Thursday, February 16, 2012

இந்துத்வா பேசும் இழி பிறவிகள் ..


ஒரு காலத்துல சுஜாதாவும் ரஜினியும் நமக்கு ரெண்டு கண்ணு மாதிரி. அப்பாறம் சுஜாதாவோட எழுத்துக்கள் போன்டா மாதிரி - அதுல ஒளிச்சு வச்சிருக்கிற பிராமணீயம் எலி விசம் மாரின்னு தெரிஞ்சுக்கிட்டு கழண்டுக்கிட்டோம்.

அதே போல ரஜினி மேட்டர்ல அவரை "அவாள்" அண்டர் டேக் பண்ணிட்டாய்ங்கன்னு தெரிஞ்சு ஆளை விட்டா போதும்னு ஜூட் விட்டுட்டம்.

கில்மா கனவுகள் - மனைவி/காதலி உங்க டீலிங் எப்படி மேட்டரையெல்லாம் கடாசிட்டு இன்னாபா இது திடீர்னு ரஜினி -சுஜாதா மேல லவ்வுன்னு கேப்பிக.சொல்றேன்.

உஜிலாதேவியை ஏற்கெனவே உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்தம். ஆனால் எலுக்க தோலு தெச்சி ஏடாதி உத்தி்க்கினா நலுப்பு நலுப்பேங்கற மாதிரி மாற்றமே இல்லை. இன்னம் அழுக்கு தான் சேர்ந்திருக்கு.

மொதல்ல மேற்படி தெலுங்கு கவிதைக்கு ( வேமனா) அருத்தம் சொல்லிர்ரன் .எலித்தோலை கொண்டாந்து வருசம் துவைச்சா கூட விடாது கருப்புங்கறது அருத்தம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டுங்கறாப்ல சுஜாதாவோட கருத்தை மேற்கோள் காட்டத்தேன் இத்தீனி மொக்கை.

அவ்ரு இலங்கை பிரச்சினைய பத்தி சொல்லும் போது "அங்கன மெஜாரிட்டி மக்களுக்கு மைனாரிட்டி ஃபீலிங் இருக்கு"ன்னாரு.

அதே ஃபீலிங்கை இந்தியாவுல நம்மாளுங்களுக்கு ஏற்படுத்த ஒரு பெரிய நெட் ஒர்க் வேலை செய்யுது. அதுல நம்ம உஜிலாவும் ஒரு பாகமா? அல்லது தன்னார்வ தொண்டரா தெரியலை.

நாலணா சோசியம் , அரையணா மாந்திரீகம் தெரிஞ்சு வச்சுக்கிட்டா "உலகத்தை உய்விக்க வந்த" கணக்கா நம்மாளுங்களுக்கு ஃபீலிங் வந்துருது. நாம சோசியரா இருந்தாலும் ஃபர்ஸ் அஃப் ஆல் "மனிதன்" ( ரஜினி ஸ்டைல்ல படிங்க)

உஜிலா சமீப காலத்துல ஒரு பதிவை போட்டிருக்காரு... அதெல்லாம் அவரோட பர்சனல் ஃபீலிங்ஸ்னா அவருக்கு நம்மோட ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஒரு வேளை உண்மை தெரிஞ்சும் சர்வைவலுக்காகவோ / கவனம் பெறவோ எழுதியிருந்தா கொஞ்சம் தட்டிக்கேட்டே ஆகனும். இல்லாட்டி ஒட்டு மொத்த இந்துமக்களின் எண்ணமும் இதான்னு பிற மதத்தினர் நினைச்சுரக்கூடிய வாய்ப்பிருக்கு,

//இந்தியா மத சார்பற்ற நாடு நமது அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் இப்படி எல்லோருமே மேடையில் வாய்வலிக்க கூவுகிறார்கள் மதசார்பற்ற நாடு என்றால் என்ன?//

நாட்டுக்கு ரெம்ப தேவையான மேட்டருதேன். ரெம்ப பொறுப்பா ஆரம்பிக்கிறாரு. தொடர்ந்து பாருங்க. எல்லாமே விஷம்.

