Sunday, September 18, 2011

"சுள்ளு" னு ஒரு காதல் கதை


நம்ம ப்ளாகை படிக்கிறவுகள்ள மஸ்தா பேரு 40 ஐ நெருங்கறவுகன்னு ஒரு கணக்கு இருக்கு (அலெக்ஸா) பாவம் இவிகள்ள சிலர் காதலிச்சு கண்ணாலம் கட்டியிருக்கலாம். அதெல்லாம் பழைய கதை.

இன்னைக்கு "பசங்க" எப்படி லவ் பண்றாய்ங்கன்னு தெரிஞ்சுக்க இந்த குரல் பதிவை நீங்க கேட்டே ஆகனும்.

இந்த பதிவுல விட்டுப்போன விஷயம் ஒன்னிருக்கு. கண்ணாலத்துக்கப்பாரம் ஈரோயின் கொளந்தைய விட்டுட்டு காணாமா போயிருது. ( வழக்கம் போல) தனியா குழந்தைய சமாளிக்கமுடியாத ஈரோ தன் பேரன்ட்ஸ் கிட்டே சரண்டராயிர்ராரு.

மூணு நாளைக்கப்பாறம் ஈரோயின் வர்ராய்ங்க. கொளந்தைய கொஞ்சறாய்ங்க. அப்பம் ஈரோவுக்கு அம்மாக்காரி "கொளந்தைய விட்டுட்டு போக எப்டி மனசு வந்தது"ங்கற ரேஞ்சுல ஏதோ பேசறாய்ங்க.

கடுப்பான ஈரோயின் கொளந்தைய மாடிக்கு கொண்டு போய் அங்கனருந்து போட்டுட்டாய்ங்க. ஈரோவோட டூ வீலர் ஒன்னு ரிப்பேர்ல கிடக்கு. இந்த கொளந்தை கரீட்டா அந்த டூவீலர் சீட் மேல விழுந்து கீழே விழுது . தாளி ஒரு கீறல் இல்லை.

இது சொம்மா ஒரு பிட்டு தேன். கதையில பிட்டு பிட்டா மஸ்தா கீதுங்ணா ஒரு தாட்டி கேட்டுதான் பாருங்களேன்.