Showing posts with label கிரகம். Show all posts
Showing posts with label கிரகம். Show all posts

Friday, March 11, 2011

கிரக தோஷங்கள்: கொடுத்தா போகும்.. வாங்கினா கூடும்


கிரகதோஷம்னா குறிப்பிட்ட கிரகம் வீக்கா இருக்குனு அர்த்தம். கிரகம் வீக்கா இருந்தா அதனோட காரகத்வத்துல எல்லாம் நமக்கு நஷ்டம் வரும்.

இதை தவிர்க்க நாம அந்த பேட்டையிலயே என்டர் ஆகக்கூடாது. விவரம் தெரியாம ஆல்ரெடி அந்த ஃபீல்டுல மாட்டிக்கிட்டிங்க. வெளிய வந்துதானே ஆகனும்.

அப்ப அந்த ஃபீல்டுல எதிர்படக்கூடிய நஷ்டத்தை குறைக்க /அவாய்ட் பண்ண குறிப்பிட்ட கிரக காரகத்வம் கொண்ட பொருளை பிறருக்கு கொடுக்கனும். ( அல்லாத்தையும் எங்களுக்கே கொடுன்னு அவாள் சொல்வா. அதை நம்பாதிங்க)

எந்த கிரகம் சரியில்லையோ அந்த கிரக காரகத்வம் கொண்ட குலத்தினருக்கு, தொழிலினருக்கு கொடுக்கலாம். ஸ்பீட் போஸ்ட் கணக்கா கிரகத்துக்கு மெசேஜ் போயிரும். வேலை நடக்கும். நான் கியாரண்டி. உதாரணமா சனி வீக்குன்னா தலித்துக்கு தரலாம், புதன் வீக்குன்னா ஒரு வைசியருக்கு தரலாம்.

சனி சரியில்லைன்னா ஐரன் ஸ்டில் ஆயில் தரலாம். புதன் சரியில்லின்னா ஸ்டேஷ்னரி,புக்ஸ்,பென் ட்ரைவ், கார்ட் ரீடர் தரலாம். Read More

Friday, February 25, 2011

365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா



365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா 3 மேட்டர் உங்க ஜாதகப்படி கரீட்டா செட் ஆயிட்டா போதும். ஒன்னு செய் தொழில். ரெண்டு மனைவி மூணு வீடு . அப்ப மத்த விசயம்லாம் ஆத்துல அடிச்சிக்கினு போனா பரவால்லியானு கேப்பிக.

நிதானமா ரோசிங்க. ஒரு நாள்ள -24 மணி நேரத்துல மனுஷன் கு.பட்சம் 8 மணி நேரமாச்சும் தொழில்,உத்யோகம்,வேலைன்னு செலவழிச்சாகனும். அதனால தொழில் மேட்டர் ஜாதகப்படி அமைஞ்சுட்டா 8 மணி நேரம் கிரக பீடனங்களிலிருந்து எஸ்கேப். ( மீன் தண்ணில இருக்கிறாப்ல சேஃப் - உங்க ஜாதகத்துக்கு தொடர்பில்லாத வேலையில இருந்தா அது மனுஷன் நீச்சலடிக்கிற மாதிரி -அல்லாரும் குற்றாலீஸ்வரன் ஆயிரமுடியாதில்லியா -மூச்சு வாங்கும் -நாக்கு தள்ளும் -எப்படா கரையேறுவோம்னு தான் இருக்கும்)

அடுத்து நைட் 10 டு மார்னிங் 10 AM 12 மணி நேரம் வீட்டுல செலவழிக்கவேண்டியிருக்கு. அதனால வீடு ,பொஞ்சாதி கரீட்டா அமையனும் இல்லாட்டி இந்த 12 மணி நேரம் நரகமாயிரும். தாளி வீடு சரியில்லாதவன்,பொஞ்சாதி பிடுங்கல்ல இருந்து தப்பிக்க நினைக்கிறவன் தான் இன்ன பிற ஆக்டிவிட்டீஸுக்கு வர்ரான்.

மேற்சொன்ன 3 மேட்டர் கரீட்டா செட் ஆயிருச்சுன்னா 20 மணி நேரம் மன்சன் சேஃப் ஆயிர்ரான். இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் உங்க தொழில் உங்க ஜாதகப்படித்தான் அமைஞ்சிருக்கான்னு தெரிஞ்சிக்கனும். உங்க வீடு,மனைவி மேட்டர்லயும் இதை செய்யனும். அப்படியில்லேன்னா மெல்ல மெல்ல ரூட்டை மாத்தி உங்க பேட்டைக்கு வந்துரனும்.( பொஞ்சாதி மேட்டர்ல மட்டும் இது கஷ்டம்தேன். மொதல் பார்ட்டி இருக்கிறச்ச ரெண்டாவது பார்ட்டிக்கு ட்ரை பண்ணா மகிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டு கதை ஒரு பக்கம்னா இந்த ஒரு செயல் உங்களுக்கு அப்பாறம் உங்க வம்ச விருட்சத்துல வரப்போற ஏழு தலைமுறைக்கு ஆப்பாயிரும்.