//அதன் தாத்பரியம் என்ன என்பது இவர்களில் யாருக்காவது தெரியுமா? யாராவது ஒருவர் அந்த உண்மையை உணர்ந்திருக்கிறார்களா? அல்லது அதன் உண்மை பொருளை ஒத்துக்கொள்வார்களா?//

ய..ப்பா டபுள் ஸ்ட் ராங் டீ அடிச்சாப்ல கீது ..ரெம்ப தியரிட்டிக்கலா போறாப்ல ஒரு பம்மாத்து ..

//ஒரு அலுவலகத்தில் நாலுபேர் வேலை செய்கிறார்கள்//

என்னமோ வைட் ஆங்கிள்ள , பேர்ட் வ்யூல கிளிக்கப்போறாருன்னு நினைச்சா ஒடனே டீக்கடையில பேசற கணக்கா இறங்கிட்டாரு ..

//நாலு பேரும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் பல பண்பாடுகளை உடையவர்கள் அவர்களுக்கு அதிகாரியாக இருக்கும் ஒருவர் எப்படி நடந்து கொள்வார் அவர் இவர்களிலிருந்து வேறுபட்ட மொழி கலாச்சாரம் கொண்டவராக இருந்தாலும் தனக்கு கீழ் உள்ள நாலு பேரையும் சமமாக நடத்துவார் அவர்களிடம் பாகுபாடு அற்ற உறவு நிலையையே பாராட்டுவார் அப்போது தான் அந்த அலுவலகம் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக இயங்கும் மாறாக யாரவது ஒரு ஊழியரிடம் தனிக்கவனம் செலுத்தபடுமேயானால் மற்றவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் அமைதியான அலுவலகம் போர்களமாக மாறிவிடும்//

அப்படியே ஹார்ட்டை டச் பண்றாப்ல ஒரு உதாரணம். கொய்யால இதையே ஒரு அம்மா அவளுக்கு நாலு குழந்தைங்க. அதுல ஒன்னுக்கு போலியோன்னு ஆரம்பிச்சா என்னாகும்? அவிக எண்ணம் ஈடேறாதுல்ல.

ஏதோ அங்கே ஒன்னு இங்கே ஒன்னுன்னு குண்டு வெடிச்சாலும் சனம் வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கம். உஜிலா மாதிரி பார்ட்டிங்களோட உள்ளார்ந்த எண்ணம் என்னடான்னா அங்கிங்கெனாத படி மதத்தின் பேரால் குத்திக்கிட்டு சாகனும். அதேன். அதுக்கு தேன் இந்த மாதிரி எடுப்பு -தொடுப்பு -தொகையறாவெல்லாம்..

//எதாவது ஒரு மதத்தாருக்கு மட்டுமே சலுகைகளை வழங்கி மற்ற மதத்தினரை நோகடிக்க செய்து தங்களது மதசார்பின்மையை வெளிக்காட்டி கொள்கிறார்கள் //

ஒரு மதத்தாருக்கு சலுகைகள் வழங்கறாய்ங்கன்னா அது மதம் சார்ந்த காரணங்களுக்காக இல்லே. நாட்டின் மக்கள் தொகையில் பின் தங்கியிருக்கிற க்ரூப் ஆஃப் பீப்புளை கை தூக்கி விடத்தேன்.

நாம நல்லா இருக்கனும்னா நம்மாளு ஒவ்வொருத்தனும் நல்லா இருக்கனும். 100 பேர்ல 99 பேர் நல்லாருந்து ஒருத்தன் கெட்டிருந்தாலும் ( சமூக,பொருளாதார அடிப்படையில்) ஒட்டு மொத்த நாடும் சுடுகாடு ஆக ரெம்ப காலம் பிடிக்காது.

// மற்ற மதத்தினரை நோகடித்து//

இன்னைக்கிருக்கிற நிலைமையில தன் ஓட்டுக்கு தானே வேட்டு வச்சுக்கறாப்ல எந்த அரசியல் வாதிக்கும் எந்த க்ரூப்பையும் நோகடிக்கனும்ங்கற எண்ணம் கிடையாது. முன்னேற்றம் பரவலாகனும் . அதுக்கு எந்த க்ரூப் பின் தங்கியிருக்கோ அதை கை தூக்கி விடத்தேன் ட்ரை பண்றாய்ங்க.

