Tuesday, August 23, 2011

ஜோதிட பால பாடம்: 5


அண்ணே வணக்கம்ணே !
நம்ம லக்னமான கடகத்துக்கு பத்துல குரு வந்து கொஞ்சம் போல சீண்டிப்பார்த்துட்டாரு (வேறென்ன இருக்கிற வேலைய ஒழுங்கா பார்க்க விடாமத்தேன்) அவரு இந்த 30ஆம் தேதி வக்ரமாகப்போறாருங்கோ.
வக்ரம்னா என்ன சுபர் அசுபராயிருவாரு. அசுபர் சுபராயிருவாரு. பத்துல குரு இருந்ததாலத்தானோ என்னமோ ஜா.ரா கெட்ட ஆட்டம் போட்டாலும் "போவட்டும் போவட்டும்னு இருந்தம்.

குரு வக்கிரமாற சங்கதி ஜா.ராவுக்கு தெரியலை போலும். சமீப காலமா (இடையில கொஞ்ச நாளு கேப்) மறுபடி பேண்டு வைக்க ஆரம்பிச்சுட்டாரு.
நம்ம அய்யரு வேற (கோபி கிருஷ்ணன்) "அண்ணா.. அந்த அடாசை இப்படியே விட்டுட்டா எப்படி ? அவன் ஆசனத்துக்கு ஒரு கார்க் அடிங்கோ - நீங்க ஊம்னா நான் அடிக்கறேன்னு கேட்டுக்கிட்டே இருந்தாரு. நாமளும் ஊம் கொட்டிட்டம். இதை கூட ஜா.ராவுக்கு எச்சரிக்கையா சொல்லியாச்சு. ஊ ஹூம்..

நம்ம கோ.கி ஜா.ராவோட கண்ணீர் கடிதங்களை பதிவா போட்டு தூள் பண்ணிட்டாரு. அதை படிக்க இங்கே அழுத்துங்க .ஜா.ராவோட பிற்கால செயல்பாடுகளுக்கெல்லாம் தேவையான இருமனப்போக்கு - மன அழுத்தம் -இயலாமை - பொறாமை எல்லாத்துக்கும் அவரோட கண்ணீர் கடிதங்களே சாட்சி.
இப்பவும் மிஞ்சிப்போகலை. திருவாளர் ஜா.ரா அல்ப சங்கியைக்கு மட்டும் நவத்வாரங்களை திறந்து மத்த நேரம் பொத்திக்கிட்டு தன் வேலைய தான் பார்த்துக்கிட்டா சரி . உடனே இதை ட்ராஃப்டா மாத்திர சொல்லியிருக்கேன்
சொந்த பஞ்சாயத்து ஓகே. பால பாடம் தொடருது..
9ஆமிடம் கெட்டால்:
தந்தை, தந்தை வழி சொத்து, தூர பிரயாணங்கள், சேமிப்பு,முதலீடு,தூர தேச தொடர்பு வகையிலும் பாதிப்பு ஏற்படும் .
3ல் பாவ கிரகம்:
தங்கள் ஜாதகம் தங்கள் இளைய உடன் பிறப்புகளுக்கும், செவிக்கும் நல்லதல்ல. மித மிஞ்சிய தைரியத்தாலும், சாகசம் செய்யும் இச்சையாலும் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
சந்திரன் கெட்டால்:
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். பொது வாழ்வு உதவாது.

