Showing posts with label Tamilnadu. Show all posts
Showing posts with label Tamilnadu. Show all posts

Saturday, January 25, 2014

புரட்சிதலைவிக்கு ஒரு பகிரங்க கடிதம்

மாண்புமிகு புரட்சி தலைவி அவர்களுக்கு,
அம்மா !
சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிக்காக வாழ்வா சாவா என்ற தீவிரத்துடன் போராடிய நீங்கள் வெற்றிக்கு பிறகு அந்த வெற்றியை வழங்கிய சாமானிய தொண்டர்களையும், மக்களையும்,மக்கள் நலனையும் எப்படி எல்லாம்   புறக்கணித்தீர்கள்? ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

அல்லும் பகலும் "உழைத்து " கடந்த ஆட்சியே மேல் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் - இருப்பதை விட்டு பறப்பதற்கு பரபரக்கிறீர்கள். இதற்கு உங்கள் "எண்ண ஓட்டம்"புரிந்த அடிப்பொடிகளும் தூபம் போட்டு வரும் வேளையில்  - பெங்களூர் வழக்கு தலை மேல் கத்தியாக தொங்கும் இந்த வேளையில்

மத்திய அரசுடனான மோதல் போக்கால் -ஈழ ஆதரவு போக்கால் கிடைத்த மைலேஜையும் முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து தள்ளி இழந்து விட்ட இந்த நிலையில் .. இந்த பகிரங்க கடிதத்தை எழுதுகிறேன். அதற்கு முன் என்னை பற்றி சில வரிகள்.

அடிப்படையில் நான் காங்கிரஸ் எதிர்ப்பாளன் .திமுக அனுதாபி. ஆனால் எங்கள் மானிலத்தில் ஒய்.எஸ்.ஆர் அவர்களின் சக்தி வாய்ந்த தலைமை காங்கிரஸ் எதிர்ப்பை கொஞ்சம் மழுங்க செய்துவிட்டது வேறு விஷயம்.

அதே போல் கலைஞரின் குடும்ப பாசம், காங்கிரசுடனான அவரது தன்மானம் சுயமரியாதையற்ற நெடு நாள் கூட்டு,ஈழத்தமிழர்கள் பால் அவர் காட்டிய அலட்சியம் ஆகியன அவரையும் காட்டமாக விமர்சிக்க செய்ய வைத்தது வேறு விஷயம்.

தற்போதைய அவரது பி.ஜே.பி -காங்கிரஸ் எதிர்ப்பு நிலை என் மனதை கொஞ்சம் இளகச்செய்திருப்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். ( ஆனால் இவர் இந்த நிலையில் எத்தனை நாள் தொடர்வார் என்பதிலும் சந்தேகம் இருக்கிறது.)

இதை எல்லாம் நான் குறிப்பிட காரணம் நான் உங்கள் ஜால்ரா அல்ல என்பதை முதற்கண் தெளிவுப்படுத்தி விடத்தான்.

சமீபத்தில் ராஜ்ய சபா வேட்பாளர்களில் ஒருவரை மாற்றி அறிவித்துள்ளீர்கள். இந்த மாற்றங்களை  நான்  மறுபடி மறுபடி பார்க்கிறேன்.

என் ஊகம் என்னவென்றால் நீங்கள் தனித்தீவாக்கப்பட்டிருக்கிறீர்கள். இருட்டில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களை சுற்றி சுய நலமிகளும் -துரோகிகளும் மட்டுமே இருக்கிறார்கள்.

அதே நேரம் இரண்டு நபர்கள் அல்லது இரண்டு குழுக்கள்/அமைப்புகள் உங்களுக்கு  முரண் பட்ட செய்திகளை தந்து கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு பரிதாப நிலை.

உங்கள் முன் உங்களுக்கு  மீண்டும் மீண்டும் மண்டியிடும்   நபர்கள் உங்களுக்கு பின் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்டு உங்களுக்காக அனுதாபம் கொண்டேன்.

