Showing posts with label ஆன்மீக அனுபவங்கள். Show all posts
Showing posts with label ஆன்மீக அனுபவங்கள். Show all posts

Sunday, August 21, 2011

அவன் அவள் அது :19


கடந்த பதிவில் ஒரு நிருபனை பற்றி சொல்லியிருந்தேன்.அவன் எந்த அளவுக்கு சாலாக்கான பேர்வழி, பவர் ஃபுல் பர்சன்னு ரெண்டு உதாரணங்கள் மூலமா சொன்னாத்தான் அவனோட மோதினது ஏறக்குறைய தற்கொலை முயற்சி மாதிரிங்கறது உங்களுக்கு புரியும்.

உதாரணம்:1

நம்ம ஊர்ல நம்ம சாதிக்குன்னு ஒரு சங்கம் உண்டு.( எல்லா ஊர்லயும் இதே செனேரியோல தான் சாதி சங்கங்கள் இருக்கும்னு சம்சயம்) சங்கம் பத்தி சொல்ல ஆரம்பிச்சா அகில உலக முதலியார் சங்கம் ஃபத்வா வெளியிடுமோ என்னவோ? ஆமாங்க ஏ.சி அண்ணன் எப்படி இருக்காரு. சத்தத்தையே காணோமே.
அந்த சங்கத்துல ஒரு ஃபுல்டைமர். ஃபைனான்சியலா ஷெட். பஜார்ல ஒரு லட்சம் அட்வான்ஸ், அஞ்சாயிரம் ரூவா வாடகை பெறுமானமுள்ள கடையை பிடிச்சுக்கிட்டு கதை பண்ணிக்கிட்டிருந்தாரு. அதை வேற ஒரு பார்ட்டி வாங்கிருச்சு. ( அந்த கடையோட இன்னம் நாலு க்டை சேர்த்து)

சங்கத்து ஃபுல்டைமர் உனக்கும் பெப்பே உங்க தாத்தனுக்கும் பெப்பேன்னு கோர்ட்டை வச்சுக்கிட்டு ஃபிலிம் காட்டிக்கினு இருந்தாரு. அப்பம் கேஸு நம்ம நிருபர் திலகம் டேபிளுக்கு போச்சு.

சங்கம் ஒன்னும் அந்த அளவுக்கு டம்மியில்லை. வெள்ளையும் சள்ளையுமா ஸ்டேஷன்ல போய் உட்கார்ந்து பேசற ரேஞ்சுதேன்.

நம்ம நிருபர் திலகம் என்ன பண்ணாரு தெரீமா.ஒரு மழை நாளா பார்த்து டி.எஸ்.பி ரேஞ்சுல அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பாடு பண்ணி டிப்பரை அனுப்பி ஃபுல்டைமரோட கடைய ச்சொம்மா எத்திவிட்டுட்டாரு.

சங்கம், சாதி சனம் தலைகீழ நின்னு என்னென்னமோ பண்ணாலும் நம்ம நிருபர் திலகம் தனி ஒரு ஆளா நின்னு மேனேஜ் பண்ணிட்டாரு.

உதாரணம் 2:

நிருபர் லேட்டஸ்டா வேலைக்கு சேர்ந்த ஆந்திரபிரபாவுலயும் விளம்பர பணத்தை இஷ்டாத்துக்கு வேட்டு விட்டுட்டாரு. பெரிய்ய அமவுண்டு.ஹைதராபாத்லருந்து ஏடிவிடி மேனேஜரும் -திருப்பதிலருந்து ஏடிவிடி ரிஜினல் மேனேஜரும் சித்தூர் வந்திருக்காய்ங்க.

நிருபருக்கு ஃபோன் பண்ணா மதியம் வரை இங்க இருக்கன் அங்க இருக்கன் ஃபிலிம் காட்டியிருக்கான். கடேசியில வீட்டுக்கு வந்துட்டன் வாங்கன்னுருக்கான்.

