Friday, August 31, 2012

சனியும் குதப்புணர்ச்சியும்


அண்ணே வணக்கம்ணே !
சனியின் காரகங்களில் முக்கியமானது ஆசனம்.ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இப்போ என்ன பண்ணனும்னா? சைலன்சர் அடைப்பை நீக்கனும். ஃப்யூச்சர்ல அடைப்பு ஏற்பட்டுராம பார்த்துக்கனும்.ஏற்கெனவே அடைப்பு காரணமா ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரெக்டிஃபை பண்ணிக்கனும்.

இந்த பாதிப்புகளில் ஒன்னுதான் குதப்புணர்ச்சி. அய்.. அதெப்படிம்பீங்க. சொல்றேன். ஜல தோஷம் வர்ர வரைக்கும் மூக்கு இருந்த இடமே தெரியாது.

வீரியம் புரள்ற வரை "அது" இருந்த இடமே தெரியாது. அதே போல பிரச்சினைய கொடுக்கிற வரை ஆசனம் இருந்த இடமும் தெரியாது. பிரச்சினை ஆரம்பிச்சதும் மனம் அங்கே குவியும். அந்த குவிப்பு பாசிட்டிவா இருந்தா பிரச்சினைய தீர்க்க உங்களை உந்தி தள்ளும். அதுவே நெகட்டிவா இருந்தா? குதப்புணர்ச்சிக்கு கூட கொண்டு போகலாம்.

ஆக சனி என்றால் ஆசனம். வண்டிக்கு சைலன்சர் மாதிரி. அது ட்ரபுள் கொடுத்தா இஞ்சினே காலியாயிரும். இதை சால்வ் பண்றது எப்படி?


1.எனிமா எடுத்து வயிறை க்ளீன் பண்ணலாம்.
2.நிறைய தண்ணி குடிக்கலாம்.
3.சனி மலச்சிக்கலை மட்டுமில்லை, பைல்ஸ், நரம்பு பலகீனம் மாதிரி வியாதிகள்ளயும் கொண்டு விட்டுருவார் டேக் கேர். இதுக்கு சொல்யூஷன் கையில ஆயில் கறை,கெரசின் கறை படியற மாதிரி வேலை செய்யலாம். கு.ப் எக்ஸர்சைஸ் செய்யலாம்.
4.காலங்கார்த்தால எண்ணெய்,மசாலா, சீயா,சீச்சி ( நான் வெஜ்) அவாயிட் பண்ணலாம்.இட்லி, தோசை மாதிரி வெறுமனே வேக வச்ச ஐட்டம் தொட்டுக்க பால்,தயிர்
5.சமையல்ல நல்லெண்ணை உபயோகிக்கலாம் ( சனிக்குரியது எள் அதுலருந்து தயாரிச்சது தான் நல்லெண்ணெய்) இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6.சஃபாரி சூட் அணியலாம். வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் தில்லு துரைகள் காக்கி, நீலம் போன்ற நிறங்களில்யூனிஃபார்ம் அணியலாம். ( எனக்கு ஜன்ம சனி இருந்த போது காக்கிச்சட்டை அணிந்தேன்)
7.தூசு படியற வேலைகள் செய்யலாம். ( ஒட்டடை அடிக்கிறது)
8.க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி வேலைகள் செய்யலாம். காலைல டீ,காஃபி போட்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தரலாம். பெண்டாட்டிக்கு சமையல் ரூம்ல எடுபிடி வேலை செய்யலாம்.( கரைச்சு குடுக்கிறது,அரைச்சி கொடுக்கிறது.
9.சனி பிடிச்சாலோ/கேது தசா புக்தி நடந்தாலோ நீங்க போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,சுடுகாடு,கோர்ட் ஆகிய பிரதேசங்களுக்கு போய் தான் ஆகனும். யாராச்சு மேற்படி ஸ்தலங்களுக்கு லிஃப்ட் கேட்டா கொடுக்கலாம். சாவு விழுந்தால் சுடுகாடு வரை போய் வரலாம். நோயாளிகளுக்கு துணையா ஆஸ்பத்திரி போகலாம்.
10. சனிக்கு கருப்பு நிற பொருட்கள் மேல கவர்ச்சி அதிகம். ஸோ டை போடற வயசாயிருந்தா டை போடாதிங்க. இளமைல தலை முடி கருப்பா இருக்கிறதால தான் முதல் சனியான மங்கு சனி போட் கழட்டுது . ரெண்டாவது சனில தலைமுடி வெளுக்க ஆரம்பிச்சிர்ரதால பொங்கு சனி பெட்டர்ங்கறாங்க. மூனாவது சனி பெரிசா எஃபெக்ட் தராதுங்கறதுக்கு காரணம் கூட இதுதான்.

