Monday, July 25, 2011

பதிவுலகை விட்டு விலகுகிறேன்


வலையுலகத்துல என்ன அட்டூழியம் வேணா பண்ணிட்டு பதிவுலகை விட்டு விலகுகிறேன்னுட்டு ஒரு பதிவு போட்டா நிறைய அனுதாபம் கிடைக்கும் போல கூகுளின் ப்ளாகர் இருக்கும் வரை - நான் உசுரோட இருந்து -என் மூளை கலங்காத இருக்கிறவரை பதிவுலகில் தொடர்வேன் என்று சொல்லி 10தினி வேஷம் போடும் ஜாராவின் அட்டூழியங்களை /அவற்றிற்கான ஆதாரங்களை தந்திருக்கேன். படிச்சு பாருங்க.

தமிழ் நாட்டு சனமே இளகின மனசா இருந்தா எப்படி? அனுதாபம் காட்டுங்க வேணாங்கலை. அருகதை உள்ளவுகளுக்கு காட்டுங்க. அளவா காட்டுங்க.

புலிகள் வெள்ளைக்கொடி ஏந்தி வந்தப்ப சுட்டு தள்ளின சிங்கள ராணுவம் ரேஞ்சுக்கு எக்ஸ் பார்ட்டி போயிருச்சு. பாதிக்கப்பட்ட நானே "ஒழிஞ்சு போவட்டும்"னு விட்டபிற்காடும், அத்தீனி அப்பாவி சனம் "போகாதே போகாதே என் கணவா"னுட்டு பிலாக்கணம் பாடினதுக்கப்பாறமும் ஸ்பம் கமெண்ட் மல(ம்) மழை கொட்டுது.

வயாக்ரா வாங்க வசதியில்லாதவுக மெயில் பண்ணுங்க .அந்த கமெண்ட்ஸை உங்களுக்கு அனுப்பறேன். உபயோகப்படும். அதுலயும் பர்வெர்ஷன் தேன் அதிகம் . உ.ம் தம்பியோட செக்ஸ் வச்சுக்கலாமா?

கொய்யால நம்மை சுட்டிக்காட்டினதும் கமெண்ட் நின்னுப்போயிட்டா சந்தேகம் வந்துருமேங்கற லாஜிக்கோ என்ன இழவோ? இன்னைக்கு செம ஸ்பம் மழை.

அதுசரி எல்லா ஸ்பம் கமெண்டும் ஜா.ராவுக்கே வக்காலத்து வாங்குதே அது எப்படி?

ரிலாக்ஸ்டா ஆத்தாளை கேட்டேன். "அம்மா இன்னுமா பொறுமை?" ஆத்தா "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழுன்னிட்டா.

நடந்த கதை:

கோபி கிருஷ்ணன் நம்ம ஊரு ஆளு. நம்மை இஷ்டத்துக்கு கிழிச்சு (அவர் எடுத்துக்கிட்ட பாய்ண்ட் ஒன்னுதேன் : நம்மோட பிராமண எதிர்ப்பு) . நாம அடிக்கடி சொல்லுவமே .. நம்மை உரசிப்பார்த்தா "குடம் குடமா கொட்டும்"னு அப்படி அய்யருக்கு பல்ப் மாட்டிக்கிச்சு. நாம ரிலீஸ் பண்ணி விட்டோம். அய்யர் இப்ப நம்மாளு.

அய்யர் கதை எப்பவோ ந(க)டந்து போச்சு. ஆனால் பாருங்க மே மாச வாக்குல புதுசா ஒரு அய்யர் வலம் வர ஆரம்பிக்கிறாரு. அதுவும் எப்படி? எப்பவோ ஒரிஜினல் அய்யர் போட்ட பதிவுகளை ஹெடர் இமேஜை காப்பி பேஸ்ட் பண்ணி புது வலை தளம் மூலமா வலம் வர்ராரு.