ரெண்டு மேனேஜரும் போயிருக்காய்ங்க. ஏதோ டைம் கொடுத்து வார்ன் பண்ணாப்ல இருக்கு. அவ்ளதேன். நம்மாளு நேர போயி என் பொஞ்சாதி கைய பிடிச்சு இழுத்துட்டாய்ங்கன்னு டி.எஸ்.பி கிட்டே கம்பெயிண்ட் பண்ணிட்டான். (2003) இந்த கேஸு இன்னிக்குவரை நடந்துக்கிட்டுதான் இருக்கு. நிருபர் திலகம் மட்டும் தன் பாவம் பழுத்து (புழுத்து) தலைமறைவா இருக்காரு. இத்தனைக்கு பிறகும் அதே பத்திரிக்கையில ஸ்டாஃபரா தொடரும்போதுதேன் நாம ஆருக்கு ஓட்டுப்போடனும் கமாண்ட் பண்ணான்.

நாம வெளிய வந்து ஆந்திரபிரபாவுக்கு அன்றைய நியூஸ் ஃபேக்ஸ் செய்து - நடந்த விஷயத்தை சுருக்கமா சொல்லி - என்னை ஆந்திரபிரபாவுக்கு கொண்டு வந்தது அந்தாளு -அவன் கெட் அவுட்டுன்னிட்டான் - அதனால நான் நிருபனா இல்லையான்னு டிசைட் பண்ணுங்கன்னுட்டு இன்னொரு ஃபேக்ஸும் கொடுத்தேன்.

அதே ஃபேக்ஸ் நெம்பர்ல மேனேஜர் லைனுக்கு வந்து " கொய்யால நீ தான் ரிப்போர்ட்டர். அவன் ரிப்போர்ட்டரா இல்லையான்னு நான் சித்தூர் வந்து டிசைட் பண்றேன்னுட்டாரு.

அப்போ ஆந்திரபிரபா நிதி நிலை ரெம்ப மோசம். (எக்ஸ்பிரஸ் க்ரூப்புலருந்து வெளிய வந்துருச்சு) மேனேஜர் சித்தூர் வந்தாரு. நம்ம ப்ளஸ் ( எழுத்துத்திறமை / கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்) மைனஸ்
( விளம்பர சேகரிப்பு ) எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு.. ...........

கொய்யால இனி இந்த ஆஃபீஸ் -பவர் -ஃபோன் எந்த மசுரும் தேவையில்லை. இதுக்கெல்லாம் ஆவற செலவை உனக்கு சம்பளமா தரேன்னுட்டு ஆஃபீஸ் ஃபர்னிச்சர்ஸ் - கம்ப்யூட்டர் எல்லாத்தையும் லாரி சர்வீஸ்ல திருப்பதிக்கு புக் பண்ணிட்டுத்தான் போனாரு.

நம்ம நிருபர்திலகம் என்ன பண்ணாரு தெரீமா? ஆஃபீஸ்ல தன்னோட(?) டேபிள் ட்ராயர்ல டைமண்ட்ஸ், கரன்சி , ஃபாரின் செல்ஃபோன்லாம் வச்சிருந்ததாவும் அதையெல்லாம் மேனேஜர் + ஏடிவிடி மேனேஜர்+ சித்தூர் முருகேசன் என்ற மூவர் ஆட்டைய பொட்டுட்டதாவும் சித்தூர் கிரைம் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் ஃபைல் செய்தாரு..

சி.ஐ .அனுப்பினதா ஒரு ஏட்டு நம்ம வீட்டுக்கு வந்து சி.ஐ.கையோட கூட்டிக்கிட்டு வரச்சொன்னதா இஷ்டத்துக்கு அலப்பறை பண்ணாரு.

இந்த சிச்சுவேஷன்ல ஆத்தா நமக்கு எப்படி துணை நின்னாங்கறதை அடுத்த பதிவுல சொல்றேன். -















Saturday, August 20, 2011

அவன் அவள் அது : 18


அண்ணே வணக்கம்ணே !

இது ஏதோ என் சுயசரிதை மாதிரி போறதை தவிர்க்க முடியாது. ஏன்னா 23/12/2000 லருந்து ஆத்தாவோட இன்ஃப்ளுயன்ஸ் இல்லாத நாளே நம்ம லைஃப்ல கிடையாது. என்னதான் குரு உச்சம் ,யோக ஜாதகம்னு பீத்திக்கிட்டாலும் ஆத்தாவை அடுத்த பிற்பாடும் லேசா நிமிர்ந்து நிக்கவே 7 வருசம் பிடிச்சது. நம்ம ஆட்டம்லாம் 1967 முதல் 87 க்கே கதம்.

