Tuesday, June 28, 2011

காத்லித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா!


அண்ணே வணக்கம்ணே ..

இன்னைக்கு ஒரு மாறுதலுக்கு ச்சொம்மா கடலை போடலாம் வாங்க !
என்னதான் நாட்டு நிலைமை முதல் - சனங்கள்ள சோசியத்தை பத்தின விழிப்புணர்வு வரை கவலைக்கிடமா இருந்தாலும் எப்பப்பாரு சீரியசா ..ரோசிச்சு ரோசிச்சு மண்டை காய்ஞ்சுப்போச்சு. மெகாசீரியல் ஓடற ஹால் மாதிரி டல் ஆயிருது. அதான் ச்சொம்மா கடலை போடலாம்னு ஒரு உத்தேசம்.

இதுக்கு காரகர் சுக்கிரன் விகட ,வினோத பரிகாச பிரசங்க பிரியம். ச்சொம்மா பேசிக்கிட்டே இருந்துட்டா சுக்கிர பலம்லாம் இதுல செலவாகி கில்மா பின் தங்கிரும். காதலர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஏசி ரெஸ்டாரண்டை அவாய்ட் பண்ணிருங்க -சோடியா டூ வீலர்ல அலையறதை விட்டுருங்க - ஜங்க் ஃபுட், பேக்ட் ஃபுட், கூல் ட்ரிங்ஸ்,சினிமா மாதிரி இழவையெல்லாம் விட்டுருங்க . இதெல்லாமே சுக்கிர காரகம் தேன்.

தப்பித்தவறி காதலிச்ச பார்ட்டியையே கண்ணாலம் பண்ணவேண்டி வந்தா மேற்படி மேட்டர்களோட விளைவா பேட்டரி வீக் ஆயிரும். இப்பல்லாம் கில்மாவுல வீக்காயிருந்தா குட்டிங்க உடனே விவாகாரத்துக்கு அப்ளை பண்ணிர்ராய்ங்களாம்.

குஷ்டம் வந்தவன் அவில் ஃபைவ் விழுங்கறான். கடப்பாறைய விழுங்கினவன் சுக்கு கஷாயம் சாப்பிடறான். அதென்னமோ நமக்கு சில்லியா சில்லி வேர்களை பிடிச்சு தொங்கற வித்தை கை வரலிங்ணா. அசால்ட்டா ஆணிவேரை புடிச்சுர்ரோம் .சனத்துக்கு கிலியடிச்சுருது. ஆப்பு வச்சிர்ராய்ங்க.

மொதல்ல கடலை -அப்பாறம் ஆப்பை பத்தி பார்ப்போம். அதுக்கு மிந்தி நேத்திக்கு நீங்க படிச்ச (ஏறக்குறைய 1094 பேர் இரவு 11.30 நிலவரம்) நவீனபரிகாரம் தொடர் 2000 வருடத்தில் ஆன்மீகம் மாத இதழ்ல துவங்கி ரெண்டு மூனு அத்யாயத்துல நிறுத்தப்பட்டதை சொல்லியே ஆகனும்.

நாம பிடிச்சதென்னவோ ஆணிவேர். அசால்ட்டா அசைக்க "அவாளோட" பழைய பொய்கள் எல்லாம் பல்லிளிக்க ஆரம்பிச்சுருச்சு.பொயப்பு கெட்டுப்போற நிலைமை வந்துருச்சு. ஆப்பு வச்சிட்டாய்ங்க.

கடலை:
வேர்கடலை விக்கிறவுகளை பார்த்திருப்பிங்க. எப்பமோ வறுத்து பொட்டலம் போட்டு வச்சிருப்பாய்ங்க. ஆனால் ச்சொம்மா சொம்மா ஜல்லி கரண்டிய வாணலில தட்டி சத்தம் பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. அது விளம்பரத்துக்கு.

ஆனால் அசலான மேட்டரை விட்டுட்டு/காரியத்தை விட்டுட்டு வெட்டிப்பேச்சு பேசறதுக்கு கடலை போடறதுனு ஆரு பேரு வச்சாய்ங்க?

ஐ அப்ஜெக்ட் யுவர் ஆனர்.

