"போதுமென்ற மனமே பொன்செய் மருந்து". "இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு ஆசை படாதே", "ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்", பருகெடுதூ பாலு தாகடம் கன்னா கூர்ச்சுனி நீள்ளு தாகடம் மேலு ( ஓடிக்கிட்டே பால் குடிக்கிறத விட உட்கார்ந்துக்கிட்டு தண்ணி குடிக்கிறது மேலுனு அர்த்தம்) (டாஸ் மாக் சரக்கு இல்லிங்கண்ணா)
இதெல்லாம் கையாலாகாதவங்க பேச்சாயிருச்சு. சாமியாருங்க கூட அத்தனைக்கும் ஆசைப்படுனு சொல்ற காலமாகிப்போச்சு.
"ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்"னு புத்தர் என்ன டாஸ்மாக் கடைல போதையிலயா சொன்னார்.போதிமரத்து கீழே ஞானம் பெற்றுச்சொன்னார். உன் ஆசையே உன் துன்பங்களுக்கு காரணம்னு சொல்லலே. உன் ஆசையா என் ஆசையானு ஸ்பெஷலைஸ் பண்ணாம மொட்டையா உலக துன்பங்களுக்குன்னு ஆரம்பிக்கிறார்.
இதுல தான் சூட்சுமமிருக்கு. எவன் ஆசைப்பட்டாலும் அந்த ஆசை காத்துல வைரஸ் பரவின மாதிரி பரவுது.எவனாச்சும் நாலணா தலைவன் செத்தா ஜங்சன்ல லாரி டயரை கொளுத்திவிட்டா அட்மாஸ்ஃபியர் பாழாகற மாதிரி எவனுடைய மனசுல ஆசைங்கற பொறி விழுந்து அது கருக ஆரம்பிச்சாலும் நூஸ்ஃபியர் பாழாகுது. ( மனிதர்களின் எண்ணங்களால் உருவாகிற சூழல்)
இயற்கையை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா எவனும் எதுக்கும் ஆசைப்படமாட்டான். இயற்கைக்குன்னு ஒரு அஜெண்டா ( நிகழ்ச்சி நிரல்) இருக்கு. அதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அதை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது.
உயிரில்லாத பொருட்கள்(அப்படினு நாமதான் நினைக்கிறோம்) முழுசாவும், ,ஐந்தறிவுள்ள பிராணிகள் ஓரளவுக்கும் எப்படியோ அந்த அஜெண்டாவை புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ப நடந்துக்குதுங்க. இயற்கையோட நிகழ்ச்சி நிரலுக்கு முழு திருப்தியோட ஒத்துழைப்ப கொடுக்குதுங்க.
இந்த விதிப்படி பார்த்தா நாமெல்லாம் மண்ணாந்தைங்க.Read More
Showing posts with label Young people. Show all posts
Showing posts with label Young people. Show all posts
Sunday, March 27, 2011
Monday, May 31, 2010
நாத்தத்துக்கு வழக்கப்பட்டு
அண்ணே வணக்கம்ணே,
நேத்து மனிதனா ப்ளாக் ஸ்பாட் டாட்காமை பார்த்து அலறிட்டேன். "ஏண்டா எழுதறிங்க தடை செய்ய தகுதியில்லாத எழுத்தை"ங்கற கவிதை வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஊர் எல்லாம் சினிமா விமரிசனம் பண்ணிக்கிட்டு விஜய்க்கு அதிகமா அஜீத்துக்கு அதிகமானு ( நானேதும் வில்லங்கமா சொல்லலிங்கண்ணா.. புகழை சொன்னேன்.) மோதிக்கிட்டிருக்கிறச்ச , அந்த யாகம், இந்த விரதம், புது புது ரெசிப்பினு எழுதிக்கிட்டிருக்கிறப்ப அசலான சமாசாரங்களை எழுதி மனித குல மேம்பாட்டுக்காக பாடுபடறதா எனக்கு ஒரு நினைப்பு உண்டு.
ஆனால் மனிதனா ப்ளாகை பார்த்து ரொம்பவே இன்ஸ்பைர் ஆயிட்டன். சோமாலியால்லாம் பெரிய இடத்து விவகாரம். இந்திரா காந்தி காலத்துல நகர்வாலா ஊழல் பத்தி கேள்வி கேட்டா இதெல்லாம் அ ந் நிய சதின்னிருவாங்க. ஆனால் சோமாலியா எல்லாம் உண்மையிலேயே உலக சதி.
பிச்சைக்கார நாடெல்லாம் பட்ஜெட்ல பாதி ஆயுதம் வாங்க செலவழிக்குதே இதுக்கு காரணம் என்ன?
குடிக்க தண்ணி கிடைக்காத கிராமத்துல பெப்சி,கொக்கோகோலா கிடைக்குதே காரணம் என்ன?
