Showing posts with label Hindu purnam. Show all posts
Showing posts with label Hindu purnam. Show all posts

Sunday, September 26, 2010

உலக உருண்டை கை கொண்டு வாய் பொத்தித்தான் நகுமேடா?

அனுமன் வந்துன் மனம் நின்றால்
அகிலமும் அடங்கும் ஒரு சொல்லில்
சொல்லின் செல்வன் அவனன்றோ?
வில்லின் விலாசம் ஸ்ரீராமன் -அவன்
துன்பம் துடைத்தவன் அனுமனன்றோ?

அவன் கதையை ஏந்த கசடர்களின்
கதைகள் யாவும் கந்தல்தான்
ராம நாமம் ஜெபித்திட்டால்
வந்து குதிப்பான் ஏந்தல்தான்

ராம ராஜ்ஜியம் பூத்திடவே காற்றின் புதல்வன் இயங்குகிறான்
ஆள்பவரோடு ஆண்டைகளும் கெட்டுக்கிடக்க தயங்குகிறான்

மானச சரோவரம் சென்றிட்டால் இன்றும் அவனை கண்டிடலாம்
அபயம் கேட்டு அண்டிடலாம்
மானச சரோவரம் எங்கென்று  வரைபடம் எடுத்து தேடாதீர்
அகந்தை கொண்டே ஆன்மாவை மூச்சுத்திணற மூடாதீர்
சிந்தையை சிதைக்கும் சிடுக்கை அவிழ்த்தால்
மனசுக்குள்ளே  ஒரு ஓரம் வந்து அமர்வான் அனுமன் தான்.

எத்தனை யுகமோ எத்தனை பிறப்போ ?
என்றும் இந்த பாடாமோ?
படைப்பே படைப்பில் அங்கமென அழகுடன் இயைந்து இயங்குகையில்
வேறு பட்டு வேர் பட்டு கெட்டு ஒழிதல் ஏனோடா?

தங்கமானாம் மாயை அதுவே
அதனை வேண்டி அண்ணலையே பிரிந்து பட்டோம் பலபாடு
நாகம் ஒன்றே  படமெடுத்தாட அதன் நிழலில்
படுக்கை இட்டு பல கனவும் கண்டிருத்தல் தகுமோடா?
உலக உருண்டை கை கொண்டு  வாய்  பொத்தித்தான் நகுமேடா?

ராமனை எண்ண அனுமன் வருவான்
குருவாய் வந்தே அணைத்தெடுப்பான்

ராம ராம என்றிருப்போம்
ராம நாமம் தனையே தின்றிருப்போம்

அனுமன் நிழலென தொடர்ந்திடுவான்
அருகாய் உன் மனம் படர்ந்திடுவான்

Saturday, January 23, 2010

நம்மள டச் பண்ற பன்னாடைகளை

கவிதை 07 ஐ கழிவறை சுவராக கருதி கண்டதையும் கழிந்து வைக்கும்
வம்பன் இத்யாதியினரை ஒன்றுமே செய்யாமல் எதுவேண்டுமானாலும் செய்யும் வித்தை என்னிடம் இருப்பதாய் கூறியது சிலருக்கு நினைவிருக்கலாம். இத்தனைக்கும் என் சாதனை ( அச்சீவ்மென்ட் இல்லிங்க ஆன்மீகத்துல என் முயற்சிகள்னு அர்த்தம்) என்ன ? ஏது என்றறிய உங்களில் சிலருக்கு ஆர்வமிருக்கலாம். என் ஆன்மீக வாழ்வின் ஸ்டார்ட் பட்டன் மட்டும் மன்மதன் தான்.(அவருக்கு உருவமில்லேங்கற கதை அற்புதமான உருவக கதை. உணர்வுகளுக்கு உருவமிருக்காதில்லயா?)

பால்யத்துல சுக்கிர தசை வேற மாட்டிக்கிச்சா செம பேஜாராயிருச்சுப்பா .பார்ட்டி துரத்துன துரத்துல ஜெய் ஹனுமான் சீரியல் தனமா சாதனை ஆரம்பம். கொஞ்சம் நின்னு நிதானிச்சு பார்த்தா நம்ம ஆஞ்சனேயருக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கிறது தெரிய வந்தது. அதாவது ராம நாமம் எங்கே சொல்லப்பட்டா அங்கே இவர் ஆஜராம். ஸோ ராம நாம ஜெபம் ஸ்டார்ட். அதுவும் ஆஞ்சனேயர் ஸ்டைல்ல " ராம்" ( இதுவே நாமம் இதுவே பீஜம்னு டூ இன் ஒன்னா ஒர்க் அவுட் ஆயிருச்சு) + கிழவாடிங்க ஸ்டைல்ல "ராமா "

