ந்தாலன்றி தாய்நாடு நமக்கு தந்துள்ள உரிமைகள் பற்றி புரியாது. பாஸ்போர்ட் விசா கையில் இல்லாது வெளிநாட்டு போலீசிடம் சிக்கினால் நம் நிலை லைசென்ஸ் இல்லாத நாயை விட கேவலமாகிவிடும். இங்கும் தான் நடக்கிறது வழிப்பறி. ஆனால் அங்கு போல் ஒரு டாலருக்கு மண்டை பிளப்பதெல்லாம் அசகஜம்.இவ்வளவு ஏன் பக்கத்து நாடான பாக்கிஸ்தானை பாருங்கள். எத்தனை முறை ராணுவ ஆட்சி வந்து விட்டது. அட இலங்கையை பாருங்கள் பற்றி எரிகிறது. வாழ்க்கையில் எதையேனும் இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காதாம். அது போல் இந்தியனுக்கும் இந்தியாவை இழந்தாலன்றி அதன் பெருமை விளங்காது போலும்.

இந்தியா சுதந்திர நாடாக விளங்கும் போதே, ஜனநாயகம் நிலவும் போதே சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பெயரால் நில பறிப்பு, நம் நதிகளின் நீரை நமக்கே பாட்டிலில் அடைத்து விற்கும் கொடுமை,என் கவுண்டர்,லாக்கப் சாவு,துப்பாக்கி சூடு யாவும் நடக்கின்றன. இதில் நிலைமை மாறிவிட்டால்? கேட்கவே வேண்டாம்.


எனவே நண்பர்களே! இந்தியாவை காப்போம் பசி சுரண்டலில் இருந்து. ஜனநாயகத்தை காப்போம் எழுத்து வியாபாரிகளிடமிருந்து..