Saturday, September 10, 2011

கால சர்ப்பதோஷமும் -சோனியா மேடமும்




அண்ணே வணக்கம்ணே!
இந்தியா எப்படி லஞ்சம்,ஊழல்ல சிக்கி தவிக்குதோ அப்படி எல்லா கிரகங்களும் ராகு கேதுக்களுக்கிடையில சிக்கியிருக்கிறத காலசர்ப்பதோஷம்னு சொல்றாய்ங்க. இப்படி ஒரு தோஷம் இருந்தா 45 வயசு வரைக்கும் ஜாதகர் வாழ்க்கையில செட்டிலாக முடியாதுனு ஒரு விதி இருக்கு.

ஜாதகத்தை விடுங்க. கோசாரத்துல இப்படி ஒரு நிலை ஏற்பட்ட கால கட்டங்களை எடுத்து ஆராய்ந்தாலே இதனோட இம்பாக்ட் என்னனு புரியும். இன்னைக்கு ஜோதிட மாணவர்களுக்கு (அப்படி ஆருனா இருந்தா) இதான் ஹோம் ஒர்க்.

இந்த தோஷத்துக்கு நிறைய விதிவிலக்குகள் எல்லாம் இருக்கு. அதாவது ஒரே ஒரு கிரகம் வெளிய இருந்தாலும் தோஷம் இல்லை. ராகு ,கேதுக்களுடன் எந்த ஒரு கிரகம் சேர்ந்திருந்தாலும் தோஷமில்லை .

காலசர்ப்பதோஷம்னா என்னமோ ஏதோன்னு பயந்துக்கப்படாது. இதை ஏற்படுத்தறவுக ராகு கேதுக்கள்.
இவிகளை பத்தி கரீட்டா புரிஞ்சிக்கிட்டாலே கா.ச.தோஷம்னா என்னனு புரிஞ்சிரும்.

ஒவ்வொரு கிரகத்துக்கு ஒவ்வொரு காரகம் இருக்கு. உ.ம் சூரியன் = தலை, எலும்புகள் சந்திரன்= மனம், நுரையீரல், சிறு நீரகம்,செவ் = ரத்தம்,எலும்புக்குள்ளான மஜ்ஜை, வெள்ளை அணுக்கள், ராகு,கேது = உடலின் லோயர் மற்றும் அப்பர் பார்ட்ஸ், குரு =இதயம்,வயிறு , சனி =கால்கள், நரம்பு,ஆசனம் ,புதன் =தோல்,கீல்,அண்டம், சுக்கிரன் =இன உறுப்பு.

ராகு கேதுவுக்குரிய முக்கியமான காரகத்வம் விஷம். எல்லா கிரகங்களும் ராகு கேதுவால முற்றுக்கையிடப்பட்டு இருந்தா 7 கிரகங்கள் காரகத்வம் வகிக்கும் எல்லா பாடி பார்ட்ஸும் விஷத்தால் பாதிக்கப்படலாம். ( ஹ்யூமன் பாடில விஷம் எப்படி உற்பத்தி ஆகுதுன்னு ஆடியோ பதிவுல விவரமா சொல்லியிருக்கேன் )

ஒவ்வொரு கிரகமும் ஜாதகருக்கு தொடர்புடைய ஒவ்வொரு ஆசாமிய காட்டும். உ.ம் சூரிய= அப்பா,சந்திரன்=அம்மா,செவ் = சகோதரன்/எதிரி , ராகு = அப்பாவை பெற்ற பாட்டன்,பாட்டி ,குரு =வாரிசுகள்,சனி =வேலைக்காரன்,புதன் =தாய்மாமன் ,கேது = அம்மாவை பெற்ற அம்மம்மா, தாத்தா, சுக்கிரன் =மனைவி

ராகு கேதுவுக்குரிய இன்ன பிற காரகத்வங்கள் சட்டவிரோத செயல்கள்,கள்ளக்கடத்தல், மது,போதை வஸ்துக்கள், சூதாட்டம்,லாட்டரி, இருட்டு, சதி.

எல்லா கிரகங்களும் ராகு கேதுவால முற்றுக்கையிடப்பட்டு இருந்தா 7 கிரகங்கள் யாரையெல்லாம் காட்டுதோ (ஜாதகருக்கு தொடர்புள்ள மனிதர்கள்) அவிகல்லாம் சட்டவிரோத செயல்கள்,கள்ளக்கடத்தல், மது,போதை வஸ்துக்கள், சூதாட்டம்,லாட்டரி, இருட்டு, சதி.ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கலாம்.

என்விரான்மென்டுதான் மனிதனோட மன ஆரோக்கியத்துக்கும் /மன நோய்க்கும் காரணம்னு சைக்காலஜி சொல்லுது. அந்த என்விரான்மென்டையே கிரகம்தான் ஏற்படுத்துதுன்னு அஸ்ட்ராலஜி சொல்லுது.

ராகு கேதுக்கள் நிழல் கிரகங்கள். இந்த கிரகங்கள் தாங்கள் நின்ற பாவங்கள்/ தங்களுடன் இணைந்த கிரகங்களோட சக்தியை அப்படியே உறிஞ்சி எடுத்துரும்னு ஆடியோல சொல்லியிருக்கேன்.

இந்நிலையில் இவற்றின் இடையில் மற்ற எல்லா கிரகங்களும் சிக்கினா என்ன ஆகும்? அந்த கிரகங்கள் தங்கள் சக்தியை இழந்துரும்.

கண்ணதாசன் வாழ நினைத்தால் வாழலாம் .வழியா இல்லை பூமியில்னு பாடியிருக்காரு. இருக்கிறது எட்டு திசை .ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. தாளி எல்லா கிரகமும் ராகு கேதுவுக்கிடையில் சிக்கிக்கிட்டு / தமிழ் நாடு காங்கிரஸ் மாதிரி சோனி(யா) ஆயிட்டா எந்த திசையில போறது .. என்ன இழவெடுக்கிறது.

பொத்தாம் பொதுவா ஒரு கா.ச.தோ பற்றி சின்ன அறிமுகம்தேன் இந்த பதிவு. இதுல ராகு கேதுக்களோட இருப்பு 1-7 லயா? 2 -8 லயா மற்றும் ..........................................................................லயாங்கறதை வச்சு பலன் மாறும்.

அது சரி 45 வ்யசுக்கப்பாறம் மட்டும் என்விரான்மென்ட் மாறிடுமா / ஜாதகனை சுற்றியுள்ள மனிதர்கள் மாறிருவாய்ங்களா? மத்த கிரகங்களுக்கு பவர் வந்துருமா? ஜாதகனோட பாடியில உள்ள விசம் முறிஞ்சு போயிருமான்னு கேப்பிக. சொல்றேன் ..ஹி ஹி நாளைக்கு.

கொய்யால பதிவே முடிஞ்சுருச்சு சோனியாவை எங்கே காணோம்னு கடுப்பாயிராதிங்க. இங்கே அழுத்தினா சோனியாவை பார்க்கலாம் சரியா?