Showing posts with label Atrocities on woman. Show all posts
Showing posts with label Atrocities on woman. Show all posts

Wednesday, January 12, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் : 7

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும் தொடரின் 7 ஆவது அத்யாயம் தான் இந்த தலைப்புல வருது.
வலைப்பூ இன்னொரு பிரபல வலைதளத்தால் தடை செய்யப்படும் ஆபத்து அதிகரிச்சிருக்கிறதால உடனே ஃபாலோயர் ஆயிருங்க. பதிவை பிரபலமாக்க ஓட்டுப்போடுங்க. உங்க ஆதரவு இருந்தா தடையெல்லாம் படை மாதிரி அதுக்கெல்லாம் மருந்து வச்சிருக்கமில்லை.
இந்த தொடர்பதிவோட ஆறாவது அத்யாயத்துல மசாலா அதிகமாயிருச்சு போல. இதுல எங்கய்யா மனோ தத்துவமிருக்குனு போன் போட்டு தாய்குலம் எல்லாம் காச்சறாய்ங்க. நாம குறிப்பெடுத்து, அத்யாயம் வாரியா ப்ளான் பண்ணிக்கிட்டெல்லாம் எழுதறதில்லிங்கோ. சித்தன் போக்கு சிவன் போக்குத்தேன். மேலும் நாம பக்காவா போஸ்ட் போட்டா சில பிக்காலிங்க அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வயித்தெரிச்சலை கொட்டிக்குதுங்க.விசுவாசத்துக்கு நம்ம ப்ளாகுக்கு ஒரு லிங்க் கூட தர்ரதில்லை. ஒரு பார்ட்டி மேல இண்ட்லிக்கு புகார் தந்திருக்கேன் பார்ப்போம். லிஸ்டிங்லருந்து தூக்கிட்டா காப்பி பேஸ்ட் கலாசாரம் குறையும். உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்னு ஆரம்பிச்சம். முறைகள் கதைய அப்பாறம் பார்ப்போம்.மொதல்ல உடலுறவை விரும்பறவன் சைக்காலஜிய பார்ப்போம். உடலுறவுங்கறது மனிதன் மாதிரி பொத்தாம் பொதுவான சொல். அதுல எத்தினியோ கருமாந்திரம்,கல்லெடுப்பெல்லாம் இருக்கு. இதுல மேஜர் டிவிஷன் சுய இன்பம் ,உடலுறவு.சுய இன்பம் X உடலுறவுங்கற என்னோட பழைய பதிவை இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டினா ஒரு ஐடியா வரும். உடலுறவுல மேஜர் டிவிஷன் ஒரு பால் உறவு,இருபால் உறவு. இருபால் உறவுல பல வகைகள் இருக்கு. எவ்வித குற்ற குற்ற உணர்வும் இல்லாத சட்டரீதியிலான, சமூக சம்மதத்துடன் கூடிய, இருவரின் பரஸ்பர ஒப்புதலுடன் கூடிய உடலுறவு. அந்த நாள் முதல் இந்த நாள் வரை நாம ரெக்கமெண்ட் பண்றது இதைத்தான். இதுக்கப்பாறம் எத்தனையோ கச்சாடாக்கள் எல்லாம் இருக்கு. அதையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணா டெக்காமெரான் கதைகள் மாதிரியாயிரும்.(இந்த கில்மா தொடர் கலைஞர் அண்ட் கோவுக்கு சொந்தமான குங்குமம் வார இதழ்ல வந்ததுங்கோ) உடலுறவு எண்ணம்ங்கறது இரண்டு விதமா வருது. ஒன்னு சரீர உந்துதல். (ஆண்களுக்கு விந்துப்பை நிரம்பினப்ப -பெண்களுக்கு மாதவிலக்குக்கு பிறகு புதிய கருமுட்டை ரிலீசானப்ப). அடுத்தது மன உந்துதல். இதுக்கு சரோஜாதேவி நாவல் முதல் தனக்கு பிடிச்ச புடவையை மனைவி கட்டிக்கிட்டது வரை எத்தனையோ காரணங்கள் இருக்கு. இதெல்லாம் அவிகவிக சைக்காலஜி மேல டிப்பெண்ட் ஆயிருக்கிற விசயம். இந்த லிஸ்டை ஒரு தாட்டி பார்ப்பம். உடலுறவு எண்ணம்( எண்ணம் மனசுல தான பிறக்குது) வர பல காரணங்கள் இருக்கு. பெண்கள்: 1.