Thursday, July 14, 2011

ஆண் பெண் வித்யாசம்: 7 ஆம் பாவம் தொகுப்புரை






"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
இதில் ஒன்று மட்டும் இல்லை என்றால் எந்த வண்டி ஓடும்"

இங்கன சக்கரம்னா ஆண்,பெண் .ஐ மீன் புருசன் பொஞ்சாதி .ரெண்டு சக்கரத்தையும் ஒரு செயின் லிங்க் பண்ணனும். ஐ மீன் அன்பு .ஒரு சக்கரத்துல கூட சைக்கிள் ஓட்டலாம். ஆனால் அது சர்க்கஸ் ஆயிரும்.

7 ஆம் பாவத்தை பொருத்தவரை இது அந்த ஜாதகருக்கு மட்டுமில்லிங்ணா அந்த வைஃபோட சிஸ்டர்ஸ் , அந்த ஹஸ்பண்டோட ப்ரதர்ஸ்க்கு கூட பாதிப்பை தரக்கூடிய பாவம்.

அக்கா மாமன் கிட்டே லோல் படறானு தெரிஞ்சா தங்கச்சி காரி "தாளி நாளைக்கு புருசன்னு.ஒருத்தன் வந்தா அவனை நம்ம கட்டுப்பாட்ல வச்சுக்கனுங்கற முடிவுக்கு வந்துர்ரா - அண்ணிக்கிட்ட மாட்டி அவஸ்தை படற அண்ணனை பார்த்த தம்பி "கொய்யா கல்யாணமும் மானா ஒரு மசுரும் வேணா"னு ரோசிக்க ஆரம்பிச்சிர்ரான்.

சதா சர்வகாலம் வெட்டி மடியற ஆத்தா அப்பனுக்கு பொறக்கறதுங்களும் இதே மாதிரி தயாராயிருதுங்க. அக்கம்பக்கத்து குழந்தைகளோட சைக்காலஜி கூட பாதிக்கப்படுது.

பை மிஸ்டேக் இந்த தம்பதியில ஆரோ ஒருத்தரோ ரெண்டு பேருமோ டீச்சரா போனா அவிக கிட்ட படிக்கப்போற மாணவ/மாணவிகளோட சைக்காலஜியும் பாதிக்கப்படுது.. அதனாலதேன் 7 ஆம் பாவத்தை இம்மாந்தூரம் இஸ்துக்கினு வன்டன்.

பை தி பை இன்னைக்கு ரெண்டு தனி சிறப்பு பதிவுகளும் போட்டிருக்கேன்

1. நம் பதிவை நக்கலடிக்கும் கல்கி வார இதழ்


2. திருவிளையாடலில் பெண்ணடிமை கருத்துக்கள்



ஓவர் டு தொகுப்புரை ...............

7 ஆம் பாவத்தை பொருத்தவரை இயற்கையோ /ஆபாசமா சொன்னா கடவுளோ எந்த வித்யாசத்தையும் படைக்கலை.

வித்யாசம்லாம் சமூக அமைப்பை பொருத்துதான் வருது. மாதா -பிதா செய்தது மக்களுக்கு - ஜனனீ சவுக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிக்கா

ருணானுபந்த ரூபேணா பசு பத்னீ சுதாலயா - தன்வினை தன்னை சுடும் - வீட்டப்பம் ஓட்டை சுடும் - ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்.

எனவே தற்சமயம் அன் மேரீடா -லவ்ஸ் -கிவ்ஸுனு போகாதவுக மேரீட் பர்சன்ஸை - காதல் சோடிகளை நக்கலடிக்காதிங்க - கேவலமா நினைக்காதிங்க -கேவலமா பேசாதிங்க.

"இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று"ங்கற கவிஞர் வாக்கை ஞா வச்சுக்கங்க. ஆண் பெண் வித்யாசம் ஜஸ்ட் இனப்பெருக்க வசதிக்குத்தேன். என்ன 24 மணி நேரமும் "ஷோ"போடமுடியுமா என்ன?

விதைப்பதற்கு ஒரு காலம் உண்டு -அறுப்பதற்கு ஒரு காலம் உண்டு. நான் விதைக்க வ்ரமாட்டேன்னா அறுக்கற வேலையும் இருக்காது.

அன்பை விதைக்கனும். அப்ப அன்பு அறுவடையாகும். அன்புன்னா ஊர்பணத்தை ஆட்டைய போட்டு சென்ட்ரல் ஏசி போட்டா கிடைக்கிற அன்பு இல்லை.