அதுக்கப்பாறம் நம்ம வாழ்க்கையில ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எல்லாத்தையுமே இழந்ததைத்தான் பார்க்கமுடியும். இவ்ள எதுக்கு இன்னைக்கும் எதையாவது கடாசினாத்தான் வேறு எதாவது கைக்கு வருது. ஆனால் வருது. இதுவும் ஆத்தா போடற கிரேஸ் மார்க்காலதான் சாத்தியம்னு உறைக்குது.

அதனால ஆத்தாவை பத்தி சொல்ல ஆரம்பிச்சா என்னைப்பத்தியும் சொல்லியாகனும். என்னைப்பத்தி சொல்ல ஆரம்பிச்சா ஆத்தாவை பத்தி சொல்ல ஆரம்பிக்கனும். ( ஆரோ ரெண்டும் ஒன்னுதேன் சீக்கிரம் ஆரம்பிங்கறது கேட்குது)

ஏதோ ஒரு சாப்டர்ல பொஞ்சாதி ஊருக்கு பூட்ட கதைய சொன்னாப்ல ஞா. அங்கருந்து டூ இன் ஒன்னா இருக்கக்கூடிய ஒரு ரெசிடென்ஸை பிடிச்சம். ஐ மீன் பேச்சிலராவும் வாழமுடியும். ஒரு வேளை பொஞ்சாதி ஊர்லருந்து வந்துட்டா அப்படியே ஃபேமிலி லைஃபும் கன்டின்யூ பண்ணமுடியும்.

கடந்த பதிவுல சொன்னாப்ல ஒரு பிரபல தினசரியில அரைபக்க அளவுல செய்தி வந்த பிறவு நம்ம ரெப்புடேஷன் அதிகமாச்சு. அவனவன் பத்திரிக்கை ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணி விலாசம் தெரிஞ்சுக்கிட்டு வர ஆரம்பிச்சான்.

அஃபிஷியல்ஸ், போலீஸ் பர்சனல் இப்படி வர்ஜியா வர்ஜியமில்லாம வந்து இன்டராக்ட் ஆக ஆரம்பிச்சாய்ங்க. இதுல நிருபர்களுக்கும் விதிவிலக்கு இல்லை. அப்படி வந்து கிராஸ் ஆன ஒரு நிருபரை பத்தி சொல்லியே ஆகனும்.

அவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் வேலை செய்ய வேண்டியது,லட்சக் கணக்கில் கையாட வேண்டியது பிறகு நிர்வாகத்தின் மீதே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியது , பின் மற்றொரு பத்திரிக்கையில் சேரவேண்டியது இது தான் அவன் வேலை. நம்மை சந்திச்சப்போ இண்டியன் எக்ஸ்பிரஸ் க்ரூப்லருந்து பிச்சிக்கிட்டு போயிட்ட ஆந்திரபிரபாவுல ஸ்டாஃபரா இருந்தான்.

தற்சமயம் ஆள் தலைமறைவா இருக்கான். கவுன்டர் கூட தரமுடியாது அதனால அடக்கி வாசிக்கிறேன். ஏதோ ஒரு கேஸ்ல ஹை கோர்ட் ஜட்ஜி முன்னாடி பேப்பர் கட்டிங்ஸ் வச்சாய்ங்களாம். அதுக்கு அவரு அம்பது ரூபா செலவழிச்சா பிட் நியூஸ், நூறு ரூபா செலவழிச்சா சிங்கிள் காலம் வரும். இந்த குப்பையை எல்லாம் எடுத்துட்டு ஆதாரங்கள் எதுனா இருந்தா கொண்டாங்கன்னாராம். இந்த நிலைக்கு மேற்படி நிருபர்கள் தான் காரணம்.