குற்ற உணர்வு: ( சாம்பார்ல உப்பு அதிகமா போட்டுட்டதுலருந்து - மாமனாரை இன்சல்ட் பண்ணி வீட்டைவிட்டு விரட்டியது வரை ஏதோ ஒரு காரணத்தால) 2.தனிமை உணர்வு: சொந்தக்காரவுக நாலு நாள் தங்கியிருந்து போன தினம் - கணவர் டூர்லருந்து திரும்பின தினம்.கணவன் பெட் ரூம்ல டேபிள் லைட் வெளிச்சத்துல ஆஃபீஸ் வேலையில மூழ்கியிருக்கிற தினம். லீவுக்கு வந்த பசங்க ஹாஸ்டலுக்கு போயிட்ட தினம் 3.மரண பயம்: இதுக்கு ஒரு மரணம் காரணமா இருக்கலாம். ஏதோ ஒரு காட்சி (தொலைக்காட்சி உட்பட), சேதி கூட காரணமா இருக்கலாம். குறிப்பு: இந்த பாய்ண்டை பத்தி தனிப்பதிவே போடலாம் மரணத்துக்கும் மைதுனத்துக்கும் என்ன தொடர்பு. ஆருனா ட்ரை பண்ணுங்கப்பு.. 4.தந்தை குறித்த நினைவு,அவருடனான பிரிவு, கணவன் ஹேர் டை போட மறந்த தருணம் 5.உடமை உணர்வு: இது மெனோஃபஸ் துவங்கின பிறவு வரலாம். அல்லது கணவரை அவரோட பழைய தோழிகள் சந்திச்சுட்டு போன ராவுல வரலாம். அல்லது அவர் கிராமத்து அம்மாவை பார்த்துட்டு வந்த தினம். 6.தற்கொலை நினைவு: பெண்ணுக்குள் ஒரு எம்ப்டினெஸ் இருக்கு .ஃபிசிக்கலாவே.அதை நிரப்பத்தான் நிறைய பாசம் வைப்பாய்ங்க. எங்கண்ணா, என் தம்பி,எங்கப்பா. அதை கண்டதை போட்டு நிரப்ப பார்ப்பாய்ங்க. கர்பமுறுதலுக்கான உள்ளார்ந்த விருப்பம் கூட இதுவே. கண்ணாலமாகாத குட்டி கூட ப்ரிக்காஷன் எடுத்துக்காம வாழ்க்கைய சிக்கலாக்கிக்க இதுவும் ஒரு காரணம். எம்ப்டினெஸ்ஸை நிரப்ப வாங்கி வச்ச தங்க நகை, கணவன் கொடுத்ததுல மிச்சம் பிடிச்சோ சுட்டோ பீரோல புடவை கீழே வச்சிருந்த பெரிய நோட்டுங்க கை தவறி போகும்போது தற்கொலை நினைவே வந்துரும்.இதுக்கு காரணம் எம்ப்டினெஸ். 7.மசாகிஸ்டிக் தாட்ஸ்: கணவனுக்கு பிடிக்காத வேலை எதையோ செய்து வச்சிருப்பாய்ங்க (அட ..உருப்படாத தம்பிக்கு நூறு ரூபா காசு கொடுத்த மேட்டரா கூட இருக்கலாமுங்கோ) தங்களோட தவறுக்கு தண்டனை வேணம்னு நினைக்கிறப்ப உடலுறவு எண்ணம் பிறக்கும். 8.சாடிஸ்டிக் தாட்ஸ்: ஆத்துக்காரரு ரெம்ப இம்சை பண்ணிட்டாருனு வைங்க. (ஜுரத்துல படுத்திருக்கிற அப்பாவை பார்க்க ஊருக்கு போக பர்மிஷன் கொடுக்கலைனு வைங்களேன்) ஆத்துக்காரருக்கு ஷுகரு இத்யாதி பிரச்சினை இருந்தா இன்னம் தூள். வேணம்னே டார்ச்சர் பண்ணுவாய்ங்க. 9.தன்னைத்தான் கான்ஃபிடென்டா உணரும்போது.. இந்த நேரத்துல அபத்திர பாவம் குறைவா இருக்கும். ( நம்மை பத்தி தப்பா நினைச்சுருவாரோ? அலையறான்னு நினைச்சுருவாரோ) 10 செல்ஃப் மற்றும் .ஈகோ மெலிந்த நேரங்களில்
11.கணவன் எதையாச்சும் தோத்து வந்தப்ப இப்படி மஸ்தா கீது நைனா அதெல்லாம் சொன்னா தாய்குலம் காதை தீச்சுருவாய்ங்க. - ஃபோன் போட்டுத்தேன்.. அதனால நான் அம்பேல். ஆண்களுக்கு உடலுறவு எண்ணம் பிறப்பதற்கு பின்னுள்ள மனோதத்துவ உண்மைகளை அடுத்த பதிவுல பார்ப்போம். எச்சரிக்கை: இதையெல்லாம் எந்த மனோதத்துவ விஞ்ஞானி சொல்லியிருக்காருன்னு தேடாதிங்க.. சொந்த சரக்குங்கோ ( அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்) உங்கள்ள நிறைய பேரு நான் என்ன எழுதினா நல்லாருக்கும்னு நினைக்கிறிங்களோ அதெல்லாம் இங்கன வந்துரும். நம்ம மைண்டுதான் ப்ளாங்காச்சே..
தங்கள் கவனத்திற்கு:

