Showing posts with label golden age. Show all posts
Showing posts with label golden age. Show all posts

Monday, February 14, 2011

ஜெயகாந்தன் எனும் உளறுவாயர்


ஜெயகாந்தனை தெரியாதவுக இருப்பாய்ங்கனு நினைக்கலை. அப்படியே இருந்தாலும் அவிகளும் தன்னை பத்தி தெரிஞ்சிக்கிடனும்னு ஒரு ஆசை அந்த பெருசுக்கு வந்துட்டாப்ல இருக்கு. அதை நிறைவேத்திக்க அந்த பெருச்சு சின்னத்தனமா என்ன செய்துச்சுனு சொல்லத்தான் போறேன்.

கெட்டுப்போயி வந்த பெண்ணை குளிக்க வச்சுட்டு நீ சுத்தமாயிட்டேன்னு அக்னி பிரவேசம் பண்ண செயகாந்தன் இப்படி உளறுவாயரா இருப்பாருனு நினைச்சுக்கூட பார்த்திருக்கமாட்டிங்க. அப்படி என்னதான் உளறிக்கொட்டினாருனு சொல்லத்தான் போறேன்.

எம்.சி.யார் உசுரா இருந்தப்பயே சினிமாவுக்கு போன சித்தாளு எழுதின பார்ட்டிக்கு " நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போயி " உளறியிருக்கு.

அதுக்கு முந்தி செயகாந்தனோட சரித்திரத்துல ஒரு பொன்னேட்டை நீங்க புரட்டியே ஆகனும். அதுக்கான லிங்கை கடைசில தரேன்.

//தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2008, 2009, 2010-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, 2007, 2008-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா,பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.//

தேர்தல் வருதுல்ல..

//விழாவுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். //

பாவம் தாத்தா இந்த வயசுல வை.கோ மாதிரி கட்டுமரமேறி இலங்கைக்கு போயி ஈழத்தமிழர்களுக்கு தோளா கொடுக்க முடியும்?

//பாரதி விருது எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும், சுப்புலட்சுமி விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாலசரஸ்வதி விருது நாட்டியக்கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கும் வழங்கப்பட்டது.//

பாவம் பாரதி. விருது வாங்கின பிறவு ஜெயகாந்தன் பேசின பேச்சை கேட்டிருந்தா ஆன்மா சாவதில்லைங்கற கீதை மொழிய பொய்யாக்கியிருப்பாரு.

ஆமாங்கண்ணா பாரதி விருதை .. என்ன விருது ? ...........பாரதி விருதை வாங்கிக்கிட்டு ஜெயகாந்தன் "இது தமிழர்களின் பொற்காலம்"னு குறிப்பிட்டாராம்.

பாவம் செயகாந்தனுக்கு வயசாயிருச்சு முதுமையில ஏதோ புத்திக்குழப்பம்.. எதையோ உளறிக்கொட்டியிருப்பாருனு நினைப்பிங்க. இல்லிங்கண்ணா இந்திய அமைதிப்படை இலங்கைக்கு போனப்ப இவருக்கு என்னா வயசிருக்கும்? அப்பமே உளறியிருக்காரு. அதை தெரிஞ்சிக்க இங்கே அழுத்துங்க.

இவிக தமிழ் இலக்கிய முன்னோடிங்க.. தூத்தேரிக்க..

நன்றி: இந்நேரம் வலைப்பூ