நீங்கள் என்ன மாதிரியான கையறு நிலைகளை சந்தித்து மீண்டு வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். நதியை தேடி வந்த கடலுக்கு பிறகும் - எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகும் -சேவல் புறா எப்பிசோடுக்கு பிறகும் - ஆட்சியை இழந்த பிறகும் - ஊழல் வழக்குகள் பாய்ந்த போதும் எத்தனையோ எத்தனையோ டிசாஸ்டர்ஸ். அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள்.

இதற்கெல்லாம் உங்கள்  தகுதிகள் திறமைகளை விட உங்கள் அரசியல் எதிரிகளின் தகுதியின்மையும்,திறமையின்மையுமே காரணங்களாக அமைந்துள்ளன.

ஆனால் நீங்களும் -உங்களுக்கு லாவணி பாடுபவர்களும் இந்த யதார்த்தத்தை முழுக்க மறந்து விட்டாற்போல் இருக்கிறது.

அவர்கள்  உங்களுக்கு லட்சார்ச்சனை செய்வதும். . நீங்கள் அவற்றை ரசிப்பதும்.. பார்வையாளர்களை தற்காலிக மூல நோயாளிகளாக மாற்றிவிடுகின்றன.

உங்களுக்கு பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறதோ? இல்லையோ? வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ?  மூன்றாம் நபராகிய நான் - எவ்வித லாப நோக்கும் இல்லாமல் பிரதமர் பதவிக்கான களத்தில் உங்கள் கைவாளாக  -குறைந்த பட்சம் கேடயமாக சுழல வல்ல ஒரு ஆயுதத்தை சபா நாயகர் அலுவலகத்துக்கு அனுப்பினேன்.
ஆம்.. அந்த வாள்  இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல எனது திட்டம். .

1986 முதல் 1997 வரையிலான எனது உழைப்பில் தீட்டப்பட்ட திட்டம்.
அடுத்து என் வாழ்விலான 7 வருடங்களை தின்று விட்ட திட்டம். என்னை வறுமைக்கும் -பசிக்கும் தின்ன கொடுத்த திட்டம். அன்றைய ஆந்திர முதல்வருடன் என்னை போராட செய்த திட்டம்.
அதனை அதுவும் 234 பிரதிகளை  கூரியரில் தான்  அனுப்பினேன்.(சாதா தபாலில் அல்ல) இதற்கெல்லாம் ஒரு ரெஜிஸ்டர் போல ஏதாவது இருக்கலாம்.

அது குறித்த என் கோரிக்கைகள் மூன்று
1.மேற்படி பிரதிகளை .சட்டமன்றத்தில்  அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் கிடைக்க செய்தல்.அது குறித்து சிறிய விவாதம் நடக்குமாறு செய்தல்
2.ஒரு தீர்மானம் போடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்புதல்
3.உங்கள்  பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் சேர்த்தல்

அரசியல் சாசனம் அந்த பதவிக்கு எத்தனை எத்தனை அதிகாரங்களை அள்ளி வழங்கியிருந்தாலும் சபா நாயகர் என்பவர் உங்கள் வீட்டுகொலு பொம்மை.
ஆனால் அந்த கொலு பொம்மைக்கு உங்கள் மீது எத்தனை அக்கறை என்றால் 2013 மார்ச்சில் அனுப்பப்பட்ட 234 பிரதிகள் பற்றிய தகவல் கூட தங்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.எம்.எல்.ஏ க்களுக்கு வழங்கப்படவில்லை. விவாதம்? தீர்மானம் ..உங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கவும் படவில்லை.

இது போன்ற பொம்மைகளைத்தான் இன்னும் உங்கள் கொலுவில் வைத்திருக்கிறீர்கள் என்பதும்அந்த பிரதிகளை சபா நாயகர் அலுவலகத்து  அதிகாரி ஒருவர் தீவிரமாக அடைகாத்து வருகிறார் என்பது மட்டும் புரிகிறது.
சரி ஒழியட்டும் .. இந்த சங்கதியை உங்கள் தனிப்பிரிவுக்கு அனுப்புகிறேன்.அவர்கள் மேல் நடவடிக்கைக்காக "கட்சி அலுவலத்துக்கு அனுப்புகிறார்கள்"

கட்சி அலுவலகமோ பொறுப்பாக யாரிடமோ கொடுத்து அடை காக்க செய்திருக்கிறது. சீக்கிரமே குஞ்சு வெளிவரும் போல.