Saturday, July 10, 2010

மகளிர் மட்டும்

என்னைக்கேட்டா  ஒரே ஒரு நடவடிக்கை மூலமா மகளிர் மட்டும்ங்கற  இந்த வார்த்தையை  பொதுக்கழிவறை, மருத்துவமனைகள் தவிர மத்த எல்லா இடத்துலருந்தும்  தூக்கிரலாம்.( சொல்லத்தான் வேணுமா ? அதாங்க ஆண்/பெண்  விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம்)

மகளிர் மட்டும்னு போட்டுக்கிட்டு காவல் நிலையத்துலருந்து, தமிழ் பத்திரிக்கைகள் வரை பண்ற அட்டூழியம் ஒன்னு ரெண்டு இல்லை. காவல் நிலையத்துக்கும், மகளிர் காவல் நிலையத்துக்கும் என்ன வித்யாசமிருக்கு? எங்கே போனாலும்  ஒன்னு மால்( லஞ்சம்) வெட்டனும்  இல்லன்னா சிபாரிசு இருக்கனும். நியாயமாவது நிர்மா சோப்பாவது.

கோர்ட்டு பத்தி சொல்லவே வேணாம் ஜட்ஜு தன் நாற்காலிலருந்து பின் பாகத்தை தூக்கி கண்ணாடி இத்யாதிய பொறுக்கிக்கிட்டிருக்கறச்சயே டைப்படிக்கிற பெண்ணுக்கு,பெஞ்ச் க்ளர்க்குக்கு, டவாலிக்கு எல்லாம் மால் வெட்டிக்கிட்டிருப்பாய்ங்க.

ஃபேமிலி கோர்ட்டுன்னா போன வாரம் கிரோசின் ஊத்தி தீவச்சவனோட மறுபடி சேர்ந்து வாழறதை பத்தி யோசிக்க சொல்லி கவுன்சிலிங் கொடுப்பாய்ங்க.

