Sunday, August 21, 2011

ஜோதிட பாலபாடம்: 3


அண்ணே !
வணக்கம்ணே. ஜோதிட பால பாடம் நெஜமாலுமே பால பாடமா இருக்கா? அல்லது அந்த காலத்து மணிபிரவாளம் போல கஷ்டமா இருக்கா அல்லது உபயோகமா இருக்கான்னு சொன்னா சரக்கை டென்ஸாக்கவோ டைல்யூட் பண்ணி தரவோ வசதியா இருக்கும்.பால பாடம் இன்னைக்கும் தொடருது.
அவன் அவள் அது - ஆன்மீக அனுபவத்தொடரின் இன்றைய அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க.
4ல் சனி:
பெரிய குடும்பத்தை போஷிக்க வேண்டி வரலாம். பழைய வீட்டில் அ பராமரிப்பு இல்லாத புது வீட்டில் வாழலாம்.செகண்ட் ஹேண்ட் வாகனம் அமையும். தாய்க்கு தீர்காயுசு. ஆனால் அவிகளுக்கு கால்,ஆசனம்,நரம்பு தொடர்பான பிரச்சினை வரலாம்.. டெக்னிக்கல் எஜுகேஷனுன்னா பிரச்சினை இல்லாம தொடரும்.சாதாரண கல்வியாயிருந்தா பின்னடைவு தடை ஏற்படலாம்.
2ஆமிடம் கெட்டால்:
வாக்கு தவற நேரிடலாம். வாக்கு நிஷ்டுரமாக வரலாம். குடும்பத்தில் கலகம் ஏற்படலாம். லாவாதேவிகளில் சிக்கல் தாமதம் ஏற்படலாம். கண் பார்வை பாதிக்கலாம்,வாய் ,தொண்டையில் பிரச்சினை வரலாம். ஜா.ரா மாதிரி கெட்ட வார்த்தைகள் அதிகமா வரும்.
7 ஆமிடம் கெட்டால்:
மனைவியின் அழகு, கவர்ச்சி ,உற்சாகம், ஆரோக்கியம் குறைந்து வரும்..
லக்னாதிபதி அஸ்தங்கதம்:( லக்னாதிபதியுடன் சூரியன்)
உறவினர், குடும்பத்தாருக்கு தூரமாக வாழவேண்டி வரலாம். தூக்கமின்மை,ஒற்றைத்தலைவலி கூட ஏற்படலாம்.
சந்திரனால் பிரச்சினை: லக்னாதிபதி+ சந்திரன்:
சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை, கனவுகள்,கற்பனைகள், கவைக்குதவாத சென்டிமென்டுகள் ஆகியன உங்க புத்தியை மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும். (இவை சூரிய, சந்திர, சுக்கிர, செவ்வாய் தசா புக்தி காலங்களில் நடக்கலாம்)
சந்திரனால் பிரச்சினை: லக்னாதிபதி+ சந்திரன் நிலைக்கு பரிகாரம்:
கன்னியா குமாரி அம்மனை வழிபடவும். நிலாச்சோறு தின்னவும். ஊஞ்சலில் ஆடவும். வண்ண மீன்கள் வளர்க்கவும். தியானம் அத்யாவசியம். தங்கள்
புதன் கெட்டால்:
தாய் மாமன்,வியாபாரம், மீடியேஷன்,ஏஜென்சி, டீலர்ஷிப் போன்றவற்றால் கஷ்ட நஷ்டங்களேற்படும். பொய் கணக்கு எழுதி மாட்டறது, தோல்வியாதி, அண்டம் தொடர்பான வியாதி வரலாம், போலி ஜோதிடர்கள், போலி டாக்டர்களாகலாம். கீல் வாதம் வரலாம்.
எதை ,எங்கே ,எப்படி சொல்லனுங்கற இங்கிதம் தெரியாம எதையும் ,எங்கேயும்,தப்பு தப்பா உளறி செருப்படி வாங்கலாம்.
பிறருக்காக முன் நின்று நஷ்டப்பட வேண்டி வரலாம். ஜாதகர் பிறர் விசயத்தில் தலையிடாமலிருப்பதே நல்லது.முக்கியமாக மீடியேட்டர்கள் பேச்சை நம்பாது நேரில் இறங்கி விசாரித்து முடிவு செய்யவும் .

