Showing posts with label sex workers. Show all posts
Showing posts with label sex workers. Show all posts

Wednesday, June 9, 2010

பலான அனுபவ ங்கள்

எங்க ஊர்லருந்து நாலு ரூபா சார்ஜுல ஒரு ஊரு. அங்கனருந்து அரை கிலோ மீட்டர் நடந்து போனா ஒரு ஊரு. அவ பேரு.. வேணாங்கண்ணா பேரை சொன்னா சாதி மதம்லாம் தெரிஞ்சுரும். தேவையில்லாத வில்லங்கம்.  நான் சொல்ற இந்த கதையெல்லாம் 1991க்கு முன்னாடி நடந்தது. கொசுவர்த்தி எதுவும் கைவசமில்லே இருந்தா உங்க முகத்துக்கு முன்னாடி சுத்தலாம். மேட்டருக்கு வரேன்.

ஒரு நாள் ஏதோ வேலையா மார்கெட்டுக்கு போன ( நிச்சயமா காய்கறி வாங்க இல்லே) போது மேற்சொன்ன குட்டி (அடக்கி வாசிக்கிறேன். வயசு நிச்சயம் 25க்கு மேல இருக்கும். கண்ணாடியெல்லாம் பதிச்ச புடவை, க்ளோஸ் நெக் ப்ளவுஸ், அந்த வெயிலுக்கு பொருத்தமே இல்லாத சால்வை.

ஒரு புஸ்தவத்துல பலான சரக்கு இருக்குமா இருக்காதா, ஒரு ஃபிகர் படியுமா, மடியுமான்னெல்லாம் அசெஸ் பண்றதுல  எங்க பேட்ச்லயே நான் தான் மன்னன். அப்போ பக்கத்துல பக்க வாத்தியமா கை மணி வேற இருந்தானா (காரண பெயர்) உடனே நாலு எலுமிச்சம்பழம் வாங்கி அதை வச்சு வித்தை காட்டிக்கிட்டே பழைய பஸ் ஸ்டாண்ட் வரை வந்துட்டம். அவள் ஏறின அதே பஸ்ல ஏறி தர்ஜாவா உட்கார்ந்தும் உட்டோம். கை மணிக்கு கால் நடுக்கம் இருந்தாலும் என் உதைக்கு பயந்து அவனும் அஃதே.

பஸ் புறப்பட்டுருச்சு. நெடு நாள் பழக்கம் மாதிரி விசாரிக்க ஆரம்பிச்சேன். ஊருல பிரச்சினையாயிரும்னு முனகல். "அதுக்கெல்லாம் வழி வச்சிருப்பேல்ல" என்று நான் கொஞ்ச, ஊர்ல யாராச்சும் யாரு என்னனு விசாரிச்சா  டவுன்ல சிமெண்ட் டீலருனு சொல்லு. சிமெண்ட் பாக்கி கேட்க வந்தேனு சொல்லு"ன்னாள்.

ஸ்டாப்ல இறங்கி கிராமத்தை நோக்கி  நடந்தோம். பொழுது சாயற நேரம். எதிர்க்க வந்தவுக யாரோ ரெண்டுபேரு "எவரு"ன்னு சுந்தர தெலுங்குல கேட்க அவள் சிமெண்ட் டீலரு .. டப்புக்கு வச்சினாரு"ங்கறாள்.

நமக்கு அதெல்லாம் எங்க உறைக்குது. வீட்டை போய் சேர்ந்தோம். மணிய வாசப்படில வச்சுட்டு உள்ளார பூந்தேன். அவள் பைய வச்சிட்டு, சால்வைய எடுத்து கொடில போட்டுட்டு ஃபேனை போட்டாள்." உஸ் அப்பாடா'னு கைய விரிச்சு சோம்பல் முறிச்சா.  நமக்கு பொறுமை பொசுக்குனு போயிர படக்குனு இடுப்பு சதைய  கையால புடிச்சு இழுத்தேன்.