இந்த பெண்கள் சிறப்பிதழ், பெண்கள் இதழ்களையெல்லாம் யாராச்சும் தடை பண்ணி தொலைச்சா நல்லாருக்கும். ஏன்யா பெண்களுக்குனு சில பிரத்யேக பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது. இல்லேங்கலே .அதுக்குத்தான் கைனகாலஜிஸ்டுங்க இருக்காங்களே. சாதா பத்திரிக்கைகள்ளயே ஃப்ளோர் டிக்கெட்ல பெண்கள் பகுதி மாதிரி நாலு பக்கம் போட்டு நிரப்பறாங்கல்ல. (அது ஏங்கண்ணா ஹை கிளாஸ்ல, உல்வா பஸ்ல, ஏசி கோச்சுல, ஃப்ளைட்ல மட்டும் இந்த பிரிவினை கிடையாது? அவிகல்லாம் பயணத்துக்கு முன்னாடி ஜன்ய பாகங்களை பாங்க் லாக்கர்ல வச்சுட்டு வந்துர்ராய்ங்களா?) 

அதுக்கப்புறம் என்னாத்த பெண்கள் இதழ். இதழ்ங்கற வார்த்தையே ஆணின அகந்தைக்கு அறிகுறி. பத்திரிக்கைங்கற வார்த்தை பத்தேங்கற வார்த்தைலருந்து வந்தது. பத்தேன்னா இலைனு அர்த்தம் அந்த காலத்துல பனை ஓலைல தானே எழுதினாய்ங்க. இலைல எழுதியிருக்காங்களா?

பெண்ணோட வயிறை ஆலிலைம்பாய்ங்க, அவளோட அல்குலை வெற்றிலைம்பாய்ங்க. பத்திரிக்கைங்கற வார்த்தை கூட ஆணிய அகந்தையாத்தான் படுது.

பெண்கள் பெண்களுக்காக பத்திரிக்கை நடத்தினாலும் இந்த இழவுதான் நடக்கும். காரணம் என்னடான்னா நம்ம சனத்துக்கு பழக்க தோஷம் சாஸ்தி. ஒருத்தன் ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஒரு சுவத்துல ஒன்னுக்கடிச்சானு வைங்க. அதை பார்க்கிறவனுக்கெல்லாம் மூத்திரம் முட்டும்.அதை மாதிரி பெண்களே பெண்களுக்காக பத்திரிக்கை நடத்த முற்பட்டாலும் இதே இழவு ஃபார்முலாதான் தொடரும். மாத்தி யோசிங்க தாயி !

சரி ஓஞ்சு போவட்டும் . சனத்தொகைல பாதியா இருக்கிற இந்த ஜீவங்களுக்கு தங்கள் சம உரிமைகளுக்காக போராடற விசயங்களோ,  அவிக கடமைகளை வலியுறுத்தற சமாசாரங்களோ எதுனா போட்டுத்தொலையறானுவளானா இல்லை.

பெண்கள்ன உடனே வெள்ளை ,வெட்டை, மாதவிலக்கு ,பட்டுச்சேலை, கோலம், அந்த விரதம் இந்த விரதம், இல்லேன்னா சமைத்துப்பார் தானா . இப்போ புதுசா கோவில் புராணம் வேற. யாரை ஏமாத்தறானுவ? ( தங்களையே ஏமாத்திக்கிடறானுகளா என்னனு புரிய மாட்டேங்குது)

பொம்பளன்னா என்ன ஆகாசத்துலருந்து குதிச்சு வந்தாளா? இல்லை லேப்ல தயாரிச்சாய்ங்களா? அதுவும் ஒரு ஜீவன் தான்.  பசி,தூக்கம்,உரிமை, கடமை, வலி, துயரம், இன்பம்,துன்பம் எல்லாம் உண்டுதானே. ஒரு ஆணுக்கு தேவையானது எல்லாமே பெண்ணுக்கும் தேவைப்படுது ( உபரியா தேவைப்படறது சொற்பம்). ஆனா இந்த பன்னாடைங்க இவிகளாவே ஒரு லிஸ்டை போட்டுக்கிட்டு அரைச்ச மாவையே அரைக்கிறானுவ..

