Tuesday, June 21, 2011

சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் : சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)

அண்ணே வணக்கம்ணே!
கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையாங்கற விளம்பரம் போல உங்களை ரெண்டு தாட்டி கேட்கனும்.ஏன்னா இந்த பதிவுல ஒன்னுக்கொண்டு தொடர்பில்லாத 3 பதிவுகள் அடங்கியிருக்கு. ஒன்னு தலைப்பிற்குரியது. ( சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள்)

அடுத்தது பிரணாப் முகர்ஜி சாம்பர்ல ரகசிய காமிரா செய்தி குறித்த என் ஆய்வும் அதிரடி முடிவும்.

அடுத்தது நம்ம தமிழ் நியூஸ் சானல்களோட லட்சணத்தை பத்தினது. ஒழுங்கா படிக்காட்டாலும் கடைசி வரை ஸ்க்ரால் பண்ணிருங்ணா. ( வழக்கமா நாம பண்றதுதானே)


சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் : சுப்ரீம் தலைமை நீதிபதி (எக்ஸ்)

புட்டபர்த்தி சத்ய சாயி கதை முடிஞ்சு போனாலும் அவரோட ஆசிரமம் -ட்ரஸ்ட் பற்றிய திகீர் செய்திகளால்  டர்ராகி கிடக்கும் உண்மையான  ஆன்மீக வாதிகள் & பகுத்தறிவாளர்களை  சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள்  தலைமை நீதிபதி பி.என்.பகவதி மேலும் டர்ராக்கியிருக்கிறார்.  தாம் நீதிபதியாக இருந்தபோது சத்ய சாயி ஆணைக்கிணங்கவே தீர்ப்புகள் வழங்கியதாக திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

இன்னம் எத்தனை நீதிபதி இப்படி சாமியார்கள் ஆணைக்கிணங்க தீர்ப்பு தந்துக்கிட்டிருந்தாய்ங்களோ -தீர்ப்பு தந்துக்கிட்டிருக்காய்ங்களோ சீக்கிரமா ஒரு என்கொய்ரி போட்டுருங்கப்பா. ங்கொய்யால இந்த நீதிபதிங்க  சட்டப்படியோ தங்களோட கான்ஷியஸ் படியோ தீர்ப்பளிப்பாய்ங்கனு நம்பித்தான் சனம் கோர்ட்டுக்கு போகுது.

இவிக காவி கும்பல் - மோடி மஸ்தான் கும்பல்  ஆணைகளுக்கிணங்க தீர்ப்பு கொடுத்தா நீதி என்னாகறது?

உபரியா ஒரு செய்தி : சாயிபாபா ஆசிரமத்துலருந்து ட்ரான்ஸ்போர்ட் ஆன கரன்சி மூட்டைகளை பகவதி ஐயாவுக்கு ப்ரோட்டகால் படி  அலாட் பண்ண  அஃபிஷியல் வாகனத்துல பாஸ் பண்ணதாவும் ஒரு தெலுங்கு சேனல் செய்தி வாசிச்சுக்கிட்டு இருக்கு.


பிரணப் சாம்பரில் ரகசிய  காமிரா?
மத்திய நிதித்துறை மந்திரி பிரணப் சாம்பரில் ரக்சிய காமிரா பொருத்தப்பட்டிருந்ததா? அங்கு நடைபெறும் சம்பாஷணைகள் பதிவு செய்யப்பட்டனவா? கான்ஃப்ரென்ஸ் ஹால் கதியும் இதுதானா? இதெல்லாம் நானோ - அ உதவாக்கரை எட்டணா பத்திரிக்கையோ சொல்லும் விஷயம் அல்ல. சாட்சாத் நிதி மந்திரி பிரணப் முகர்ஜியே இது குறித்து ரகசிய விசாரணை நடத்தும்படி பிரதமரை கோரியிருக்கிறார்.

ரகசியம்ங்கறிங்க அது எப்படி வெளிய வந்துருச்சுனு கேப்பிக. நம்ம நாட்ல ரகசியங்கள் அதுவும் ராஜரகசியங்களோட லட்சணம் இதுதான். ஸ்டார் நியூஸ் சானல்ல பம்ப் அடிச்சிக்கிட்டிருக்காய்ங்க. அதை தெலுங்கு சேனல் ஒன்னு காப்பியடிச்சு  ஃபிலிம் காட்டிக்கினு கீது.

