Friday, March 22, 2013

ராகு கேதுக்கள் : ஆழமான பார்வை : 3

அண்ணே வணக்கம்ணே !
செவ்வாயை பத்தி தான் ஜவ்வா இழுத்திட்டிங்க. இந்த ராகு கேது சமாசாரத்தையாவது பட்டுன்னு முடிக்க கூடாதான்னு சிலர் நினைக்கிறது கேட்குது.ஆனால் பாருங்க மேக்ரோ லெவல்ல ரோசிக்கும் போது செவ்வாயே பெட்டர்.
எதிராளிக்கு கோபம் வருது. அது வர்ரது நமக்கு தெரியுது. திருப்பி தாக்கவோ -ஓடி ஒளியவோ சான்ஸ் இருக்கு.ஆனால் ராகு ? ஆனால் கேது? ஊஹூம்.
அடி தடிக்கு, குத்து கொலைக்கு கூட சாட்சியை பிடிக்க முடியும்.ஆனா சதிக்கு?
எவனோ நம்மை பிடிக்காதவன் நம்ம மேல பொய் புகார் கொடுத்துர்ரான். போலீஸ்கார் ..போலீஸ்கார் ! நான் உத்தமன்னு கன்வின்ஸ் பண்ண சான்ஸ் இருக்கு. இல்லையா சாராயம் காச்சற கவுன்சிலர் அல்லது பலான தொழில் பண்ற கவுன்சிலரை பிடிச்சு ராஜி பண்ணிக்கலாம்.
எவனாச்சும் விசம் வச்சுட்டான்னு வைங்க? என்ன பண்ண முடியும்? இதனால தான் சொல்றேன். செவ்வாய் கொடுக்கிற பல்பை விட ராகு -கேதுக்கள் கொடுக்கிற பல்பு கொடுமைடா சாமி.
 உலகமக்கள் எல்லாரோட ஜாதகத்துலயும் ராகு கேதுக்களால பிரச்சினையே இல்லைன்னு வைங்க. இந்த ஒலகம் எவ்ளோ ப்ளெசன்டா இருக்கும் தெரியுமா?
இத்தனைக்கும் என் ஜாதகத்துல தோஷம் கூட கிடையாது.  4 ஆமிடத்துல தான் கேது.ஆனால் விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து  வீட்டுல நம்மை சுத்தி எத்தீனி சதி ? அம்மாவுக்கு கான்சர் - எத்தீனி சைக்கிள் நாசம்?
பத்தாமிடத்துல தான் ராகு.ஆனால்  நம்ம கொலிக்ஸ்ல எத்தீனி சதிகாரவுக. ஸ்..யப்பா ..வேண்டான்டா சாமீ. ராகு -கேதுன்னா புதியவர்கள் . முன்னே பின்னே தெரியாதவன் கூட லாஜிக்கே இல்லாம ஆப்படிச்சிட்டிருந்தா  ஒரு மன்சனுக்கு மனித குலத்து மேல என்னத்தை பிடிப்பு இருக்கும்?
ஜா.ரா கேஸையே எடுத்துக்கங்க. வரப்பு தகராறா? வாய்க்கா தகராறா?  நாம என்ன செய்துட்டம்? பலன் கேட்டாரு. காசு அனுப்பறேன்னாரு. காசு வேணாம்யா அனுப்பறேன்னு சொன்னம். கொஞ்சம் தாமதமாயிருச்சு போல. 
நான் எல்லாம் அந்தந்த வேளை சோத்துக்காசை எடுத்து ஆ.இ 2000 த்துக்கு கூரியரும் ,ஃபேக்ஸும் அனுப்பியிருக்கன். நான் கூட அந்தளவுக்கு கடுப்பானதில்லை. நம்மாளு அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஒற்றெழுத்தை விட கேவலமான மேட்டரை எல்லாம் கமெண்ட்ல கொட்டி குவிச்சுக்கிட்டிருக்காரு.
பஸ் ஸ்டாண்ட்ல கடை பார்த்து வச்சிருக்கன். பஸ் ஸ்டாண்டுல ஹைஜினிக் கக்கூஸு,பாத்ரூம்லாம் இருக்கு. வந்துருய்யா. கை நிறைய வேலை தரேன். காசு தரேன்.வேலை வெட்டி இல்லாம ஏன் சிண்டை பிச்சுக்கறேன்னு சொல்லிட்டே இருக்கம் கேட்டாதானே? ஊஹூம்.