அவிக தங்களோட சிக்கலை என்னாட்டம் ஆளுக்கு சொன்னா நாங்க போட்டு குடுத்துருவம். (உங்க முன்னோர் ஆரோ ஒன்னுக்கு ரெண்டா கண்ணாலம் கட்டியிருக்காய்ங்க.அதனாலதான் உங்க கண்ணாலம் தள்ளிப்போகுது -குடும்பவாழ்க்கையில சிக்கல்னு) நீங்க செத்து எந்த லோகத்துல இருந்தாலும் அவிக சாபத்தை வேற வாங்கனும்.

இதுவரை கமிட் ஆகாதவிங்க வேணம்னா ட்ரை பண்ணலாம். ( எனக்கு வரப்போற பொஞ்சாதி எப்படியிருப்பானு சோசியரை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு சூஸ் பண்ணிக்கலாம். ஏற்கெனவே ஆனவுக (கண்ணாலத்தை சொன்னேன்) உங்க ஜாதகப்படி பொஞ்சாதி எப்படியிருக்கனும்னு கண்டுக்கிட்டு அவிக ட்ரஸ் அப், மேக்கப், கெட் அப், தொழில் இத்யாதியில மாற்றம் கொண்டு வர ட்ரை பண்ணலாம். வீடு மேட்டர்ல யுவார் ஃப்ரீ.

"கட்டிடக்கலை ஒரு அறிமுகம்"னு ஒரு புக் ஒர்க்ல அதனோட ஆசிரியர் கே.வி.முனியோட கோ ஆப்பரேட் பண்ண சமயம் அவர் ஒரு பாய்ண்ட் சொன்னாரு.

ருணானுபந்த ரூபேணா பசு,பத்னி ,சுதாலயானு ஒரு ஸ்லோகம் இருக்காம். "சுதா" என்றால் பிள்ளைகள், ஆலயா என்றால் வீடு. பூர்வ கர்ம வினைகளுக்கேத்தாப்ல தான் கால் நடை, மனைவி, வீடுல்லாம் அமையும்னு ஸ்லோகம் சொல்லுது.

மாதா,பிதா,குரு தெய்வங்கற லிஸ்டுல தெய்வம் கடாசில வந்தாலும் தெய்வத்தோட அருளாலயே மொதல்
மூணும் அமையறாப்ல பசு,பத்னி,சுதா,ஆலயாங்கற லிஸ்டுல ஆலயா(வீடு) கடைசில வந்தாலும் வீட்டைபொறுத்து மத்த தெல்லாம் அமைய வாய்ப்பிருக்கு - விதியை மதியால் வெல்ல நினைக்கிறவன் அதை வீட்டின் மூலம் நிறைவேத்தலாம்னு சொன்னாரு.

அவரோட நோக்கம் வாஸ்துப்படி வீட்டை அமைச்சிக்கனுங்கறது. ஆனால் நான் சொல்ல வர்ரது வேற . உங்க ஜாதகப்படி நீங்க எந்த மாதிரி வீட்ல வாழனுமோ அந்த மாதிரி வீட்டை அமைச்சிக்கிட்டாலே போதும் ( உ.ம் ஆக்னேய குறைபாடுள்ள வீடு ) சுத்தம் சுகாதாரம்லாம் நமக்குத்தேன் முக்கியம். கெளுத்தி மீனுக்கு சேறுதான் சொர்கம்ங்கோ.


சரிங்கண்ணா இந்த பதிவுல மனுஷனோட 24 மணி நேரத்துல கு.ப 8 மணி நேரத்தை விழுங்கிர்ர தொழிலை பத்தி விலாவாரியா இங்கே பார்ப்போம்.

Tuesday, May 25, 2010

ஆண் விந்தால் யூட்ரஸ் கான்சர்?

கிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு  ஒரு தொடர் பதிவு  போட்டது  ஞா இருக்கலாம். அதுல சந்திரனுக்கு, கடல் நீர் மேல இருக்கிற கவர்ச்சியை பத்தி சொல்லியிருந்தேன்.  தாயின் கருப்பையில் சிசு நீந்தி விளையாடும் பனிக்குடத்திலான நீரும், மனித உடலில் உள்ள 70 சதவீத நீர் சத்தும் ஒரே விதமான கெமிக்கல் காம்பினேசன் கொண்டுள்ளதாகவும் , கடல் நீரும் இதே கெமிக்கல் காம்பினேஷனை கொண்டிருப்பதாகவும் சொல்லியிருந்தேன்.