எல்லாம் முடிஞ்சது. ஸ்கலிதத்துக்கு பிறகான எச்சரிக்கைகள் எல்லாம் கிளம்ப மணிய பக்கத்து ஊர் மெடிக்கல் ஷாப்புக்கு அனுப்பினேன். அவளை கேஷுவலா விசாரிச்சேன்.

"ஏய் என்னா..து..இதெல்லாம் தீபாவளி  ஸ்பெஷலா.. இல்லே தினக்கூத்தா?"

"வீட்டை பார்த்தேல்ல ( பார்த்தேன் எல்லா சுவர்லயும் செங்கல் தெரியுது)  நானா முயற்சி எடுத்து  கட்டினது.  செங்கல்  சூளைக்காரனுக்கு பணம் தரனும்ல. இல்லாத குறைக்கு என்னை  கொடுக்கிறேன். எவனாச்சும் சிமெண்ட் டீலர் கிடைச்சா வீட்டை முடிச்சுருவன்"

அடங்கொக்கா மக்கான்னு  தலையில அடிச்சிக்கிட்டு அஞ்சு சிமெண்ட் மூட்டைக்கு காசை கொடுத்துட்டு ஊரை வந்து சேர்ந்தேன்.  படிக்க எதுவும் இல்லாதச்ச பழைய பைண்ட் தொடர்கதைகளை படிக்கிறாப்ல மூணு மாசத்துக்கு ஒரு தரம் ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் போறதான் வர்ரதான்.

ஒரு நாள் மதியம் உள்ளாற "வேலையா" இருந்தப்ப யாரோ உள்ளே வர்ர மாதிரி சத்தம் கேட்டுது  படக்குனு எந்திரிச்சு பேண்ட், சட்டைய மாட்டிக்கிட்டு  வெளிய வந்து பார்க்கறேன். கை பனியனை மிஞ்சி வழியற மார்  முடி, பட்டா பட்டி அண்டர்வேர் தெரிய லுங்கியோட ஒரு பார்ட்டி. புருசங்காரனாக்கும்னு லேசா உதறல்.

வந்தவன் என்ன பண்ணாங்கறிங்க.வாசலுக்கு குறுக்க உட்கார்ந்து முழங்காலை 90 டிகிரில வச்சிக்கிட்டான். தொட்ட பிறகு  விட்டுர முடியுமா என்ன? காரியத்தை முடிச்சுக்கிட்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

ஒரு ரெண்டு மாசம் ஆகியிருக்கும். கை மணி ஓடி வந்தான் .. முகேஸு ,முகேஸு செங்கல் வீட்டுக்காரி புருஷனுக்கு ஆக்சிடெண்ட்டுன்னான். உனக்கெப்படிரா தெரியும்னேன். ஆஸ்பத்திரில  அவளை பார்த்தேன் உன்னை விசாரிச்சா.. விசயத்தை சொன்னாள்.

ஜி.ஹெச் போனோம். முழங்கால்ல இருந்து கணுக்கால் வரை  ரெண்டு காலுக்கும் பேண்டேஜ் போட்டு ஆனைக்கால் மாதிரி இருந்தது.

 "எப்படி ஆச்சு?"

"நேத்து மதியம் வீட்டுக்கு சரக்கு வாங்கன்னு டவுனுக்கு வந்தான். தனக்கு சரக்கு போட்டு கூத்தடிச்சு கடைசி பஸ்ஸை மிஸ் பண்ணிட்டு லாரிக்காக வெயிட் பண்ணியிருக்கான். ஹை ரோட் ட்ராஃபிக் நிழற்குடை மேடைல உட்கார்ந்திருந்திருக்கான். டூர் பஸ்காரன் எவனோ மோதி நாசம் பண்ணிட்டான்"

மனசுக்குள்ள ஒரே கேள்வி .. மேற்படி கெட்ட காரியத்துக்கு காவலா குறுக்கே காலை வச்சவனுக்கே இந்த கதின்னா...   நமக்கு ?