Saturday, March 27, 2010

காதலனை ஆசிட் வீசி கொன்ற பெண்

எதிர்வினைகள்
ஓஷோ என்னமோ எதிராளி வினைக்கு எதிர்வினை செய்தா நீ அவனுக்கு அடிமைனு அர்த்தங்கறார். என்ன செய்ய ? நம்மால எதிர்வினை செய்யாம இருக்க முடியமாட்டேங்குதே. நானும் ஓஷோ ஸ்டைல்ல சித்தம் போக்கு சிவன் போக்குனு தொடர் கதையும், வர்ஜியா வர்ஜியமில்லாம தனிப்பதிவுகளும் போட்டுக்கிட்டிருந்தேன். . இருந்தாலும்   நாட்டு நடப்புக்கு எதிர்வினை செய்யறது ஒரு சமூக பொறுப்புங்கற உத்தேசமும் ரெஸ்பாண்ட் ஆகாம இருக்கிறதுல ஒருவித கில்ட்டியும் இருக்கறதால இந்த பதிவை போட்டுக்கிட்டிருக்கேன்.

மகளிர் மசோதா:

இதை பத்தி விரிவா  ஒரு பதிவே போட்டதா ஞா. ஆண் ஆணாவும், பெண் பெண்ணாவும் வாழ்ந்தாலே போதுமானது. பெண்மை மிளிரும் ஆண்கள்,ஆண்மை மிளிரும் பெண்கள் விதிவிலக்கு. விதி விலக்குகளை மனதில் வைத்து இட ஒதுக்கீடு செய்வதெல்லாம் இயற்கையோடு விளையாடும் விபரீத விளையாட்டு.

மேலும் மசோதாவை எதிர்த்து ஓட்டு போட்ட ஒரே ஒரு ஆசாமி அயனான பாயிண்டை கொளுத்தி போட்டிருக்காரு.

ஆண் எம்பிக்கள் என்னைக்கோ ஒரு நாள் இந்த தொகுதியும் மகளிர் தொகுதியாக போகுதுனு நெக்லெக்ட் பண்ணிருவாங்கங்கறார். நிஜம் தானே!

இரட்டை உறுப்பினர்:

வேணம்னா ஒரே தொகுதிக்கு ஆண்,பெண் என்று இரண்டு எம்.பிக்களை தேர்ந்தெடுக்கலாம். ட்ரெயில் ரன் மாதிரி . யார் என்ன கிழிக்கிறாங்கனு பார்ப்பம். ஆண்,பெண் வித்யாசமெல்லாம் ரொம்ப ப்ரிலிமினரி. எஸ்.ஐன்னா எஸ்.ஐதான். பெண் எஸ்.ஐ இருக்கிற ஸ்டேஷன்லயும் லாக்கப் சாவு நடக்கலாம். எம்.பின்னா எம்பிதான். பெண் எம்பி கூட காசு வாங்கிக்கிட்டு கேள்வி கேட்கலாம்.
( எம்.பிங்க நெம்பர் டபுளாயிருச்சுன்னா செலவு இரட்டிப்பாயிருமேனு கேட்க சிலர் கமெண்ட் ஃபாரத்துக்கு போயிட்டது தெரியுது. தமிழக சட்டமன்றம்ங்கற தலைப்புல வச்சிருக்கேன் ஆப்பு. அதை பார்த்துட்டு வேணம்னா கிழிங்க.

சட்டப்படி:

நித்யானந்தா தன் மேலான குற்றச்சாட்டை  சட்டப்படி  எதிர்கொள்ளப்போறதா சொல்லிக்கிட்டிருக்கிற தருணத்துல சுப்ரீம் கோர்ட் லிவிங்க் டு கெதர் ( கண்ணாலம் கட்டிக்காம சேர்ந்து வாழறது ) சட்டப்படி குற்றம் கிடையாதுனு வியாக்யானம் பண்ணியிருக்கு.