அந்த  நீர் சத்து எந்தளவுக்கு அடர்த்தியானதாக உள்ளதோ அந்த அளவுக்கு சந்திரன் அதை கவர ஏதுவான கெமிக்கல் காம்பினேஷனை கொண்டதாக இருக்கும். அந்த நீர் சத்தில் மனித உடலுக்கு மிக தேவையான, இன்றியமையாத உப்புகள், தாதுக்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.  இருந்தாலும்  இந்த உப்பு, தாதுக்களின் அளவு குறைந்தால் /இதன் மூலம் மனித உடலிலான நீர் சத்தின் அடர்த்தி குறையும். இந்த அடர்த்தி குறையுமேயானால் இதன் மீதான  சந்திரனின் கவர்ச்சி பெருமளவு குறையும்.

நல்லா கவனிங்க தலை நான் அடர்த்திய குறைக்க சொல்றேன். தாதுக்களையோ ,உப்புக்களையோ அல்ல.  இதுக்கு என்ன பண்ணலாம்? சுத்தமான தண்ணீரை மானாவாரியா குடிக்கனும்.

இந்த வழக்கம் எனக்கு வர காரணம்  கான்சிட்டிபேஷன். கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பார்ட்டிங்கறதால அவுட் கோயிங்க் போற வரை இன் கமிங்குக்கு இறங்கறதில்லை. அதுவரை மானாவாரியா தண்ணி சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன்.


இதுல ஒரு விசித்திரம் என்னடான்னா தாய்குலம் ஆஃபீஸ்கள்ள சாப்பிட்டுட்டு தண்ணி சாப்பிடறப்ப பார்த்திருக்கிங்களா?  ஒன்னு ரெண்டுனு விழுங்கு கணக்குல குடிப்பாய்ங்க. இருந்தாலும் அவிகளுக்கு எப்படி அது சஃபிஷியன்டா இருக்கு.

நானும் வாட்டர் தெரஃபி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி வெறும் வயித்துல குடிக்க முயற்சி பண்ணுவேன் அப்படியே எதுக்களிச்சுக்கிட்டு வரும். என்னங்கடா இதுன்னு சில நாள் வலுக்கட்டாயமா குடிக்க ஆரம்பிச்ச பிறவு பாருங்களேன்.

ஒரு தம் போட்டா தாகம். ஒரு தடவை பாஸ் போயி வந்தா தாகம். அதுவும் செம்பு கணக்கா சாப்பிட்டாதான் தாகமடங்கும். இதையெல்லாம் நான் டேலி பண்ணிக்கிறது.

இந்த மனித உடல் அற்புதமான கருவி.  இது எத்தனை குறைஞ்ச பட்ச நீர் சத்தோடவும் வித்ஸ்டாண்ட் ஆகும், அப்படியே நீர் சத்து அதிகரிச்சாலும் எந்த பிரச்சினையும் வர்ரதில்லை. அதே மாதிரி தான் மேற்படி நீர் சத்துல இருக்கிற உப்புக்கள்/ தாதுக்களோட அளவும்.

இந்த உப்புக்கள்/தாதுக்கள் சடனா டவுனானா டீலாயிருவிங்க. சுஸ்தாயிருவிங்க. கை,கால் எல்லாம் அப்படியே பார்ட் பார்ட்டா வலிக்கும். ஆனால் போக போக, கொஞ்சம் கொஞ்சமா  இந்த அளவு குறைஞ்சிக்கிட்டு வந்தா உடம்பு அட்ஜஸ் பண்ணிக்குது.

சாண்டில்யன் கதைல விஷகன்யா பத்தி படிச்சிருக்கிங்களா? குழந்தைல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா பாம்பு விஷத்தை ஊட்டி வளர்ப்பாய்ங்க. அது பெரிசானதும் அவள் யாருக்காச்சு முத்தம் கொடுத்தா  அந்த ஆண் ஃபணால். இதெல்லாம் ஃபேண்டசிதான் இல்லேங்கலை,

(சில ஆண்களோட  விந்துலயும் கேன்சரை உண்டாக்கற சமாசாரம் இருக்காம். மனைவி கருப்பை புற்று நோயால இறந்திருந்தா அந்த பார்ட்டி கண்ணால கட்டிக்காம இருந்துர்ரதே பெட்டராம். இவர் எத்தனை குட்டிகளை கட்டிக்கிட்டாலும் அவிகளுக்கும் யூட்ரஸ் கேன்சர் வந்தே தீருமாம்.) - இது சைன்ஸ். இன்னைக்கு பேப்பர் நியூஸ்

இப்போ ஆணி விழுங்கிறவன், எலி ,தவளை சாப்பிடறவன் எப்படி சாப்பிடறான்? எல்லாம் வழக்கம் தானே. நான் 1997ல இருந்து டிஃபன் சாப்பிடறதையே விட்டுட்டவன். செத்தா போயிட்டன் இல்லை.

