Thursday, August 25, 2011

அல்லாருக்கும் கூகுல் ஆட்சென்ஸ்: நெஜமாலுமே


வணக்கம்ணே.

கூகுல் ஆட் சென்ஸ்னா அல்லாருக்கும் தெரியும். அதுக்கு முயற்சி பண்ணாதவுகளை விரல் விடு எண்ணிரலாம். ஆரம்பத்துல ராமர் கோவில்ல சுண்டல் மாதிரி கச்சா முச்சான்னு கொடுத்த சமயம் நாம ஊர்ல இல்லை . இப்பம் ஆயிரத்தெட்டு கண்டிஷனு.

ஆனால் ஆட் சென்ஸ் மூலமா சில்லறை தேத்த ஒரு குறுக்கு வழி இருக்குதுங்ணா அதை சொல்லத்தேன் இந்த பதிவு.

.என்னடா இது ஆத்தாளை விட்ட மாதிரி பாலபாடத்தையும் திராட்டுல விட்டுட்டானான்னு பேஜார் படாதிங்கண்ணே. இன்னைக்கும் பால பாடம் தொடருது. நாளைக்கு ஆத்தாவும் வந்துருவா. மொதல்ல ஆட் சென்ஸ் கதைய பார்ப்போம்.

ஓசில எஸ்.எம்.எஸ் அனுப்பவே மஸ்தா சைட்டுங்க கீது. அதுல் இண்ட்யா ராக்ஸும் ஒன்னு. நாம டைரக்டா போயி ஆட்சென்ஸ் கேட்டாத்தானே கூகுல் காரன் டகுலு காட்டறான்.இண்ட்யா ராக்ஸ் காரவுக சூப்பர் ஆஃபர் வச்சிருக்காய்ங்கண்ணா.

ஒன்னுமில்லை இதே சைட்ல வலப்பக்கம் இருக்கிற இண்ட்யா ராக்ஸ் விளம்பரத்தை க்ளிக் பண்ணி அங்கே போய் சைன் அப் பண்ணிக்கங்கோ.

ஒருபத்து ஃபோட்டோ அப்லோட் பண்ணனும். ( கூகுல் காரன் கண்டிஷன்ஸுக்கு ஒத்துவரலைன்னா சங்குதேன்.போர்னோ வயலன்ஸ் தவிர்க்கவும்)

உங்க ப்ரொஃபைலை 50% ஃபில் அப் பண்ணிருங்கோ .கூகுல் ஆட்சென்ஸுக்கு நீங்க குவாலிஃபை ஆயிருவிங்கோ. (ப்ரிலிமினரியா) . கங்க்ராஜுலேஷன்ஸ் யுவார் குவாலிஃபைட் ஃபார் ஆட்சென்ஸுன்னு இன்ட்யா ராக்ஸ் சொல்லும்.அப்படியே நம்பிராதிங்க.

அதுக்கப்பாறம் இங்கே போயி கூகுல் ஆட்சென்ஸுங்கற ஐட்டத்தை க்ளிக் பண்னுங்கோ . உங்க மெயில் ஐடியை கேட்கும். ஏற்கெனவே ஆட்சென்ஸுக்கு அப்ளை பண்ணி ஊத்திக்கிட்ட ஐடிய தராதிங்க.

உங்க மெயில் ஐடி ஓகே ஆனதும் கூகுல் ஆட்சென்ஸ்லருந்து உங்களுக்கு மெயில் வரும் ( நீங்க கொடுத்த ஐடிக்கு) அதுல உள்ள லிங்கை க்ளிக் பண்ணி ஆட்சென்ஸ் அப்ளிக்கேஷனை ஃபில் அப் பண்ணனும்.

அதுல கடைசியில கிரான்ட் ஆக்சஸ் டு இண்ட்யா ராக்ஸுன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும்.அதுக்கு சம்மதிச்சு சப்மிட் பண்ணிருங்கோ.

உங்க ப்ரொஃபைல் ,உங்க ஃபோட்டோஸ்ல வில்லங்கம் எதுவும் இல்லின்னா ஆட்சென்ஸ் வந்தே உடும்.

துள் பண்ணுங்க.

இது மட்டுமில்லிங்ணா அஃபிலியேட் ப்ரோக்ராம்லாம் தர்ராங்கோ. அவிக குடுக்கற html கோடை கொண்டாந்து நம்ம சைட்ல போட்டுக்கினா போதும். நம்ம சைட்டுக்கு வர்ர சனம் அதை கிள்ளி அடச்சீ க்ளிக் பண்ணி அங்கன போயி -ஆட்சென்ஸுக்கு குவாலிஃபை ஆவனுங்கோ. அப்பத்தேன் சில்லறை . இல்லைன்னா நாயர் கடை பொறை.


இன்னாடா இது முருகேஸு அள்ளி உடறாரு போலன்னு சம்ஸயமா இருந்தா இங்கே பாருங்கோ. இப்பம் புரியுதா?