ஹை வேலை அங்கங்கே நிறுத்தி சில்லறை கேட்கிறாய்ங்களே ஏன்?
விவசாய உரங்களுக்கு சப்சிடி குறைக்கப்படுதே ஏன்?
காரணம் கேட்டா "காட்"னுவாய்ங்க. க்ளோபல் வில்லேஜும்பாங்க. தனியார் மயம்னுவாய்ங்க. உலக வங்கி நிபந்தைனைம்பாங்க. இதெல்லாம் சொம்மா பொம்மலாட்டம் சூத்திர கயிறு யார்கிட்டே இருக்கு? எல்லாத்தயும் அலசியிருக்கேன். விசயம் தெரிஞ்சவங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பானு தோணலாம். என் டார்கெட் நீங்க இல்லே.
ரிட்டையரான அப்பனுக்கு ஜி.பி.எஃப் பணம் வந்தா அதுல இருபத்தி மூணரை ஆயிரம் ரூபா செலவழிச்சு செல்ஃபோன் வாங்கி கொடுனு அடம்பிடிக்கிறானே அவனுக்காக தான் நான் எழுதறேன்.
நாமெல்லாம் நாத்தத்துக்கு வழக்கப்பட்டுட்டோம். நாடி தளர்ந்து போச்சு.ரத்தம் சுண்டி போச்சு. இதை எல்லாம் கேட்க ஒருத்தன் வருவான் ஒருத்தன் வருவானு திண்ணைப்பேச்சு பேசறோம்..வெண்ணை வெட்டி சிப்பாய்களாயிட்டோம். இன்னைக்கு பீட்ஸா, பஃப்ஸ், நூடுல்ஸ் எல்லாம் றெக்கை கட்டி பறக்க காரணம் அந்த அரை ட்ரவுசர் பையன் ( ஓகோ ஷார்ட்ஸுங்களா தம்பி ..ஓகே ஓகே) அவன் ஏன் இதையெல்லாம் திங்கறான். நான் வெந்ததை தின்னு விதி வந்தா சாக வரலை மாமூன்னு காட்ட விரும்பறான். நாம கோட்டை விட்ட கோட்டை எதையோ எதையோ பிடிச்சு காட்ட துடிக்கிறான்.
பிறந்ததுலருந்து ஆயா, கிரஷ்னு அல்லாடி , மூத்திரத்துலயே ஊறிக்கிடந்து ( நாப்பீஸ் உபயத்துல) ப்ரைவேட் ஸ்கூலு,ப்ரைவேட் காலேஜு, ப்ரைவேட் மெடிக்கல் காலேஜு, ரவுண்ட் தி க்ளாக் க்ளாஸு,ஸ்பெஷல் கிளாஸு தினசரி டெஸ்டு, வாராந்திர டெஸ்டுனு நாறிக்கிடக்கிறானே.. அவனுக்குள்ள ஸ்பார்க் இருக்கு. ஒரு அலைபாயல் இருக்கு. தேங்கிக்கிடக்கிறது சாக்கடை. அவன் புது ஊற்று. அவன் இன்டர் நெட்ல மூழ்கியிருக்கானு மம்மி டாடி கவலைப்படறாங்க. அவன் உலகத்தோட தொடர்பு கொள்ள விரும்பறான். லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப்னு ஜே.கே சொன்னதை அமல் படுத்தறான். அவனுக்காக தான் நான் எழுதறேன். அவனுக்கு தெரியனும் சோமாலியாவுக்கு யார் பொறுப்புன்னு? அவனுக்கு தெரியனும் சோமாலியாவுக்கு தன் மம்மி டாடியோட தானும் பொறுப்புன்னு.. அதுக்காக அவனுக்காக எழுதறேன்.
இங்கே நாப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்கிறவன் ஏன் தற்கொலை பண்ணிக்கிறாங்கறிங்க. எல்லாம் சோமாலியாலருந்து போன பேட் வேவ்ஸ். நாமெல்லாம் எந்த சோஷியல் நெட் ஒர்க்கும் அவசியமே இல்லாம இணைக்க,பிணைக்கப்படிருக்கோம். விரல் நகம் தானே வளர்ந்து கிட்டு போகட்டும். சொறிஞ்சிக்க நல்லாருக்குனு பாக் நினைச்சது. இப்ப என்னாச்சு? அவன் ........புண்ணாச்சு.
