Thursday, August 11, 2011

விளக்கை அணைச்சு..


அண்ணே வணக்கம்ணே !
விரைவில் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கற தலைப்புல ஒரு பதிவு போட்டது ஞா இருக்கலாம். அன்னாஹசாரே ஜோக் பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க விளக்கை அணைக்க சொல்லியிருக்காரு.

இதெல்லாம் ச்சொம்மா ட்ரெய்லர் மாதிரிதான். இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ தெரியலை. 2011 ஏப்.15 முதல் செப்.27 க்குள் இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்ங்கறது நம்ம கணிப்பு.இன்னம் ஒரு தாட்டி ரிவைஸ் பண்ண நினைக்கிறவுக இங்கே அழுத்துங்க.

சோனியா ஆட்டம் க்ளோஸுன்னு ஒரு பதிவு போட்டேன். சோனியாஜீக்கு செர்விக்கல் கான்சர்.கட்சி பொறுப்பு ராகுல் காந்திக்காம், இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ தெரியலை.

நிலத்துல கால்பாவாத சமாசாரமா பேசிக்கிட்டிருந்தா மூளை பஜ்னு ஆயிருது ( நன்றி:சுஜாதா) அதனால கொஞ்ச நாழி நாட்டு நடப்பை பத்தி டச் பண்ணுவம். அப்பாறம் அவன்-அவள் -அது .

அரசாங்கங்களோட முடிவை - நாட்டு நடப்பை பத்தி பேசாதவுக கிடையாது.ஏன்னா இதெல்லாம் நம்ம வாழ்க்கையை நேரிடையா பாதிக்ககூடிய விஷயங்கள். நம்ம இந்திய நாடு ஐ மீன் நடுவண் அரசு தன் ஆதரவு இலங்கை அரசுக்கா , புலிகளுக்காங்கற மேட்டர்ல எடுத்த முடிவு நம்ம வாழ்வை எப்படியெல்லாம் பாதிச்சுருச்சு - இனி பாதிக்கப்போவுதுன்னு ரோசிச்சு பார்த்தா கண்ணை கட்டுது.

இலங்கைக்கு கொட்டி கொடுத்தாச்சு காசு பணம் ,ராணுவ உதவி , 1லட்சத்து 20 ஆயிரம் உசுருங்களை அள்ளொ கொடுத்தாச்சு. ஆனால் இப்பம் அவன் சீனாவுக்கு தாணா போடறான்.அமெரிக்கா அவனுக்கு ஆனா (ஆப்பு) வைக்கறேன்னு கிளம்பிட்டான். இவனும் அவனும் முட்டிக்குவான்.( சீனா -அமெரிக்கா) . நம்ம ஆட்சியாளர்கள் அமெரிக்காவுக்கு சால்ரா போட்டே ஆகவேண்டிய கட்டாயம். பீஜிங், நியூயார்க் என்ன ஆகுதோ அது அப்பாறம்.மொதல் ஆப்பு சென்னைக்கும் இந்திய நகரங்களுக்கும் தேன். ஏன்னா இப்பம் சீனா பீஜிங்லருந்து எதையும் ஏவ தேவையில்லை. இலங்கையிலயே எல்லா ஏற்பாடும் இருக்காமே.இதுல பக்சே சீனப்பயணம் வேற. அந்தாளு போய் மூக்கை சிந்தி ..ஹும் இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ?


பேசிக்கலா நாம ட்ரீமர்தான். ஆனால் அப்பாவோட நேர்மை - அது பரிசா தந்த ஒரு சில ப்ராக்டிக்கல் டிஃபிகல்ட்டீஸ் - நாம செய்துக்கிட்ட காதல் திருமணம் - கட்டிக்காத்த தன்மானம் -ஈவு இரக்கம் இத்யாதி எல்லாம் நமக்கு செமர்த்தியா ஆப்படிச்சு கற்பனை தேர்ல பறந்துக்கிட்டிருந்த நம்மை இந்த பூமியில லேண்ட் ஆக வச்சுருச்சு.

இந்த காலத்து யூத்து மாதிரி ஸ்போர்ட்ஸ் பேஜ் , சினிமா பேஜை மட்டும் பார்க்காம எமர்ஜென்சி காலத்துலருந்தே நியூஸ் பேப்பருங்களை ஃபாலோ பண்ணிட்டு வந்ததால - ஒரு கட்டத்துல ஸ்தூல செய்தியை வச்சு பின்னணியை கெஸ் பண்ற கப்பாசிட்டி வந்துட்டதால மைக்ரோவையும்
மேக்ரோவையும் இணைக்க முடிஞ்சது.