டை போட்டுத்தான் ஆகனும்னா தலைக்கு நீல நிற தொப்பி அணியுங்கள் (இப்போ கோடை வேற கொளுத்துதுல்ல . மேச் ஆயிரும். தொப்பிய லைட் ப்ளூ கலர்ல செலக்ட் பண்ணுங்க ..வெயிலுக்கும் நல்லது)). ஹேண்ட் பை ஹேண்ட் கருப்பு நிற பொருட்களை அவாய்ட் பண்ணுங்க. அதுக்கு பதில் ப்ளூ கலர் திங்க்ஸ் உபயோகியுங்க.

11.சனிக்கு உரிய சுவை கசப்பு. ஸோ அகத்தி கீரை,பாகற்காய் மாதிரி கசப்பு ஐட்டங்களை சாப்பாட்ல சேர்த்துக்கங்க.

இந்தலிஸ்ட் ரொம்ப பெரிசுப்பா.. ச்சொம்மா அப்படி அப்ளை பண்ணி பாருங்க. உங்க அனுபவத்தை எழுதுங்க .இன்னொரு தாட்டி மேட்டரை அப்டேட் பண்ணி டீட்டெயில்டா மீள் பதிவு போட்ருவம்


இந்த தீர்வுகள்ளாம் எந்த புஸ்தவத்துலயும் இருக்காது. ஏன்னா இதை தந்தது என் அனுபவம். ஆகா சொந்த கதைக்கு வந்துட்டான்யானு சலிச்சுக்காதிங்க.

1987 ல சனி என் ராசியான சிம்மராசிக்கு அஞ்சாவது இடத்துக்கு வந்தாரு. அந்த ரெண்டரை வருஷதுல இமேஜுக்கு ஆன டேமேஜை இன்னி வரைக்கும் கூட கம்ப்ளீட்டா பேலன்ஸ் பண்ண முடியலை. ஆனால் இப்ப பாருங்க போன ரெண்டரை வருஷம் ஜன்ம சனி. இப்போ 2009 செப்டம்பர் 16 லருந்து வாக்குல சனி ..சிம்ம ராசியெல்லாம் நாறிக்கிடக்கு. ஆனால் நான் மட்டும் ஜாலாக்கா சைடு கொடுத்துக்கிட்டே காலத்தை கடத்தறேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னா?

1994 ல அப்பா காலி. என்னதான் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனியே அவதி பட்டாலும் ரெண்டாமறம் தெரியாம ஏறத்தள்ளிக்கிட்டிருந்த பார்ட்டி காலியானதுமே பக்கு ஆயிட்டாலும் ,சரி சொத்திருக்கில்லயா பங்கு தராத போயிருவானுகளானு தைரியமா இருந்தேன். பப்பு வேகலை.

மொதல்ல தெரிஞ்சு வச்சிருந்த ஜோதிஷம் உதவியால காலகதி தெரிஞ்சாலும், சம்பவ கண்ணிகளோட முடிவு பெரு வெற்றியில முடியறது புத்திக்கு உறைச்சாலும், என் முயற்சியே, வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டர் தனமாய் எண்ணி தவிக்கும் தன்மையே வெற்றியை எட்டிப்போக செய்வதை உண்ர முடிஞ்சாலும் ஈகோ ஒப்புத்துக்கலை. தோல்வி வெறியை கிளப்ப அதை ஒப்புத்துக்க ஈகோ முன் வராம யுத்தம், வெற்றி வேல் ,வீர வேல்னு முழங்கி ஜீரோ பேலன்ஸுக்கு வந்துட்டன்.

ஆனால் எந்த குருவும் கத்து தராத வித்தைகளை ஏழ்மை கத்து கொடுத்தது. இந்த படைப்பில் நான் தனியோ தனியானவன் என்ற நிஜம் உறைத்தது. என் சர்வைவலே கேள்வியாயிட்ட க்ஷணத்துல உயிர் வாழும் இச்சை பல ஜாலக்குகளை கற்றுத்தந்தது.