இந்த சங்கதியை தங்களை நேரில் சந்திக்கும் "வாய்ப்பு" பெற்ற வீணை காயத்ரி அவர்களுக்கு தெரிவிக்கிறேன். அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை.
சரி ..அம்மா சிங்கம். அம்மாவின் குகையில் சிங்கங்களுக்கு மட்டுமே இடம் இருக்கும்.  அம்மாவின் இல்ல முகவரிக்கு அனுப்பினால் அம்மா பார்வைக்கு நிச்சயம் போகும்  ஏன் என்றால் அங்கு விசுவாசிகளே இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் 234 பிரதிகளை அதே கோரிக்கைகளுடன் தங்கள் இல்ல முகவரிக்கு அனுப்பினேன் ( செப்ட ,2013)

அதையும் சீண்டுவார் இல்லை. உங்கள் மூக்குக்கடியில் நடப்பதே உங்கள் பார்வைக்கு வருவதில்லை எனும் போது .. யாரோ ஒரு ராஜ்ய சபா வேட்பாளர் பற்றிய  உண்மையான தகவல் உங்களுக்கு  எப்படி கிடைக்கும்.
Really I pity of you.

Saturday, January 29, 2011

பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -1

ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்...

கவிதை07க்காக சுகுமார்ஜி...

ழுத்துலகில் புதிய எழுத்தாளராக அவதரித்திருக்கும் அன்பர் எஸ். ஆனந்த்... தமிழ்நாடு பிராமணர்கள் பற்றி தன் மனம்திறந்து செய்திகளை தெரிவிக்கிறார்.  

தமிழக பிராமணர்கள் நீண்ட நெடுங்கால பாதுகாக்கப்பட்ட பாராம்பரியம் கொண்டவர்கள். தற்பொழுதைய காலகட்டத்தில் தங்களை பிரித்தது போல உணர்கிறார்கள். பிராமணர்கள் பொதுவாகவே தங்களை விளம்பரபடுத்துக் கொள்வதில்லை. அதுபோலவே தங்கள் உணர்வுகளை சிலநேரங்களில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். தமிழக பிராமணர்களை அனேகமாக எல்லோருமே கேவலப்படுத்த முனைகிறார்கள். இதற்கு பொதுவான காரணம் தமிழக பிராமணர்கள் போராட்டங்களும், எதிர்விளைவும் செய்ததில்லை. மனம் வருந்ததக்க நிகழ்வுகளால் தமிழக பிராமணர்கள் மேன்மை அழிக்கப்பட்டுவிட்டது. ஆனலும் கூட தமிழக பிராமணர்கள் அமைதி காத்துவருகின்றனர். இப்போதைய நிலைமை 1930 ஆண்டில் தமிழக பிராமணர்களுக்கு நேர்ந்ததாகவே இருக்கிறது.

பிராமணர்களை அழிச்சாட்டியம் செய்யும் குழுக்கள் சில திட்ட வரையறைகளை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே நகரங்களில் வாழும் பிராமணர்கள் மட்டுமில்லாது பலர், புராணகால அடையாளமான குடிமியை எடுத்துவிட்டு, இயல்பான தாடியை அடையாளம் கொண்டுள்ளனர். ஆத்தில் பேசுகிற தமிழை வீட்டில் பேசுவதாக மாற்றிவிட்டனர். அவர்களின் ஆடை காலாச்சாரங்களோடு ஒத்ததாக மாற்றிக்கொண்டனர். அசைவம் அவர்களின் உணவில் பட்டியலிடப்பட்டது. தன் சுற்றுவட்டத்தில் பிராமணர்கள் என்பதற்கான அடையாளத்தை தொலைத்ததின் மூலமாக தொல்லைகளில் இருந்து தங்களை வாழ்வின் பொருட்டு காப்பாற்றிக் கொண்டனர்.