அந்த ஆசாமி ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் சித்தூர் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார - ஃபோன் அட்டெண்ட் பண்ண ஒரு உதவியாளர் தேவைன்னும் மாதா மாதம் சம்பளம் தானே கையிலருந்து கொடுப்பதாவும் சொன்னான். நமக்கு ஏற்கெனவே ஜர்னலிசத்துல சொறி ..ஆர்வம் அதிகம். ஆஃபரை ஒத்துக்கிட்டன்,

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ நிறைய விஷயங்களை புரிந்து கொண்டேன்.(அந்த நிருபனை பற்றி மட்டுமல்ல பத்திரிக்கையுலக மோசடிகள் குறித்தும் தான்) அவ‌னே என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை. அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌ ஆசாமிக்கும் என‌க்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.

உட‌னே ஆந்திர‌பிர‌பா ஆஃபிஸ்ல‌ருந்து போன்.." போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். அவன் ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றோம்னாரு .. மேனேஜ‌ர்.

நாம யாருக்கு எதிரா வீறு கொண்ட எழுந்தமோ அந்த ஆசாமி சாதாரண ஆளில்லை. ஜில்லா ஜில்லாவா போய் பழம் தின்னு கொட்டை போட்ட கேஸு.

கோடி ராமகிருஷ்ணாவோட "அம்மன் ' சினிமாவுல க்ளைமேக்ஸ்ல ஒரு பாட்டு வரும் . அதுல ஒரே ஒரு வரி 'சத்யமேவ ஜெயதேனனி லோகானிகி சாடிம்பரா .. கதலி ரா "னுட்டு வரும். அப்பம் ஏற்பட்ட சிலிர்ப்பு இருக்கே வர்ணிக்க வார்த்தையே கிடையாது.

"சத்தியம் ஜெய்க்கும்னு உலகத்துக்கு அறிவிக்க வா "ங்கறது இதனோட அர்த்தம். (மேற்படி பாட்டோட சிச்சுவேஷன் தெரியாதவுக இங்கே க்ளிக் பண்ணி க்ளிப்பிங் பாருங்க.பார்க்கிறதை விட இங்கே அழுத்தி கேளுங்க. குண்டலில ஒரு ஜெர்க் வரும் )


சத்தியமேவ ஜெயதே ! வாய்மையே வெல்லும்! இதெல்லாம் அரசு லெட்டர் ஹெட்டில் போட்டுக் கொள்ள (மட்டும்) சொல்லப்பட்டவையல்ல ! நான் ஒன்றும் மகானில்லை. அற்பன். ஆனால் 1997முதல் அந்த நாள் வரை நான் நான் காப்பாற்றிய காலணா சத்தியமே என் அந்த எதிரியை எரித்துப் போட்டதை கண்கூடாக பார்த்தேன்.

அந்த சமயத்தில் என் கான்ஷியஸ் உச்சத்தில் இருந்தது என் உழைப்பை உறிஞ்சி ,என் ஜனநாயக உரிமையை பறிக்க பார்த்த அந்த பத்திரிக்கை நிருபனுடன் மோதிய கால கட்டத்தில் .நடந்ததை சொன்னா " தபார்ரா நல்லாவே விடறான்யா ரீலு" ன்னுருவிங்க.

ஆனாலும் அடுத்த பதிவுல சொல்லத்தான் போறேன்.

Friday, August 19, 2011

அவன் அவள் அது: 17


இந்த தொடரை எழுத ஆரம்பிச்சதால ஆத்தாவுக்கும் நமக்கும் உள்ள கனெக்சன் தீட்டப்பட்டதா சொன்னேன். கனெக்சன் தீட்டப்பட்டுருச்சுங்கறதுக்கு ஆதாரம் இந்த லேட்டஸ்ட் சம்பவம்.

ஆத்தாவுக்காக நாம தெலுங்குல எழுதின கவிதைகளை வலை ஏற்ற ஜகத் சோம்பேறியும் - அந்த கால டைப்ரைட்டிங் ஹையர் பாஸ் கேஸுமான பார்ட்டிக்கு ஆப்பரேஷன் அம்ப பலுக்குவிற்காகவே ஒரு கம்ப்யூட்டரை கொடுத்துட்டு வந்ததா சொல்லியிருந்தேன்.