இதுல இன்னா இன்னாமோ ஆஃபர் எல்லாம் குடுத்துக்கிறாங்கோ. நம்ம மூலமா ஒரு பார்ட்டி இண்ட்யாராக்ஸ்ல சேர்ந்து அந்த பார்ட்டி கூகுல் ஆட்சென்ஸுக்கு குவாலிஃபை ஆயிட்டா தலைக்கு ரூ.15 வெட்றாய்ங்களாம்.

ச்சொம்மா ச்சொம்மா அக்கப்போருங்களை பட்ச்சிக்கினு கண்ணை டப்ஸாக்கிற நேரத்துல இதை ட்ரை பண்ணி பார்க்கலாம்ல.வெந்தா தலைக்கு பதினைஞ்சு இல்லாங்காட்டி பத்து நிமிட் வேஸ்டா போச்சுன்னு சமிச்சுருங்க நைனா..

இன்னாபா இது பாலபாடத்தை படிக்காம போய்க்கினே கீறே.. இன்னாது மொதல்ல இண்ட்யாராக்ஸா .. சரி பாஸு .. அதை முடிச்சுட்டு வந்து பால பாடம் பட்ச்சிக்கினம். கேள்வியெல்லாம் கேப்போமில்லை.

சந்திர சனி சேர்க்கை:
பொதுவாக சனி,சந்திர சேர்க்கை ஜாதகருக்கு நல்லதல்ல. இதனால் அடுத்தவரை அச்சுறுத்தி வேலை செய்யவைக்கும் தன்மை ஏற்படும் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. சூழல் மாறும்போது இவரது பேச்சு பிறர் மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். எதிர்காலத்தில் இவருக்கு நுரையீரல் ,சிறு நீரகம் ,மனம், கால், ஆசனம் ,நரம்பு தொடர்பான பிரச்சினைகளும் வரலாம்.

லக்னம் மிதுனமாகி 9ல் சந்திர சனி சேர்க்கை:
சந்திர சனிகள் தங்கள் லக்னத்துக்கு 10+ 4/5 க்கு அதிபதிகளானதால் இதன் இம்பேக்ட் மேற்சொன்ன விதத்தில் தொழில்,உத்யோகத்திலும் இருக்கும். வீட்டிலும் தொடரும். தாய் ,வீடு,வாகனம், புத்தி, மன அமைதி, நற்பெயர் வகைகளில் ஒரு வித அஸ்திரமான ( நிலையற்ற) தன்மை இருக்கும். மாதத்தின் ஒரு 14 நாட்களுக்கும் அடுத்த 14 நாட்களுக்கும் பெருத்த வித்யாசம் இருக்கும்.
பரிகாரம்:
கன்னியா குமாரி அம்மனை வழிபடவும்.( அம்மன் பாவாடை சட்டை அணிந்து பெரிய மூக்குத்தியுடன் இருப்பார்) நிலாச்சோறு தின்னவும். ஊஞ்சலில் ஆடவும். வண்ண மீன்கள் வளர்க்கவும். தியானம் அத்யாவசியம். தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் அதிகமானவை என்னவோப்பா நல்லாதான் போய்கிட்டிருந்தது திடீர்னு அப்டி ஒரு முடிவை ஏன் எடுத்தேனு தெரியலை இப்படி ஆயிருச்சு என்பதாகவே இருக்கும்.

புத்ரஸ்தானாதிபதி+ரோகாதிபதி:
குழந்தை பேறு தொடர்பான வேலைகள் அனைத்தையும் கடன் வாங்கியே செய்யவும். ( உறவுக்கு முன் அருந்தும் பால், இரட்டைகட்டில்/பாய் வரை )
பாக்யாதிபதி ஐந்தில்:
இது ரொம்ப விசேஷமான அமைப்பாகும் . எனவே தங்கள் தந்தை இறந்திருந்தால் அவருடைய அல்லது அவர் வழி முன்னோரில் ஒருவரது மறுபிறவி உங்களுக்கு வந்து பிறக்கலாம்.
சூரியன் ரோகஸ்தானத்தில்/ விரயஸ்தானத்தில்/அஷ்டமஸ்தானத்தில்:
தந்தை வழி முன்னோரை நினைத்து சனிக்கிழமை தோறும் காகத்துக்கு சோறு வைத்து ப்ரீதிசெய்யவும்.