பிரணபுக்கு ஏன் இந்த சந்தேகம் வந்ததுன்னா சமீபத்துல ஒரு பத்திரிக்கையில வந்த செய்திதான் இதுக்கு காரணமாம்.

எனக்கொரு சந்தேகம் பிள்ளையில்லாத வீட்டில் கிழம் துள்ளி விளையாடுது கணக்கா பிரணப் எங்கனா தனி ஆவர்த்தனம் பண்றாரானு பார்க்க சோனியாஜீயே ஏற்பாடு பண்ணாய்ங்களோ என்னவோ?

என்னைக்கேட்டா கக்கூஸு, பெட் ரூம் தவிர எல்லா இடத்துலயும் சிசி கேமரா வச்சுரனும். தாளி மக்களாட்சியில மக்களுக்கு தெரியக்கூடாத ரகசியம் என்ன இருக்கு?

ரகசியங்கற கான்செப்ட் வந்தாலே சனத்துக்கு ஆப்புதேன். உ. அணு மின் உலைகள்

மேலும் இவிகல்லாம் யாவும் (மானம்,ஈனம்,சூடு,சுரணை,மனிதத்தன்மை)  கடந்த நிலைக்கு வந்து பல காலமாச்சு. ராம் தேவ் பாபாவோட கோவணத்தை துவைச்ச தண்ணிய தலை மேல தெளிச்சுக்கவும் - தீர்த்தமா குடிக்கவும் தயாரான பார்ட்டிங்க இவிக. ரகசியம்னு நினைச்சதெல்லாம் எப்பயோ வெளிவர ஆரம்பிச்சுருச்சு.

என்னடா இது முந்தா  நேத்து நடந்த சமாசாரம். இன்னைக்கு எவனோ நடவடிக்கை எடுக்கறான். நாம அதை தடுத்தா நமக்கும் ஷேர் இருக்கிறதா நினைச்சுரமாட்டாய்ங்களாங்கற லாஜிக் கூட இல்லாத கிராக்கிங்க இவிக.

மைக்ரோ ஃபைனான்ஸ் மேட்டரையே எடுத்துக்கங்க. இந்த நெட் ஒர்க் ப்ரசிடெண்ட் பேங்க் கரப்ட் ஆகிற நிலையில இருந்து  கோடானு கோடி லாவாதேவி பண்றார்.

விதவைகள், கிழவிகள், நடைபாதை வாசிகளை கூட நெட் ஒர்க்ல சேர்த்து வட்டிக்கு வ்ட்டி வசூலிக்கிறாரு. இடையில சோனியா கிட்டே ஆசி வாங்கறாரு. ராகுல் இவரோட தோஸ்துங்கறாய்ங்க

ஆந்திராவுல மைக்ரோ ஃபைனாஸ் அட்டூழியம் ஓவரா போயி பொம்பளைங்கள " வரயா - வாடி - எங்கனா போடி"ங்கற ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்க.

இவிக அட்டாகாசத்துக்கு செக் வைக்க முதல்வர் ரோசய்யா ஆர்டினென்ஸ் கொண்டுவரப்போறோம்னு அறிவிக்கிறாரு. அங்கன தில்லியில இருந்து பிரணப் அதெல்லாம் தேவையில்லைனு பகிரங்கமா ப்ரஸ் காரவுகளுக்கு சொல்றாரு.

சுஜாதா கதையில கிழவாடிகளையெல்லாம் திரு நாடு அனுப்பறாப்ல வரும். சமீபத்துல ராம் தேவ் பாபா ஊழல்வாதிகளை தூக்குல போடனும்னு பேசினாரு. நமக்கு மன்சனை போட்டுத்தள்றதுல சம்மதம் கடியாது. ரஜினியாவே இருந்தாலும் சரியான பார்ட்டி சரியான முகூர்த்தத்துல சரிய்யா உபதேசம் பண்ணா திருந்திர வாய்ப்பிருக்கு.