ராமாங்கற வார்த்தைல ஒரு சூட்சுமம். இதிலான முதலெழுத்து (ரா) ஹரா என்ற சிவன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. இதிலான இரண்டாம் எழுத்து (மா) உமா என்ற அம்மன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. ( கருத்து உபயம் : ராம கிருஷ்ண பரமஹம்சர்)

முக்திக்கான ப்ராசஸ்:
ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜபிச்சா தான் அடுத்த ஜன்மத்துல ராம நாமம் ஜெபிக்க தகுதி ஏற்படும். அந்த ஜன்மம் முழுக்க ராம நாமம் ஜெபிச்சா அடுத்த ஜன்மத்துல ஆத்தாளை அணுகற ஆர்வம் ஏற்படுமாம்.

டபுள் ப்ரமோஷன்:
நம்ம ஜாதகத்துல சூரிய,சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் இருப்பதோடு பரிவர்த்தனமும் பெற்றதால் இது சிவசக்தியோகம் என்று சில காலம் பஞ்சாக்ஷரி ஜபித்ததுண்டு. அது ராமா என்று ஜபிக்கும் தகுதி தர ராமா ராமா என்ற என் ஜபம் சிவ சக்திகளை மனம் இளக செய்ய 3 ஜன்மங்களுக்கான ப்ராசஸ் 13 வருடங்களில் முடிந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் ஹ்ரீங்கார பீஜத்தை ஜெபிக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட்டது. அதுவும் ப்ரணவம், வித்யா பீஜம், லட்சுமி பீஜம் ,சூரிய பீஜம்/ ஹரி பீஜம், மற்றும் காளி பீஜங்களுடன் ஜெபிக்கவே அது எக்குத்தப்பாக ஒர்க் அவுட் ஆகி பாடி காட்பாடி ஆகி ஷீரடி சாய்பாபா கணக்காய் 7 வருடங்களுக்க் பிச்சை எடுக்கவே வைத்துவிட்டது. அதற்கு பின் ப்ளாக் அண்ட் வைட் படமெல்லாம் ஈஸ்ட்மென் கலராகி இப்போ செம கலக்கு கலக்குது.

இதையெல்லாம் ஏன் சொல்லவரேன்னா ராட்சசர்கள் வரம் வாங்கி "அவாள" மாதிரி இஷ்டாத்துக்கு ஆட்டம் போட்டு ஷெட் ஆனாங்க. நம்ம விசயத்துல வரும்போது அது ஒரு ட்ரில்லியன் டாலர் செக் மாதிரி மாத்தறதுக்குண்டான வாய்ப்பே இல்லாம நம்மள டச் பண்ற பன்னாடைகளை பொசுக்கிக்கிட்டு இருக்கு. குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு.

நம்ம எண்ண அலைகள் கச்சா முச்சானு உலகமெல்லாம் பரவி சனத்தை ரோசிக்க வைக்குது. மூளை டூ இன் ஒன்னாகி ட்ரான்ஸ்மீட்டராவும் ரிசீவராவும் வேலை செய்யுது. இத்தனைக்கும் நாம கிழிச்சது எப்பவோ பஞ்சாக்ஷரி, ஒரு 13 வருசம் ராம நாம ஜெபம், ஒரு 10 வருசமா ஹ்ரீங்கார பீஜம் தான். எப்பவாச்சும் கொஞ்சம் பேட்டரி வீக்கான நேரத்துல மாந்திரீக பத்ததிகள்ள சில மந்திரங்களை சாதனை பண்ணது ஊர் சொத்துக்கு அலையாதது தப்பி தவறி எவனாச்சும் அஞ்சு பத்து அதிகமா கொடுத்து வாங்கி செலவழிச்சுட்டாலும் அது புத்திக்கு உறைச்சா உடனே எம்.ஜி.ஆர் வேலை பண்ணிர்ரது இந்தியாவை பணக்கார நாடா மாத்தியே தீர்ரதுன்னு புலம்பறது தட்ஸால்.