அன்றாட பிரச்சினைகள் காரணமா அசலான பிரச்சினைக்கு லீவு விட்டது, நடக்கவிருந்ததை அனுமதிச்சது 2400 சதுர அடி வீடு இருந்தும் ஓட்டை குடிசைல வாழ்ந்தது. இதெல்லாம் கிரகங்களோட பாதிப்பின் வீரியத்தை வெகுவா குறைச்சிட்டதால அம்பேல் வச்சுட்டு ஆட்டத்துல ஒதுங்கிட்டதால, வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சதால நிறைய புரிஞ்சிக்கிட்டேன்.

1997லருந்து ப்ரேக் ஃபாஸ்டை கட் பண்ணிட்டேன். காரம்,சாரம்,மணம்,குணம் நிறைஞ்ச சமையலுக்கு பேர் போன வன்னியர் குலத்து நங்கையான என் மனைவிக்கு உப்பு ,காரம்,புளிப்பு குறைவா போட்டு சமைக்க கத்துக்கொடுத்தேன். மேல் தீனி, நொறுக்கு தீனி,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இதெல்லாம் பக்கத்துல சேர்க்கவிடறதில்லை.

( அன்னைக்கு நான் ஏழை தான்.ஆனால் பத்து நாளைக்கு ஒரு தரமாச்சும் பம்பர் லாட்டரி மாதிரி காசு கொட்டும். ஏக் தின் கா சுல்தான் மாதிரி வாழ்ந்து மறு நாள்ளருந்து மறுபடி பழைய குருடிகதவை திறடிவாழ்க்கைக்கு போயிருக்கலாம். ஆனால் ஒட்டகம் கணக்கா மாறிட்டேன்)

என் ஈகோவுக்கு அடிக்கு மேல அடி. தியாகய்யர் உஞ்ச விருத்தி பண்ண மாதிரி, ஷீர்டி சாயிபாபா பிச்சை எடுத்த மாதிரி ஆயிருச்சு கதை. பசி பட்டினி,சொறி சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு. ஆனால் உடல் எவ்வளவுக்கெவ்வளவு தேஞ்சதோ அந்த அளவுக்கு மூளை தீட்டப்பட்டுருச்சு. கையில ஜோதிஷ ஞானம் இருந்தது, தர்கத்துக்கு ஒத்துவராத சம்பவங்களா சரமாரியா நடந்தது. ரெண்டையும் பொன் வறுவலா வறுத்து அரைச்சி ஓ சாரி சாரி ரெண்டையும் அப்சர்வ் பண்ணி அனலைஸ் பண்ணினதுல ஒரு சில தேவரகசியங்கள் வெளிப்பட்டுது.
தேவ ரகசியம்:

அது என்னடான்னா காலம்ங்கறது ஒரு பைப் லைன். இதுல நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)

அதே மாதிரி பைப்லைன்ல முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).

சிம்பிளா சொன்னா ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான் முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை

கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.

சொந்த வியாபாரத்துல நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வருது, தமிழ்சினிமால ஹீரோவோட அப்பாவுக்கு வர்ர மாதிரி போட் கழட்டுது. இந்த சம்பவங்கள் எந்த புள்ளிய நோக்கி அழுத்தி தள்ளுதுனு சிந்திக்க மூளை கூட தேவையில்லை. கிட்னி போதும்.

இந்த சந்தர்ப்பத்துல என்ன பண்ணனும் ? படக்குனு எல்லாத்தயும் வைண்ட் அப் பண்ணிட்டு ப்ளே கிரவுண்டை விட்டு வெளிய வந்துரனும். வேணம்னா அங்கயே பாப் கார்ன் விக்கலாம். புக்கியாகலாம். அம்பயராகலாம். அட உள்ளாற சமாளிக்க முடியாதுன்னா சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட் ராக்டரா மாறிடலாம். அதை விட்டுட்டு பேட்ஸ் மேனாதான் இருப்பேன்னா டக் அவுட் ஆக வேண்டியதுதான்.

தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும். நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.
தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?

நேத்திக்கு சனியின் லீலைகள்னு ஒரு பதிவை போட்டு அதுல சனி 3,4,5,6,7,8 ல் வந்தா எப்டியெல்லாம் வேலை குடுத்துருவாருன்னு நம்ம நண்பரோட வாழ்க்கைய படம் பிடிச்சு காட்டியிருந்தேன். ஒரு வகையில அதனோட தொடர்ச்சி தான் இந்த பதிவு. வில்லங்கமான தலைப்பு வச்சாத்தேன் ஹிட்ஸ் அள்ளுது என்ன பண்ண?