நாமெல்லாம் நீண்ட நெடும்பயணத்துல தொடர்ர பயணிகள். பயணத்தின் லட்சியம் முக்தி. முக்திக்கு வழி கருமங்களை - பூர்வ கடன்களை ஒழிக்கிறது தேன்.

அதுல முக்கியமான கடன் வாழ்க்கை துணையோட கடன். உலகத்துல எத்தனையோ குட்டிங்க மூக்கும்,முழியுமா,கொப்பும் குலையுமா இருக்க "இவள் தான்" வந்து வாய்க்கனுமானு ஃபீல் பண்ணாதிங்க.

பார்யா ரூபவதி சத்ரு - பொஞ்சாதி அதிகமா பிடுங்கினா நீங்க அறிவி ஜீவி - பெரிய வி.ஐ.பி ஆகப்போறிங்கனு நினைச்சு சந்தோசப்படுங்க. ( உ.ம் சாக்ரடிஸ் , நெல்சன் மண்டேலா).

நல்ல பொஞ்சாதி அமைஞ்சா அது கடன். அந்த கடனை தீர்க்க மறுபடி பிறவி எடுக்கனும். மேலும் முக்திங்கற லட்சியமே மைண்ட்லருந்து எகிறிரும். நம்ம ஆன்மா உடல்லருந்து பிரிஞ்ச பிறவு மத்திய பொதுக்கணக்கு குழு கணக்கா நல்ல பொஞ்சாதி முக்திக்கான முயற்சிகளுக்கு எப்ப்டியெல்லாம் தடையா இருந்தான்னு கணக்கு போட்டு "அடுத்த ஜன்மத்துல பப்ளிக்கா சாணி கரைச்சு தலையில ஊத்தற பொஞ்சாதிதான் வேணம்னு அடம் பிடிச்சு அதுக்கேத்த கிரக நிலைக்காக காத்திருக்கனும்.

நாறிப்போன பொஞ்சாதி கிடைச்சா

விளம்பர இடைவேளை

உலகப் புகழ்பெற்ற மைசூர் பல்கலை கழகத்தின் அஃபிலியேஷன் பெற்ற பிரபல உயர் கல்வி நிறுவனத்தின் அங்கமாக பணி புரிய விருப்பமா? உங்க ஊர்ல இருந்துக்கிட்டே வேலை செய்யலாம். வ்யது கல்வித்தகுதிகளை விட உங்கள் துடிப்பும் -செயல் திறனுமே கருத்தில் கொள்ளப்பட்டு கை நிறைய ஊதியம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
7 நாட்களில் காலை 7 முதல் 9 க்குள் தொடர்பு கொள்ளவும்
செல்: 090000 36777


பதிவுக்கு போயிரலாம்...

நாறிப்போன பொஞ்சாதி கிடைச்சா போன ஜென்மத்துல நல்ல பொஞ்சாதி அமைஞ்சிருந்தாள் . அவள் உங்க முக்திக்கு தடையா இருந்து ஒரு பிற்வியை வீணாக்கிட்டானு அர்த்தம். முக்தி பாதையில ஒரு மைல் முன்னேறியிருக்கிங்கனு அர்த்தம்.

தாய்குலத்துக்கும் இதையேதான் சொல்லனும். கடவுள் பீக் ஹவர் டீ மாஸ்டர் இல்லே. ஸ்ட்ராங் டீ கேட்டவனுக்கு லைட் டீயும் - லைட் டீ கேட்டவனுக்கு ஸ்ட்ராங் டீயும் கொடுத்துர்ரதுக்கு. இன்னைக்கு உங்களுக்கு அமைஞ்சிருக்கிற வாழ்க்கை துணை உங்க கொட்டேஷன் படி ஸ்பெஷலா டை அடிச்சு - கிரைண்டிங் பண்ணி கொடுத்ததுதேன்.

கொட்டேஷன் ஃபார்மை ஃபில் அப் பண்ணும்போது உங்க நோக்கம் முக்தி. இப்ப உங்க நோக்கம் பக்கத்து போர்ஷன் பரிமளா புருசன் மாதிரி உங்க புருசன் இருக்கனும்ங்கறது.

பவர் கட் 2 மணி நேரத்துக்குன்னா நீங்க வாய்ல வயித்துல அடிச்சுக்கிட்டு அழுது புரண்டாலும் அஞ்சு நிமிசம் முன்னாடி கூட கரண்ட் வராது. (இந்த மேட்டர்ல தாளி ரெம்ப பங்க்சுவல் நம்மாளுங்க)

நான் ஏற்கெனவே சொன்னபடி உங்க வாழ்க்கைதுணையோட குணத்துக்கு அவரோட ஜாதகம் மட்டும் காரணமிலலை. உங்க ஜாதகமும் காரணம். கடந்த பதிவுல எந்தவிதமான எஃபெக்ட் இருந்தா அது எந்த கிரகத்தால வந்த எஃபெக்ட் அதுக்கு என்ன பரிகாரம்னு கரீட்டா கொடுத்து கீறேன்.ஃபாலோ பண்ணிக்கங்க.

