Tuesday, August 16, 2011

கில்மாவும் ஆன்மீகமும்


காமி கானி வாடு மோட்சகாமி காலேடு - இது தெலுங்கு பழமொழி. இதுக்கு " காமத்தை விரும்புபவனாய் இல்லாதவன் மோட்சத்தை விரும்புபவனாக முடியாதுன்னு அருத்தம். கில்மா ஒரு படப்பாடல்னா ஆன்மீகம் சூப்பர் ஹிட் இரவு காட்சி.

2000 டிசம்பர் 23 முதல் நாளிது வரையிலான என் ஆன்மீக அனுபவங்களை சொல்லத்தான் இந்த தொடரை ஆரம்பிச்சேன். அனுபவங்கள்னா இதுல கில்மாவும் அடக்கம் தானே.

அதை விட்டுட்டு எழுதினா இது எப்படி முழுமையான அனுபவமாகும். 1984 ( சம்மர் ஹாலிடேஸ்) முதல் 1986 ஜனவரி 1 வரை காஞ்ச மாடு கம்பங்கொல்லையில விழுந்த கணக்கா எக்கு தப்பா -தப்பு தப்பா - நிறைய தப்பு பண்ணாலும் - 1986 ல ஒரு 3 மாசம் பிரம்மச்சரியத்தை முயற்சி பண்ணாலும் -அது அசம்பவம்ங்கற ஞானோதயம் நடந்துட்டதால இந்த மேட்டர்ல ஒரு கன்க்ளூஷனுக்கு வந்தாச்சு.

ஓஷோ புக்ஸ் படிக்கிறதுக்கு மிந்தியே பிரம்மச்சரியத்துக்கும் - காமத்துக்கும் உள்ள சரியான லிங்கை புரிஞ்சிக்கிட்டாச்சு. நமக்குன்னு ஒரு விதியை ஏற்படுத்திக்கிட்டாச்சு. 1988 - 1989 லயே நமக்குள்ள ஒரு அவதானம் - நிதானம் ஏற்பட்டு போச்சு.

செக்ஸ் வித் ரெகுலர் இன்டர்வெல்ஸ் ஒன்னுதேன் பிரம்மச்சரியத்துக்கு உதவும்னு அனுபவப்பூர்வமா தெரிஞ்சுக்கிட்டம். 1991 நவம்பர்ல திருமணமும் நடந்தாச்சு. என்னதான் வாழ்க்கை போராட்டங்கள் இருந்தாலும் கில்மா மேட்டர்ல நவகிரகங்களால வேலை செய்யமுடியாம போயிருச்சு. இதுக்கு காரணம் சின்ன புரிதல்தான்.

2000 டிசம்பர் 23 ல பீஜாக்ஷர ஜெபம் ஆரம்பிக்கிறச்ச கில்மாங்கறது நம்ம லைஃப்ல இன்னொரு ட்ராக்ல பேர்லலா போயிட்டிருக்கும். உடல் ரீதியான தேவை ஏற்படும் போது அந்த ட்ராக்ல கிராஸ் ஆகி கில்மாவுடன் சின்ன கைகுலக்கல். அதுக்கப்பாறம் நம்ம லட்சிய பயணத்தை தொடர்ரதுன்னு ஒரு டிசிப்ளின் ஏற்பட்டு போச்சு.

மன ரீதியான வக்ரங்கள்,தூண்டுதல்கள் எல்லாம் எகிறிப்போயிருக்க இந்த கில்மா மேட்டர்ல மட்டும் ஒழுங்கு மரியாதை பாடியோட அஜெண்டா படி போக ஆரம்பிச்சிருந்தோம்.அதனால நம்ம தபஸ் எந்த வித இன்டரப்ஷனுமில்லாம பக்காவா கன்டின்யூ ஆச்சு.

2003 ஜூன்ல பொஞ்சாதி கோவிச்சுக்கிட்டு போன பிற்பாடு இந்த மேட்டர் எப்படி நம்மை எஃபெக்ட் பண்ணுச்சுங்கற விசயத்தை அப்பாறம் பார்ப்பொம்.

பிரம்மச்சரியம் தான் தியானத்தை தரும். தியானம் யோகத்தை தரும் .யோகம் முக்தியை தருங்கறது சனங்க வ்யூ. நம்மை பொருத்தவரை தியானம் -யோகம் இத்யாதி காரணமா ஜஸ்ட் ஏஸ் எ பை பிராடக்ட் பிரம்மச்சரியம் கை வரும்.

ஓஷோ மேட்டர்ல ஒரு சுவாரஸ்யம். மொதல் மொதலா ஓஷோவை பத்தி படிச்சப்ப /ஓஷோவை பற்றி யாரோ ஒரு ப்ரொஃபெஷ்னல் கன்டென்ட் ரைட்டர் எழுதினதை படிச்சதாலயோ என்னமோ மனசுக்கே வரலை.