ஒரு காலத்துல கந்தர் சஷ்டிகவசம், ஸ்கந்த குரு கவசம்லாம் படிச்சதுண்டு. அம்மனோட சத நாமாவளி சில காலம் தொடர்ந்து படிச்சாலும் கன்டின்யுட்டி விட்டு பல காலம் ஆச்சு. எப்பவாச்சும் ஓம்கார் ஸ்வாமிகள் மாதிரி பார்ட்டிங்க சாபம் விட்டா மூளை கொஞ்சம் பஜ்னு ஆயிர்ரப்ப இப்பவும் நாமாவளி படிப்பது உண்டு. கீழே கொடுத்திருக்கிற தினசரி ஸ்லோகங்கள் கூட மாசத்துக்கு ஒரு தடவை ரெண்டு தடவை சொன்னா ஜாஸ்தி.

சூட்சுமம் தெரிஞ்சி போனதால இதெல்லாம் புளியம்பழ ஓடு மாதிரி கல கலத்துக்கிட்டு இருக்கு. ஆனால் ஒரு காலத்துல இதான் நமக்கு ரீசார்ஜ் மாதிரி. ஸோ பதிவன்பர்களில் ஆஸ்திக அன்பர்கள் வசதிக்காக இங்கே தந்திருக்கிறேன்.

நவகிரகங்களின் உக்கிரம் குறைய அந்தந்த கிரகங்களுக்குரிய கடவுள்களின் நாமங்களை ஜெபிப்பதும் தியானிப்பதும் கூட ஒரு வகை பரிகாரமே. எனவே இந்த நவ கிரகங்களின் வரிசையில் அவற்றிற்குரிய கடவுளரின் ஸ்லோகங்களை தந்துள்ளேன் .படித்துபயன் பெறவும்.

1.
குறிப்பு:
ஆதி கடவுள் என்பதால் ஏழாவதாக வரவேண்டிய கேதுவுக்குரிய கடவுளான கணபதிக்கான ஸ்லோகம் முதல் வரிசையில் உள்ளது
ஓம் ஸ்ரீ விக்னேஷ்வராய நமஹ
ஓம் கம் கணபதே ஸ்வாஹா
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயே சர்வ விக்னோப ஸாந்தயே
2.குறிப்பு:

கிரக கூட்டத்தின் தலைவன் சூரியன். இவருக்குரிய தேவதை காயத்ரி. இது காயத்ரி மந்திரம். இதை உச்சரிப்பதால் என்ன பலன், அது எவ்வாறு ஏற்படுகிறது என்று யாராவது பிராமணோத்தமர் மறுமொழியிடுகிறாரா பார்ப்போம் இல்லாவிடில் நானே கூறுகிறேன்.
ஓம் பூர்புவஸ்வ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோனஹ் ப்ரச்சோதயாத்

இதுவும் சூரியனுக்கு சம்பந்தப்பட்ட மந்திரமே . இதை வசிய மந்திரம் என்றும் உரைக்கிறார்கள்.
ஓம் நமோ பகவதே சூர்யாய ஹ்ரீம் சஹஸ்ர கிரணாய
ஐம் அதுல பல பராக்ரமாய
நவக்ரஹ தச திக்பாலகாய
லக்ஷ்மீ தேவதாய தர்ம கர்ம சஹிதாய
சர்வ ஜன நாதயனாதாய
மோஹாய மோஹாய ஆகர்ஷ
ஆகர்ஷ தாசானுதாசம் குரு குருபட் ஸ்வாஹா

3.குறிப்பு:
சந்திரனுக்குரிய தேவதை ஆயுதம் தரிக்காத / சாந்த வடிவிலான அம்மன். இங்கு புவனேஸ்வரி அம்மனுக்கான தியான ஸ்லோகத்தை தந்துள்ளேன்.

விருப்பமுள்ளவர்கள் கன்னியாகுமாரி அம்மனையும் தியானிக்கலாம்.
ஹ்ரீங்கார பீஜாக்ஷரி ஹ்ரீம் மயீ தேவி அபய வரத ஹஸ்தினி பாசாங்குச தாரிணி
ஸ்ரீ சக்ரவாசினி, பால பீட அதிரோஹிணி
மாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ
மாதா காலகரணி தேஹீ தக்ஷணம் அஷ்ட ஐஸ்வர்யம்
மாதா தேஹீ தக்ஷணம் த்ரிகால க்னானம்
மாதா தேஹீ தக்ஷணம் யத்ன கார்ய சித்தி
மாதா தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி

4.குறிப்பு:
அடுத்த கிரகம் செவ்வாய்.இவருக்குரிய கடவுள் சுப்பிரமணியர். இது அவருக்குரிய மூலமந்திரம் . (ஸ்கந்த குரு கவசத்தில் இது உள்ளது)
ஓம் சௌம் சரஹணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ

5.குறிப்பு:
அடுத்த கிரகம் ராகு. இதற்குரிய தேவதை துர்கை. விருப்பமுள்ளவர்கள் தர்கா, சர்ச் சென்றும் வழிபடலாம்.
தும் துர்காயை ஸ்வாஹா

6.
குறிப்பு:
அடுத்த கிரகம் குரு.குருவுக்குரிய தேவதை தட்சிணாமூர்த்தி .அவருக்குரிய ஸ்லோகம்.