அவனும் நம்ம ஏஜ் க்ரூப்தான் இருந்தாலும் டிகிரி இன் கம்ப்ளீட்டாகி - அன் எம்ப்ளாய்டாவே துவங்கி - அப்பன் சொன்ன பொண்ணை கண்ணாலம் கட்டி அப்பன் கேர் ஆஃப்லயே சேஃப்டி ஜோன்லயே காலம் கழிக்கிறதால ஒரு வித மசபசப்பு உண்டு.

இவன் எந்த காலத்துக்கு அடிச்சு (கவிதைய சொன்னேங்க) நான் எந்த காலத்துக்கு வலை ஏத்தறதுன்னு பேதியாகி கிடந்தப்போ நம்மளோட இன்னொரு க்ளாஸ்மெட் கார்த்தி எனக்கும் கொஞ்சமா கொடுப்பான்னு அடிச்சுதரேன்னு சொன்னாரு. இதையும் கடந்த பதிவுல சொல்லியாச்சு.

இப்பம் அப்டேட் என்னடான்னா சிஸ்டத்தை கொண்டு வச்சுட்டு வந்த மறு நாளே அந்த மச மச ஒரு குண்டை தூக்கி போட்டான். குண்டு அவனோட வார்த்தைகளிலேயே

// என் பையன் அரசு கல்லூரியில ................. கோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருந்தான். நாங்க கவுன்சிலிங் போற அவசரத்துல இன்கம் சர்ட்டிஃபிகேட் வாங்க ட்ரை பண்ணோம்.

வருவாய்த்துறை பிரகஸ்பதிகள் என் பேரை போடாம என் பையன் பேரையே அடிச்சு விட்டுட்டாய்ங்க போல . நாங்களும் தூக்கிக்கினு போயிட்டம். ஆனால் கவுன்சிலிங்குக்கு இன்கம் சர்ட்டிஃபிக்கேட் எல்லாம் தேவையில்லைன்னு கல்லூரி சைட்ல சொல்லிட்டாய்ங்க.

ஆனா ..சீட் அல்லாட்மெண்ட்ல இன் கம் சர்ட்டிஃபிக்கேட் வைக்காததால அடிஷ்னலா ரூ.31 ஆயிரம் கட்டுரான்னிட்டு காயிதம் வந்துருச்சு.. //

சாதாரண / நார்மலான ஆட்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி( பணத்தை பத்தி சொல்லலை - பிரச்சினைய பத்தி சொல்றேன்) அடுத்து என்ன செய்யலாம்னு ரோசிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. ஆனால் நம்மாளு கொலாப்ஸ் ஆயிட்டிருந்தான்.

ஏதோ ஒரு 3 ஆயிரம் குறையுதுப்பான்னா கொடுத்துரலாம்.ரூ.31 ஆயிரத்துக்கு எங்கே போவம்? கையறு நிலையயும் - நம்மால முடிஞ்ச யோசனைகளையும் சொல்லிட்டு வந்துட்டம்.இனி வலையேற்றமாவது மசுராவது .குடலேற்றம்தான்னு முடிவே பண்ணியாச்சு.

இருந்தாலும் மைண்டுல ஒரு நப்பாசை. ஆத்தா நினைச்சா இதெல்லாம் ஜுஜுபி. ஆனால் நினைக்கனுமே..

ரெண்டு நா கேப் கொடுத்துட்டு "ச்சொம்மா வேடிக்கை பார்ப்போம்'னு அவனை பார்க்க போயிருந்தேன். நாம கொடுத்த ரோசனையை செயல்படுத்தாம - எந்த பெரிய மன்சனோட ரெக்கமெண்டேஷனுமில்லாம இவிகளோட ஃபோன் நச்சரிப்புக்கு ரெஸ்பாண்ட் ஆகி - ஹ்யுமேனிட்டேரியன் கன்சிடரேஷன்ல காலேஜ் காரவுக ரூ.31 ஆயிரத்தை வஜா பண்ணிட்டாய்ங்களாம்.

பார்ட்டிக்கு ஒரே குஜிலி ." உன் ஆத்தாதான் அவன் மனசை மாத்தியிருக்கனும்.மொதல்ல இன்னா அலட்சியமா பேசினான் தெரியுமான்னு ஆரம்பிச்சு அந்த டெலிஃபோன் உரையாடல்களையெல்லாம் விவரிக்க ஆரம்பிக்க புல்லரிச்சு போயிட்டன்...