இன்றோ சில பிராமணர்கள் மட்டுமே தங்களின் ஆச்சார மொழிவழி பேசிக்கொண்டிருக்கின்றனர். கிட்டதட்ட ஐம்பது சதவிகித பிராமண மக்கள் தங்கள் அடையாளம் மாறிப்போய் இருக்கின்றனர். துர்பாக்கியமாக யாருமே பிராமணர்களை குறிப்பிட்டு காணும் வகையில் அவர்களின் உடல், மொழி, நடவடிக்கைகள் இருக்கின்றன. இது சிலநேரங்களில் திராவிட பாரம்பரியத்திலிருந்து விலகியதாக உணரப்படுகிறது. சில திராவிட அமைப்புக்கள் பிராமணர்களை வந்தேறிகளாக குறிக்கின்றன. ஆனாலும் கூட திராவிட மொழி பிராமணர்களுக்கு உணவு, உறையுள்ளாக இருக்கிறது.


தமிழ்ச் சங்ககால சிலப்பதிகாரம், ஒரு ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகளால் எழுதப்பெற்றது. கோபம் கொண்ட கண்ணகி இப்படி சபிக்கிறாள் “ இந்த மதுரை நகரம் கொழுந்துவிட்டு எரியட்டும், பிராமணர்களும், பசுக்கள் மட்டும் தப்பி பிழைக்கட்டும்”. இதிலிருந்து தெரிவது பிராமணர்கள் மேலாக ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகள் கொண்டிருந்த மரியாதை. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பிராமணர்கள் நிலைமை மோசமாக இருக்கிறது. பற்பல அரசு வேலைகளில் மட்டுமில்லாது, கடினமான தொழில்களில் கூட தங்களை நிரூபித்து வருகிறார்கள். இயற்கையாக அமைந்த ஒழுக்கமும், ஆச்சார நெறிமுறைகளும் பிராமணர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. பிராமணரல்லாதோர் கிடைத்த நற்பலனை அசைவ உணவுகளாலும், மதுவகை குடிபழக்கத்தினாலும் இழக்கின்றனர். பிராமணரோ அவர்களை காப்பற்றும் சேவையிலிருக்கிறார்கள்.


நான் பிராமண மடங்களை சேராதிருந்தும், மடத்தலைவரின் அன்பை பெற்றிருக்கிறேன். 1951 ல், என் தகப்பனார் இறந்தார். 1954 ம் ஆண்டு, பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், சென்னை தி.நகரில் முகாமிட்டு இருந்தார்.  அந்த நாளில் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி முதன் முதலாக சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கச்சேரி செய்தார். ஆனாலும் பெரியவர் எம்.எஸ். சுப்புலட்சுமியையும், அவர் கணவர் சதாசிவத்தையும் கண்டுகொள்ளவில்லை. என் தாயாரோ, தினமும் வெறும் வயிற்றோடு மடம் சென்று பெரியவரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டார். ஆனால் என் தாயார் கணவனை இழந்த பிறகு,  பெரியவர் என் தாயாருக்கு புனித நீரைக்கூட தந்ததில்லை. பொதுவாக நான் பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மேலாக பக்தி கொண்டவனில்லை. கடைசியாக, நூற்றாண்டு கொண்டாட்டத்தில் என் மகனோடு கலந்து கொண்டபோது தான் சரஸ்வதி சுவாமிகளை பார்த்தேன். அவரோ, எனக்கென்ன? என்பதான நிலையில் இருந்தார். அது பரமாச்சாரியர்களின் குணம்.


அடுத்து ஜெயேந்திரர் பொறுப்பேற்றார். ஆனால் நான் மடத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டேன். சில நேரங்களில் அவர், ஜெயேந்திரர் முட்டாள்தனமாக நடந்துகொண்டார். உபயோகமில்லத செய்திகளை, பிரச்சனையை உருவாக்கும் வார்த்தைகளையும் மக்களிடம் பகிர்ந்தார். ஜெயேந்திரர் கைது செய்யப்படும்போது உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். இது மடத்தின் புகழை நிச்சயம் கெடுக்கும் நிகழ்வு. இது தொடர்பான வழக்கும், வழக்கு நடத்தப்பட்ட முறைகளும், பிராமண சமுதாயத்தை கேவலப்படுத்துவதாகவே அமைந்தது. ஆனாலும் ஜெயேந்திரர் கைது பொருட்டு பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டது நல்ல மாற்றமாக இருந்தது. இதுவே பிராமண சமுதாயத்திற்கு உரமாக இருந்தது.