அதை பார்த்து ஆரும் நோகறதில்லை. அந்த சலுகை தங்களுக்கும் கிடைக்காதான்னுதேன் ஏங்கறான்.
( பிற்பட்டோர் பட்டியல்ல சேர்க்கனும்னு டிமாண்ட் பண்ணாத சாதி எதுனா இருக்கா?)

//எங்கேயும் இல்லாத கொடுமை இந்த நாட்டில் மட்டும் தான் இருக்கிறது இங்குள்ள மக்கள் பெருவாரியானவர்கள் இந்துக்கள் இவர்களில் ஓட்டுகளை பெற்று தான் பதவிக்கு வருகிறவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள் //

த பார்ரா அப்பம் அன்று முதல் இன்று வரை சென்டர்லயும் - ஆல் ஆஃப் தி ஸ்டேட்ஸ்லயும் பா.ஜ.க தான் ஆளனும். உடைச்சு சொன்னா காதலர் தினத்துல காதலர்கள் பின்னாடி மோந்து கிட்டு போற க்ரூப் தான் ஆளனும். இதுக்கும் இந்துத்வாவுக்கும் என்ன சம்பந்தமோ புரியலை.

மதக்கலவரத்தை உருவாக்க காண்ட்ராக்ட் எடுத்து "வேலை பார்க்கிற" இவிகளை விட காதலர்கள் அப்படி என்ன பஞ்சமா பாதகம் செய்துர போறாய்ங்களோ தெரியலை.

கட்டிலறையில் கறை படும் உடல் குளியலறையில் சுத்தமாயிரப்போகுது. டோண்ட் கண்டம் செக்ஸ் .யூஸ் காண்டோம்ஸ்.

அ ந் நிய முதலீடு மட்டும் வேணம். அ ந் நிய கலாசாரம் வேணாம்னா எப்படி?

//அதிகாரம் கைக்கு வந்ததும் தனக்கு யார் ஒட்டு போட்டார்களோ அவர்களுக்கு விரோதமாக நடப்பது தான் தங்களது கடமை என்பது போல நடந்து கொள்கிறார்கள்//

எல்லா கட்சியும் - ஏன் பா.ஜ.க உட்பட மைனாரிட்டி மக்களின் நலனை தாங்களும் நாடுவதா சொல்லித்தான் ஓட்டுக்கேட்கிறாய்ங்க. அப்பம் மெஜாரிட்டி இந்து மக்கள் தேர்தல்ல ஓட்டே போடக்கூடாதே.

//இந்து மதத்தை தாக்குவதிலும் கேலி செய்வதிலும் இவர்களே முன்னிற்கிறார்கள்//

தமிழகத்துல ஒரே ஒரு திமுகவை தவிர அதுலயும் கலைஞரை தவிர ஆல் இண்டியா லெவல்ல வேற ஆரும் கேலி பண்றதில்லிங்ணா. அது கூட அவருக்கு உள்ள மனசாட்சி உறுத்தல்களுக்கு ஒரு அவுட் லெட்டா வரும். ஆருனா அவரை இர்ரிட்டேட் பண்ணா நூலை பிடிச்சி விளையாடுவாரு. புரணங்களை புகுந்து அடிப்பாரு.மத்தபடி அவிக குடும்பம் மொத்தம் எப்பமோ "அவாள்" கட்டுப்பாட்டுக்கு போயிருச்சு.