பிந்தரன் வாலேக்கு ஆயுதம் எல்லாம் கொடுத்து ஊர்வலம் விட்டாய்ங்க என்னாச்சு ....பார்த்து சுட்டான். நான் என்ன சொல்லவர்ரேன்னா இந்த உலகத்துல எவன் காலியான வயிறோட படுக்கப்போனாலும் அவன் விடற பெருமூச்சு நம்மையும் தாக்கும். இன்னைக்கில்ல. நாளை ... நாம அனுபவிக்கிற காரணமில்லாத மன உளைச்சல், அமைதியின்மை, திமிர் பிடிச்சு கொண்டு வந்துக்கற பிரச்சினைகள், காரணமே இல்லாத தற்கொலைகள் இதுக்கெல்லாம் காரணம் என்ன? இப்படிப்பட்ட பெருமூச்சுக்கள் தான்.
அதனாலதான் எரியறத பிடுங்கினா கொதிக்கிறது அடங்கும்னு ஒபாமாவுக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்துட்டன். டிஸ்கசன் சொம்மா முதல்வன் சினிமா பேட்டி ரேஞ்சுல ஒபாமாவ சொம்மா விடலாமா?சுறு சுறுனு வந்திருக்கு. படிச்சு பாருங்கண்ணா..
பை தி பை நம்ம நாடு சோமாலியாவா மாறாம இருக்க தனிமனிதர்களா நாம என்ன செய்யலாம்னு சிந்திச்சு சுரப்பு மந்தமாயிட்டா பதிவும் ஒரு போட்டிருக்கேன். அதையும் படிங்க. பஞ்சாயத்து பண்ணப்போன ராஜீவே பார்ட்டியாகி உதவாக்கரை ஒப்பந்தத்துல கை.எ. போட்ட கதையா இணைப்புரையே ஒரு பதிவாயிருச்சு. சாரிங்கண்ணா..
நேத்து மனிதனா ப்ளாக் ஸ்பாட் டாட்காமை பார்த்து அலறிட்டேன். "ஏண்டா எழுதறிங்க தடை செய்ய தகுதியில்லாத எழுத்தை"ங்கற கவிதை வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஊர் எல்லாம் சினிமா விமரிசனம் பண்ணிக்கிட்டு விஜய்க்கு அதிகமா அஜீத்துக்கு அதிகமானு ( நானேதும் வில்லங்கமா சொல்லலிங்கண்ணா.. புகழை சொன்னேன்.) மோதிக்கிட்டிருக்கிறச்ச , அந்த யாகம், இந்த விரதம், புது புது ரெசிப்பினு எழுதிக்கிட்டிருக்கிறப்ப அசலான சமாசாரங்களை எழுதி மனித குல மேம்பாட்டுக்காக பாடுபடறதா எனக்கு ஒரு நினைப்பு உண்டு.
ஆனால் மனிதனா ப்ளாகை பார்த்து ரொம்பவே இன்ஸ்பைர் ஆயிட்டன். சோமாலியால்லாம் பெரிய இடத்து விவகாரம். இந்திரா காந்தி காலத்துல நகர்வாலா ஊழல் பத்தி கேள்வி கேட்டா இதெல்லாம் அ ந் நிய சதின்னிருவாங்க. ஆனால் சோமாலியா எல்லாம் உண்மையிலேயே உலக சதி.
பிச்சைக்கார நாடெல்லாம் பட்ஜெட்ல பாதி ஆயுதம் வாங்க செலவழிக்குதே இதுக்கு காரணம் என்ன?
குடிக்க தண்ணி கிடைக்காத கிராமத்துல பெப்சி,கொக்கோகோலா கிடைக்குதே காரணம் என்ன?
ஹை வேலை அங்கங்கே நிறுத்தி சில்லறை கேட்கிறாய்ங்களே ஏன்?
விவசாய உரங்களுக்கு சப்சிடி குறைக்கப்படுதே ஏன்?
காரணம் கேட்டா "காட்"னுவாய்ங்க. க்ளோபல் வில்லேஜும்பாங்க. தனியார் மயம்னுவாய்ங்க. உலக வங்கி நிபந்தைனைம்பாங்க. இதெல்லாம் சொம்மா பொம்மலாட்டம் சூத்திர கயிறு யார்கிட்டே இருக்கு? எல்லாத்தயும் அலசியிருக்கேன். விசயம் தெரிஞ்சவங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பானு தோணலாம். என் டார்கெட் நீங்க இல்லே.
ரிட்டையரான அப்பனுக்கு ஜி.பி.எஃப் பணம் வந்தா அதுல இருபத்தி மூணரை ஆயிரம் ரூபா செலவழிச்சு செல்ஃபோன் வாங்கி கொடுனு அடம்பிடிக்கிறானே அவனுக்காக தான் நான் எழுதறேன்.