மேலும் ஏதோ நம்ம லக்னாதிபதி லாட்ஜு வைத்தியர் மாதிரி சுற்றுப்பயணத்துலயே இருந்ததால "இத்தீனிக்கப்பாறமும்" இன்னம் நம்ம மனசுல முடிச்சுகள் விழாம எஸ்கேப் ஆயிக்கிட்டிருக்கோம். நாம சோசியம் சோசியம்னு எழுதறத படிச்சுட்டு நம்ம முருகேசண்ணன் பாவம் சோசியத்துல மூழ்கி இதான் உலகம்னு நினைச்சிட்டு இருக்காருன்னு ஆருனா நினைச்சா மிஸ்டேக். ஹிஸ்டாரிக்கல் மிஸ்டேக்.

நாம இந்த சமுதாயத்தோட இருட்டு பிரதேசங்களை எல்லாம் தரிசிச்சிருக்கோம். ங்கோத்தா வாழ்ந்தும் இருக்கோம். பை மிஸ்டேக் நமக்கு கொஞ்சூண்டு மூளையும் அனலடிக்கல் திங்கிங்கும் இருக்கிறதால -அதுக்கெல்லாம் ஆதி என்ன அந்தம் என்னன்னு ஒரு கணக்கு போட்டு வச்சிக்கிட்டோம். அதாங்க மைக்ரோ மேக்ரோ .

அந்த இருட்டு பிரதேசங்களையெல்லாம் வெளுக்க சூப்பர் ரின் கணக்கா தீர்வுகளும் வச்சிருக்கோம். இந்த ட்ரை க்ளீனிங் வேலைய ரெண்டு பாய்ண்ட்ல இருந்து ஆரம்பிக்க வேண்டி இருக்கு.டாப் டு பாட்டம் நாறிப்போயிருக்கு.

வெளுப்பு வேலைய டாப்லருந்து ஆரம்பிச்சு பாட்டம் வரனும்னாலும் லேட் ஆயிரும்.பாட்டம் டு டாப் வெளுக்கப்பார்த்தாலும் லேட் ஆயிரும்.அதனாலதேன் ஒரே சமயத்துல ரெண்டு பக்கமும் வெளுத்துக்கிட்டிருக்கோம்.

டாப்புன்னா அமெரிக்கா பாட்டம்னா நம்ம ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க.ஆன்மீக ரீதியில பார்த்தாலும் - க்ளோபலைசேஷன் கோணத்துல பார்த்தாலும் நாமெல்லாம் ஒரே படகுல தேன் பயணம் செய்துக்கிட்டிருக்கோம்.

நம்ம பயணத்தை நெம்பர் ஆஃப் ஃபேக்டர்ஸ் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது. நம்ம பயணமே அழிவை நோக்கித்தேன். ஏதோ ஆரு செய்த புண்ணியமோ நம்மை ஆள்றவுக எண்ணங்கள் ஒரு சிலது உடனடியா நிறைவேற மாட்டேங்குது . அதெல்லாம் நிறைவேறியிருந்தா இந்தியா ஒரு பெரிய சுடுகாடா மாறியிருக்கும்.அதுலயும் ஏழை பாழை - எஸ்.டி. எஸ்.சி (தலித்)க்கு இடம் இருந்திருக்காது அது வேற விசயம்.

அல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கோம். சிறப்பு பொருளாதார மண்டலம்- அணு மின் நிலையங்கள் -துறைமுக விரிவாக்கங்கள் - இரும்பு தாது விவகாரம் -பாக்சைட் -கோதாவரி பேசின்ல எரிவாயு. இப்படி ஒன்னே இல்லை ரெண்டே இல்லை . நூத்து பதினெட்டு விசயங்களை கவனிச்சுக்கிட்டுதான் இருக்கோம்.

ஆனா சோசியத்தை பத்தியே எழுதிக்கிட்டு இருக்க ஒரு காரணம் இருக்கு. சோசியம் தேன் சனங்களுக்கு அவன் எப்பேர்ப்பட்ட புடுங்கியா இருந்தாலும் "மவனே .. உன் தனிப்பட்ட வாழ்விலான சுக துக்கம்லாம் நீ உழைச்சு/திருடி சேர்க்கற பணம், பதவி,அதிகாரத்துக்கு அப்பாற்பட்டும் வரக்கூடியதுன்னு சோசியம்தேன் ஆணித்தரமா சொல்லுது.

இந்த உலகத்துல பசி சுரண்டல் எல்லாம் இன்னம் தொடர ஸ்தூலமான காரணம் லட்சம் இருந்தாலும் மன்சனுக்கு அவனோட வாழ்க்கையை பற்றின இந்த சின்ன புரிதல் கூட இல்லாததேனு நம்பறேன்.