ஆனால் காலக்கிரமத்துல ஓஷோவின் நேரடி பேச்சுக்களின் மொழிபெயர்ப்புகள் படிக்க கிடைச்ச பிற்பாடு லோக்பால் மசோதாவுக்கு பாராளுமன்ற ஒப்புதல் கிடைச்சா அன்னா ஹசாரே எப்படி துள்ளிக்குதிப்பாரோ அப்படி ஒரு மன நிலை நமக்கு ஏற்பட்டது.

கில்மாவை பொருத்தவரை ஓஷோ கிட்டே கத்துக்கிட்டதுன்னு பார்த்தா ரெம்ப குறைவுதான்.ஆனால் கில்மாவை பற்றிய என் பார்வைக்கு அங்கீகாரம் கிடைச்சதென்னவோ ஓஷோவின் பேச்சுக்களில் தான்.தியானம் - கடவுள் - படைப்பு இத்யாதி குறித்த விளக்கங்களை பொருத்தவரை ஒஷோ தான் நமக்கு சுப்ரீம்.

கில்மாவுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்புங்கற விஷயத்தை பற்றி ஏற்கெனவே திகட்ட் திகட்ட எழுதிட்டதாலயும் - சனம் நம்ம பழைய பதிவுகளை நோண்டி நுங்கெடுக்கிறாதாலயும் இந்த டச் போதும்னு நினைக்கிறேன்.

உபரியா ஒரு அனுபவத்தை இந்த பதிவின் மூலம் ஷேர் பண்ணிக்கிறேன்.

1997 நவம்பர்ல பூர்விக சொத்து செட்டில்மென்ட்ல ஒரு லட்சத்து ரெண்டாயிரம் வந்ததுல ரெண்டு வட்டிக்கு விட்டு நாறிப்போன கதையை ஏற்கெனவே சொல்லியிருப்பேன்.

அப்படி வாங்கிக்கிட்ட பார்ட்டி ஒருத்தனை வேட்டையாடிக்கிட்டிருந்த சமயம் . ஐ மீன் ஆள் காணவில்லை ரேஞ்சுக்கு போயிட்டான். அவிக ஏரியால முகாமிட்டு கேட்ச் பண்ணனும். ரோட்ல வெய்ட் பண்ண வேண்டியது. திடீர்னு ஏதோ ஒரு பிக்காலி "இன்னாபா இங்க வெய்ட் பண்றே.அவன் இப்பத்தான் வீட்டுக்குள்ள போனதை பார்த்தேன்"னு ஊத்திவிட்டதும்..மறுபடி அவன் வீட்டண்டை போக வேண்டியது.
ஏமாந்து மறுபடி ரோட்டுக்கு வரவேண்டியது இதே ரேஞ்சுல ஷட்டில்.

நிலைமையா ரெம்ப மோசம். அந்த பரதேசி 23 ரூவா கிட்டே தரனும். அதுல ஒரு 3 ஐ மட்டும் கொடுத்தாலே ஒரு 3 மாசத்துக்கு பிரச்சினை இல்லாம இருக்கலாம் போன்ற நிலை. இப்படி ரோட்டுக்கும் அவன் வீட்டுக்கும் அலைஞ்சுக்கிட்டு கிடக்கோம்.

அவிக வீடு உள்ள சந்துக்கு டர்ன் ஆறதுக்கு முந்தின தெருவுல ஒரு அம்மன் கோவில். கோட்டை கணக்கா பெரிய ரெட்டை கதவு. கதவுக்கு நேர கர்பகிருகம். லெஃப்ட் அண்ட் ரைட்ல க்ர்பகிருகத்தை வலம் வர்ரதுக்கு விசாலமான இடம்லாம் உண்டு.

கடேசியா அவன் வீட்டண்டை போகப்பொறேன்.ஹவுஸ் ஓனருக்கு வாடகை கொடுத்தே ஆகனும் . அந்த அளவுக்கு டார்ச்சர். அன்னைக்கு கொடுக்க முடியலின்னா மறுபடி எந்த தேதியில பணம் கைக்கு வருதோ கொடுத்துட்டு அன்னைக்கே வெக்கேட் பண்ணி ஆகனும். அந்த அளவுக்கு வலிக்க வச்சுட்டான். அதுக்கு அவனுக்கு என்ன நடந்ததுன்னு இன்னொரு அத்யாயத்துல சொல்றேன். (வெக்கேட் பண்றதுன்னா பேக்கிங் செலவு - புது வீட்டுக்கு அட்வான்ஸ் கூடும் -வாடகை கூடும் - விலாசம் மாறினா ப்ராக்டிஸ் அடிவாங்கும் இப்படி ப்ராக்டிக்கல் சிரமங்கள் தான்.மற்றபடி அட்டாச்மெண்ட் எல்லாம் ஒரு மசுரும் கிடையாது)

மேலும் அந்த வீடு டொமஸ்டிக் லைஃபை விட ஸ்பிரிச்சுவல் லைஃபுக்கு ரெம்ப பொருத்தமான வீடு . அந்த வீட்டிலான எங்க போர்ஷன்ல ஒவ்வொரு சதுர மி.மீலயும் நம்ம அதிர்வுகள் ஸ்டோர் ஆகியிருக்கு. வழக்கமான்னா ஒரு மணி நேர அவகாசத்துல வீடு காலிபண்ணக்கூடிய சாடிஸ்ட் கேஸு நாம.