உலக மக்கள் அனைவரின் ஜாதகங்களிலும் ராகு கேதுக்கள் நெல்ல இடத்துல இருந்திருந்தா மத துவேஷங்கள் இல்லை, காற்று,தண்ணீர்,மண் விசமாகியிருக்காது.கள்ளக்கடத்தல் இல்லை,பொய்க்கணக்கு இல்லை.கருப்பு பணம் இல்லை, டாஸ்மாக் இல்லை. கள்ள காதல்கள் இல்லை. எத்தீனி இல்லைகள்.
இதனாலதேன் ராகு கேதுக்களையும் அலார்ட்டா ஆதியோடந்தமா டீல் பண்ண வேண்டியதா இருக்கு.ஓகே பதிவுக்கு போயிரலாம்.
கடந்த பதிவுல ராகு -கேதுக்கள் 3-9 ல இருந்தா என்ன பலன்னு பார்த்தோம். இன்னைக்கு 4-10 காம்பினேஷனை பார்ப்போம். ஆக்சுவலா இங்கன ரா -கே இருந்தா தோஷமில்லை தான்.ஆனாலும் ஒரு சில பாதிப்புகள் உண்டு.
4 ல் ராகு / கேது:
தாயின் நிறம் மங்கிப்போகலாம். உடல் நலிவு ஏற்படலாம். வீடு மேட்டர்ல ரகசிய ஆப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். கல்வின்னு வரும் போது அகடமிக் ஸ்டடீஸை விட உலக ஞானத்தை (?) பெறுவதில் தான் ஆர்வம் அதிகமா இருக்கும். படிக்கிற வயசுல ராகு தசை/கேது தசை மாட்டிக்கிச்சினா கல்வியில் தடை கூட ஏற்படலாம். வாகன மேட்டர்ல வண்டி திருடு போகலாம், வாங்கினது திருட்டு வண்டியா இருக்கலாம். ஆருக்காச்சும் இரவல் கொடுக்க அவிக கிரைம் பண்ணிட்டு நாம ஜவாப் சொல்ல வேண்டியதாயிரலாம்.
10 ல் ராகு /கேது:
தொழில் எதுவா இருந்தாலும் அதுல புதுமைய புகுத்த தவிப்போம்.  நமக்கு சம்பந்தமே இல்லாட்டியும் எல்லா விஷயத்துலயும் அடிப்படையான சில விஷயங்களை தெரிஞ்சு வச்சுக்கிட்டு,அதுக்கே எல்லாத்துலயும்  சாதிச்சுரனும்னு ஒரு தவிப்பு இருக்கும். மக்கள் நாம சொல்றதையும் -செய்றதையும் நம்பவும் முடியாம ஏமாத்துன்னு குற்றம் சாட்டவும் முடியாம தவிப்பாய்ங்க. ஆரம்ப காலத்துல சனத்தை -அவிக டேஸ்டை புரிஞ்சுக்க முடியாம தொடர் தோல்விகள் ஏற்படலாம்.
நம்ம ஆட்டிட்யூடை பார்த்து பயந்து போயி - சம்பிரதாயப்படி தொழில் நடத்தறவன்லாம் எதிரியா மாறிருவான்.
5-11 காம்பினேஷன்:
ராகு கேதுக்கள் 5-11 ல இருக்கிறது ஒரு டிஃப்ரன்ட் சிச்சுவேஷனை ஏற்படுத்தும். முட்டாளா இருப்பான். லாட்டரியில அடிச்ச மாதிரி பணம் குவியும். அல்லது நல்ல ஞானம் இருக்கும். ஆனால் தொடர்ந்து அவமானங்களையே சந்திப்பான்.
மொத கேஸ்ல தான் முட்டாள் என்ற உண்மை தனக்கு தெரிஞ்சிருந்தா பிரச்சினையில்லை. வெற்றிகளை பார்த்துட்டு தான் அறிவாளின்னு மயங்க ஆரம்பிச்சா சீக்கிரத்துலயே பல்பு வாங்கவேண்டியதுதான். அதாவது குழந்தைகள் இல்லாம போயிரலாம். வெத்தலைய வச்சு பித்தலைய எடுக்க நினைச்சு மொத்தமா ஏமாந்துரலாம்.
ரெண்டாவது கேஸ்ல அவமானங்களை கணக்குல வச்சுக்காம தொடர்ந்து ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டே இருந்தா ஒரு நாளில்லை ஒரு நாள் உலகப்புகழ் கியாரண்டி.ஆனால் அந்த சமயம் பார்த்து வாரிசுகளுக்கு பெருந்தீங்கு விளையவும் சான்ஸ் இருக்கு.
அடுத்தபதிவுல  6-12 காம்பினேஷனை பத்தி பார்ப்போம்.