தொடரும்....

Monday, August 9, 2010

நாட்டு நடப்பு

என்னதான் வாஸ்து,கில்மா வாஸ்துனு  ஒரு பக்கம்  ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாலும் மறு பக்கம் சைனால தொடர் சுரங்க விபத்துகள்,காஷ்மீர்ல துப்பாக்கி சூடுகள்,  ஊரடங்கு உத்தரவு, அடை மழை, கோதாவரில வெள்ளம் இதை எல்லாம்  நினைச்சு மனசுல  நடுக்கமும் தொடருது. இந்தியாவுல உள் நாட்டு யுத்தமில்லே. யுத்தமேதும் நடக்கலை. இருந்தாலும் ஜஸ்ட் ஒரு எஸ்.ஐ, ஒரு எஸ்.பி, ஒரு கலெக்டர் டீல் பண்ணி சால்வ் பண்ணக்கூடிய மேட்டர்ல கூட பயங்கரமா சொதப்புறாய்ங்க. அரசு இயந்திரம் துருப்பிடிச்சு கிடக்கு. டாப் டு பாட்டம் தேக்கமிருக்கு.

பிரச்சினையோட ஆணிவேரை அசைச்சு பிடுங்கறத விட்டுட்டு பக்கவேர்,சில்லி வேர்களை பத்தி சந்து முனையில  சிந்து பாடறாய்ங்க.  இந்திய இஞ்சினீர்ஸுல  நிறைய சதவீதம் பேருக்கு வேலையே தெரியாதுன்னு ஒரு சர்வே சொல்லுது. பெண்ணை கழுத்தை நெறிச்சு கொன்னு சூட்கேஸ்ல வச்சு பஸ்ஸ்டாண்ட்ல விட்டுட்டு போன கேஸ டிஸ்க்ளோஸ் பண்றதுக்குள்ள  குழந்தைய துண்டு துண்டா வெட்டி கேரியர்ல போட்டு புதைச்சிருக்காய்ங்க. பரவால்லய்யா நாடு  நல்லா டெவலப் ஆயிரும்.

அரசியலை பத்தி எழுதனும்னாலே அருவறுப்பா இருக்கு. இருந்தாலும் என்ன பண்றது " சுக்க சிராதோ கோடி மெதள்ளு கதுலுதாயி" (ஒரு துளி மையால் கோடி மூளைகளில் சலனம் வரும்) ங்கறது உண்மையோ இல்லையோ ஒரு பிரதமர், ஒரு முதல்வரோட பேனாலருந்து ஒரு துளி மை சரிய்யான பேப்பர்ல செலவழிஞ்சா 120 கோடி மக்கள் வாழ்க்கைல வெளிச்சம் வந்துருமே. இந்த ஒரே ஒரு பாயிண்டுக்காகத்தான் இப்படி மன்னாடறது.

இன்னைக்கு ஒரு சோனியா காந்தி நினைச்சா எத்தனையோ செய்யமுடியும். ஆனால் அவிகளோட ஒரு  தாலி அறுந்ததுக்கு லட்சக்கணக்கான தமிழச்சிகளோட தாலிகளை அறுத்துட்டாய்ங்க அவ்ளதான். 

நம்ம கலைஞர் எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றினவர் (மேடைகள்ள மட்டுமல்ல) இலங்கை தமிழர்கள் விசயத்துல ஜஸ்ட் ஒரு கிம்மிக் செய்திருந்தா போதும் எத்தனையோ லட்சம் உயிர்கள் மிஞ்சியிருக்கும்.