வலியை சந்தோசமா ஏத்துக்கங்கனு நான் சொல்லமாட்டேன். எனக்கு வலிக்குதுடா பன்னாடைனு முகத்துல செயல்ல காட்டுங்க. இல்லாட்டி ஏதோ சினிமால வடிவேலு " எனக்கு வலிக்கவே இல்லை"ங்கறாரே அந்த மாதிரி ஆயிரும்.

அவன் இன்னம் ரெண்டு பெக் சாஸ்தி போட்டுட்டு வருவான். நமக்கு எது நடந்தாலும் அதுக்கு 50 சதவீதம் நாமும் பொறுப்பு.

எல்லா பொம்பளையையும் எல்லா ஆம்பளையும் எரிச்சுர்ரதில்லையே. சில பொம்பளைகளை சில ஆம்பளை மட்டும் எரிச்சுர்ரான். அவன் எரிக்கிறான்னா இவ ஜாதகம் அவனை எரிடான்னு தூண்டியிருக்கும்.

ஓட்டப்பந்தயத்துலயாகட்டும் -ஃப்ளைட்டாகட்டும் டேக் ஆஃப் ரெம்ப முக்கியம். அது கரீட்டா அமைஞ்சுட்டா வெற்றி நமக்குத்தேன்.

நீங்க பெண் ங்கற மேட்டர் உங்க உரிமைகளை நசுக்க ஆண்களுக்கு இயற்கை கொடுத்த லைசென்ஸ் இல்லை. அதே போல கடமைகள்ளருந்து தப்பிச்சுக்க இயற்கை கொடுத்த எக்செப்ஷனுமில்லை.

நீங்க பெண் என்ற நினைவு கழிவறை -குளியலறை - படுக்கையறையில மட்டும் நினைவுக்கு வந்தா போதும். மத்தபடி நீங்களும் ஒரு உயிர். ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் உங்களுக்கு உண்டு -கட்மைகளும் நிச்சயம் உண்டு.

பொறுத்தார் பூமி ஆள்வார் -பொறுமை பெருமை தரும்னுல்லாம் நான் ஜல்லியடிக்கமாட்டேன். பக்கத்து வீட்டுக்காரன் தன் வீட்டை டெமாலிஷ் பண்றானு வைங்க. நம்ம வீட்டுக்குள்ள தூசு விழும்போதே ' ங்கோத்தா இன்னாடா சோமாறி வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும்.ஒயுங்கா தட்டிகட்டிக்கினு வேலைய செய்"னு சொல்லிரனும்.

தூசுதானேனு இருந்தா தூண் விழும். ஜாதகத்துல 7 ஆம் பாவம் -அதன் அதிபதி -அவரோட சேர்ந்த கிரகங்கள் பார்க்கும் கிரகங்கள் இப்படி அனேக அம்சங்கள் அனேக ஆப்ஷன்ஸை தருது. அதுல உங்க டேஸ்டுக்கு /பொசிஷனுக்கு எது பெட்டரோ அந்த கிரகத்தோட ரூட்ல போங்க.

இல்லறமல்லது நல்லறமன்று - அட இன்னைய தேதிக்கு நல்லா ஸ்டடி பண்ணி - மேட்டரை புரிஞ்சிக்கிட்டு 30 வயசுல கண்ணாலமாகி - ஒரு 15 வருசம் போல ஒயுங்கா வாழ்ந்துட்டா போதும் தலை . அப்பாறம் அதுவே பழக்கமாயிரும் . அதை விட்டுட்டு மொட்டைத்தாத்தன் குட்டையில விழுந்த மாதிரி விழுந்து நாறிராதிங்க.

மஹிளா ஸ்டேஷன் -ஃபேமிலி கோர்ட்டுல்லாம் யதார்த்தத்துல நரகம். பொஞ்சாதிய பார்ட் டைமா ரூட்ல அனுப்பற பிக்காலி கூட அட்வைஸ் பண்ண வந்துருவான். புருசனை காவலுக்கு வச்சுட்டு தொழில் பண்ற பதிவிரதை கூட பழமொழில்லாம் சொல்லி கடுப்பேத்துவா..

தேவை ஒரு புரிதல் மட்டுமே.. ஓகேவா ..