Wednesday, May 18, 2011

ராகுல் விட்டதெல்லாம் ரீலு : ஐ.பி.என் சானலில் அம்பலம்

உ.பி மானிலம் நொய்டாவில் கற்பழிப்புகள் நடந்ததாகவும், 70 கிளர்ச்சிக்காரர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் வருங்கால நிரந்தர பிரதமர் ராகுல் இஷ்டேத்துக்கு ரீலு விட்டது அல்லாருக்கும் ஞா இருக்கும்.

சாலை அமைக்கும் பணிக்காக நஷ்ட ஈடு வழங்கி  உ.பி.அரசு விளை நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால் திடீர் என்று மக்கள் அரசு கொடுத்த நஷ்ட ஈடு போதாது என்று கூடுதல் நஷ்ட ஈடு கேட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் பின்னணியில் எந்தெந்த அரசியல் கட்சியோட லாபம் எல்லாம் இருந்திருக்கும்னு தெரியாத பப்பாவா நீங்க

(அங்கன பி.எஸ்.பி ஆட்சி  நடக்குது. அது காங்கிரஸுக்கு ஆகாத கட்சி - ஆனால் இவிக பிரதமர் மேல நம்பிக்கை  தீர்மானத்துக்கு ஆதரவா ஓட்டெடுப்பில் கலந்துக்கக்கூடாதுன்னு மடிப்பிச்சை கேட்கிறப்ப ஆகும் கட்சிங்கறத ஞா வச்சுக்கிட்டு படிங்க)

ராகுலை பாவம் சொம்மா சொல்லக்கூடாது காங்கிரசை ஒழிச்சுக்கட்டவே ஸ்டேட் ஸ்டேட்டா போற பார்ட்டி. பீகார் ஆச்சு, கேரளா ஆச்சு,தமிழ் நாடு ஆச்சு ஆந்திரா ஆச்சு இப்பம் உ.பி.

விடிஞ்சும் விடியாத நேரத்துல  பெரிய ஹீரோ மாதிரி  பைக்ல லிஃப்ட் வாங்கி நொய்டா போனாரு.ஏறக்குறைய 20 மணி நேரம் அங்கனயே சாயா குடிச்சு,சமூசா தின்னு டைம் பாஸ் பண்ணிக்கினாரு. சாஸ்திரத்துக்கு அரெஸ்ட் ஆகி அதுக்குனே காத்திருந்த மாதிரி  " நானும் தியாகிதான் நானும் தியாகி"தான்னு கூவிக்கிட்டே ஊட்டுக்கு பூட்டாரு.

இதுல இந்தியன்னு சொல்லிக்கவே வெட்கப்படறேன்னு ஒரு வசனம் வேற. ஆம்பளைன்னு சொல்லிக்க வெட்கப்படறேன்னா அறுத்துக்க சொல்லலாம்.

இந்தியன்னு சொல்லிக்க வெட்கப்படறவுகளை என்ன சொல்ல? ஓ இத்தாலிக்கு போயிருன்னு சொல்லலாம்ல.

இதெல்லாம் நடந்த கதைங்கண்ணா. லேட்டஸ்ட் அப்டேட் என்னன்னா நொய்டா டு தில்லிக்கப்பாறம் உ.பி நொய்டாலருந்து கிராமத்தினர் சிலர் ,ஒரு பெண் ஆகியோரை கூட கூப்டுக்கினு போய் மன்மோகனாரை பார்த்திருக்காரு.

மீடியால உட்ட ரீலு,டகுலு அல்லாத்தையும் மன்மோகனார் காதுல போட்டுட்டாரு. இதற்கிடையில் உ.பி ஜெயலலிதா மாயாவதி ஓவர் ஆக்சன் பண்ண  போலீஸ்காரவுகளை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாய்ங்க.

இதை எல்லாம் பார்த்த ஐ.பி.என் சேனல் நொய்டால உண்மையா என்னதான் நடக்குதுன்னு துருவ ஆரம்பிச்சுட்டாய்ங்க.

அவிக துருவல்ல நொய்டாவில் கற்பழிப்புகள் நடந்ததாகவும், 70 கிளர்ச்சிக்காரர்கள் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் வருங்கால நிரந்தர பிரதமர் ராகுல் விட்டதெல்லாம் ரீலுன்னு ப்ரூவ் ஆயிருக்கு. போட்டுக்கிழிக்க ஆரம்பிச்சிருக்காய்ங்க.

ராசா வீட்டு முட்டை ஏழை வீட்டு அம்மியை உடைக்கும்ங்கற மாதிரி கீதுபா.. இந்த மானங்கெட்ட காங்கிரஸ் தலைவருங்க ஒடனே அடப்பம் தூக்கிக்கினு ராசா மகனுக்கு வக்காலத்து வாங்கிக்கினு கீறாய்ங்க. தூத்தெறிக்க..

அந்த ராகுலு  நெஜமாலுமே சத்திய சந்தன்னா இதே வேகத்தை ஈழத்தமிழர்கள் மேட்டர்ல காட்டியிருக்கலாம்லியா?   அட காங்கிரஸ் ஆளும் மானிலங்கள்ள நில கையகப்படுத்தலே நடக்கலியா? அங்கன எல்லாம் விவசாயிங்க கிளர்ச்சியில ஈடுபடலியா?

பிணத்தை கட்டியழும் போதும் தாண்டவக்கோனே ..பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோனேங்கறது கரீட்டா கீதுங்கண்ணா..



விதிவழியே மதின்னா இதான் ராகுல் ஜாதகபலனை  படிக்க இங்கே அழுத்துங்க