Sunday, January 30, 2011

கமல்ஹாசனும், மணிரத்தினமும் பிராமணரா?

 பிராமண தலைவர்கள் எங்கே? Where is Brahmin Leader? _Part -2 (இறுதிப்பகுதி)


ஆங்கில பத்திரிக்கை  “அவுட்லுக்” பத்திரிக்கையிலிருந்து கிடைத்த செய்தியின் தமிழாக்கம்...

கவிதை07க்காக சுகுமார்ஜி...

பிராமண சமுதாய போராட்டங்கள் அரசியலை மையம் கொண்டு இயங்குவதில்லை. இதை பிராமண சமுதாயத்தின் நீண்ட வரலாறு அறியத்தரும். படித்தவரும், பாமரரும் நன்கு அறிவார். ஒரு தவறான நெறியை தந்த பொறுப்பு பிராமணரல்லாத திரை உலகை சார்ந்தவர்களையே சாரும். ஒரு பிராமண சமூகத்தைச்சார்ந்தவர் திரை உலகில் காலடி எடுத்துவைத்தல் நடக்காத காரியம். அதோடு நடிகராகவோ, உதவி இயக்குனராகவோ, கவிஞராகவோ முடியவே முடியாது. முன்னொரு காலத்தில் திரை உலகம், அதில் பிராமணர்கள் இருந்த நிலையில் நல்ல முன்னேற்றமும், நிலையான வளர்ச்சியும் பெற்றது. ஆனால் இப்பொழுது,   பிராமணரல்லாதோரால் சினிமா உலகம் நீர்த்துப்போய்விட்டது.


(ஆனால் பிராமணரான கமல்ஹாசனும், மணிரத்தினமும் நல்ல நிலையில் இருக்கிறார்களே என்று குறிப்பிட்ட பொழுது )
கமல்ஹாசன் ஒரு மாட்டுக்கறி விருப்பன், திராவிட கழகத்தின் கொள்கைகளை வசீகரித்துக்கொண்டவர். மணிரத்தினம் புத்தி கூர்மையான, நல்ல அம்சத்தை தரக்கூடிய இயக்குனர். ஆனால இன்னமும் சிறு பத்திரிக்கைகள் ஒரு வட்டத்திற்குள் இயங்குவதைப்போலவே அவர் திரைப்படங்களும் இருக்கின்றன. இது பிராமணரல்லாதோருக்கு இருக்கும் ஒரு தேக்க நிலை.




தமிழக பிராமண சமுதாயம் அழிவின் நிலையில் இருப்பதாக தோன்றுகிறது. எனக்குத்தெரிந்து இந்த சமுதாயத்தை வழி நடத்திச்செல்ல நல்ல தலைவர்கள் இல்லை. ஜெயேந்திர சரஸ்வதி இந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டார். அவர் மதத்தையும், அரசியலையும் சரிவர புரிந்துகொள்ளாதவர். திரு. சி. ராஜகோபாலாச்சாரி ஒரு அருமையான, பொருத்தமான தலைவர், ஆனால் அவர் நம்மிடையே இல்லை. நமக்குத்தேவையான தலைவரை உருவாக்குவதாக தற்கால கல்வி அமைப்புக்கள் இல்லை. பிராமண சமுதாயம் ஒரு மறுமலர்ச்சியை பெருவதில் வாய்ப்பற்று இருக்கிறது. வழக்கமான பிராமண சமுதாயத்தில் ஒரு சிலரே வேதங்களை கற்று தேர்கின்றனர்.



மடங்கள் வேத பாட வகுப்புக்களை இலவசமாகவே தருகிறது. ஆனால் பயன்பெறுபவர்கள் வெகு சிலரே. புரோகிதம் செய்வதும், வேதங்களின் வழியும் வாழ்க்கைக்கு உதவுவதாக இப்பொழுது இல்லை. நிலத்திற்கும், பண்ணைக்கும் சொந்தக்காரர்களாக பிராமணர்கள் இல்லை. என் மாமன் ஒருவர் நிறைய நிலங்கள் வைத்திருந்தார். ஒவ்வொரு மகளின் திருமணத்தின் போதும் தன் நிலத்தை ஒவ்வொன்றாக விற்றுவந்தார். இப்பொழுது ஒரு மண்ணுமில்லை. எளிய விழாக்கள் சமூக நிலையில் இல்லை, ஆனாலும் திருமணம் எளிமையாக நடக்குமானால் செலவுகளை குறைக்கலாம். இக்காலத்தில் கூட உபநயனம் நிகழ்ச்சி நிகழ்த்தப்படுவது சந்தோசமளிக்கிறது. சந்தியாவந்தனம் தினமும் மூன்று முறை பூணூல் அணிந்த பிராமணனால் நடத்தப்படவேண்டும். இப்போழுது எந்த பிராமணன் இதைச் செய்கிறான்? ஒரு பிராமணன் தன் வாழ்நாளில், ஒருநாள், ஒருதடவையாவது சந்தியாவந்தனம் செய்தானானால் அவனுக்கு புண்ணியம் கிடைக்கும். ஆனாலும் ஐம்பது ஆண்டுகளாக உபநயனம் நிகழ்ச்சி நடத்தப்படுவதே நல்லகாரியம்.


மனிதனின் கடமைகளை சரிவர செய்வது முறைப்படுத்துதல் கடினம்தான். இதற்கு உழைப்பையும், பணத்தையும் செலவழிக்க வேண்டிதாக இருக்கும். மனித உயிருக்கு 13ம் நாளில் காரியம் செய்வதென்பது ஏற்றுக்கொள்ள கடினமாயிருக்கும்.  என் சகோதரி இறந்த நேரத்தில் தகன கிரியையை நிறுத்தி வைத்திருந்தோம். அந்த நேரத்தில் சடங்குகளைச் செய்ய புரோகிதர் கிடைக்கவில்ல. நாங்களும் இந்த இறுதி சடங்குகளை எப்படி செய்வதென அறியாதிருந்தோம். நான் என் மகனிடம் இபோழுதே “எனக்கு இதெல்லாம் நீ செய்யவேண்டியதில்லை” என்று சொல்லிவிட்டேன்.

என் தகப்பனார் இறந்த அந்த நாளை நான் நினைவு கொள்கிறேன். ஆனாலும் எனக்கு ஒரு விசயம் குறித்து வியக்கிறேன்... “ இறந்து போன மனிதர்களின் ஆன்மாக்களை இந்த முட்டாள் உலகிற்கு அழைப்பதின் அர்த்தமென்ன?”