Showing posts with label ஆந்திர ஆரசியல். Show all posts
Showing posts with label ஆந்திர ஆரசியல். Show all posts

Monday, November 19, 2012

எம்.எல்.ஏக்களுக்கு பட்லிகளை சப்ளை செய்த எக்ஸ் முதல்வர்

முன்னாள் முதல்வர் ஒருவர் எம்.எல்.ஏக்களுக்கு பட்லிகளை சப்ளை செய்ததாக ஜகன் கட்சி தலைவர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன் வைக்க ஆந்திர அரசியல் களம் பரபரத்து கிடக்கிறது.இந்த குற்றச்சாட்டை ஆரு நம்பறிங்களோ இல்லியோ நான் நம்பறேன்.

1987 கல்லூரி தேர்தல் சமயத்துலயே ஓட்டர்களுக்கு எம்.பியின் சொந்த வீட்டுல நீலப்படம்  காட்டின கட்சி தெலுங்குதேசம் . தெ.தே கட்சி தலைவரும் - முன்னாள் முதல்வருமான சந்திரபாபு மேலதான் இந்த பர பர குற்றச்சாட்டு.

சந்திரபாபுவோட வாழ்க்கைய திரும்பி பார்க்கிறவுகளுக்கு இது எந்தளவுக்கு உண்மைங்கறது புரியும். பாபு வளர்ந்து வரும் இளம் அரசியல் வாதியா இருந்தப்ப தலீவருங்க அஃபிஷியலா தங்களோட வாரிசுகளை பாபுவுக்கு ஃபிக்ஸ் பண்ணி அவரை உபயோகிச்சுக்கப்பார்த்தாய்ங்க. என்.டி.ஆரோட ஆஃபர் லாபகரமா இருந்ததால அவரோட மகளை கண்ணாலம் கட்டிக்கிட்டு மத்த ஆஃபர்களையெல்லாம் ரிஜெக்ட் பண்ணிட்டாரு பாபு. அடடே இப்படி ஒரு மார்கம் இருக்கான்னு ஒரு மார்கமா தயாராயிட்டாரு போல.

அதுசரி. பாபு எப்போ எம்.எல்.ஏக்களுக்கு பட்லிகளை சப்ளை செய்தாருன்னு கேப்பிக.சொல்றேன். இந்த குற்றச்சாட்டை கிளப்பினவரு ஜி.பிரகாஷ் ராவ்னுட்டு முன்னாள் அரசு போக்கு வரத்துக்கழக எம்.டி. (கேபினட் அந்தஸ்துள்ள பதவிங்கோ)

2009 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தெ.தேசம் கட்சியிலருந்து 13 எம்.எல்.ஏக்கள் இதுவரை கட்சி தாவியிருக்காய்ங்க. இதுல மேக்சிமம் ஜகன் கட்சிக்கு போயிருக்காய்ங்க. நேத்து கூட ரெண்டு எம்.எல்.ஏங்க ஜகன் கட்சிக்கு தாவிட்டாய்ங்க.

இதுல பாபுவுக்கு செமை கடுப்பு. எம்.எல்.ஏங்களை சந்தையில மாடு பிடிச்ச கணக்கா விலைக்கு வாங்கறாய்ங்க.அது இதுன்னு பொரிஞ்சு தள்ளிட்டாரு பாபு.

அவரோட குற்றச்சாட்டு பூமராங் மாதிரி ரிவர்ஸ் ஆயிருச்சு. ராம்லால் கவர்னரா இருந்தப்போ என்.டி.ஆர் தலைமையிலான தெ.தே கட்சிக்கு பூரண மெஜாரிட்டி இருந்தும்  பாஸ்கர் ராவை முதல்வரா நியமிச்சுட்டாய்ங்க. பல நிரூபணத்துக்கு நாள் குறிச்சுட்டாய்ங்க.

(இந்த பாஸ்கர் ராவோட மவன் தான் இப்பம் ஆந்திர ஸ்பீக்கர் -ஜீன்ஸ் எப்படி வேலை செய்யுதுன்னு இந்த அப்பா மவன் கதையை படிச்சா போதும்.)

என்.டி.ஆர் எல்லாம் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு. சாமி வேசம் போட்டு போட்டு தனக்கே தெய்வாம்சம் இருக்கிறதா நம்பின எசன்ட்ரிக் என்.டி.ஆர். எம்.எல்.ஏக்களை கோஞ்சாடறது -தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சறதெல்லாம் ஒத்துவராது.

அப்பம் பாபு தான் இந்த வேலையை எடுத்துக்கிட்டு எம்.எல்.ஏக்களை எல்லாம் கர்னாடகாவுக்கு ஓட்டிக்கிட்டு போனாரு. அங்கனதான் மேற்படி பட்லி சமாசாரம் நடந்திருக்கு.ஒரு பிரபல பெண் ப்ரோக்கர் மூலமா - ஸ்பாட்டுக்கே அனுப்பி -பணம் கூட செட்டில் பண்ணாய்ங்களாம். மாதுவே ஓகேன்னா மது,மாமிசம்லாம் ஜூஜுபி.

இந்த அனுபவத்துல பாபுவுக்கு ஒரு ஞானோதயம் ஆனாப்ல இருக்கு. "கொய்யால .. இந்த மேட்டர்ல இவ்ளோ விஷயம் இருக்கா. மாமாவுக்காக பார்த்த டபுள் எம்.ஏ வேலைய நமக்காக பார்த்தா என்னன்னு ஸ்பார்க் ஆயிட்டாப்ல இருக்கு.

லட்சுமி பார்வதி மேட்டர்ல ( தமிழக அரசியல் வரலாற்றுல மணியம்மை கேரக்டர்) பாபு எம்.எல்.ஏக்களை பிரிச்சு - ரெசிடென்சி ஹோட்டல்ல கேம்ப் நடத்தினாரு.

அப்பவும் மாமிசம் - மது -மாது எல்லாம் நடந்திருக்கு. இதுல இன்னொரு ருசிகர மேட்டர் இருக்கு. இந்த குற்றச்சாட்டை வைத்த ஜி.பிரகாஷ் ராவ் அந்த சமயம் தெ.தேசத்துல -சந்திரபாபு கோஷ்டியில இருந்தவரு. இதுவரை பாபுவோ -பாபுவின் சொம்புகளோ இதை மறுக்கலை.


இந்திய அரசியலின் போக்கை நிர்ணயிச்சதே தனிப்பட்ட சில மா மனிதர்களின் செக்ஸ் லைஃப் தானோன்னும் நமக்கு ஒரு சம்சயம் உண்டு. என்னா பண்றது கொஞ்சம் விட்டா களி திங்க வச்சுருவாய்ங்க போல இருக்கே.. நமக்கெதுக்குங்ணா நாம வெளியூரு. அம்பேல் ..