ஒரிஜினல் அய்யர் கதை ஆகஸ்ட் ,26, 2010 ல துவங்குது. அக்டோபர் 3 , 2010 ல முடிஞ்சு போகுது. ( ஐ மீன் அப்டேஷன்)

டுபாக்கூர் அய்யர் கதை 8 May 2011ல துவங்குது. இன்னைக்கு வரைக்கும் ஓடுது.

அக்டோபர் 3 , 2010லயே ஆட்டம் குளோஸ் ஆயிட்ட . அந்த ஒரிஜினல் அய்யரோட கன்டென்டை வச்சுத்தேன் நம்ம ஜா.ரா விளையாட ஆரம்பிச்சாரு.

ஏங்க ஏன்......னுட்டு கேப்பிக. சொல்றேன். பார்ட்டி நம்மை ஜோதிட ஆலோசனைக்கு தொடர்பு கொண்டாரு. ஃபீஸை மொபைலுக்கு ரிசார்ஜா அனுப்பறதா சொன்னாரு.




எதுக்கப்பு அம்பானிக்கு அரிசிக்கு காசில்லையா.. வேணம்னா எம்.ஓ அனுப்பு அதுவும் ரூ 100 மட்டுமேன்னு நாம மெயில் பண்ணோம். பார்ட்டி கடைசி வரை அந்த நூறை கூட அனுப்பலை அது வேற கதை . ஐம் நாட் ஃபார் மணி ( மணிகண்டன்,புரட்சிமணி கோச்சுக்கிராதிங்க நான் சொன்னது Money)

அப்போல்லாம் ஜாதக பலன் களை சனங்களுக்கு மாங்குமாங்குனு அடிச்சு 100 கேபி வரை டெக்ஸ்ட் ஃபைலாத்தான் அனுப்பிக்கிட்டிருந்தேன். இப்பம் ஏதோ "அம்மா" புண்ணியத்துல நெரிசலை சமாளிக்க ஆடியோ ஃபைல்தேன்.

அதனால அவருக்கு பலன் அனுப்ப தாமதம் ஆனாப்ல இருக்கு. ஒரே ஜாதகத்துக்கு ஆயிரம் ரூவா அனுப்பற சீமான்லாம் 10 நாள் , 20 நாள் லேட்டானாலும் கண்டுக்கிடறதில்லை. ஜென்டில் ரிமைண்டர் தேன் அனுப்புவாய்ங்க.

ஆனால் பார்ட்டி அந்த பீரியட்லயே சொந்த பேர்ல "காபூலி வாலா" கணக்கா கமெண்ட் போட்டு குடைச்சல் கொடுத்தது. இதுவாச்சும் பரவால்லை அங்சியஸ்னு அஜீஸ் பண்ணிக்கலாம்.

மார்ச் 31 ல ஜா.ரா பலன் கேட்டு அனுப்பின மெயிலுக்கு நாம மே 29 ல பலன் அனுப்பறோம்


தலீவரு மே எட்டாம் தேதியே கடுப்பாகி புது அய்யரா அவதரிக்கிறாரு.




ஒரு மாசம் போல தாமதமானதாலயோ அ பலனை "தடாலடியா" உள்ளது உள்ளபடி" தந்துட்டதாலயோ இர்ரிட்டேட் ஆயிட்டாப்ல இருக்கு.

இந்த சமயத்துல ஒரிஜினல் அய்யரோட எழுத்துக்கள் நம்மாளு கண்ல படுது. அப்படியே பத்திரப்படுத்திக்கிறாரு. ஹெடர் இமேஜ் உட்பட. படிச்சு படிச்சு சந்தோசப்பட்டாரோ அ வலையுலகத்துல கமெண்ட் வடிவத்துல பரப்பிக்கிட்டு கிடந்தாரோ தெரியாது.