ஆனால் சில கிழவாடிகளை முக்கியமா பிரணப் மாதிரி கிராக்கிகளை பார்க்கும் போது அவிகளை பத்தின ஒரு சில சேதிகள்  தெரியவரும்போது மேற்படி திரு நாடெல்லாம் ஞா வந்துருதுங்ணா.

இந்த 45 வயசுக்கே வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மை புரிபட்டுப்போயிருச்சு. ஒரு வகையில இது மனிதத்தன்மைக்கு ரெம்ப ஆபத்தானது.

ஒரு காதலன்/காதலியோட உணர்வு புரிபடாது . ஒரு படைப்பாளியின் வேவ் லெங்த் செரிக்காது. இப்படி எத்தனையோ ஆபத்து இருக்கு.

அர்த்தமற்ற வாழ்க்கைய அர்த்தமுள்ளதா ஆக்கறது அட்லீஸ்ட் ஏதோ அர்த்தமிருக்குன்னு மழுப்பறது ஒரு ஐட்டங்கள் தான். அதுல காதல் -கவிதைக்கு முக்கியம் இடம் இருக்கு. இதையெல்லாம் நான் அங்கீகரிக்க காரணம்..

உண்மையான காதலன் ஒரு நாளில்லை ஒரு நாள் பாசாங்கில்லாத ஆன்மீக வாதியா மாற வாய்ப்பிருக்கு.

தமிழ்  நியூஸ் சான்லகள் பற்றி சில வரிகள்:

ஆமாங்னா தமிழ் தமிழ்னு உசுரை விடறோமே பேர் சொல்ற மாதிரி ஒரு தமிழ் நியூஸ் சானல் இருக்கா? சன் நியூஸுக்கு மொத்தமே 3 ரிப்போர்ட்டர் தான் இருக்காப்ல இருக்கு. என்னவோ ரேடியோவுல நியூஸ் வாசிக்கிற மாதிரி வாசிக்கிறாய்ங்களே தவிர விஷுவலா ஒரு மசுரையும் காட்டற மாதிரி இல்லே.

கனிமொழியோட ஜாமீன் மனுவை வாசிச்சு காட்டறாய்ங்க. பாவம் காட்சேவுக்கு ஒரு சேனல் இருந்திருந்தா அவரும் இப்படி தன் வாதங்களை சனத்துக்கு காட்டியிருப்பாரு.

தேர்தல்ல திமுக தோற்க ஆரம்பிச்சதுமே மானாட மயிலாட போட்டுட்டாய்ங்க (கலைஞர்) .ஆமா சன் நியூஸ்ல அம்மா வாசம் கும்முனு வீசுதே என்ன விஷயம்? ஆனால் அம்மா மட்டும் மாறனை போட்டு தாக்கறாய்ங்களே. பாவம் ஒரு தலைக்காதல்னா இதான் போல.

ஜெ நியூஸும் இதே இழவுதான். அம்மா அறிக்கைன்னா தாளி இப்படிக்கு அன்பு சகோதிரி வரைக்கும் ஒரு வார்த்தை விடாம படிச்சுர்ராய்ங்க.

வெறுமனே கேட்க ரேடியோ போதுமே. சாட்சி சேனல் ஒய்.எஸ்.ஜகனோட பைசாவுலதான் நடக்குது. எப்பயோ ஜகன் ப்ரோக்ராம் இருந்தா தவிர நடு நிலை சேனல் எல்லாம் பிச்சை எடுக்கறாப்லதான் நடக்குது.

சந்திர பாபு நியூஸை  ஈ நாடுவை விட  ( ராமோஜிராவ் - கம்மவார் நாயுடு) சாட்சி தான் சூப்பரா கவர் பண்ணுது. டப்பா சானல் எல்லாம் பைட்ஸ் போட்டு தாக்கறாய்ங்க.

என்னதான் வவுத்தெறிச்சலே ஃப்யூயலா போட்டு ஓடினாலும் ஆந்திர ஜோதி என்.டி.திவாரி மேட்டரை கிழி கிழினு கிழிச்சது இன்னம் ஞா இருக்கு.

கொடுக்கல் வாங்கல்ல செட்டில் ஆகாததை மட்டும் ( உம். நித்யானந்தா) சன்ல போடுவாய்ங்க போல.