Monday, August 27, 2012

புலிப்பாணி பாட்டு : சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பா?


சோசியருங்க பலன் சொல்லும் போது அப்பப்போ ஒன்னு ரெண்டு பாட்டு எடுத்துவிட்டாத்தான் சனங்களுக்கு திருப்தி.அப்படி சோசியருங்க விடற பாட்டுகள்ள முக்கியமான பாட்டு புலிப்பாணியோட பாட்டு. அதுலயும் அவரு குட் வில்லுக்காக போகர் அருளால் சொன்னேன்னு பாட்டுல டச் பண்ணிக்கிட்டே போவாரு. இதனால இதை கலீஞரும் ,அம்மாவும் சேர்த்து விட்ட ஸ்டேட்மென்டுன்னு நினைச்சுர்ராய்ங்க.

புலிப்பாணி சொன்னதெல்லாம் வேதமுமில்லை.சுப்ரீம் கோர்ட் தீர்ப்புமில்லை. ஆரு சொன்னாலும் ஒட்டு மொத்த சாதகத்தையும் அனலைஸ் பண்ணி சொன்னாத்தேன் ஒர்க் அவுட் ஆகும். அதுலயும் ஜாதகனோட நிறம் ,உடல் வாகு , பேச்சு, குடும்பத்தோட வாழறாரா இல்லியா, ப்ரதர்ஸ்,சிஸ்டர்ஸ், தாய்,வீடு,வாகனம் உண்டா இல்லியா, படிப்பு உண்டா இல்லையாங்கறதை பொருத்து பலன் மாறும்.

ஜாதகர் அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவரா அந்த நேரம் ஓடிவந்து அணைப்பவராங்கறதை பொறுத்தும் பலன் மாறும்.பிள்ளைகள் உண்டா இல்லியாங்கறதை பொருத்து பலன் மாறும். குழந்தையே இல்லின்னா ஒரு பலன்.பெண் குழந்தை மட்டும்னா ஒரு பலன்.

வாங்கின கடனை திருப்பி கொடுக்கிற பழக்கம் உள்ளவரா? டீக்கடையில அரசியல் பேசறவராங்கறதை பொருத்து பலன் மாறும்.

கண்ணாலமானவரா? பக்கத்து வீட்டுக்காரன் பெண்டாட்டிய வச்சிருக்காராங்கறதை பொருத்து பலன் மாறும்.பார்ட்டி செயிலுக்கு போயிருந்தா ஒரு பலன், ஐபி போட்டு ஓடியிருந்தா ஒரு பலன்,அங்கஹீனம் ஏற்பட்டிருந்தா ஒரு பலன், இப்படி ஒழுங்கு மரியாதையா சொல்ற பலனே சகட்டுமேனிக்கு மாறும்.


முக்கியமா அடிமை தொழிலா ,அரசு உத்யோகமா,சொந்த தொழிலாங்கறதை பொருத்து பலன் மாறும் அதிலும் முக்கியமா அவரோட ,செக்ஸ் பழக்க வழக்கம் பலனை தலைகீழா மாத்திரும். இதை எல்லாம் கண்டுக்காம விட்டுட்டு புலிப்பாணி பாட்டை அப்டியே எடுத்துக்கிட்டா நாறிரும்.

புலிப்பாணியும் ஒரு சோதிடரா குப்பை கொட்டியிருப்பாரு போல. தன் கருத்தை பாட்டா சொல்லிவச்சுட்டாரு .எதுகை மோனை உபயத்துல அவை லேசில் மறக்காம வாய் வழியா தொடர்ந்து வந்து அச்சுலயும் வந்துருச்சு.

புலிப்பாணியாரோட அனேக கருத்துக்கள் ரெம்ப ஓவரா இருக்கும். பொதுப்படையா இருக்கும்.சில நேரத்துல தலைகீழா இருக்கும்.

உதாரணத்துக்கு செவ் தசை புதபுக்தி அவரு தந்திருக்கிற பலனை பாருங்க:

வெற்றியில்லா சேய் திசை ,சனியன் புத்தி
வீறான நாளதுவும் மாதம் பதின் மூன்று
சத்தியில்லா நாளதுவும் ஒன்பதாகும்
சுகமில்லை அதன் பலனை சூட்ட கேளு
புத்தியில்லா சத்துருவும் ரோக பயமுண்டாம்
பூவையரும் புத்திரரும் புனிதமுடன் மடிவாம்
கத்தியில்லா தர்க்கங்கள் மெத்த உண்டு பாரு
கனதையுள்ள சூனியமும் கனாவுடனே காணும்

இதுக்கு அருத்தம்:

செவ் தசை சனிபுக்தி மொத்தம் 1 வ,1 மா,9 நாள் இது கெட்ட நேரம், முட்டாள்களால் பிரச்சினை வரும். நோய் வரும் . பெண்கள்,பிள்ளைகள் செய்த்துபோயிரலாம். வாதங்கள் உண்டாகும் சூனியங்களால் தொல்லையும் கனாக்களினால் பயமும் ஏற்படும்.

