Saturday, January 29, 2011

பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -1

ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்...

கவிதை07க்காக சுகுமார்ஜி...

ழுத்துலகில் புதிய எழுத்தாளராக அவதரித்திருக்கும் அன்பர் எஸ். ஆனந்த்... தமிழ்நாடு பிராமணர்கள் பற்றி தன் மனம்திறந்து செய்திகளை தெரிவிக்கிறார்.  

தமிழக பிராமணர்கள் நீண்ட நெடுங்கால பாதுகாக்கப்பட்ட பாராம்பரியம் கொண்டவர்கள். தற்பொழுதைய காலகட்டத்தில் தங்களை பிரித்தது போல உணர்கிறார்கள். பிராமணர்கள் பொதுவாகவே தங்களை விளம்பரபடுத்துக் கொள்வதில்லை. அதுபோலவே தங்கள் உணர்வுகளை சிலநேரங்களில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். தமிழக பிராமணர்களை அனேகமாக எல்லோருமே கேவலப்படுத்த முனைகிறார்கள். இதற்கு பொதுவான காரணம் தமிழக பிராமணர்கள் போராட்டங்களும், எதிர்விளைவும் செய்ததில்லை. மனம் வருந்ததக்க நிகழ்வுகளால் தமிழக பிராமணர்கள் மேன்மை அழிக்கப்பட்டுவிட்டது. ஆனலும் கூட தமிழக பிராமணர்கள் அமைதி காத்துவருகின்றனர். இப்போதைய நிலைமை 1930 ஆண்டில் தமிழக பிராமணர்களுக்கு நேர்ந்ததாகவே இருக்கிறது.

பிராமணர்களை அழிச்சாட்டியம் செய்யும் குழுக்கள் சில திட்ட வரையறைகளை கொண்டுள்ளது. இதன் காரணமாகவே நகரங்களில் வாழும் பிராமணர்கள் மட்டுமில்லாது பலர், புராணகால அடையாளமான குடிமியை எடுத்துவிட்டு, இயல்பான தாடியை அடையாளம் கொண்டுள்ளனர். ஆத்தில் பேசுகிற தமிழை வீட்டில் பேசுவதாக மாற்றிவிட்டனர். அவர்களின் ஆடை காலாச்சாரங்களோடு ஒத்ததாக மாற்றிக்கொண்டனர். அசைவம் அவர்களின் உணவில் பட்டியலிடப்பட்டது. தன் சுற்றுவட்டத்தில் பிராமணர்கள் என்பதற்கான அடையாளத்தை தொலைத்ததின் மூலமாக தொல்லைகளில் இருந்து தங்களை வாழ்வின் பொருட்டு காப்பாற்றிக் கொண்டனர்.


இன்றோ சில பிராமணர்கள் மட்டுமே தங்களின் ஆச்சார மொழிவழி பேசிக்கொண்டிருக்கின்றனர். கிட்டதட்ட ஐம்பது சதவிகித பிராமண மக்கள் தங்கள் அடையாளம் மாறிப்போய் இருக்கின்றனர். துர்பாக்கியமாக யாருமே பிராமணர்களை குறிப்பிட்டு காணும் வகையில் அவர்களின் உடல், மொழி, நடவடிக்கைகள் இருக்கின்றன. இது சிலநேரங்களில் திராவிட பாரம்பரியத்திலிருந்து விலகியதாக உணரப்படுகிறது. சில திராவிட அமைப்புக்கள் பிராமணர்களை வந்தேறிகளாக குறிக்கின்றன. ஆனாலும் கூட திராவிட மொழி பிராமணர்களுக்கு உணவு, உறையுள்ளாக இருக்கிறது.


தமிழ்ச் சங்ககால சிலப்பதிகாரம், ஒரு ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகளால் எழுதப்பெற்றது. கோபம் கொண்ட கண்ணகி இப்படி சபிக்கிறாள் “ இந்த மதுரை நகரம் கொழுந்துவிட்டு எரியட்டும், பிராமணர்களும், பசுக்கள் மட்டும் தப்பி பிழைக்கட்டும்”. இதிலிருந்து தெரிவது பிராமணர்கள் மேலாக ஜெயின் இனத்தைச்சார்ந்த இளங்கோ அடிகள் கொண்டிருந்த மரியாதை. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பிராமணர்கள் நிலைமை மோசமாக இருக்கிறது. பற்பல அரசு வேலைகளில் மட்டுமில்லாது, கடினமான தொழில்களில் கூட தங்களை நிரூபித்து வருகிறார்கள். இயற்கையாக அமைந்த ஒழுக்கமும், ஆச்சார நெறிமுறைகளும் பிராமணர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. பிராமணரல்லாதோர் கிடைத்த நற்பலனை அசைவ உணவுகளாலும், மதுவகை குடிபழக்கத்தினாலும் இழக்கின்றனர். பிராமணரோ அவர்களை காப்பற்றும் சேவையிலிருக்கிறார்கள்.


நான் பிராமண மடங்களை சேராதிருந்தும், மடத்தலைவரின் அன்பை பெற்றிருக்கிறேன். 1951 ல், என் தகப்பனார் இறந்தார். 1954 ம் ஆண்டு, பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள், சென்னை தி.நகரில் முகாமிட்டு இருந்தார்.  அந்த நாளில் திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி முதன் முதலாக சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கச்சேரி செய்தார். ஆனாலும் பெரியவர் எம்.எஸ். சுப்புலட்சுமியையும், அவர் கணவர் சதாசிவத்தையும் கண்டுகொள்ளவில்லை. என் தாயாரோ, தினமும் வெறும் வயிற்றோடு மடம் சென்று பெரியவரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டார். ஆனால் என் தாயார் கணவனை இழந்த பிறகு,  பெரியவர் என் தாயாருக்கு புனித நீரைக்கூட தந்ததில்லை. பொதுவாக நான் பெரியவர், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் மேலாக பக்தி கொண்டவனில்லை. கடைசியாக, நூற்றாண்டு கொண்டாட்டத்தில் என் மகனோடு கலந்து கொண்டபோது தான் சரஸ்வதி சுவாமிகளை பார்த்தேன். அவரோ, எனக்கென்ன? என்பதான நிலையில் இருந்தார். அது பரமாச்சாரியர்களின் குணம்.


அடுத்து ஜெயேந்திரர் பொறுப்பேற்றார். ஆனால் நான் மடத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டேன். சில நேரங்களில் அவர், ஜெயேந்திரர் முட்டாள்தனமாக நடந்துகொண்டார். உபயோகமில்லத செய்திகளை, பிரச்சனையை உருவாக்கும் வார்த்தைகளையும் மக்களிடம் பகிர்ந்தார். ஜெயேந்திரர் கைது செய்யப்படும்போது உண்மையில் நான் அதிர்ச்சியடைந்தேன். இது மடத்தின் புகழை நிச்சயம் கெடுக்கும் நிகழ்வு. இது தொடர்பான வழக்கும், வழக்கு நடத்தப்பட்ட முறைகளும், பிராமண சமுதாயத்தை கேவலப்படுத்துவதாகவே அமைந்தது. ஆனாலும் ஜெயேந்திரர் கைது பொருட்டு பெண்கள் போராட்டத்தில் கலந்துகொண்டது நல்ல மாற்றமாக இருந்தது. இதுவே பிராமண சமுதாயத்திற்கு உரமாக இருந்தது.


தொடரும்....