இந்த சீரிஸ்ல அஷ்டமசனியை பத்தி இன்னம் ரெண்டு வரி சொல்லோனம் அஷ்டமசனிக்கு பலன் சொல்லனும்னா ரெம்ப சிம்பிள். நம்ம சொத்தை அடுத்தவன் அனுபவிப்பான். அடுத்தவன் கடனுக்கு நாம பதில் சொல்லோனம்.

நம்ம ராசியான சிம்மத்துக்கு நடந்த அஷ்டம சனி காலத்தை நினைச்சாலே டர்ராகுது.ஏதோ அந்த காலத்துல ராமனையே நினைச்சு நினைச்சு - ஆஞ்சனேயரை கரெக்ட் பண்ணி வச்சிருந்ததால அவரு ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி கொடுத்ததால மிச்சமானோமே தவிர டிக்கெட் போட ஆயிரம் சாய்ஸ் இருந்த காலம் அது.

தெய்வாதீனமா நம்ம ப்ரமேயமே இல்லாம பல பரிகாரங்கள் நடந்து - நம்மை கரையேத்தி விட்ட கதைய சொன்னா பகுத்தறிவாளர்கள் பாய்ஞ்சுருவாய்ங்க.

ஆக்சுவலா சனி ஆயுள் காரகன் டிக்கெட்டெல்லாம் போடமாட்டாருன்னு ஒரு விதி இருக்கு. இருந்தாலும் இன்ன பிற பாபிகள்,மாரகாளோட பார்வை கிடைச்சா போட்டு தள்ளிருவாருன்னும் ஒரு உப விதி இருக்கு.

இருந்தாலும் எப்பம் ஆரு சனியை பார்க்கிறா, சனி ஆரை பார்க்கிறாருன்னு விளக்கு பிடிச்சு பார்த்துக்கிட்டிருக்க முடியுமா என்ன?

ஆக அஷ்டம சனின்னா உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்குன்னு புரிஞ்சிக்கிடுங்க.உசுருக்கு ஆபத்து இருக்கிறவுகளுக்கு ஆஞ்சனேயர் ஒருத்தருதான் அபயம். ராம நாம சங்கீர்த்தனம் நடக்குமிடத்துலதான் அவரு ஆஜர். நாம அஷ்டம சனியை ஃபேஸ் பண்ண டீட்டெய்ல்ஸை பார்க்கிறதுக்கு மிந்தி கொஞ்சமா மொக்கை.

நிறைய வேலை இருக்கு. வியாழ கிழமையே ராக்கண் விழிச்சு எதையும் கிழிக்க முடியாம மறு நாள் மதியம் வரை கண் எரிச்சலோட காலம் போச்சு. இன்னைக்கு மறுபடி அகலாமா நள்ளிரவு 1.30 க்கு முழிப்பு தட்டிருச்சு. மகளுக்குன்னு செய்த ட்ரஸ்ஸிங் டேபிள் ஃபினிஷ் ஆயிருச்சு. நமுக்குன்னு அடிச்ச கம்ப்யூட்டர் டேபிளையும் ஃபினிஷ்டுன்னு பேர் பண்ணிட்டம்.

என்னடா டேபிள் காலியா இருக்கேனு பார்த்தா ஒரு குடிகார சில்பி - நம்ம நண்பருக்காவ களிமண்ணால் செய்த லட்சுமி சிலைக்கு மராமத்து பண்ற ப்ராஜக்ட் மாட்டிக்கிச்சு. பவர் கட் சமயத்துல நமக்கு பவர் ஏத்திக்க ஒரு வேலை ரெடி.

பணம் அனுப்பி 15 நாள் தாண்டிட்ட கேஸே நாலிருக்கு. ரெண்டு பேருக்கு புஸ்தவம் கூரியர்/ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பனும்.

வினாயகர் சதுர்த்திக்கு யாவாரிங்க உபயத்துல ஊரு சனங்களுக்கு ஒரு பாக்கெட் புக் கொடுக்கிறதா கமிட் ஆயிருக்கேன். ரொட்டீனா மல்ட்டி கலர் இஷ்யூவும் போட்டாகனும். மகள் தனி டோர் நெம்பர்ல ப்யூட்டி பார்லர் திறக்கிறாள். அதுக்கு கொஞ்சம் போல சிரமதானம் செய்யனும்.