ஓம் நமசிவாய
சம்போ சங்கர சம்போ மகாதேவ

குறிப்பு:
ஆஞ்சனேயர்தான் என்னை பொருத்தவரை குரு/ராமாயணத்துல கூட இவர் குரு தத்துவம் தான். சீதை ஆத்மா. ராமன் பரமாத்மா. ஆத்மா பரமாத்மனை விட்டு உதவாத ப்ராபஞ்ச்சிக வஸ்துக்களின் பால் ( மாய மான்) கவனம் சிதறவிட பரமாத்மனை பிரிஞ்சி தவிக்குது. அப்போ குரு தத்துவமான ஆஞ்சனேயர் வந்து " சீதா டோண்ட் ஒர்ரி பரமாத்மனிருக்கான். உன்னை காப்பாத்த நிச்சயமா வருவான்"னு சொல்றார் . ஸோ ஆஞ்சனேயரை குருவா வச்சிக்கிட்டேன்.

ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா
ஓம் ஹரி மர்க்கட மர்க்கடாய ஸ்வாஹா

குறிப்பு:
ஏற்கெனவே கால ஞானம் , உலக அழிவு தொடர்பான பதிவுகளில் வீரபிரம்ஹேந்திர ஸ்வாமி பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கேன்.அவர் தொடர்பான ஸ்லோகங்கள்.
ஓம் நமோ வீரபிரம்ஹேந்திர ஸ்வாமினே நமஹ
ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய பிரம்ஹனே நமஹ
இதர குருக்கள்:
அ) ஷீரடி சாயி பாபா:
ஓம் சமர்த்த சத் குரு ஸ்ரீ சாய் நாத் மகராஜ் கீ ஜெய்
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி
ஆ) ஸ்ரீ ராகவேந்திரர்:
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச
பஜதாம் கல்ப்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
இ) சரஸ்வதி:
ஓம் ஐம் க்லீம் சௌஹ வத வத வாக்வாதினீ ஸ்வாஹா

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி
சித்திர் பவதுமே சதா

7.சனி: (இதற்குரிய கடவுள் வராஹ ஸ்வாமி)
ஓம் நமோ வராஹ ஸ்வாமினே நமஹ

8.புதன் (பெருமாள்)
ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே

ஹரே ராம ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஓம் நமோ வேங்கடேசாய. ஓம் நமோ ஸ்ரீனிவாசாய ஓம் நமோ பத்ம நாபாய
ஓம் நமோ பட்சி வாஹனாய ஓம் நமோ துஷ்ட சிட்சணாய ஓம் நமோ சிஷ்ட ரக்ஷணாய

9.சுக்கிரன்
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீட்டே சுர பூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மீ நமோஸ்துதே

பூஜா பலன் வழங்கும் டெல்லர் தனமான பஹலா முக்கி:
ஓம் ஹ்லீம் பஹளா முகே ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் பரமந்த்ர ப்ரயோகேஷூ சதா வித்வம்ச காரிணே பஹளா முகே
ஸ்வாஹா
ஓம் ஹ்லீம் ஸ்வமந்த்ர ஃபல தாயிகே பஹளா முகே ஸ்வாஹா

சாந்தி பர்வம்:
சஹனாவவது சஹனௌ புனக்து சஹவீர்யம் கரவாவஹே
தேஜஸ்வினா வதீத மஸ்து மாவித் விஷாவஹே ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி

Saturday, January 16, 2010

"திரௌபதி " ஒரு காமப்பேய்

"திரௌபதி " ஒரு காமப்பேய் என்பதை ஸ்தாபிக்கும் முன் பிராமணோத்தமர்கள், இந்துத்வா வாதிகள் அகமகிழும் ஒரு அற்புதம் குறித்து சில வரிகள்

இன்னைக்கு ஒரு அற்புதம் நடந்தது. அற்புதங்கறதா இல்லே என் அலட்சியத்தால நடந்ததுங்கறதா புரியலை. திரௌபதிங்கற தெலுங்கு நாவலுக்கு சாஹித்ய அகாதமி அவார்டு தரப்பட்டிருக்கு. அதுல என்னமோ திரௌபதி கேரக்டரை எழுத்தாளர் நாஸ்தி பண்ணிட்டாருனு தெலுங்கு டி.வி.சேனல்ஸ்ல ஒரே லொள்ளு. அதுலயும் காங்கிரஸ் கட்சி மகளிரணி தலைவி ஒரு அம்மாள் புலி வேஷமே ஆடிவிட்டார்.