//ஒரு அரசியல் தலைவர் எந்த அளவு இந்து மதத்தை தாக்குகிறாரோ அந்த அளவே அவர் முற்போக்குவாதி என்றும் சமூக நீதி காவலர் என்றும் வர்ணிக்கப்படுகிறார்//

உஸ்.. அப்பா .. இப்பமே கண்ணை கட்டுதே.. வர்ணிக்கப்படுகிறார்னு மொட்டையா சொன்னா எப்படி? மீடியா வர்ணிக்குதா? ( 99.99 சதம் அவாள் கையிலதானே இருக்கு - எம்.டி சூத்திரனா இருந்தாலும் அவாள் போட்ட ராஜ பாட்டையிலதானே பத்திரிக்கை நடக்குது)

மக்கள் வர்ணிக்கிறாய்ங்களா? (இதான் உண்மைன்னா மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்புன்னு பொத்திக்கிட்டு போக வேண்டியதுதானே..

//திரைக்கு பின்னால் கோயில் கோயிலாக ஏறி இறங்குபவர்களும் குலதேவதை கோயில்களுக்கு அபிசேக ஆராதனை செய்கிறவர்களும் மத குருமார்களின் பாதங்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குபவர்களும் //

அப்பம் இதெல்லாம் அடாத செயல்னு இன்டைரக்டா ஒத்துக்கிடறிங்க வாழ்த்துக்கள்

//திரைக்கு முன்னால் வருகிற போது தாங்கள் என்னவோ பரம்பரை பகுத்தறிவு வாதிகள் என்பது போல நாடகம் ஆடுகிறார்கள் இந்த நாடகம் மனசாட்சிக்கு விரோதமானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் //

அவிகளை தானே இந்து மதக்காவலர்கள் /அவாள் எல்லாம் ஆலவட்டம் போட்டுக்கிட்டிருக்கிறாய்ங்க. இப்படியா கொத்த டபுள் கேம் பார்ட்டிங்களுக்கு யாகம் ,ஹோமம் நடத்தப்படாதுன்னு அறிவிக்க சொல்லுங்க (அஸ்கு புஸ்கு பொளப்பு கெட்டுருமேம்பாய்ங்க)

//ஆனாலும் மனம் என்பதே தேவையற்ற பொருள் என்று கருதிவிட்ட அவர்கள் அதன் சாட்சிக்கு பயப்படவா போகிறார்கள்//

மனதிற்கு பிரச்சினை வரும் - மேற்கத்திய கணிப்பு
மனமே பிரச்சினை - கீழை நாடுகளின் கண்டுபிடிப்பு

//ஒரு மனிதனிடமுள்ள கடவுள் நம்பிக்கையும் மத ஈடுபாடும் அவனை குற்றங்கள் செய்ய அச்சப்படுத்தும் சிறிதளவாவது நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருப்பான் என்று உளவியல் சாஸ்திரம் சொல்கிறது //

அப்ப ஏங்க ஜெயேந்திரர் , நித்யானந்தா எல்லாம் காபரே ஆடறாய்ங்க - . ஆளை வச்சு போட்டு தள்றாய்ங்க

//அப்படி இல்லாதவர்கள் எதை பற்றியும் கவலை இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எத்தகைய பாதக செயலையும் செய்ய துணிவார்கள் என்றும் சொல்லப்படுகிறது//

த பார்ரா தந்தியில நியூஸ் ரேஞ்சுக்கு போயிட்டிங்க. நீங்களே நம்பாத ஒன்னை விமர்சிச்சு என்ன ஆகப்போகுது . நோ கமெண்ட்ஸ்.

//இதன் அர்த்தம் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தீமை செய்ய மாட்டார்கள் என்பதல்ல செய்வதற்கு சிறிதாவது தயங்குவார்கள் என்பது தான் //

தயங்கி செய்யறானா - தயங்காம செய்யறானாங்கறதெல்லாம் தேவையில்லாத தகவல். செய்றானா இல்லியா அதான் கேள்வி. செய்வாங்கறது உங்க பதில். வாழ்த்துக்கள்.