ரோட்லருந்து சைக்கிளை மிதிச்சுக்கிட்டு அவன் வீடு இருக்கிற தெருவை நோக்கி போறேன். மனசு கனத்து கிடக்கு. ஆத்தா ஆத்தான்னு ஜொள்ளு விட்டோம். அந்த ஆத்தா கூட நல்ல சமயத்துல கை விட்டுர்ரா. இதான் கடைசி சான்ஸ் பார்ப்போம்னு பல எண்ணங்கள்.

திருப்பத்தின் போது ஒரு ரிஃப்லெக்ஸ் மாதிரி கண்ணு மேற்படி கோவிலை அரை குறையா பார்க்குது.
அப்பம் மேற்படி கோவில் -கர்பகிருகம் -இடது புற காலியிடம்லாம் டச் ஆகுது. அந்த காலியிடத்துல சப்பரத்துல அம்மன் சிலை ஒன்னு பக்காவா அலங்கரிக்கப்பட்டு இருக்கு ( நேரம் ; மதியம் 2 க்கு மேல இருக்கும்) ஆக்யுரேட்டா சொன்னா சமய புரம் மாரியம்மனோட வடிவம் -அலங்காரம்.

ங்கோத்தா .. இது ஆடிமாசம் இத்யாதி கூட கிடையாதே.. மே மாசம் அசலே கிடையாது. இந்த பார்ப்பானுங்களுக்கு வேற வேலையே கிடையாது. ஏரியால இருக்கிற சூத்திரங்களோட ஈகோவை தூண்டி விட்டு நல்லாவே கல்லா கட்டறானுவன்னு வஞ்சிக்கிட்டே பார்ட்டியோட வீட்டுக்கு போனேன்.

அவன் ரேஞ்சுக்கு பத்து பைசா பேராதுன்னு தெரியும். ஆனாலும் நமக்கு வேற சோர்ஸ் இல்லாத காரணத்தால தேன் இந்த வேட்டை. வீட்ல உள்ளவுக மாடியில இருக்கான்னு சொன்னாய்ங்க. நான் மாடிப்படி ஏறி போறேன். லுங்கி பனியன்ல இருக்கான்.

பார்ட்டி எக்கனாமிக்கலா நொந்து போயிருந்தாலும் (சின்னப்பையன்) ராசி சிம்மம். லக்னம் தனுசு.லக்னத்துலயே குரு. நம்மை பார்த்ததும் ஒன்னுமே பேசலை. எழுந்து போய் கோட் ஸ்டாண்ட்ல மாட்டியிருந்த பேண்ட்ல இருந்து கத்தையா நோட்டுகளை எடுத்தான். எல்லாம் நூறு ரூவா தாளு. ஒரே ஒரு தாளை தனக்கு வச்சிக்கிட்டு மொத்தத்தையும் கொடுத்துட்டு " தயவு செய்து நீ ஒன்னும் பேசாத .. கணக்கெல்லாம் அப்பாறம் பார்த்துக்கலாம்"னான். எண்ணிப்பார்த்தா கரீட்டா ரூ.3000 இருக்கு.

அப்பல்லாம் மணி சீக்ரெட்ஸ் நமக்கு தெரியாது. பிணத்துக்கு உசுரு வந்த ஃபீலிங் . எப்பம் வெளிய வந்தேன். எப்பம் சைக்கிள் லாக்கை திறந்தேன்.எப்பம் ஸ்டாண்டை தள்ளினேன்னு கூட தெரியாது. பாடி அவ்ள லேசா இருந்தது.

சந்து திரும்பும்போது ஆட்டோமெட்டிக்கா கண்ணு அம்மன் கோவில் பக்கம் திரும்புச்சு. கோவில் கதவு ஓகே.. கர்ப கிருகம் ஓகே. ரைட்ல வலம் வர இடம் ஓகே. லெஃப்ட்ல சப்பரம் ஓகே. ஆனால் சர்வாலங்கார பூஷிதையா காட்சி தந்த மாரியம்மன் மட்டும் ஆப்சென்ட்.

மண்டைக்குள்ள ஒரு ரங்கோலி .. நெஞ்சுக்குள்ள கிலி. " ஆத்தா"ன்னுட்டு தினத்தந்தி போஸ்டர் சைஸுல கத்தலாம் போல ஒரு உணர்வு.

(தொடரும்)