அய்யரோட எழுத்துக்களை ஊரார் ப்ளாக்லல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணிட்டு படக்குனு சொந்த பேர்ல போய் இன்னொரு கமெண்டையும் போடுவாரு போல. நான் எதையும் கண்டுக்கிடலை.

கழுகு வலைச்சரத்துல நம்ம லட்சிய திட்டமான "வல்லரசு கனவுகள்" பதிவுல போய் இதே வேலைய செய்தாரு. அப்பம் மட்டும் கொஞ்சம் சிவுக்குன்னுச்சு . நாம அய்யரை கூப்டு அய்யரே அதையெல்லாம் நீக்கிருனுட்டம். அய்யர் நீக்கிட்டாரு.


உடனே திரு.ஜா.ரா புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறாரு. தான் சேகரிச்சு வச்சிருந்த பழைய அய்யரோட பதிவுகளை எடுத்து புது ப்ளாக்ல காப்பி பேஸ்ட் பண்ணிட்டாரு . புது அவதாரம் எடுத்துட்டாரு. " அய்ய நம்ம மேல சந்தேகமே வரக்கூடாது"னுட்டு திருடன் சுருட்ட வேண்டியதை சுருட்டிட்டு திருடன் திருடன்னு கத்துவானாம். கூட்டம் வந்ததும் கூட்டத்தோட கூட்டமா நழுவிருவானாம் .

அப்படி டுபாக்கூர் அய்யர் தன் பதிவை இவர் பார்வைக்கு அனுப்பினாப்ல "பீலா" விட்டு தன் "மேலான" கருத்துக்களை கமெண்டா போட்டுட்டாரு.



தமாசு இன்னாடான்னா டுபாக்கூர் அய்யர் இவரோட ப்ளாக்ல ஃபாலோவர் வேறயாம். லாஜிக்கலா பார்த்தா ஜா.ரா அய்யரை குறை சொல்லி / நம்மை தூக்கோ தூக்குனு தூக்கி கமெண்ட் போட்டிருக்காரு. அப்படியா கொத்த உத்தமரோட ப்ளாக்ல டுபுக் அய்யர் மாதிரி நாதாரி சேருவானா? ஆனா சேர்ந்தான். ஏன்னா ரெண்டு பேரும் ஒரே ஆளுதேன்.



அட இவ்ளோ எதுக்கு பாஸ்.. கதை க்ளைமேக்ஸுக்கு வந்துட்ட பிற்காடு டுபுக் அய்யர் கிட்டே போய் உங்களை வெளிப்படுத்திக்கிட்டு என்னை காப்பாத்துங்கனு கேட்கிறாரு.



நீங்க வேணா பாருங்க நாளைக்கு அய்யர் (டுபுக்) அய்யய்யோ ஜா.ரா உத்தமர் .நான் தான் அபிஷ்டுன்னு ஒரு பதிவை பொடுவாரு.

ஜா.ரா பண்ண தப்பு என்னடான்னா டுபுக் ப்ளாகுக்கு யு ஆர் எல் செட் பண்றச்ச தன் பிறவிகுணத்தை காட்டிட்டதுதேன்

ஒரிஜினல் http://www.ayyarthegreat.blogspot.com

நண்பர் உருவாக்கின தளம் : http://www.ayyerthegreat.blogspot.com

ஒரே ஒரு எழுத்துதேன் வித்யாசம். இங்கனதான் நமக்கு சந்தேகப்புள்ளி விழுந்தது. ஏன் ?ஏன்? னு கேப்பிக சொல்றேன்.

நண்பரோட வலைதளம் : http://sivaayasivaa.blogspot.com/ ஒரு நா டபுள் ஏக்கு பதிலா சிங்கிள் ஏ அடிச்சிட்டாப்ல இருக்கு வேற ஒரு வலை தளம் ஓப்பன் ஆகுது .அதனோட யு ஆர் எல் http://www.sivayasiva.blogspot.com
இதை க்ளிக் பண்ணா www.sithan.com க்கு கொண்டு போகும்.