நாமெல்லாம் நாத்தத்துக்கு வழக்கப்பட்டுட்டோம். நாடி தளர்ந்து போச்சு.ரத்தம் சுண்டி போச்சு. இதை எல்லாம் கேட்க ஒருத்தன் வருவான் ஒருத்தன் வருவானு திண்ணைப்பேச்சு பேசறோம்..வெண்ணை வெட்டி சிப்பாய்களாயிட்டோம். இன்னைக்கு பீட்ஸா, பஃப்ஸ், நூடுல்ஸ் எல்லாம் றெக்கை கட்டி பறக்க காரணம் அந்த அரை ட்ரவுசர் பையன் ( ஓகோ ஷார்ட்ஸுங்களா தம்பி ..ஓகே ஓகே) அவன் ஏன் இதையெல்லாம் திங்கறான். நான் வெந்ததை தின்னு விதி வந்தா சாக வரலை மாமூன்னு காட்ட விரும்பறான். நாம கோட்டை விட்ட கோட்டை எதையோ எதையோ பிடிச்சு காட்ட துடிக்கிறான்.
பிறந்ததுலருந்து ஆயா, கிரஷ்னு அல்லாடி , மூத்திரத்துலயே ஊறிக்கிடந்து ( நாப்பீஸ் உபயத்துல) ப்ரைவேட் ஸ்கூலு,ப்ரைவேட் காலேஜு, ப்ரைவேட் மெடிக்கல் காலேஜு, ரவுண்ட் தி க்ளாக் க்ளாஸு,ஸ்பெஷல் கிளாஸு தினசரி டெஸ்டு, வாராந்திர டெஸ்டுனு நாறிக்கிடக்கிறானே.. அவனுக்குள்ள ஸ்பார்க் இருக்கு. ஒரு அலைபாயல் இருக்கு. தேங்கிக்கிடக்கிறது சாக்கடை. அவன் புது ஊற்று. அவன் இன்டர் நெட்ல மூழ்கியிருக்கானு மம்மி டாடி கவலைப்படறாங்க. அவன் உலகத்தோட தொடர்பு கொள்ள விரும்பறான். லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப்னு ஜே.கே சொன்னதை அமல் படுத்தறான். அவனுக்காக தான் நான் எழுதறேன். அவனுக்கு தெரியனும் சோமாலியாவுக்கு யார் பொறுப்புன்னு? அவனுக்கு தெரியனும் சோமாலியாவுக்கு தன் மம்மி டாடியோட தானும் பொறுப்புன்னு.. அதுக்காக அவனுக்காக எழுதறேன்.
இங்கே நாப்பதாயிரம் ரூபா சம்பளம் வாங்கிறவன் ஏன் தற்கொலை பண்ணிக்கிறாங்கறிங்க. எல்லாம் சோமாலியாலருந்து போன பேட் வேவ்ஸ். நாமெல்லாம் எந்த சோஷியல் நெட் ஒர்க்கும் அவசியமே இல்லாம இணைக்க,பிணைக்கப்படிருக்கோம். விரல் நகம் தானே வளர்ந்து கிட்டு போகட்டும். சொறிஞ்சிக்க நல்லாருக்குனு பாக் நினைச்சது. இப்ப என்னாச்சு? அவன் ........புண்ணாச்சு.
பிந்தரன் வாலேக்கு ஆயுதம் எல்லாம் கொடுத்து ஊர்வலம் விட்டாய்ங்க என்னாச்சு ....பார்த்து சுட்டான். நான் என்ன சொல்லவர்ரேன்னா இந்த உலகத்துல எவன் காலியான வயிறோட படுக்கப்போனாலும் அவன் விடற பெருமூச்சு நம்மையும் தாக்கும். இன்னைக்கில்ல. நாளை ... நாம அனுபவிக்கிற காரணமில்லாத மன உளைச்சல், அமைதியின்மை, திமிர் பிடிச்சு கொண்டு வந்துக்கற பிரச்சினைகள், காரணமே இல்லாத தற்கொலைகள் இதுக்கெல்லாம் காரணம் என்ன? இப்படிப்பட்ட பெருமூச்சுக்கள் தான்.
அதனாலதான் எரியறத பிடுங்கினா கொதிக்கிறது அடங்கும்னு ஒபாமாவுக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்துட்டன். டிஸ்கசன் சொம்மா முதல்வன் சினிமா பேட்டி ரேஞ்சுல ஒபாமாவ சொம்மா விடலாமா?சுறு சுறுனு வந்திருக்கு. படிச்சு பாருங்கண்ணா..
பை தி பை நம்ம நாடு சோமாலியாவா மாறாம இருக்க தனிமனிதர்களா நாம என்ன செய்யலாம்னு சிந்திச்சு சுரப்பு மந்தமாயிட்டா பதிவும் ஒரு போட்டிருக்கேன். அதையும் படிங்க. பஞ்சாயத்து பண்ணப்போன ராஜீவே பார்ட்டியாகி உதவாக்கரை ஒப்பந்தத்துல கை.எ. போட்ட கதையா இணைப்புரையே ஒரு பதிவாயிருச்சு. சாரிங்கண்ணா..
Subscribe to:
Posts (Atom)