9ல் கேது/ராகு:
தந்தைக்கும், தந்தை வழி சொத்துக்கும் செதில்,பாம்பு தேள் இத்யாதி விஷ ஜந்துக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
விரய பாவம் கெட்டால்:
இதனால் தூக்கமின்மை, அகால போஜனம்,அகால நித்திரை ,துரித ஸ்கலிதம் - காதல் அ திருமணத்தில் தடைகள் , மனைவியுடன் தகராறுகள் ஏற்படலாம்.
சுக்கிர சூரிய சேர்க்கை:
சுக்கிர சூரிய சேர்க்கையால் விந்து வறளும். எனவே உடலுறவுகளுக்கிடையே யான இடைவெளியை அதிகரிக்கவும். அல்லது தம்பதியிடையே ஈகோ பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்
சுக்கிரன் கெட்டால்:
வெள்ளி அதிகம் உபயோகிக்கவும். லக்சரி,ஆடம்பரம், ஃபர்னிச்சர், டபுள் காட் பெட், ஹோம் நீட்ஸ்,வாகனம் ,பார்ட்டி, சுப காரியங்களில் நீண்ட நேரம் இருந்து எஞ்ஜாய் பண்ணுவது இத்யாதி தவிர்க்கவும். இதுவும்
3.சுக்கிர செவ்வாய் சேர்க்கை
இன உறுப்பில் காயம் ஏற்படலாம். முடிந்தால் அப்டமன் கார்ட் அணியவும். (ஸ்போர்ட்ஸ் கடைகளில் கிடைக்கும்) பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை
1+12
4.தாங்கள் உற்பத்தி துறையில் இருப்பதைவிட விற்பனை துறைக்கு மாறுவது பெட்டர்.

லக்னம் துலாம் அ ரிஷபமாகி லக்னாதிபதி விரயத்தில் நின்றால்/ அ லக்னாதிபதி விரயாதிபதி சேர்க்கை நடந்திருந்தால்: :
ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர் துறைகளில் விற்பனை பிரிவை தேர்வு செய்யவும்.
லக்னம் கன்னி/மிதுனமாகி லக்னாதிபதி விரயத்தில் நின்றால்/ அ லக்னாதிபதி விரயாதிபதி சேர்க்கை நடந்திருந்தால்: :
போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு துறைகளில் விற்பனை பிரிவை தேர்வு செய்து கொண்டால் சாதனை படைக்கலாம்.

குரு+சனி /ராகு/கேது (ரிப்பீட்டு தான் இன்னம் ஸ்ட் ராங்கா சொல்லியிருக்கம்ல)
ஜோதிடனும் ஒரு குருதான். குருஸ்தானத்தில் உள்ள நான் இப்படி சொல்லக்கூடாது. ஆனாலும் தங்கள் நலம் நாடி கூறுகிறேன் இன்று முதல் கோவில் குளம், தெய்வம், தெய்வ நம்பிக்கை இத்யாதியை மறந்துவிடுங்கள் .
உங்கள் ஜாதகப்படி அந்த கடவுள் தங்களுக்கு கொடுத்துள்ள சாய்ஸ் 2
முதல் சாய்ஸ்:
தெய்வ நம்பிக்கையுடன் பணரீதியில் நிறைய கஷ்டப்படுவது. திருமணம், மனைவி ,வாரிசுகள் விசயத்தில் நிராசைப்படுவது .
இரண்டாவது சாய்ஸ்:
நாத்திக வாதியாக மேற்கண்ட தொல்லைகள் பெரிதாக பாதிக்காது ஓரளவேனும் நிம்மதியாக வாழ்வது. இதில் தங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை செய்யவும்.