ஆப்பு:
மரத்தை கோடாரியில பிளக்க சின்னதா பிளவு வரும் ( ஒரே அர்த்தங்ணா - ரெட்டைன்னாலே நமக்கு பிடிக்காது - தப்பான அர்த்தம்லாம் நம்ம அகராதியில கடியாது) அதுல ஒரு மரத்துண்டை வச்சு அடிப்பாய்ங்க. மரம் பிளக்கும். அந்த மரத்துண்டுக்குத்தேன் ஆப்புன்னு பேரு. இதை எங்க அடிச்சா வலிக்கும்னு "பின்"னாடி கூட சொல்லமாட்டேங்ணா

நேத்து பதிவா போட்ட மேட்டரு கொடவுன்ல கிடந்த மேட்டருங்ணா. அந்த நாள்ள மேக்சிமம் 400 பேர் தான் படிச்சிருப்பாய்ங்க. இப்பம் ஆயிரம் தாண்டிருச்சே. மேட்டரா மாத்தி ரோசிக்க(ச்சு) சொல்ற மேட்டர் சனம் பின்னி பெடலெடுப்பாய்ங்க. பெரீ டிஸ்கசன்லாம் நடக்கும்னு நினைச்சேன். நிறைய விளக்கம்லாம் தரலாம்னு வெயிட்டிங். ஆனால் "மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படலை"

இதை ரெண்டுவிதமா புரிஞ்சிக்கிடலாம். ஒன்னு குளவி கொட்டி கொட்டி பூச்சிகளை குளவியா மாத்தினாப்ல உங்க மைண்ட்ஸையெல்லாம் என் எழுத்துக்கள் ஏற்கெனவே ட்யூன் பண்ணியிருக்கனும். அல்லது ஆரோ ஒரு பத்தாறு போட்ட கமெண்ட் தான் சனங்க கருத்தோ என்னமோ ("பினாத்தலுக்கும் அளவு வேணும்")

கடலை போடலாம் வாங்கனு தலைப்புல கூப்டாலும் டீன் ஏஜ்ல கூட கடலை போடறது நம்ம சரித்திரத்துல கிடையாதுங்ணா.

நாம என்ன செய்தாலும் அதனோட முடிவான லட்சியம் நம்ம லட்சியமாத்தான் இருக்கும். நம்ம லட்சியம் (ஆப்பரேஷன் இந்தியா 2000) தெரியும்ல.

ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனேங்கறாப்ல என் மனசு லட்சியத்துலயே நிக்குது. ( கால் வலிக்கப்போவுதுனு ஆருப்பா நக்கலடிக்கிறது?)

சமீபத்துல கலாம் அய்யாவோட மெயிலுக்கும் / விசயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்களோட மெயிலுக்கும் , தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகளுக்கும் ஆ. இந்தியா 2000 திட்டத்தின் சுருக்கத்தை அனுப்பினேன்.
பதில் வரவே வராதுனு தெரியும். இதெல்லாம் தெரிஞ்சே செய்யற லொள்ளு. ம்னமே அதை விட்டுத்தள்ளு.

கிரகங்கள் மனிதர்களை / மனிதர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்துதுன்னு இத்தீனி நாளூ சொல்லிக்கிட்டிருந்தோம். ஒரு கட்டத்துல நவகிரக பாதிப்புகளை குறைப்பது எப்படின்னும் இன்னொரு கட்டத்துல நவகிரகங்களிடமிருந்து விடுதலைன்னும் தொடர் பதிவு போட்ட பார்ட்டி நாம.

இந்த க்ஷணம் என்ன தோணுதுன்னா நாம என்னதான் பரிகாரம், விடுதலைன்னு வாய்ல வவுத்துல அடிச்சிக்கிட்டாலும் சனம் கிரகங்கள் காலால கால்பந்தாய் உதைப்படறதை எண்ணி அவிக வருந்தவும் போறதில்லை திருந்தவும் போறதில்லை. நாம எதுக்கு ச்சொம்மா நை நைன்னு அடிச்சு சுஸ்தாகனும்.பேசாம "தொழிலை" கவனிக்கலாமேனு தோணுதுங்ணா..