இன்னைக்கும் சரி  இலங்கையில தமிழர்கள் எல்லாரும் அவிக பகுதிகள்ள குடியேறனும். இல்லைன்னா  செப்டம்பர்ல ரிலீசாக வேண்டிய இயந்திரன்  ரிலீசாகாதுனு சொல்ட்டா போதும் ரஜினி ரசிகர்கள் எல்லாம் தில்லிக்கு போய் சோனியா தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சி கூத்தாடி காரியத்தை முடிச்சுருவாய்ங்க. ( என்ன தம்பிகளா முடிப்பிங்கதானே)

என்னோட பஞ்ச் டயலாக் ஒன்னு :

ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்ட நேரத்துல நல்ல புத்திய கொடுத்து ஒழிச்சுருவான்
இதுக்கு லேட்டஸ்ட் உதாரணம் : கலைஞரின் மதுவிலக்கு முயற்சி.
வேணாம் தாத்தா ..  தேவுடுன்னு பேர் வாங்கின என்.டி.ஆரையே லிக்கர் லாபி ஒழிச்சுருச்சு.

என்ன..? தேர்தல் நிதி சேகரிப்புக்காக பூச்சித்தான் காட்டறிங்களா? அது சரி அதுசரி என்னைக்கேட்டா மது விலக்கெல்லாம் வேஸ்டு.  ஒவ்வொரு  நகரத்துலயும் ஒரு ஏரியாவ லா ஃப்ரீ ஜோனா அறிவிச்சுரனும். அங்கன போயி குடி,கூத்தடி,கொல்லு வழக்கு கிடையாதுன்னிரனும். என்ன வெளிய வரச்ச  ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் முடிச்சு ரிப்போர்ட் கொண்டுவந்தாதான் ஊருக்குள்ள விடனும்.

கம்யூனிஸ்டுங்க விஜயவாடால ஏதோ கூட்டம் போட்டு ( தலைவருங்க மட்டும் பேசுவாய்ங்க போல) சுரங்கங்களை தேசீயமயமாக்கனும்னு டிமாண்ட் பண்ணியிருக்காய்ங்க.  பா.ஜ.கவும் இதே டிமாண்ட். இங்கன காங்கிரஸ்காரவுகளும் இதே டிமாண்ட். என்னடா மேட்டருன்னா

கர்னாடகத்து ரெட்டி ப்ரதர்ஸ். இவிக கர்னாடகால பா.ஜ.கவுக்கு ஆப்பு வச்சாய்ங்க. அதனால அவிகளுக்கு காண்டு. ஆந்திரால ஜகனுக்கு சப்போர்ட் பண்ணி ரோசய்யாவுக்கு ஆப்பு வைக்க பார்க்கிறாய்ங்க அதனால காங்கிரஸ்காரனுக்கு காண்டு.

கம்யூனிஸ்டுங்களுக்கு என்ன காண்டுனு தெரியலை.


ஏன் மேற்கு  வங்காளத்துல இருக்கிற ஸ்பெஷல் எகானமி ஜோன்ஸை யெல்லாம் முதல்ல தேசீயமயமாக்கலாம்ல.

கேரளாவுல இவிகளோட கட்சி பத்திரிக்கையான மாத்ருபூமிக்கு லாட்டரி கிங்  மார்ட்டின் கிட்டருந்து ஒரு கோடி ரூபா வளர்ச்சி நிதி வாங்கியிருக்காய்ங்க. மேட்டர் லீக்கானதும் திருப்பிட்டாய்ங்க. இந்தியாவுலயே அதிக சொத்து வச்சிருக்கிற கட்சி கம்யூனிஸ்டுங்கதான். தலைவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்கண்ணா.(அடையாள சம்பளம்லாம் கிடையாது)

யார் எதை பேசறதுனு விவஸ்தையே இல்லாம போயிருச்சு. குழாயடில அப்படித்தான் ஊரறிஞ்ச ........யா ஊர்ல இருக்கிறவளையெல்லாம் தே...யான்னு கூவிட்டிருப்பா.

ஓபுளா புரம் மைன்ஸ் மேட்டர்ல (ரெட்டி ப்ரதர்ஸ்) சுப்ரீம் கோர்ட் அப்பாயிண்ட் பண்ண சர்வே ஆஃப் இண்டியாவே  எல்லாம் பர்ஃபெக்டு  ஜஸ்ட் 100 மீட்டர்லதான் குழப்பமிருக்குன்னிட்டாய்ங்க.