சனி கெட்டால் பரிகாரம்:
பித்ருக்களுக்கு பிண்டம் வைத்தல் , காகத்துக்கு சோறு வைத்தல், நொண்டிக்கு உதவுதல்.
செவ்வாய் தொடர்பான மனிதர்கள்:
வயதில் சிறியவர்கள், இளையவயது போல் தோற்றம் தரும் மூத்தவர்கள், சகோதரர்கள், வன்னியர், ராஜுக்கள் (ஒரு சாதி பெயருங்க),
ராகு தொடர்பான மனிதர்கள்:
அட்டை கரி நிறத்தவர் ,ஓரப்பார்வை பார்ப்பவர், காகம் போல் தலை சாய்த்து பார்ப்பவர் இதர மதத்தவர், இதர மொழியினர் ஆகியோருடன் கூட்டு வியாபாரம் , நட்பு , வேண்ட
ஜன்ம செவ்வாய்:
பரிகாரம்: போட்டிகள் வேண்டாம்.(ப்ளட் ஷுகர் கூட வரலாம்) , அஜீரணம், மலச்சிக்கல் தவிர்க்கவும் இன்றேல் பைல்ஸ் கியாரண்டி. பவழக்கல் வைத்த மோதிரம் ,
.
சனி தரும் யோகம்:
தாங்கள் அதிர்ஷ்ட சாலி என்பதில் ஐயமில்லை. ஆனால் அதிர்ஷ்டம் சற்று தாமதமாய் (முதுகு வளைந்த பின், தலைமுடியெல்லாம் வெளுத்த பின் வரிக்கும். பொறுமை தேவை. யூனிஃபார்ம் அணியும் தொழில், இரும்பு, ஆயில், சுரங்கம், குவாரி, செகண்ட் ஹ்யாண்ட் பொருட்கள், எண்ணெய் வித்துக்கள்,விவசாயத்தொழில், கருப்பு நிற பொருட்கள் தாமதமாக அதிர்ஷ்டம் தரும். மேற்கு திசை, எஸ்.சி.பிரிவினரும் 8.17.26 தேதிகளும்,சனிக்கிழைமையும் கூட அப்படித்தான். பலன் தரும்.
சனி சுபனாகி ஐந்தில் நின்றால்:
முடிவுகள் எடுப்பதில், செயல்பாட்டில் மந்தம் இருப்பின் அதை அப்படியே தொடரவும். அதுவே அதிர்ஷ்டம் தரும். பிள்ளைகள் மட்டும் ரொம்பவே மந்த புத்தி அ கால்,ஆசனம் தொடர்பான தொல்லைகளை சந்திக்கவேண்டி இருக்கும்.
சனிக்கு பரிகாரம்:
திருமலையில் உள்ள வராக ஸ்வாமியை தியானம் செய்க. பெயர் புகழுக்கு ஆசைப்படாது,எதற்கும் முன்னே நிற்காது கும்பலில் கோவிந்தா போடவும்.
புதன் கெட்டால்:
புதன் கிழமை கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வணங்கி வரவும்.
10ல் சந்திரன் அ 10 ஆமிடத்ததிபதி +சந்திரன்:
செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
11ல் சந்திரன் நின்றால்:
லாப நஷ்டம் சமமாக இருக்கும். இதுல பயங்கர நஷ்டம் வரும் என்று முடிவு செய்துவிட்ட விஷயத்தில் திடீர் லாபம் ஏற்பட வாய்ப்புண்டு. லாப விஷயத்திலும் இப்படியே குண்டக்க மண்டக்க நடக்கலாம்
4ல் ராகு/ கேது
பாம்பு புற்று, சாராயக்கடை,சர்ச் ,மசூதி,தர்கா,துர்கை கோயில் உள்ள தெருவில் அருகாமையில் வீடு கட்ட , நிலம் வாங்க வாய்ப்பிருக்கிறது.
6+8/12
நீங்கள் பாக்கி வைத்துள்ள ஒரு கடன் காரர் /எதிரி/போட்டியாளர் செத்தே போகலாம் அ ஊரை விட்டே போய்விடுவார்,
7ல் சந்திரன் அ லக்ன சந்திரன்:
தங்கள் மனைவியார் உடல் திடீர் என்று புசுபுசுவென்று வந்து , திடீன் என்று ஒல்லியாகிவருவார். பரிகாரம் முத்துமாலை அணிதல். தங்கள் வேலை/தொழில் விசயமாக அவர் கூறும் யோசனைகள் பவுர்ணமிக்கு பின் வரும் காலங்களில் ஒர்க் அவுட் ஆக
சனி கெட்டால்:
இறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். பிரதி சனிக்கிழமை காகத்துக்கு சோறு வைத்து வரவும். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை தரவும்.