சூரியன் கெட்டால்:
தலை,பல்,எலும்பு தொடர்பான தொல்லைகள் ஏற்படலாம். தன்னம்பிக்கை இருக்காது. அல்லது அக்ங்காரத்தில் ஆடுவார்கள். சதா டீம் லீடர்/தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.
பிறருக்காக முன் நின்று நஷ்டப்பட வேண்டி வரலாம். ஜாதகர் பிறர் விசயத்தில் தலையிடாமலிருப்பதே நல்லது.
குரு , குரு சனி சேர்க்கை:
ஜாதகருக்கு தெய்வம், வேதம், புராணம், சாஸ்திரம், சம்பிரதாயம், கோவில் குளம், இத்யாதியில் நம்பிக்கை இருக்கும் வரை ஃபைனான்ஸ், வயிறு,இதயம்,வாரிசுகள்,அரசு, பெரிய மனிதர்கள் தொடர்பான தொல்லை இருந்துக்கிட்டே இருக்கும். முக்கியமாக ரொக்கம், தங்கம் ஹேண்டில் செய்யும் எச்சரிக்கை தேவை.

கடகம் வீடு கட்ட:
கையில் மொத்தப்பணத்தையும் வைத்துக்கொண்டே இறங்கனும். ரொம்ப யோசனைகள் செய்தல் அடிக்கடி திட்டத்தை மாற்றுதல் வேண்டாம். முடிந்தவரை காண்ட் ராக்ட் மூலமாகவே கட்டிக்கொள்ளவும்.
கன்னி வீடு கட்ட:
கைப்பணம் இருந்தாலும் கொஞ்சமாவது கடன் வாங்கி ஆரம்பிக்கவும்.
(இதே போல துவாதச ராசிக்கும் எழுதனும். பார்ப்போம்)
லக்னாதிபதி கெட்டால்:
முடிந்தவரை பேச்சு வார்த்தைகளில் நீங்கள் நேரிடையாக இறங்க வேண்டாம்.
சூரிய வீடு:
தங்கள் வீடு நகரின் நடுமையத்தில் அ மலைப்பகுதியில் மேட்டுப்பகுதியில், புத்தம் புதிய காலனிகளில் முதல்வீடாக அமையவே வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற இடங்களில் வீடு கட்ட முயற்சித்தால் அது ஆற்றோடு போவது போவது போல் எளிதாக இருக்கும். வீட்டின் மையத்தில் சூரிய வெளிச்சம் நேரே வீட்டுக்குள் விழுவது போல் சீலிங் திட்டமிடவும் .
(இதே போல சந்திர வீடு முதல் சுக்கிர வீடு வரை எழுதத்தேன் ஆசை. நேரமில்லையே)
1- 7 ல் கேது ராகு:
பவ கட் - அமாவாசை -ராத்திரி நேரம் -பிளாட்ஃபாரத்துல வாங்கின கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு நடந்தா எப்படி இருக்கும். இவிக லைஃப் -வாழ்க்கை மற்றும் பிரச்சினைகளை குறித்த இவர்கள் பார்வை -முடிவெடுக்கும் திறன் எல்லாம் அப்படித்தான் இருக்கும்.
அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)
தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.
மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம்.
ஒன்னு திருடனாகனும் அ யோகியாகனும். திருடங்களா இருந்தாலும் ஒரு ஃபிலசாஃபிக்கல் சிந்தனை இருக்கும். காவி கட்டி சன்னியாசியாவே மாறினாலும் எதை ஒதுக்கிக்கலாம்னு ஒரு சிந்தனை ஓடிக்கிட்டே இருக்கும்.
பரிகாரம்:
காதல் , கூட்டு வியாபாரம் கூடாது. இதர மதத்தவர், இதர மொழியினரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. எனவே துர்கை கணபதியை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.