ஒரு வேளை சாப்பிடறவன் யோகி. ரெண்டு வேளை சாப்பிடறவன் போகி. மூணு வேளை சாப்பிடறவன் ரோகி. மார்னிங்க் டிஃபனை கட் பண்ணதால ராத்தூக்கம் முழிக்கிறது, தம்மு இத்யாதியால ரத்தத்துல,குடல்ல  சேர்ர மஷ்டு எல்லாம் க்ளீன் ஆயிர்ரது.

இந்த ஒரு வேளை தீனியை கட் பண்ணதாலயும், மானாவாரியா தண்ணி குடிச்சிக்கிட்டிருந்ததாலயும் வாட்டர் கன்டென்டோட டென்சிட்டி ஏகத்துக்கு குறைஞ்சிட்டாப்பல இருக்கு.

12 நாள் உண்ணாவிரதம் இருந்தேன். முதல் ரெண்டு நாள் தான் பசி.அப்புறம் பசியுமில்லே ,ஒரு மயிருமில்லை. இதுலருந்து என்ன தெரியுது உடம்பு நாம இழுத்த இழுப்புக்கெல்லாம் வரக்கூடைய ஃப்ளெக்ஸிபிள் மேட்டர்.

இதனால எனக்கு கிடைச்ச பலன் என்னன்னா என் மேல சந்திரனோட எஃபெக்ட் ரொம்பவே குறைஞ்சு போச்சு. இவர் மனோகாரகன். ( நம்மது கடகலக்னம் அதிபதியே இவர்தான். சாதாரணமா கடக லக்ன காரங்க எதுலயும் ஸ்டெடி மைண்டடா இருக்கமாட்டாய்ங்க. அப்படியே  இருந்தாலும் ரெண்டேகால் நாளுதான். )  உணர்வு பூர்வமான முடிவுகள், உணர்ச்சி வசப்பட்ட பேச்சு இதெல்லாம் சந்திரனோட பிரபாவம்தான்.

ஆனால் நம்மை பொருத்தவரை தாளி .. கிருஷ்ணரே சக்கரம் எடுத்துக்கிட்டு வந்துட்டாலும் ஐ.டி கேட்கிற ரேஞ்சுக்கு வந்துட்டம்ல.


பி.கு:
இத்தனை விஸ்தாரமா இதை எழுத காரணம் நேத்து ஜஸ்ட் பகல் 12 மணிக்கு பஜாருக்கு ஒரு ரவுண்ட் போய்வந்த பாவத்துக்கு சன் ஸ்ட்ரோக். நாலு தடவை  வயித்தால போக உடம்பு அப்படியே வெங்காய தோல் மாதிரி ஆயிருச்சு. (காத்துல படபடக்கிறத சொல்றேன்) ஆனால் ஒன்னு தலைவா ப்ரெய்ன் மட்டும் அப்படியே பளிங்கு மாதிரி ஆயிருச்சு.

எச்சரிக்கை:
வெயிலில் அலையாதீர்கள். குடை தொப்பி உபயோகிப்பதானால் லைட் கலர் கொண்டவற்றை உபயோகிக்கவும்.   நிறைய தண்ணீர் குடிங்க. கம்பெனி ட்ரிங்க்ஸ் வேணா.அதுக்கு பதில் மோர், ஃப்ரெஷ் ஜூஸ் ,இள நீர்  குடிங்க.வெயில்ல அலைஞ்சுட்டு வந்ததும் பாத்ரூமுக்கு பறந்து போய் குளிக்காதிங்க. உடனே ரிவர்ஸ் எஃபெக்ட் ஆகி அத்தனைக்கத்தனை சூடாயிரும். சப்போஸ்  சன் ஸ்ட் ரோக் வந்து வயித்தால போனா டென்சன் ஆகாதிங்க.  ஒரு செம்பு தண்ணில நிறைய சர்க்கரை/கொஞ்சமா உப்பு சேர்த்து  ஒரு லெமன் பிழிஞ்சு அடிங்க.  போறது பாட்டுக்கு போகட்டும். நீங்க பாட்டுக்கு  மேலருந்து ஊத்திக்கிட்டே இருங்க.  கடைல எலக்ட் ரால் பாக்கெட் கிடைக்கும் அதையும் வாங்கி கரைச்சு குடிக்கலாம்.