ஒரு எழுத்தை மாத்தி டுபாக்கூர் ப்ளாக் வைக்கிறது நம்மாளு ஸ்டைல்னு புரிஞ்சு போச்சு. இந்த ஒரே ஒரு சந்தேகத்தை மனசுல வச்சுத்தேன் நம்மாளோட மெயில் ஐடிய மனசுல வச்சிருந்தேன்.

அப்பம் நம்ம கோபி கிருஷ்ணன் எங்க வீட்டுக்கு வந்தாப்ல அப்ப உன் ப்ளாகை டெலிட் பண்ணலியா அய்யரு புத்திய காமிச்சிட்டியேனு நக்கலடிச்சேன்.

அந்த தம்பி அரண்டு போயிருச்சு. ஹேக் பண்ணிட்டானோன்னு நினைச்சோம். ஆனால் நிதானமா ஸ்பார்க் ஆச்சு .

ஒரிஜினல்
ayyarthegreat.blogspot.com

நம்மாளு க்ரியேட் பண்ணது
ayyerthegreat.blogspot.com

இந்தாளோட ப்ளாக் பேரும் இப்படி தான்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்...(ஓரெழுத்து வித்யாசம்) அய்யரு ஹேக் பண்ணிர்ரனு இறங்கினாரு. நானு அட நமக்கெதுக்கு அந்த பீடையெல்லாம் ஆருனு கண்டுபிடி போதும்னேன். அப்பத்தேன் ஐ கெனாட் ஆக்சஸ் மை அக்கவுண்ட் ஆப்ஷன்ல உள்ளாற போய் மெயில் ரிக்கவரிக்காக அய்யாவோட மெயில் ஐடிய கொடுத்தோம்.

அப்ப ஜிமெயில் காரன் s.................a@yahoo.com விலாசத்துக்கு பாஸ்வோர்ட் ரிக்கவரி லிங்க் அனுப்பறோம்னு சொன்னான்.

கொஞ்சம் குழப்பமாயிருச்சு.என்னடா பார்ட்டிது ஜி மெயில் ஐடி தானே. யாஹூல அதே ஐடி இருக்குமோன்னுட்டு சந்தேகம் வந்துருச்சு.

அதை ப்ரூஃப் பண்ணிக்க " என்னங்க ஆளை காணோம்ங்கற " டோன்ல ஜா.ராவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ஜிமெயில்+யாஹுனு ரெண்டு ஐடிக்கும் அனுப்பினேன். அது அவரோட ஐடியில்லேன்னா எதுக்குங்க யாஹூ ஐடியயும் சேர்த்து போட்டிருக்கிங்க - நமக்கு யாஹூல அந்த ஐடி இல்லேனு சொல்லியிருக்கனும். ஒரு வேளை அதுமாதிரி ஐடியே இல்லின்னா மெயில் டெலிவரி ஆகலேனு தகவல் வந்திருக்கும்.

இந்த க்ளூஸையெல்லாம் நம்ம ஒரிஜினல் ஐயரு பதிவா போட்டாரா - நான் கமெண்ட்ல சொன்னேனா ஞாபகமில்லை.

எதுக்கோ மறுபடி ஐ கெனாட் ஆக்சஸ் மை அக்கவுண்ட் ஆப்ஷனை உபயோகிச்சா இப்பம் ரிக்கவரி மெயில் ஐடியா வேற ஐடி வருது. திருடனுக்கு தேள் கொட்டிருச்சுன்னுதானே அர்த்தம். இதை கூட உடுங்க.

இப்போ ஜஸ்ட் நௌ. அதே ஆப்ஷன்ல உள்ளாற போயி அய்யாவோட மெயில் ஐடிய கொடுத்தா பச்சக்குனு உட்காருது.