இந்த புராண புருடாக்களை தனிப்பட்ட வகையில ஆராய்ச்சி பண்ணி, அதனோட எசன்ஸ் என்ன? அதனானல போற வழிக்கு ஏதாச்சும் புண்ணீயம் உண்டானு பார்க்கிறதோட  நம்ம ப்ராசஸ் க்ளோஸ். அதை விட்டுட்டு அதையெல்லாம் வச்சுக்கிட்டு  ஜல்லியடிக்கிறதுல எனக்கு சம்மதமில்லே.

ஆரம்ப காலத்துல நான் கூட இது மாதிரி  சில காவிய  முயற்சிகள் செய்ததுண்டு. உம்: கண்ணன் கதை .அவரோட வாழ்க்கைல ஆக்சன்,ரியாக்சன் என்று பார்த்தால் நிறைய பார்க்க முடியும் . அவர் பிறருக்கு என்ன செய்தாரோ அதுக்குண்டான கூலி நிச்சயமா கிடைச்சிருக்கு. அதை வச்சு படம் பண்ணா அந்த ஆர் எஸ் எஸ்ஸும் ஒன்னும் பண்ண முடியாது. உம்:
இவர் கவுரவங்க வமிசத்தை நாஸ்தி பண்ணாரு.அதே மாதிரி யாதவ வமிசம் கூட நாஸ்தியாச்சு.  கர்ணன் சாவுக்கு பூனையா மாறி தாய்பாலை கவுத்து சதி பண்ணாரு. இவர் சாவுக்கும் அது மாதிரி ஒரு சதியே காரணமாச்சு. (அன்பர்கள் கோரினால் இது குறித்து தனிப்பதிவே போடலாம்)


இந்த திரவுபதி நாவலை  எழுதின ஆசாமி பத்தி எனக்கு ஓரளவு தெரியும்.பாவம் பிழைக்க தெரியாத அரசியல்வாதி. என்.டி.ஆர் காலத்துல தெ.தேசத்துல இருந்தவர். சந்திர பாபு என்.டி.ஆர் ,முதுகுல குத்தினப்பவும் என்.டி.ஆரோடவே இருந்தவரு. என்.டி.ஆர் செத்தபிறகும் லட்சுமி பார்வதிய எப்டியாவது ஒப்பேத்திரலாம்னு உழைச்சவரு. காட்டன் துரையோட கல்லறைய தேடி லண்டன் வரை போய் வந்தவர்.


அப்படி என்னதான் எழுதிட்டாருனு பார்த்தா ஒரு மண்ணுமில்லே. சர்ச்சைல பேசிக்கிட்டத வச்சி பார்த்தா குந்தி (மாமியார்)  திரவுபதிய (மருமகளை) முதலிரவு அனுபவத்தை விசாரிச்சதா எழுதியிருக்காராம். அர்ச்சுனன் ( மச்ச யந்திரத்தை அடிச்சு ஜெயிச்சு வந்தவங்கறதாலயும்)  பீமன் (பலசாலி,அப்பப்போ திரௌபதியம்மாவோட கோரிக்கைகளை தீர்த்து வச்சதாலயும் - டெக்காமெரான் தனமா கற்பனை பண்ணிக்கிடாதிங்க ஒரு தரம் மனோரஞ்சிதமலர் கொண்டு வந்து தரார், கீசகனை வதம் பண்றார், துரியோதனன் வஸ்திராபரணம் பண்ணதுக்கு நாகரிகமான ஹேர் ஆயில் அதான் ரத்தத்தை சப்ளை பண்றாரு , துரியோதனன் துடைய பிளக்கிறார்) தர்மபுத்ரன் ( டெசிஷன் மேக்கர்) என்பதால் இந்த மூவர் மேல் மட்டும் ஸ்பெஷல் அஃபெக்ஷன் வைத்திருந்ததாய் எழுதியிருக்காராம்.), பாவம் நகுல சகாதேவர்கள் டச் மி நாட் தானாம்.