நடிகை ரஞ்சிதாவோட சேர்ந்து "வாழ்ந்ததா" சொல்லிக்கிடலாம். ஆனால் அதே சுப்ரீம் கோர்ட் சேர்ந்து வாழறதை நீதிக்கு (மோரல்) புறம்பான  செயலா சொல்லியிருக்கு.
நித்யானந்தா சன்னியாசி ஆறதுக்காக குறிப்பிட்ட டிப்ளமா படிச்சு டிகிரி வாங்கி சன்னியாசி ஆகலே. ஜஸ்ட் மக்களோட மோரல் கன்செர்னோட சன்னியாசியா வலம் வந்தாரு.  பிரம்மச்சரியத்தை உபதேசிச்சாரு. தான் மட்டும் டீ ஷர்ட் ,ஜீன் போட்டுக்கிட்டு நைட் க்ளப்ல குத்தாட்டம் போட்டாரு. இது இம்மாரல் மட்டுமில்லே. இவர் தன் ஆகா ஓகோ கொள்கைகளை பிரச்சாரம் பண்ணித்தான் கூட்டம் சேர்த்தாரு. பைசா வாங்கினாரு. ஆனா அவர் அப்பாவி மக்களை மயக்க எடுத்துவிட்ட தத்துவத்தையெல்லாம்  காத்துல விட்டுட்டாரு. ( அதுக்குதான் கதவை திற காற்று
வரட்டும்னாரு போல) . மேலும் தான் அந்த பொறம்போக்கு வேலைய செய்யலைனு
வாதம் பண்ணல. அது தப்புன்னோ,தவறுன்னோ ஒத்துக்கிடவுமில்லே. அந்த அஜால் குஜால் வேலைக்கு ஆராய்ச்சினு கலர் வேற கொடுத்து கவர் பண்றார். ஜஸ்ட் அதுக்காக வருத்தம் கூட தெரிவிக்கல.

இதெல்லாம் சட்டப்படி குற்றமில்லேனு எந்த அடிப்படைல சொல்றாருனு தெரியலை. சாமியார் மடத்துக்கு ரூ 100 நன்கொடை  தந்த பார்ட்டி கூட கன்ஸ்யூமர் ஃபோரத்துக்கு போகலாம்.

சாமியார் ஆஃபர் பண்ண சர்வீஸ் என்ன? உங்களை ஸ்வர்கத்துக்கு அனுப்பறேன் சாரி.. இதெல்லாம் அந்த காலத்து சாமியாருங்க ப்ராமிஸ். இவரு உங்களுக்கு இங்கயே ஸ்வர்கத்தை காட்டறேன்னு தான் சொல்லியிருப்பாரு. கல்கியே மேல் தமிழ் சினிமால ரஜினி மாதிரி சொன்னதை செய்துட்டாரு போல (போதை மருந்து கொடுத்தாரோ பேதி மருந்து கொடுத்தாரோ அவிகள பார்த்தா ஸ்வர்கத்துல இருக்கிற மாதிரியே இருக்குது.)  ஆனால்.  நித்யானந்தா தான் மட்டும் ஸ்வர்கத்தை பார்த்துட்டாரு. இது ரெஃப்யூசல் ஆஃப் சர்வீஸ், டெஃபிஷியன்சி ஆஃப் சர்வீஸ்.

நம்ப வச்சு ஏமாத்தனதால இது 420 செக்சன் கீழவும் வரலாம். ப்ரீச் ஆஃப் அக்ரிமெண்டும் வருது. குறிப்பிட்ட மத நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைய சீர் குலைச்ச செக்சன்லயும் கொண்டுவரலாம்.

ஒரு நம்பிக்கை என்னடான்னா கர்னாடக ஹை கோர்ட்டு  நித்யாவோட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி பண்ணியிருக்கு.


ஆமாண்ணே ...குமுதத்தில் தொடரும் நித்யானந்தா தொடரை படிக்கிறிங்களா? ஹும்.. இதையெல்லாம் எழுதி என்ன பிரயோஜனம். ரஞ்சிதாவோட மேற்கொண்ட ஆராய்ச்சியை பத்தி எழுதினாலும் நல்லாருக்கும். நமக்கும் எதுனா லேட்டஸ்டா விஷயம் கிடைக்கும்.