குழந்தை பிறப்புக்கு தடை :
2/8 ல் ராகு /கேது குடும்பம் பெருகுவதை தடை செய்யும் .உடல் நலத்தில் தற்போதைய வைத்தியத்தால் கண்டுபிடிக்க முடியாத/ தீர்க்க முடியாத பிரச்சினைகளை தரும்.
.செவ்வாய்+ கேது சேர்க்கை:
செவ்வாய் ரத்தத்துக்கு அதிபதி/ நோய் எதிர்ப்பு சக்தியை தரும் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜைக்கு அதிபதி இவரே . இவர் கேதுவுடன் சேர்வது நல்லதல்ல
சனியுடன் சந்திரன்:
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர்



சூரியன் சுபனாகி பலம் பெற்றால்:
ஜாதகருக்கு தந்தை,சிறிய தந்தை , பெரிய தந்தை போன்றோரின் அன்பு, ஆதரவு கிட்டலாம்.
9 ஆம் பாவம் சுபபலமாகி அந்த பாவம் சரமானால்:
தூர தேச பிரயாணம், அங்கு வேலை வாய்ப்பு, ,தந்தை வழி சொத்து வகையறாவிலும் அனுகூலமே.
சுக்கிரன் சுபனாகி பலம் பெற்றால்:
தென் கிழக்கு திசையில் உள்ள நாடுகள் , ஊர்கள் ,பெண் பெயர் கொண்ட ஏரியா,ஊர்,மாவட்டம் அனுகூலம்.
4ல் சனி :
தாய் பெரிதாக கல்வியறிவில்லாதவராக, காலில்/ நடையில் பிரச்சினை உள்ளவராக, கரிய நிறம் கொண்டவராக நீண்ட ஆயுள் படைத்தவராக இருக்கலாம். என்றாலும் ஜாதகருக்கு கல்வியில் தடை ஏற்படலாம். ஓரிரண்டு கல்வியாண்டுகள் வீணாகலாம்.
2ல் சூரியன் /செவ்வாய்:
கண் ,( சிவத்தல், எரிச்சல்) தொண்டை தொடர்பான பிரச்சினை வரலாம். ஜாதகர் அனாவசியமாக பேசி எதிராளிக்கு கோபம் வரவைப்பவராகவும் இருக்கலாம். வீண் செலவுகளை அஞ்சாது செய்வார்.குடும்பத்தின் அமைதியை குலைப்பவராகவும் இருக்கலாம்.
சந்திரன் பாவனாகி லக்னம் அ ஏழில் :
ஜாதகருக்கு மனம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். தூக்கத்தில் உளறுதல். கெட்ட கனவாய் காணுதல். இல்லாத பொல்லாத சென்டிமென்ட்ஸை ஃபாலோ செய்தலும் இருக்கலாம். ஜாதகர் தம் கருத்தை, நட்பு வட்டத்தை, காதலியை ,பிசினஸ் பார்ட்னரை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் இயல்புடையவராக இருப்பார். இவை கட்டுக்குள்ளிருக்கவே மேற்படி பரிகாரங்கள்.
6+8/12
ஜாதகர் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர்/இவர் வழக்கில் பிரதிவாதி ஒருவர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார் ஜாதகருக்கு எவ்வித சுகவீனம் ஏற்பட்டாலும் அது விரைவில் குணமடையும். ஜாதகர் எவ்வளவு கடன் வாங்கினாலும் அது தீர்ந்துவிடும். அதே நேரத்தில் ஜாதகருக்கு பொருளாதார நெருக்கடியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
லக்னம் கன்னி/மிதுனமாகி லக்னாதிபதி பலம் பெற்று விரயத்தில் நின்றால்:
ஒரே நேரத்தில் பல விஷயங்களில் தலையிடும் குணமிருக்கும். அவற்றை இவர் தனக்காக செய்யாமல் ஒரு கன்சல்டன்ட் /லைசன் ஆஃபீசர்/பி.ஆர்.ஓ /அஃபிஷியல் ஸ்போக்ஸ் மேன் என்ற வகையில் தம் கட்சிக்காரர்களுக்காக செய்தால் பிரச்சினை குறையும்.
சூரியன்+புத
ஜாதகர் உடலில் எங்கேனும் வெள்ளை தேமல் போன்று இருக்கலாம். இது வியாதியல்ல யோகத்தின் அறிகுறி. கவலை வேண்டாம்.
5ல் சனி:
புத்திக்குறை,மானபங்கம், தோல்விகள் ஏற்பட்டிருக்கலாம். பித்தர் போல் பேசுதல், வாதம் செய்தலும் நடந்திருக்கலாம்.
6ஆமிடம் சுபபலமானால்: ( ஐ மீன் கெட்டு நாசமா போகனும்)
நினைத்ததை சாதிக்கும் வல்லமை ஏற்படும் கடன் தீரும். நோய் குணமாகும். எதிரிகள்,போட்டியாளர்கள் ஓடி ஒளிவர். வரவேண்டிய கடன் வசூலாகும். (ஜாதகருக்கு / குடும்பத்துக்கு வரவேண்டியவை வந்து சேரும்)
கோசாரத்தில் 6 ல் சனி வந்தால்:
சமீப காலமாய் ஜாதகர் மனதில் எதிராளிகளை பற்றிய ஒரு அலட்சிய பாவம்/தான் சொன்னதே சரி என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது. இது ஓவராகாமல் பார்த்துக்கொள்ளவும்.