//மற்ற மாநிலங்களை விட நமது தமிழ் நாட்டில் நாத்திகம் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்வது பெருமை என்று சில மேதாவிகள் நினைக்கிறார்கள் மேடையில் ஏறிவிட்டால் நாத்திகம் பேசினால் தான் கைதட்டல் கிடைக்குமென்று பலர் தப்புகணக்கு போடுகிறார்கள்//

அதிக கைத்தட்டல் கிடைக்குதுன்னா என்னா அருத்தம். சனம் அதை ஏத்துக்கிடறாய்ங்கன்னுதானே அருத்தம். ஆன்மீக வாதிகள்னு க்ளெய்ம் பண்ணிக்கிறவுக மக்களுக்கு உண்மையான ஆன்மீகத்தை போதிச்சிருந்தா கைத்தட்டல் எப்படி கிடைக்கும்?

//இதனால்தானோ என்னவோ மற்ற மாநிலங்களை விட நமது தமிழநாட்டில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது//

அய்யய்யோ.. அப்படியா? ஊழலுக்கு ரூட்டு போட்டுக் கொடுத்த துறைச்செயலர்கள் , பி.ஏக்கள் ,ஆடிட்டர்கள் இவிகளுமா நாத்திக வாதிங்க..

//பல நேரம் இங்குள்ள அரசியல்வாதிகளை பார்த்து தான் மற்ற அரசியல் வாதிகள் முறைகேடு செய்வதற்கே பழகி கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது//

...சொல்லப்படுகிறது.. உஜிலா ! நீங்க என்ன தந்தி ரிப்போர்ட்டரா? இப்படி நழுவறிங்க..

//அந்த கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை //

அப்பம் ஒன்னு பண்ணுவமா? நாத்திகம் பேசறவுகளையெல்லாம் தூக்குல போட்டுரலாம்.. இருக்கிற சூத்திர பயலுவல்லாம் பொஞ்சாதி தாலிய கூட கழட்டி உண்டியல்ல போடுவான். அந்த உண்டியல் பணத்துல நாடெங்கிலும் ப்ராஞ்ச் ஆஃபீஸ் ஓப்பன் பண்ணி "அவாள்" வாழ பண்ணுவம். இந்தியா உருப்பட்டுரும்..


//நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கும் உயர்ந்த மனப்பான்மை எப்போதுமே கிடையாது//

எல்லா மதத்தையும் சமமா பார்த்தா நமக்குத்தேன் ஆப்பு. உதாரணத்துக்கு பல லட்சம் கோடி வருமானம் இருக்கிற கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிட்டா கர்ப கிரகத்துல வச்சு மட்டுமில்லை - கர்பகிருகத்துல இருக்கிற சாமிக்கே கெட்ட காரியம் பண்ணிருவாய்ங்க.

//சிறுபான்மை மக்களுக்கு அதிகப்படியான தனிச்சலுகைகள் கொடுப்பதாக சொன்னால் அவர்கள் அனைவரும் தனக்கு பின்னால் அணிவகுத்து நிற்பார்கள் என்ற எண்ணத்திலும் அனைத்து ஓட்டுகளும் தனக்கு மட்டுமே கிடைக்குமென்ற ஆசையிலும் போலியான கரிசனத்தை அந்த மக்கள் மீது காட்டுவது//

உம் கருத்தே ஒட்டு மொத்த இந்து மக்களின் கருத்துன்னா சி.பா.ம. சலுகைகளை எதிரிக்கிறவுக எல்லாம் பா.ஜ.க பின்னாடி அணிவகுத்திருக்கனுமே .. இன்னமும் ஏன் அந்த கட்சி சோனியாவே கிடக்கு.

//அவர்கள் இந்து மதத்தை தாக்க வருகின்ற போது கூட கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள்//

மதத்தை ஏங்க தாக்கப்போறாய்ங்க. ஓ .. மதமாற்றத்தை சொல்றிங்களோ ? இந்து மதத்துல இருக்கிற சாக்கடை/மல அடைப்பையெல்லாம் நீக்கி , தூக்கி போட்டு - சாதியை சமாதியாக்கி - ஆன்மீக புரோக்கர்களை மத பிரஷ்டம் பண்ணுங்க இந்து மதம் சேஃப். முதற்கண் இப்படியா கொத்த கொம்பு சீவும் பதிவுகளை எழுதறதை விடுங்க..

( கிளிப்பு தொடரும்)