வேறு ஒருத்தியை மணக்க இருந்த கள்ளக்காதலனை ஆசிட் வீசி கொன்ற திருமணமான  பெண்.இப்படி ஒரு செய்தி கடந்த வாரம் தெலுங்கு நியூஸ் பேப்பர்ல வந்தது.  பரவாயில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலாறதுக்குள்ளவே மிச்ச சொச்ச விஷயத்துல எல்லாம் மகளிர் தாங்களே உரிய இடத்தை பிடிச்சுருவாங்க போல.


தினமணி அடித்த அபாயமணி:

தினகரனும்,தினத்தந்தியும் போடற போடுல எத்தை தின்னா பித்தம் தெளியுங்கற ஸ்டேஜுல ஒட்டு மொத்த வலைப்பூக்களுக்கு வர்ர ஹிட்ஸை மோனோபலியா சுட்டு வெப் எடிஷனையாவது நெம்பர் ஒன் ஆக்க  திட்டம் போட்டாப்ல இருக்கு.  இணையத்தால் தமிழ் பாழா போகுதுனு ஐட்டம் போட்டு பதிவர்கள்+வலைய்லக கவனத்தை கவர்ந்திருக்கு தினமணி.  ஒரு காலத்துல தினமணில வெளிவந்த வேலூர் டாக்டர் கண்ணப்பர் எழுதின நம் நாட்டு மூலிகைகள் தொடர் ஒரு புரட்சியையே கொண்டுவந்தது.

இப்ப ஞா இணைப்பா வர்ர தினமணி கதிரை ஒரு காலத்துல சனம் காசு கொடுத்து வாங்கிக்கிட்டிருந்தது எத்தனை பேருக்கு தெரியும்?

நல்ல நேரத்துல அடி முட்டாளுக்கு கூட அயனான யோசனைகள் வருமாம். கெட்ட நேரத்துல சித்தூர்.முருகேசனே உனக்கு22 எனக்கு 32 கதைல என்.டி.ஆரை கொண்டுவந்து மொக்கையாக்கிரலாம்.

என்ன தினமணி வலைதளத்துல உங்க வலைப்பூவை என்னை மாதிரியே  பதிவு பண்ணிட்டிங்க தானே.

ஸ்டாலின் அழகிரி பஞ்சாயத்துலருந்து அரசியல் கட்சிகள் தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு நீதி என்னன்னா கட்சில உள்கட்சி ஜன நாயகம்ங்கறது ரொம்ப முக்கியம். தலைவனை கட்சி தான் நிர்ணயிக்கனுமே தவிர , தலைவன் நிர்ணயிக்க கூடாது. இப்படி ஒரு பழக்கத்தை வச்சுக்கிட்டா ஸ்டாலின், அழகிரி மட்டுமே இல்லை நாளைக்கு இவிக பேரன் மார் காலத்துல கூட தொடரும்.

பென்னகரம் இடைதேர்தல். ஹும்னு ஒரு பெருமூச்சுதான் விட வேண்டியிருக்கு. பென்னகர வாசிகள் கொடுத்து வச்சவுக.

பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்கள் நாவலை ஞா படுத்திக்கொள்ளுங்கள். அதன் மலிவுப்பதிப்பை  கண்ணன் அய்யங்காருக்கு  சமர்ப்பணம் செய்திருப்பது ஞா வருதா?
பாலகுமாரன் பெயரால் (?) நண்பர்கள் ஏற்படுத்திய வலைப்பூ ஒன்னு மலர்ந்திருக்கு. ஆமாம் பாலகுமாரன் டாட் நெட்னு ஒரு வெப்சைட் இருந்ததே என்னாச்சு?

தமிழகத்தின் புதிய சட்டமன்ற வளாகம் பத்தி எல்லாரும் எழுதி கிழிச்சிட்ட நேரத்துல அச்சாணியமா ஒரு கேள்வி. இப்பத்தான் ஐ.டி துறை கொடி கட்டி பறக்குதுல்லயா?
சட்டமன்ற கூட்டத்தை பேசாம வீடியோ கான்ஃப்ரென்சிங் முறையில்  நடத்தலாம்லியா? என்னத்துக்கு டம்மியா ஒரு கூரை உண்மையா ஒரு கூரைனு தண்டசெலவு?