Wednesday, August 17, 2016

என்ன செய்யலாம் திமுக ?

அண்ணே வணக்கம்ணே !

வெற்றிய தவற விட்டோமே தவிர தோத்துப்போகல,ஜஸ்ட் 23 தான் வித்யாசம் . 1% தான் வித்யாசம்னு கெத்தா போயி அலப்பறை கொடுத்தாய்ங்க.
அந்தம்மா க்ளவரா சட்டசபைக்கு வராமலே செயலகத்துல உட்கார்ந்துக்கிட்டே "தூக்கி வீசிருச்சு"கலைஞர் என்னடான்னா ஆற அமர 22 ஆம் தேதி பொதுக்கூட்டம்ங்கறாரு .

பொதுக்கூட்டத்துக்கு ஆரு வரப்போறா? 90% கட்சிக்காரன் தான் வருவான். இதனால என்ன புண்ணியம்?

1.கலைஞரும் -ஸ்டாலினும் நினைச்சிருந்தா அந்த மவராசிய பேதியாக்கியிருக்கலாம். கலைஞருக்கு இட வசதி மேட்டர்லயே தலைமை செயலக கேட் வாசல்ல போய் தாத்தா உட்கார்ந்து அழிச்சாட்டியம் பண்ணியிருந்தா நேஷ்னல் சேனல்லாம் பதறி அடிச்சு ஓடி வந்திருக்கும்.

2.மாக் பட்ஜெட் போட்டிருக்கலாம். சனங்க மேல பாரம் சுமத்தாம அரசு வருவாயை கூட்டிக்க யோசனைகளை அள்ளி விட்டிருக்கலாம். இந்த காரியத்தை தனி ஒருவனா நானே செய்திருக்கன்.சபா நாயகருக்கு 234 காப்பி அனுப்பி மாமாங்கமாச்சு. இந்த மேட்டரை எல்லாம் தாத்தாவுக்கும் அனுப்பியாச்சு -ஸ்டாலினுக்கும் அனுப்பியாச்சு .கண்டுக்கத்தான் ஆளில்லை

3.சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யனும்னு நேஷ்னல் வைட் நாஸ்தி பண்ணியிருக்கலாம். சுப்ரீம் கோர்ட்ல அவசர மனு போட்டிருக்கலாம். கொய்யால காசில்லன்னா விலகு எங்க செலவுல பண்றம்னு சீன் போட்டிருக்கலாம். ஒன்னும் பண்ணல

4.நமக்கு நாமே டூர்ல ஸ்டாலினுக்கு 4 லட்சம் மனுக்கள் தரப்பட்டதா சொல்றாய்ங்க. எல்லாத்தையும் ஒரு டெம்போல போட்டு த.செயலகம் கொண்டு போய் கொட்டி ரசீது கொடுங்கடான்னு லந்து பண்ணியிருக்கலாம்.

5.செரி தூக்கி விசிட்டாய்ங்க. வேட்டிய உதறிக்கட்டிக்கிட்டு வீட்டுக்கு போயிட்டா ஆச்சா? ஏன் சன் நியூஸ்லயோ -கலைஞர் செய்திகள்ளயோ ஒரு மாடல் அசெம்ப்ளி நடத்தலாமே?

6.சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பை ஒத்தி வச்சானுவளா? இல்லை ஒத்திக்கு விட்டுட்டானுவளா தெரியல. இதுக்கு ஒரு கேசை போட்டு பேதியாக்கியிருக்கலாம்.

7.ஒரு 23 பேர் தான் வித்யாசம்னு வாயால சொல்லிக்கிட்டிருந்தா ஆச்சா? ஒரு 46 பேர் மேல ஃபைல் ரெடி பண்ணி மருவாதியா ராஜினாமா பண்ணனும்.இல்லின்னா மக்கள் மன்றத்துல வைப்போம்னு அனல் காட்டலாம்ல? ஒரு 23 பேராச்சும் பிச்சுக்கிட்டு வந்திருப்பான்ல?

8.சசி கலா புஷ்பா தில்லியில பம்மியிருக்கு . நீ வா தாயி நாங்க செக்யூரிட்டி தர்ரோம்னு ஊருக்குள்ள விட்டிருந்தாலே பித்தம் தலைக்கேறி பாயை பிறாண்டியிருக்கும் அந்தம்மா.

9.பேசிக்கலா சட்டமன்றத்துல திமுக உறுப்பினர்களை அதிமுக தான் ஆப்பரேட் பண்ணியிருக்காய்ங்க. ரேக்கி விட்டு வெளி நடப்பு செய்ய வைக்கிறது முதல் தூக்கி வீசறது வரை .

கலைஞரை வஞ்சா வஞ்சுட்டு போங்கடான்னு "மேட்டரை" மட்டும் பேசியிருக்கனும்.ஸ்டாலினை வஞ்சா வஞ்சுட்டு போங்கடான்னு "மேட்டரை" மட்டும் பேசியிருக்கனும்.

10.இதை விட ஒரு ஹிடன் கேமரா அரேஞ்சு பண்ணி  ஆளுங்கட்சி பவிசை   பதிவு பண்ணி லீக் பண்ணியிருக்கலாம் .

11.அந்த நாள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் எல்லாரும் சஸ்பென்ட் ஆனப்போ ஜெ - பரபரன்னு பேப்பரை திருப்பி ஏத்த இறக்கத்தோட வாசிக்கல. அந்த வேலையை கலைஞர் செய்ய முடியாதா என்ன?

எதிர்கட்சியா இருக்கும் போதே - இந்த ஆட்சியை ஊதித்தள்ளி ஆட்சியை கைப்பத்தற மோமென்ட்லயே இப்படி தூங்கி வழிஞ்சா ..எப்பூடி?