பந்தாவா ஃபோன் நெம்பரோட கடைசி ரெண்டு டிஜிட் வேற வருது. ஜா.ராவோட கெட்ட நேரம் நேத்துதேன் தன்னோட மொபைல் நெம்பரோட கமெண்ட் போட்டு தானே பத்த வச்சுட்டு ஊரு பத்திக்கிச்சுன்னு தகவல் சொல்ட்டு (தமிழ்10ல ஐயரோட பதிவுகள்) நான் நளாயினி, அருந்ததின்னு சென்டிமென்ட் வசனம்.

இது போலி அய்யரோட ப்ளாக் அவரோட மெயில் ஐடிய கொண்டுதான் க்ரியேட் பண்ணப்பட்டிருக்குங்கறதுக்கு ஆதாரம்:



மறுபடி ரிக்கவரி மெயில் ஐடிய மாத்திட்டாரு பாருங்க.

அய்யாவோட ஃபோன் நெம்பர்ல கடைசி ரெண்டு டிஜிட் - ஜிமெயில் சொன்ன அதே நெம்பருதேங்கறது ஆதாரம் இதோ:


ஏழ்மை - அங்கீகாரமின்மை - எதிராளிகளின் அலட்சியம் - அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் தரும் கடுப்பு இதையெல்லாம் நான் அறியாதவனில்லை.

"ஆயிரம் பேருக்கு உங்க ப்ளாகை அறிமுகம் செய்ய"னுட்டு ஒரு பதிவு போட்டேன். அதுல ஜா.ரா 'தரமான ஆன்மீக தளங்களுக்கு வருகைகள் கிடைக்கறதில்லைனு புலம்பியிருந்தாரு.

இன்னொரு தாட்டி தன்னோட தபஸ் பலிச்சு நான்/ நம்ம சைட்டு என்னவோ ஆகிப்போச்சுங்கற ஃபீலிங்ல "சூனியம் வச்சுட்டாய்ங்களா"னு கூட கேட்டிருந்தார்.

அவர் சொந்த பேர்ல போட்ட கமெண்ட்ஸையே பாருங்க.பயங்கர காண்ட்ராடிக்சன் இருக்கும்.இரட்டை மனப்போக்கு தெரியும். இதுவும் ஒரு வகை அட்மைரேஷன் தான். ஹேட் அண்ட் லவ்.

ஒரு தடவைகமெண்ட் எல்லாம் போடலாம்ல பயம்மா இருக்குனு கமெண்ட்
போட்டாரு


அய்யருங்கள்ள ஆரோ ஒருத்தரு ஏன் இதை செய்திருக்ககூடாதுனு கேப்பிக. ஆனால் அவிக மென்டாலிட்டி என்னனு எனக்கு தெரியும்.

ஒரு கெட்டுப்போன ஐயரு கவிதை07ல ஒரு கமெண்ட் பொட்டிருந்தாரு. அதுல என்னெல்லாம் வசை மொழிகள் இருக்கோ அதைத்தான் ஜா.ரா உபயோகிச்சிக்கிட்டு இருக்காரு .அதை கூட இவரால சொந்தமா செய்ய முடியலியா ? அல்லது பிராமணாள் பாஷையில திட்டினா நாம சந்தேக வளையத்துலருந்து தப்பலாம்ங்கற எண்ணமா தெரியலை. (அந்தகமெண்ட் கூட பத்திரமா இருக்கு. நடுவர் குழு போலி கமெண்டுகளையும் - அந்த அய்யர் கமெண்டுகளையும் மேட்ச் பண்ணா மேட்டர் புரிஞ்சுரும் - நாகரீகம் கருதி அதை இங்கன போடலை)

ரெம்ப சைல்டிஷா பிஹேவ் பண்ணி க்ளூ மேல க்ளூ கொடுத்து மாட்டிக்கினாரு. " ஒரு தடவை இவரோட சொந்த பேரிலான கமெண்டுக்கு "வாங்க ஜா.ரா.. வசம்மா மாட்னிங்க"னு கூட வினோலாக்ஸ் கொடுத்தேன். திருந்தலியே.