ஒய்.எஸ்.ஆர் உசுரா இருக்கிறப்ப மேற்படி  நிலங்களை ரெட்டி ப்ரதர்ஸுக்கு ஒதுக்கினப்ப எந்த பிக்காலியும், எந்த பன்னாடையும் அப்ஜெக்ட் பண்ணலை.ஏன்னா அங்கே இரும்பு தாது கிடைக்குமா கடக்கால் கல் கிடைக்குமானு யாருக்கும் தெரியாது. ஒரு வேளை அங்கன தாது கிடைக்காம போயிருந்தா ரெட்டி ப்ரதர்ஸ் திவாலாகியிருப்பாய்ங்க. அப்ப  இவிக வந்து காம்பன்சேட் பண்ணியிருப்பாய்ங்களா?
ஒரு வேளை ரெட்டி ப்ரதர்ஸ் ரோசய்யாவுக்கு பெட்டி கொடுத்தா அவரு வாங்காம இருப்பாரா? வாங்கி சோனியாவுக்கு அனுப்பாம இருப்பாரா?

சிரஞ்சீவி கடந்த பொது  தேர்தல் பிரச்சாரத்துல " ஒய்.எஸ். நம்ம பணத்தை கொள்ளையடிச்சு சோனியா காலடில கொட்டறாரு"னு  கிழிச்சிக்கிட்டாரு. அப்பாறம் சோனியம்மன் காலடில இவரே குப்பையா கொட்டிக்கிடக்காரு.  முந்தா நாள் அரசியல் வாரிசுங்க குறுகிய காலத்துல எப்படி இவ்ளோ கோடி சம்பாதிக்கிறாய்ங்கனு கேள்வி வேற கேட்டிருக்காரு (ஜகனை உத்தேசிச்சு) . ஜகனோட அம்மா  தன் புருசனுக்கு  முந்தி விரிச்ச  லக்ன யோகம் அது. 10 ரூபாய் ஷேர் 1,040 ரூபாயா உசந்துருச்சுங்கோ. (இப்ப ஒய்.எஸ்.ஆர் முதல்வரில்லை, உசுராவும் இல்லே)

ஆமாங்கன்னா அரசியல் வாரிசுகள்னா அதுல கலைஞரோட வாரிசுகளும் அடக்கமா? இதுக்கு கலைஞர் கேள்வி பதில் வடிவத்துல ரெஸ்பாண்ட் ஆயிருவாரோ?

சந்திரபாபு திருமலை அபவித்திரமாயிருச்சுன்னு நடை பயணம் தர்ணால்லாம் பண்ணாரு. நல்ல காலம் ஆந்திரபோலீஸுங்கறதால் அரெஸ்ட், தடியடியெல்லாம் இல்லே. இதெல்லாம் ஜஸ்ட் ஒரு சம்பிரதாயமாயிருச்சு. அவரோட முக்கிய குற்றச்சாட்டு தேவஸ்தான சேர்மன் லிக்கர் லாபியை சேர்ந்தவருங்கறது.

கூத்து என்னடான்னா அவரை மொதல் மொதலா கட்சில சேர்த்துக்கிட்டு  தி.தி.தேவஸ்தான சேர்மனாக்கின பார்ட்டி சந்திரபாபுதான். அதோட நிக்காம அவருக்கு எம்.பி டிக்கெட்டை கொடுத்து மாவட்ட அரசியலை பணமயமாக்கினதும் சந்திரபாபுதான்.