ஓஞ்சு போவுது நியாய தர்மமா நாமளும் ஒரு பதிவை போட்டுரலாம்னு முந்தா  நேத்து மாஞ்சு மாஞ்சு நாலு பாரா அடிச்சேன்.பொத்தாம் பொதுவா புராணத்தை பத்தின என் கருத்தோட அசலான விஷயத்துக்கு வரதுக்குள்ளே பசி எடுக்கவே சாப்ட்டுட்டு வரலாம்னு போனேன்.   இந்த சிஸ்டத்துல சி ட்ரைவ் லாக் பண்ணிவச்சிருக்கு. வைரஸ் பயம்தான். பை மிஸ்டேக் சி ட்ரைவ்ல சேவ் ஆயிருச்சா என்ன தெரியல.அப்படி சேவ் ஆனா சிஸ்டம் ஆஃப் ஆயி ஆன் ஆனதுமே அந்த ஃபைல்ஸ் எல்லாம் தேர்தல் உறுதிமொழி மாதிரி காணாம போயிரும்.  இப்படி முதல்ல தட்டச்சின ஃபைல் காணாம போனதுமே டர்ராயிட்டேன். ஆத்தா கோச்சுண்டாளா என்னடானு.

ஆனா ஒன்னு. புராணம் நிஜம்னு நம்பிட்டா பாப்பாரவுக  நம்ம தலையில சாணி கூடையையே ஏத்தி வச்சுட்டு அதுல ஒண்ணுக்கும் அடிச்சுருவாக. பெரியார் தம் உள்ள ஆசாமி அவருக்கு கடவுள்கிட்டே என்னா மாதிரி டீல் இருந்ததோ தெரியாது. கடவுள் அவரை எந்த நோக்கத்தோட அனுப்பினாரோ தெரியாது. அதான் பெரியார் செம தில்லா கடவுள் என்ற சமாச்சாரமே  டுபாகூர்... ஓடுங்கடான்னு சவால் கேட்டுட்டாரு.

நம்ம கதை எப்படின்னா டவர் சரியா வராதப்போ செல் சம்பாஷணை மாதிரிதான் நமக்கும் ஜேஜிக்கும் உறவு. பார்ட்டி ஒன்னு சொல்லி நாம ஒன்னு செய்து எதுக்கு லொள்ளுன்னு ஜாஸ்தி பூசிக்கிறதுமில்லை. கனெக்சனை வெட்டிவிடறதுமில்லே. ஏதோ ஒரு மாதிரியா போய்க்கிட்டிருக்கு.

கடவுள் என்ன கை விட்ட சந்தர்ப்பம் அனேகம். ஆனால் நான் அவரை விடறதா இல்லே. அதுக்காக இந்த பஞ்சகச்சங்கள் அவுத்துவிடற பீலாவ எல்லாம் நம்பி அவிகளுக்கு சரண்டராகற மாதிரியுமில்லே.

என் சித்தாந்தம் என்னனு ஏற்கெனவே பல தரம் சொல்லியாச்சு. இங்கே இருக்கிறது ஒரே உயிர். உடல்கள் தான் வேற. நம்ம மனசுல இந்த சமூகம் இன்செர்ட் பண்ணீட்ட ஈகோவால இதை உணர முடியறதில்லை தட்ஸ் ஆல். இந்த சத்தியத்தை உணர ஈகோ ஃபணாலாகனும். ஈகோ ஃபணாலாயிட்டா ராமனு நானே  கிருஷ்ணனும் நானே.

என்னை பொருத்தவரை ஆத்தா அனாமிகா (பெயர் இல்லாதவ)  அதே சமயம் இந்த உலகத்துல இருக்கிற எல்லா பெயருமே அவளோடதுதான். இதை எப்படி விளக்கறதுன்னா பில் கேட்ஸ் சட்டைப்பையில சில்லறையா எவ்ள வச்சிருப்பாருங்கறிங்க. அந்த மாதிரி எல்லா பேரும் அவளோடதா இருக்கும்போது அவளுக்கென்ன பேரு. எல்லா உருவமும் அவளோடதா இருக்கும்போது அவளுக்கென்ன உருவம்.

எல்லா பெண்களுமே அவளோட உருவம்தானு நினைக்கிற ஸ்டேஜுல இருந்தாலும் ,
எந்த வேசியையும் மனம் நிறைய அம்மானு கூப்பிடற ஸ்டேஜுல இருந்தாலும் திரவுபதி கூட ஆத்தாவோட சொரூபமா இருந்தாலும் " நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே " என்று தான் இந்த பதிவை போடுகிறேன்.