அமெரிக்காவ பாரு அமெரிக்காவ பாருன்னு அலட்டினானுங்க அங்கன நிலைமை என்ன? கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் வருவாய் 18 % அதிகரித்துள்ளது. உழைப்பாளர்களின் வருமானம் 12 % குறைந்துள்ளது.(தகவல்: தினமணி) இந்த வித்யாசம் தேன் எல்லா பிரச்சினைக்கும் ஆணிவேரு.

ஆத்தா கசப்புக்கும் கருணை காட்டறாள். ஆனால் அந்த ஆசாமி ரியலைஸ் ஆகனும். நாம இத்தீனி அட்டூழியம் செய்தும் தெய்வம் இன்னம் நம்மை உசுரோட விட்டுவச்சிருக்கு இதுக்கு என்ன காரணம்னு ரோசிக்கனும். செயல்படனும். இல்லாட்டி கக்கூஸ் போறப்ப மலக்குடலே பேசின்ல வந்து விழுந்து செத்துப்போயிருவான்.

காந்தி தாத்தா ஒரு மேட்டர் சொல்வாராம். எவனும் தன் ப்ராப்பர்ட்டிக்கு தான் தான் சொந்தக்காரன்னு நினைக்கக்கூடாதாம். தன் சொத்துக்கு தன்னை ஒரு ட்ரஸ்டியாத்தான் நினைக்கனுமாம். இப்படி ஒரு நினைப்பு இருந்தா ஏழை பணக்காரன் வித்யாசம்லாம் ஒடிப்போயிரும்.

பொது நலம் பொது நலம்னு அலட்டிக்கிட்டாய்ங்களே அதுவே பெரிய சுய நலம். ஆமாண்ணே.. சுய நலத்தோட செயல்படும்போது பாடி,மைண்ட்,நாலெட்ஜு எல்லாமே தேசலாத்தான் வேலை செய்யும். பொது நலத்தை நாடி செயல்பட ஆரம்பிச்சா மைண்டு எக்ஸ்ட்ரா ஹார்ட் டிஸ்க் போட்டு ராம் மாத்தி ஃபார்மெட் அடிச்ச கம்ப்யூட்டர் மாதிரி பறக்கும்.

டெக்னிக்கலா பார்த்தாலே பொது நலம் தேன் உண்மையான சுய நலம். நாம சுய நலத்தோடசெயல்படும் போது எல்லாமே சுருங்கி போயிருது. பொது நலம் கருதி ஃபீல்டுக்கு போறச்ச நம்ம பின்னாடி ஒரு சக்தி செயல்பட ஆரம்பிச்சுருது.

காந்தி எல்லாம் வக்கீலாவே தொடர்ந்திருந்தா வாய்தா வக்கீலாத்தான் குப்பை கொட்டியிருக்கனும்.பொஞ்சாதி 6 மாசத்துல விவாகரத்து பண்ணிட்டு போயிருக்கும்.

எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ வந்துட்டம். ஆத்தா ஆத்தான்னு புலம்பறது நாலு கை ,ஆயிரம் கண்ணு கொண்ட பார்ட்டிய் எப்படியாச்சும் காண்டாக்ட் பண்ணி தமிழக முதல்வர் பதவியை வரமா கேட்கறதுக்கு இல்லிங்ணா.( கலைஞரோட சொத்துப்பட்டியலை பார்த்திங்கல்ல)

ஆத்தா ஆத்தான்னு புலம்பிக்கிட்டு இருக்க காரணம் இந்த உலகம்ங்கற பஸ் ஸ்டாண்ட்ல மரணங்கற பஸ் வர்ரதுக்கு மிந்தி இதை வீடா நினைச்சு ஏமாந்துராத இருக்கத்தேன். பஸ் வர்ர வரை நம்மால முடிஞ்ச அளவு இந்த பஸ் ஸ்டாண்டை சுத்தப்படுத்திரனும்.

சக பயணிகள்ள பல பேரு இந்த பஸ் ஸ்டாண்டை நிரந்தர வாசஸ்தலம்னு நம்பி கடைக்கால் போட்டு சுவரெழுப்பிட்டானுவ. அவனுகளையும் கொஞ்சம் உசுப்பனும். இந்த அஜெண்டா அமலாகுதோ இல்லியோ ங்கொய்யால நாம ஏமாந்துரமாட்டம்.

பஸ் ஸ்டாண்டை வசிப்பிடமா கொள்ள மாட்டோம். அதுக்குத்தேன் ஆத்தா புலம்பல்.