(இதனோட தொடர்ச்சியா ஜஸ்ட் ஒரு எம்.எல்.ஏ கேண்டிடெட் -ப்ரஜா ராஜ்ஜியம் தான் - இவரோட தேர்தல் செலவு 40 கோடின்னு பேசிக்கிறாய்ங்க - ரிசல்ட்டு? ரெண்டாயிரத்து ஐ நூறு வாக்கு வித்யாசத்துல தோத்து போயிட்டாரு)

ஆனால் பாருங்க தெய்வமிருக்கு. இவரு தெ.தேசத்துலருந்து விலகி  காங்கிரஸ்ல சேர்ந்து ராகுல் ரேஞ்சுல போய் கர்சீஃப் போட்டு  சேர்மனாயிட்டாரே தவிர இவருக்கு எம்.பி சீட் மேலத்தான் குறி. ஆனா என்ன ப்ண்ன இவருக்கும் பேப்பே இவிக மகனுக்கும் பெப்பே. கடாசில மகன்  ப்ரஜாராஜ்ஜியத்துல சேர்ந்து  டிக்கெட் வாங்கி நின்னு தோத்தும் போயிட்டாரு. இப்ப இந்த மாசம் இவரோட பதவி காலம் ஓவர். யார் கண்டா ராகுல்ஜி புண்ணியத்துல ரென்யூவல் ஆனாலும் ஆயிரும்.ராஜீவ் ஜி மிஸ்டர் க்ளீன் .  ராகுல்ஜீ மிஸ்டர் டபுள் க்ளீன் தெரியுமில்லை

இந்த அரசியல் இயக்கங்களை பத்தின ஐடியாவே மாறிப்போச்சுங்கண்ணா. ரிப்போர்ட்டரா இருக்கிறச்ச பார்த்திருக்கேன். பத்து பேரு பத்தே பேரு தர்ணா பண்ணுவாய்ங்க. எஸ்.ஐயோ, சி.ஐயோ லத்தியை கையில தட்டிக்கிட்டு பார்த்துக்கிட்டிருப்பாரு. எங்க ஃபோட்டோ கிராஃபர்ஸெல்லாம் பளிச் பளிச்சுனு ஃபோட்டோ எடுப்பாய்ங்க. டிவிகாரவுக ஸ்டேட்மென்ட் ரிகார்ட் பண்ணுவாய்ங்க. பத்து நிமிஷமானதும் எஸ்.ஐ வந்து  போதும் எந்திரிக்கப்பானுவாரு உடனே குண்டி மண்ணை தட்டிக்கிட்டு போயிருவானுக . இதான் தர்ணா. அடப்போங்கடா உங்க பொழப்பும் நீங்களும்.

அண்ணே " ஆனாலு இது ஓவரு"ன்னு தனிக்காட்டுராசா மாதிரி பார்ட்டிங்க கமெண்ட் போட்டாலும் சரி. நான் சொல்ல நினைச்சதை சொல்லிர்ரன்.  ஹலோ சோனியா மேடம் ! ஹலோ மிஸ்டர் ராகுல்ஜி. மிஸ்டர் ரோசய்யா காரு, மிஸ்டர் கருணா நிதி அண்ட் கோ சாக்கிரதை..

நான் ஒருத்தன்  இருக்கேன்.உசுரேட இருக்கேன். என் பின்னாடி ஒரு சக்தி  இருக்கு. நான் டம்மி பீஸா, காமெடி பீஸா இருக்கலாம். ஆனால் அந்த சக்தி உங்களை நோக்கி என்னை செலுத்திக்கிட்டிருக்கு.

இந்த சனங்கதான் என் வயித்தை ரொப்பினாய்ங்க.  நான் அவிக மனசை நம்பிக்கையால நிரப்பினேன். நிரப்பிக்கிட்டிருக்கேன். இது இந்த காலம் . ஆனால் ஒரு நாளில்லை ஒரு நாள் அவிக வாழ்க்கைய வெளிச்சத்தால் நிரப்பப்போறதும் நான் தான். உங்களை வெளிச்சம் போடப்போறதும் நான் தான் கபர்தார் !

தவறான பாதையில எவ்ள தூரம் வந்துட்டம்ங்கறது முக்கியமில்லை. இந்த செகண்ட் இந்த செகண்டாச்சும் மனம் திரும்புங்க. ஸ்வர்கம் காத்திருக்குனு சொல்லலன்னாலும் உங்க வம்சங்கள்ள அடுத்து வரப்போற ஏழேழு தலைமுறைகளோட வாழ்க்கை நரகமாயிராம இருக்கும்.