சரோஜா தேவி நாவல்ல கூட வராத சம்பவங்கள எல்லாம் வச்சு ஒரு கதை எழுதி வப்பாங்க. அதுல ஒரு பாத்திரம் திரவுபதி. அந்த பாத்திரத்தோட அவுட் லைனை வச்சு தன் கற்பனைய கலந்து  ஒரு ஆசாமி ஒரு  நாவல் எழுதிட்டா அதுக்கு அவரோட மனைவி, அம்மா கேரக்டரை ஆராயனும்னு மேற்படி மகளிரணி சொல்லுது.  பையங்க மேல அம்மா, மனைவி இம்பாக்ட் தான் அதிகமா இருக்குமாம்.

வேசித்தனம் செய்த பெண்ணை கல்லாலடித்து கொல்லச்சொல்லி வேதம் சொல்லுது . நீ என்ன சொல்றேனு ஏசுவை கேட்டாங்களாம் .அதுக்கு அவர் "உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர்கள் மட்டும் கல்லெறியுங்கள்"னாராம்.

அட டுபுக்குங்களே !  திரவுபதி இருந்தாளோ இல்லையோ தெரியாது. அவளுக்கு அவமானம் நடந்து போச்சுனு உயிரோட இருக்கிற அந்த எழுத்தாளனோட தாயையும், மனைவியையும் அவமானப்படுத்தறதுக்கு துணிஞ்சிட்டயே நீ என்ன பத்தினியா? ( உடனே பெண்ணிய வாதிகள் ஆகா இதாண்டா ஆணாதிக்க மனப்பான்மை என்று வரிந்து கட்டவேண்டாம். இங்கே கற்பை நான் அளவு கோலாக கொள்ளவில்லை. மேற்படி மகளிரணிதான் கொண்டார்.) அரசியல்ல, அதுவும் இந்தியால ,அதுவும் காங்கிரஸ்ல ஒரு கவுன்சிலர் ரேஞ்சுக்கு ஒரு பெண் போகனும்னாலே எத்தனை வேசித்தனம் தேவைனு கவுன்சிலர் டிக்கட் கிடைக்காத தாய்மார்களை கேட்டுப்பாருங்க. இவுக மகளிரணி அதுவும் மானில அளவு. சரி பதிவு போற போக்கே சரியில்லை. விசயத்துக்கு வந்துர்ரன்.

திரவுபதி ராஜாமகள். சுயம்வரம் நடக்குது. அர்ச்சுனன் மச்ச இயந்திரத்தை அடிக்கிறான். திரவுபதி மால சூட்டறா. வீட்டுக்கு வராங்க. அர்ச்சுனன் "அம்மா ஒரு பழம் கொண்டாந்திருக்கேன்றானாம்"  வியாச மகரிஷியோட (?)கற்பனைய பாருங்க  பழமாம். சுயம், உயிர்,உணர்ச்சி, கருத்து இத்யாதி கொண்ட பெண்ணை  நாலு நாள்ள அழுகிப்போற பழம்ங்கறான். உடனே அம்மாக்காரி " நைனா அஞ்சுபேரும் பிரிச்சுக்கங்கடாங்கறாளாம்" என்ன ஒரு கற்பனை பாருங்க. இந்த கூமுட்டை அர்ச்சுனன் சொல்லும் போதே ஒழுங்கா சொல்லியிருக்கனும். சொல்லல ஓஞ்சு போட்டம். கிழவி கண்ணால பார்க்கிறால்ல ஒரு பொண்ணு வந்து நிக்கறத. அப்பயாச்சும்  அறிவு கெட்டவே இதென்ன பழமாடா பகிர்ந்து தின்ன. இவள் உன் பெண்டாட்டி என்று சொல்லியிருக்கலாம். அட கிழவிக்கு  தான்  அறிவில்லே. ( இதுல டீன் ஏஜ்லயே அடிபட்ட கேசாச்சே. சூரியனோட ரொமான்ஸ் பண்ணி கர்ணனை பெத்து விட்டவதானே. சரி அடலசன்ட் ஏஜ் பொன பிறகு மாத்திரம் என்ன வாழ்ந்தது ? பாண்டு பாவம் டம்மி பீஸு. எமன், வாயு, இந்திரன்னு கொண்டாடின பார்ட்டியாச்சே. அட இந்த அர்ச்சுனனுகாவது அறிவிருக்க வேணாம். "அட கிழப்பொணமே ..கொண்டு வந்தது பழத்தை இல்லே ..பெண்ணை .." என்று சொல்லியிருக்கலாமே.