பதிவு போடற வேலையை இப்பம் முடிச்சுட்டா நாளைக்கு மேற்படி 4 ஜாதகங்களுக்கான பலன்ல இறங்கிரலாம்னு ஐடியா.

என் வேலைகளை நினைச்சுக்கிட்டே பதிவு போட்டா அது சரியா வராது. சுத்தமா குளிச்சுட்டு பூசைக்கு உட்கார்ந்த பிற்காடு அந்த பக்கம் வந்த பொஞ்சாதியோட இடுப்பை கிள்ளனும் போல இருந்தா கிள்ளிட்டு பூசைய ஒழுங்கா செய்யலாம். தப்பில்லை. இதான் நம்ம ஸ்ட்ரேட்டஜி. இப்பம் நம்ம மைண்டு க்ளியர் பதிவுக்கு போயிரலாமா?

அஷ்டம சனி ஓவர். இப்பம் மீனராசிக்கு ஓடுது. நிறைய பேரு சனி எட்டுலருந்து விலகினாலே போதும் தூள் பண்ணிரலாம்னு நினைக்கிறாய்ங்க. அது தப்பு. அஷ்டம சனிங்கறது கடல்ல அடிச்சுக்கிட்டு போற மாதிரின்னா 9ல சனிங்கறது கரை ஒதுங்கறா மாதிரி. கடல்ல அடிச்சிக்கிட்டு வந்தவுக ஒடனே எந்திரிச்சு ஓடமுடியாதில்லை.

அஷ்டம சனியில நமக்கு சேர வேண்டியதை கேட்டா இல்லை போடாம்பாய்ங்க. 9ல சனி வந்தப்ப கேட்டா வாயால வவுத்த ரொப்பி தரேன்னுட்டு ஊறப்போடுவாய்ங்க. நம்ம பணத்தை சூப்பர் சிம்மா சுவத்துக்கு அடிச்சுட்டு ப்ரின்ஸ் ப்ளேடால சுரண்டின கதை .இதான் பாக்ய சனி.

அஷ்டமசனியில கிடைச்ச லட்சத்து ரெண்டாயிரம் ரூவாயை சனங்க வாய்ல போட்டுட்டு பாக்ய சனி முடியற வரை சுரண்டிக்கிட்டே இருந்தம் அது பெரிய சோகக்கதை.

பத்துல சனி வந்தப்ப வேலைக்காரவுகளோட மாரடிக்கனும். ஏழரையில நாம பண்ண முயற்சிக்கெல்லாம் பலன் 11 ல சனி வந்தப்ப தான் கைக்கு வரும்னு ஒரு கணக்கு. இப்படி எபிசோட் எபிசோடா ஓடிக்கிட்டே இருக்கும்.

நிறைய சொல்லனும்னுதான் நினைக்கிறேன். ஒளிவு மறைவு இல்லாம எல்லாத்தையும் கொட்டனும்னு தான் நினைக்கிறேன். ஆனால் வில் உள்ள சனம் சிலர் நம்ம தளத்தை விட்டு விலகிட்டதால அப்பப்போ கார்ப்பரேட்டர் அடைச்சுக்குது.

நீங்க நினைக்கனும். முருகேசன் மாதிரி ஒரு இ.வா இனி வரப்போறதில்லை. இந்தாளு எல்லாத்தையும் கொட்டனும். அதை நாம ஃபாலோ பண்ணனும் ஏழேழு தலைமுறைக்கு நம்ம வம்சத்தார் கருமத்தை மூட்டை கட்டக்கூடாது. கருமத்தை தொலைக்கனும்னு நீங்க வலுவா நினைக்கனும்.அப்பத்தேன் ஃப்ளோ தொடரும்.

நீங்க பதிவை படிச்சுக்கிட்டே இருந்து படக்குனு ஏசியை கூட்டலாமானு நினைச்சிங்கனா இங்க ஃப்ளோ கட்டாயிரும்.

சரிங்ணா இன்னொரு சந்தர்ப்பத்துல விரிவா பார்ப்போம்.பவர் கட் நேரம் வேற நெருங்குது.ஆளை விடுங்க.