இந்த பலன்ல எங்கயாச்சும் சின்னதாவாச்சும் லாஜிக் இருக்கா பாருங்க. செவ் பலான இடங்கள்ள இருந்து புதன் பலான இடங்கள்ள இருந்தான்னு பாட்டு துவங்கினா ஒரு கணக்கு.

இங்கன அதெலலம் இல்லை. டைரக்ட் ஷாட் செவ் தசையில சனிபுக்தின்னதுமே கெட்ட நேரங்குது பாட்டு.முட்டாள்களால் பிரச்சினை வரும்ங்கறாரு.

செவ் 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருந்தால் செவ் எதிரிக்கு காரகன் என்பதால் எதிரிகள் உருவாவாய்ங்கன்னு சொல்லலாம்.

புதன் கல்விகாரகன். புதன் சரியான இடத்துல இருந்தா ஜாதகனே அறிவாளியாத்தான் இருப்பான். அறிவாளிக்கு முட்டாள்களால் பிரச்சினை வரும்.முட்டாள் தான் இவனுக்கு எதிரியாவான். இதுக்கும் புதன் சரியான இடத்துல இருந்து செவ் தப்பான இடத்துல இருந்தான்னு சொல்ட்டு தானே ரிசல்ட்டை கொடுக்கனும்.

ஒரு வேளை புதன் தப்பான இடங்கள்ள இருந்தா ஜாதகனே முட்டாளாத்தான் இருப்பான். ஒரு முட்டாளுக்கு இதர முட்டாள்களால் என்ன பிரச்சினை வந்துரும்?

அடுத்த பாய்ண்டு நோய்வரும். இதுக்கு அடிப்படையே இல்லை. தசா நாதனான செவ்வாயும்,புத்தி நாதனான புதனும் கெட்டிருந்தா நோய் வரும்னு சொல்லலாம் அதுவேற கதை .ஆனால் புலிப்பாணி இந்த பாய்ண்டையே டச் பண்ணல்லை.

செவ் கெட்டிருந்தா ரத்தம்,எரிச்சல், உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம்.புதன் கெட்டிருந்தால் தோல்,கீல்,அண்டம் தொடர்பான வியாதிகள் வரலாம்.

ஆனால் புலிப்பாணியோட பாட்டுல மேற்படி கிரகங்கள் கெட்டிருந்தாங்கற பாய்ண்டே இல்லையே..

அடுத்து ..பெண்கள்,பிள்ளைகள் செய்த்துபோயிரலாம். வாதங்கள் உண்டாகும் சூனியங்களால் தொல்லையும் கனாக்களினால் பயமும் ஏற்படும்ங்கறாரு.

வீட்டு பெண்கள்னா பொதுவா சுக்கிர காரகம், ஸ்பெசலா பார்த்தா மனைவிக்கு சுக்கிரன்.. அம்மாவுக்கு நாலாமிடத்து அதிபதி, நீங்க பகல்ல பிறந்திருந்தா சுக்கிரன்,ராத்திரியில பிறந்திருந்தா சந்திரன்.அக்கா தங்கச்சின்னா செவ்வாய்.

சகோதிரிகள் சாகலாம்னு சொன்னாலும் ஒரு லாஜிக் இருக்கும்.அது கூட செவ் கெட்டு செவ் தசை நடந்தால்னு சொல்லியிருக்கனும்.

அடுத்து பிள்ளைகள். பிள்ளைகள்னு பார்க்கும் போது புத்திர காரகன் குருவை வச்சு எஃபெக்ட் ஆகும் .அல்லது அஞ்சாமிடத்து அதிபதி.

செவ்வாய்க்கோ,புதனுக்கு அஞ்சாமிடத்து ஆதிபத்யம் கிடைச்சு அவிக கெட்டிருந்தா இந்த பாய்ண்ட் ஓகே.ஆனால் புலிப்பாணி சாரு சைக்கிள் கேப்ல போயிங் 77 ஐயே ஓட்டிர்ராரு.

வாதங்கள் உண்டாகும்.. இதுக்கும் புதன் கெட்டிருந்தால்னு சேர்ந்திருக்கனும். புதன் வித்யாகாரகன்.படிச்சவுகதானே வேலை வெட்டிய விட்டுட்டு வாதம் பண்ணிக்கிட்டிருப்பாய்ங்க.

அடுத்த பாய்ண்டு சூனியங்களால் தொல்லை.. சூனியம் நெஜமோ பொய்யோ ..கேது கெட்டிருந்தா எவனோ எனக்கு சூனியம் வச்சுட்டான்யான்னு ஃபீல் ஆகும். செவ்/புதனுக்கு சூனியத்துக்கும் என்ன லிங்க் இருக்கு? ஒன்னம் இல்லை.

எச்சரிக்கை:
நம்ம கண்ல பட்ட இந்த பாட்டும் இப்படி வெத்து வேட்டாயிருச்சு. விசயம் இருக்கிற பாட்டும் இருக்கலாம். இல்லேங்கலை.

மொத்தத்துல நான் சொல்றது என்னன்னா சொல்றது ஆண்டவனாவே இருந்தாலும் வெரிஃபை பண்ணிக்கிட்டுத்தான் ஃபாலோ பண்ணனும்.. ஓகே உடுங்க ஜூட்..