காஷுவால்ட்டி வார்டே ஒரு சுத்து சுத்தி நிக்க கழுத்துலருந்த மைனர் செயினை கழட்டி கை மணிகிட்டே கொடுத்து " டேய் இதை  வச்சி காசு வாங்கி இவ கிட்டே கொடு.  ரசீது சாயந்திரம் வாங்கிக்கறேன்"னிட்டு வீட்டுக்கு வந்தவன் தான்.. அந்த நாள் முதல் இந்த நாள் வரை சொல்லனுமா என்ன?

Wednesday, April 14, 2010

பாலிய‌ல் வேட்கை

இந்த 43 வயதுக்கே வறுமைக்கு பயந்து,லட்சியத்துக்கு லாங் லீவ் போட்டு விட்டு, ஒரு வெகுஜன நாளிதழில் காலணா ரிப்போர்ட்டனாக வயிற்றைக் கழுவும் நிலைக்கு வந்துவிட்டமைக்கு மனம்  நொந்தபடி முதல் சிகரட்டை பற்ற வைத்துக்கொண்ட அதே கணம்  என்னை சந்திக்க யாரோ ஒரு  இளம்பெண் வந்திருப்பதாய் என் மனைவி சொல்ல ஹால்ல உட்காரவை இதோ வந்துட்டன் என்று சிகரட்டை அவசர அவசரமாக இழுக்க ஆரம்பித்தேன்.

மேலுக்கு ஒரு டவலை எடுத்து போர்த்திக்கொண்டு ஹாலுக்கு வர அங்கிருந்தவள் ஏறக்குறைய ஸ்ரேயா போலிருந்தாள். நான் வணக்கம் போடலாமா ஹாய் போடலாமா யோசித்து வணக்கம் சொல்ல அவள்  தன் விஸிட்டிங்க் கார்டை எடுத்து கொடுத்தாள்.


மிஸ்.ப்ரஸ்னா,
த‌லைவி,
பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம்.( த. நா)

என்ன‌ங்க‌டா இது உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு என் வ‌லைப்பூ எதிலாவ‌து பாலிய‌ல் தொழிலாள‌ர்களை அவ‌ம‌தித்து எதையேனும் எழுதி தொலைத்துவிட்டேனா? இல்லையே பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கேட்டுத்தானே எழுதினோம்னு பூஸ்ட் அப் பண்ணிக்கிட்டேன்.


உண்மையில்  காவலர்களை விட, நீதிப‌திக‌ளை விட‌, ஸ்மாமிஜிக்களை விட  இவ‌ர்கள்தான் குற்றங்களை குறைப்பதாக எனக்கு ஒரு கருத்து உண்டு.(உள்ளடக்கி வைக்கப்பட்ட‌ பாலிய‌ல் வேட்கையே வ‌ன்முறையாக‌ வெளிப்ப‌டுகிற‌து). இந்நிலையில் நான் ஏன் இவ‌ர்க‌ளை வ‌ம்புக்கிழுக்க‌ப் போகிறேன். இந்த எண்ணம் எழுந்ததும்  என் முகத்தில் தன்னம்பிக்கை தவழும்  ஒரு புன்னகை ஒன்று  தானாகவே மலர்ந்தது.


அவ‌ளே மௌன‌த்தை க‌லைத்தாள். பாலிய‌ல் தொழிலாள‌ர்கள் ந‌ல‌னுக்காக‌ ஒரு வார‌ இத‌ழ் ஆர‌ம்பிக்க‌ ஆலோச‌னைக‌ள் வ‌ழ‌ங்க‌வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

ஒரு அரை ம‌ணி நேர‌ம் போல‌ வாரி வ‌ழ‌ங்கினேன். ( பார்க்க : பத்திரிக்காசிரியர்களுக்கு பத்து கேள்விகள்)

த‌லை குறுக்கே ஆட்டிக் கொண்டே ஒரு நிமிட‌ம் யோசித்த‌ அவ‌ள் "இதை விட‌ எங்க‌ள் தொழிலே மேல்" என்றாள். சென்றாள்.