இதுல ஒரு லாபம் என்னன்னா .. சனம் தங்களோட வில்லை ( Will) உபயோகிச்சு நம்மை முடக்க பார்க்க பார்க்க ஆத்தாளுக்கு கோவம் பொத்துக்கினு வந்து "பெரீ பெரீ சமாசாரத்தை எல்லாம் அசால்ட்டா தூக்கி கொடுத்துக்கினு கீறா"

இவிக வில் ( Will) என்ன ராமன் கை வில்லா? ங்கொய்யால ராம பாணத்தையே டுபுக்காக்கின ராம நாமம்ங்கற ஆயுதம் நம்ம கையில கீது.

பிட்டா புடிங்க:

இன்னைக்கு இளைய தலைமுறை அசால்ட்டா உபயோகிக்கிற பல வார்த்தைகளோட அசலான அர்த்தம் விபரீதமா இருக்குங்ணா. உ.ம் ஆப்பு

என்ன ஒரு ஆறுதல்னா பண விஷயத்துல க்ளியரா இருக்காய்ங்க. என்ன ஒரு பயம்னா கிரைமுக்கு கூட தயங்க மாட்டேங்கறாய்ங்க.அந்த காலத்துல வீட்டு ஏழுமலையான் உண்டி - அம்மாவோட சீர்வரிசையை சேர்ந்த வெள்ளி டம்ளர்களோட நம்ம கிரைம் நின்னுருச்சுங்ணா.

நமக்கும் வயசு ஆகுது. ச்சொம்மா கண்டவுகளை வம்புக்கிழுத்து அவிக வவுத்தெறிச்சலை ஏன் கொட்டிக்கனும்னும் தோணுது. தாளி வழக்கு போடுவான்/டாக்சி அனுப்புவாங்கறதுக்கெல்லாம் பயப்படற கேஸ் நாம இல்லிங்ணா.

பெட்டைபுலம்பல் மாதிரி புலம்புவாய்ங்க போல.அதெல்லாம் டெலிபதில வந்து ரெம்ப டார்ச்சர் பண்ணுது. எது எப்படியோ ஜாதகங்க வந்துக்கிட்டே இருக்கு. ரவுண்ட் தி க்ளாக் ஒர்க் அவுட் பண்ணாலும் "முடியலிங்ணா" அதனால வர்ர மாசம் 7 ஆம் தேதிவரை ஆரும் ஜாதகம் அனுப்பாம இருந்தா உள்ளதை பைசல் பண்ண வசதியா இருக்கும்.

நம்ம வலைதளத்துல பதிவு போடறவுக ஃப்யூச்சர்ட் ஐட்டமா போட்டா பொருத்தமான படத்தை ஃப்யூச்சர்ட் இமேஜா பொடுங்ணா.

பாண்டியண்ணன் எப்பத்தேன் பதிவு சைஸ்ல கமெண்ட் போடறத விட்டு பதிவு போட ஆரம்பிக்கப்போறாரு கேட்டு சொல்லுங்ணா..

அப்பாறம் சமச்சீர்கல்வி ஆய்வு கமிட்டி உறுப்பினர் ஒருத்தரு தங்களோட நிறுவன ஆசிரியருக்கு சம்பளம் சரியா கொடுக்காத வழக்குல இருக்காராமே நெஜமா ஆருப்பா அது?

பிரதமர் நாளை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறாராம். வாரா வாரம் சந்திப்பாராமே.. (அய்யய்யோ அப்ப இனிமே வாரா வாரம் பல ஊழல்கள் வெடிக்கப்போவுதா?)

பொதுக்கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷிய குழு உறுப்பினர்கள் (காங்கிரஸ்) நக்கலடிச்சு சிரிச்சாய்ங்களாமே?

"நல்ல தீர்ப்பை உலகம் கூறும் நாள் வரும்போது அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது"

ராகுல் காந்தி எப்ப பிரதமராக போறாரு? தாளி ராகுல் பிரதமராகனும் - முன் கூட்டி தேர்தலுக்கு போகனும். காங்கிரஸ் போண்டியாகனும்.

ங்கொய்யால நேரு குடும்பத்துல இருந்து நாய்குட்டி வந்தா போதும் ஜெயிச்சுரலாம்னு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலையற காங்கிரஸ் கிழவாடிகளுக்கு டெப்பாசிட் கூட கிடைக்கக்கூடாது.