அவரோட ஹிட்லிஸ்ட்ல யாரெல்லாம் இருக்காய்ங்களோ அவிக பேரையெல்லாம் குறிப்பிட்டு அவிக தான்.இவிகதான்னு கமெண்ட்ஸ் வந்திருக்கு.

அந்தலிஸ்ட் மட்டும் இங்கே: டவுசர் பாண்டி, புரட்சிமணி ,மணி கண்டன், சுகுமார்ஜி . கட்ட கடைசியா அவ்சரம் -அர்ஜென்ட்னுட்டு ஃபோனை போட்டு தான் பண்ண சின்னத்தனமான வேலைக்கு மணிகண்டனை பலிகடா ஆக்கப்பார்த்தாரு.

இந்தியன்ல கமல் மாதிரி "உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுரா"னு நினைச்சுக்கிட்டேன். இப்பம் கூட மிஞ்சிப்போனது ஒன்னுமில்லை. அவர் மன்னாப்பு கேட்கனும் -மயிராப்பு கேட்கனும்னெல்லாம் டிமாண்ட் பண்ணலை .

அந்த டுபுக் அய்யர் ப்ளாகை டெலிட் பண்ணிட்டு -போலி பேர்ல கமெண்ட் போடற கெட்டப்பழக்கத்தை விட்டுட்டதா அவருக்கு நம்பகமான பார்ட்டிக்கிட்ட சொல்லிட்டு அதன் படி நடக்கனும். அந்த நம்பகமான பார்ட்டி கியாரண்டி கொடுத்த அடுத்த கணம் இந்த "பஞ்சாயத்து தொடர்பான எல்லா கன்டென்டையும் நீக்கிர்ரன்.

மறுபடி கோணல் புத்தியோட (கமெண்ட்ஸ் நின்னுட்டா தான் தான்னு ப்ரூவ் ஆயிரும்) கமெண்ட் மழை பொழிஞ்சது - தன்னோட ப்ளாக்ல டுபுக் /போலி பேர்ல உள்ள ஐடி/ஃபோட்டோஸ வச்சு திட்டி தீர்த்தது - அய்யர் தி கிரேட் (போலி) கிட்டே கெஞ்சினது இதெல்லாம் தான் இப்படி நான் பொங்கி எழக்காரணம்.

இன்னொரு மேட்டர் என்னடான்னா இவரு ஒரு நெட் ஒர்க் வச்சிருக்காரு அ ஊர் ஊரா சுத்தறாரு போல.(மொதலாவதுக்கே அதிக வாய்ப்பு) அல்லது ஊர்ப்பட்ட மெயில் ஐடிக்கள் கிரியேட் பண்ணி வச்சிருக்காரு. இவரோட பதிவுக்கு எத்தனை வாக்குகள் கிடைக்குதோ அதுல பாதியாச்சும்.

ஒரு தாட்டி " நான் உங்களுக்கு போடறேன் .எனக்கு போடுங்கனு " கூட கேட்டாரு. ஃபோட்டோஸ்? இவர் ஒரு மாஜி டிடிபி ஆப்பரேட்டர். அப்பம் இவர்கிட்டே வந்த ஃபோட்டோஸை வச்சு விளையாடலாமே.
(ங்கொய்யால நாங்க ஸ்டுடியோவே வச்சுருக்கம்டி.)


குறிப்பு: இந்த பதிவு 24 மணி நேரத்துக்கு மேல் இருக்காதுன்னு இப்பவும் நம்பறேன். திரு.ஜாரா நான் சொன்னதை செய்து இதோட இந்த விவகாரத்தை முடிச்சுக்குவாருனு இப்பவும் நம்பறேன். மனுசனுக்குள்ள இருக்கிற குட்னெஸை நம்பற ஆளு நானு. நம்பிக்கிட்டே இருப்பேன்.