அட இதுவும் வேணாம் விடுங்க. அர்ச்சுனன் ஜொள்ளு பார்ட்டி, குந்தியும் லோலு. மத்த மூணு பேருமாவது அப்ஜக்ஷன் சொல்லியிருக்கலாமே. ஒரு பன்னாடையும் சொல்லல. அந்த காலத்துல பஹு பார்த்ருத்வம் ( அதாங்க பல கணவன் முறை)  நடை முறைல இருந்திருக்கு. அஞ்சு பேரும் போய் அஞ்சு மாலை வாங்கி வந்திருந்தாலும் அது வேற கதை. தாளி.. போனது ஒருத்தன். இங்கே வந்தா   நிலைமை இப்படி ?

உண்மையிலயே திரவுபதி ஒரு சாமானிய பெண்ணாயிருந்திருந்தாலும் " இன்னாடி இது அக்குரும்பா இருக்கு. கிழவிக்கு தான் அறிவில்லேன்னா இந்த மன்சனுக்குன்னா அறிவிருக்க வேணாம்.. எனக்கு இந்த வாழ்வும் வேணா ஒரு மசிரும் வேணாம்" என்று தன் நாட்டுக்கு திரும்பியிருக்கனும். ஆனால் இந்தம்மா அஜீஸ் ஆயிர்ராங்க.
அப்போ என்ன அர்த்தம். திரவுபதி ஒரு நிம்ஃபோனு தானே நினைக்க வேண்டியிருக்கு. இந்த பல கணவன் முறைல ஷெட்யூல் எப்படி போடுவாங்க. அகாலத்துல வீரியம் புரண்டா டர்ன் இல்லாதவன் என்ன செய்றது? டர்ன் வந்தப்ப "முடியல"ன்னா என்ன செய்றது.?  எந்த பையன் எந்த தகப்பனுக்கு பிறந்தானு எப்டி கண்டுக்கறது ? அந்த காலத்துல ஜென்யூ டெஸ்ட் கூட கிடையாதே

சரிப்பா.  துரியோதனன் மாய சபைக்கு வரான் தவறி விழுந்துர்ரான். உடனே அதை பார்த்து  சிரிக்க வேண்டிய அவசியம் என்ன? துரியோதனன் யாரு? இவிக வீட்டுக்காரனுகளுக்கு தம்பி முறை. இந்தம்மாவுக்கு மச்சினன். அவன் தவறி விழுந்ததுக்கு சிரிபபனேன். சரி சிரிச்சேல்ல படக்குனு மன்னிப்பு கேட்டு யுத்தத்தை தவிர்த்திருக்கலாம்ல.   இது வரைக்கும் நடந்தத கூட விட்டுரலாம். சூதாட்டத்துல தோத்து போயி பாண்டவங்க வனவாசம் போறாங்கல்ல.  அப்போ இந்த பொம்பளைக்கு காட்ல  என்ன வேலை?  நிம்மதியா குந்தி தேவிக்கு சேவை செய்துக்கிட்டு கிடக்கலாம்ல. ஏன் காட்டுக்கு போனாப்ல?  காட்ல அஞ்சு குடிசையா போட முடியும். கு,பட்சம் அஞ்சு கூடாரம் கூட போட்டிருக்கமுடியாது. ஆனாலும் திரவுபதி காட்டுக்கு போனாக இதுக்கு என்ன  அர்த்தம்.திரவுபதி  நிம்ஃபோனுதானே  இதை கூட விட்டுருவம் .

பாண்டவங்க அஞ்ஞாத வாசம் போறாங்க. வனவாசத்துலயாவது இவிங்களை  ஸோ அண்ட் ஸோனு தெரியும் . ரிஸ்க் கம்மிதான்.  அஞ்ஞாத வாசத்துல இந்த ஃபெசிலிட்டி கூட கிடையாதே ஏன் போகனும்? திரவுபதி ஒரு நிம்ஃபோனு சொல்ல இதைவிட ஆதாரம் என்ன வேணும்?

அந்தம்மா (சரி அந்த பாத்திரம்னு கூட வைங்க) செய்தா தப்பில்லயாம் .அத பத்தி எழுதினா தப்பாம். எங்கத்தி நியாயம்டா சாமி.