Thursday, January 20, 2011

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

உடலுறவு விருப்பமும் - கிரக நிலையும்
இந்த தொடருக்குள் தொடரிலான தொடர்ல ஒன் டு ஃபிஃப்த் பாவங்கள் வரை சுபர்கள்,சுபபலம் பெற்றுன்னு ரொட்டீனா வந்திருக்கும். ஆனால் ஆறாம் பாவம் மேட்டர்ல மட்டும் இந்த பருப்பு வேகாது. இந்த பாவம் காலியாயிருந்து ,இந்த பாவாதிபதி 8 அல்லது 12ல இருந்தாதான் பிழைச்சிங்க. இல்லைன்னா என்னாகும்ங்கறிங்களா? சத்ரு ரோக ருண உபாதைகள் கழுத்தை பிடிக்கும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தங்கறிங்க? சொல்றேன்.

மன்சன் இன்னா வேலை செய்தாலும் அதுக்கு பின்னாடி இருந்து அவனை ஆண் நாய் மாதிரி முன்னுக்கு தள்றது கொல்லும் இச்சை அ கொல்லப்படும் இச்சைங்கற ரெண்டுதான்.

ஆறாமிடத்துல சுபர்கள் நின்னு  அந்த பாவம் சுபபலமா இருந்ததுனு வைங்க பார்ட்டி கச்சா முச்சானு கடன் வாங்கிட்டே போவான் (எதுக்குன்னா சுபகாரியங்கள் செய்யத்தான், எம்ஜிஆர் வேலைகள் செய்யத்தான்..). இங்கே சுப கிரகம் இருக்கிறதால கடன் அதும்பாட்டுக்கு வளர்ந்துக்கிட்டே போவும்.

கடன் வாங்கி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிறதால கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. கடன் வாங்கியாவது எம்.ஜி.ஆர் வேலைகள் செய்றதால கொல்லும் இச்சையும் நிறைவேறுது. ( ஆயிரம் பேருக்கு அன்னதானம்ன உடனே ஊர்காரங்க செத்துட்டானுங்களே)  மேலும் உயிரோட அடிப்படை இச்சையான உருவாக்குதல்,பரவுதல் இத்யாதி நோக்கங்களூம் இதுலயே நிறைவேறிரும்.

ஆக்சுவலா மேற்படி சகல இச்சைகளும்  நிறைவேற செக்ஸ் ஒரு களமா உபயோகப்படுது. பார்ட்டிக்கு கடன் மூலமா மேற்படி சகல இச்சைகளும் நிறைவேறிர்ரதால கில்மாவுல இன்டரஸ்ட் குறைஞ்சிட்டே வரும்.

ஒரு வேளை கில்மால தாளிக்கனும்னு கடன் வாங்க ஆரம்பிச்சிருந்தாலும் (அதான் பாஸ் ..ரோஸ் உட்ல டபுள் காட், குர்ல் ஆன் பெட், ஏ.சி எட்செட்ரா.. ) போக போக கில்மாவை விட கடன் வாங்கறதுலயும், கடன் காரனுக்கு பாய்லா காட்டறதுலயும் ருசி ஏற்பட்டுரும்.

அடுத்தது நோய். நோய் வருதுன்னா உங்க பாடி ஆரோக்கியமா இருக்கு. அதுல உள்ள இம்யூன் சிஸ்டம் பர்ஃபெக்டா வேலை செய்யுதுன்னு அர்த்தம்.இப்படியா கொத்த பாடில செக்ஸுவல் பார்ட்ஸும் ஒரு ரிதத்தோட , அஜெண்டாவோட வேலை செய்யும்.

ஒருத்தருக்கு நோயே வரலைன்னு வைங்க ஒன்னு அவர் நம்மள மாதிரி உசார் பார்ட்டியா இருந்து காலை டிஃபன் கட் பண்ணி ராத்திரி கஞ்சி குடிச்சுக்கிட்டு, பான்,மாவா,லாலா ,மசாலால்லாம் டச் பண்ணாம அல்லாரும் நல்லாருந்தா சரின்னுட்டு நடராஜா சர்வீஸையே யூஸ் பண்றாருன்னு அர்த்தம். அல்லது அவர் பாடியே காட்பாடி ஆயிருச்சு, இம்யூன் சிஸ்டம் டோட்டல் ஃபெயில்யூர் ஆயிருச்சு அவருக்கு  எதோ பெருசா நோய் வரப்போகுதுன்னு அர்த்தம்.

பலவீனமே எல்லா பாவங்களுக்கும் கங்கோத்ரி .பலவீனன் தன் பலத்தை நிரூபிக்க புது புதுக்களங்களா தேடிட்டே இருப்பான். அப்பாறம் குட்டிகளோட முரட்டு மாமன் களும், அசல் மாமன்களும் (போலீஸ் காரவுகளை சொல்றேன் இவனை தேட ஆரம்பிச்சுருவாய்ங்க.

இவன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு கலர் கலரா பார்க்க எவளுக்காச்சும் மிலிட்டரி அண்ணன், போலீஸ் தம்பி இருந்தா ரெட் மார்க்கும் கிடைக்கலாம். மேலும் பலவீனன் அதிகம் கோபப்படுவான். கோபத்துலயே இவன் சக்தியெல்லாம் சக் (Suck) ஆயிர்ரதால நாளடைவுல பேட்டரி வீக் .ஷாட் கட் பண்ணா இழந்த சக்தி வைத்தியர்கள் தான்.

இங்கன சுபகிரகம் இருந்தா வர்ர நோய் ரெம்ப நாள் படுத்தாம படக்குனு டிக்கெட்டை கொடுத்துரும். பாபகிரகமிருந்தாலாச்சும் நீங்க நொந்து நூடுல்ஸானாலும் நித்ய கண்டம் பூர்ணாயுசுன்னு காலத்தை ஓட்டலாம்.

இங்கன சுபகிரகம் இருந்தா சமுதாயத்துல யார் எல்லாம் நல்லவுகனு பேர் வாங்கியிருக்காய்ங்களோ அவிகளோட எல்லாம் இவனுக்கு விரோதம் வந்துரும்.

கெட்டவுகளோட விவகாரம் வச்சிக்கிட்டாலும் அவன் மிஞ்சிப்போனா கூலிப்படைய அனுப்புவான். நாமளும் ஒரு கூலிப்படைய வச்சு சமாளிக்கலாம் (சூரிய போட்டுத்தள்ளினது அவனோட படையில தளபதிதானுங்கோ). ஆனா நல்லவுக கிட்ட விவகாரம் வச்சிக்கிட்டா மாத்திரம்  ..இருங்க ஒரு தாட்டி தலையை சிலிர்த்துக்கறேன்.

சாமானியமா அவிகளுக்கு விரோதினு ஆரும் இருக்கமாட்டாய்ங்க. தங்களை விரோதியா நினைக்க கூட ஆளிருக்குன்னு அவிகளூக்கு தெரிஞ்சா 24 மணி நேரம்,365 நாள் இதே நினைப்பாத்தான் இருப்பாய்ங்க.

அவிக எண்ண அலைகள் காத்துல மிதந்து வந்து நம்மை முற்றுக்கையிட ஆரம்பிக்கும். நம்ம உயிர் காத்துல பறக்கிறவரை தாளி நம்ம விடாது விடாது விடாது.

உங்க சர்க்கிள்ள யாரோ நல்லவருக்கு (?) எவனோ பிக்காலி கெட்டது பண்ணியிருப்பான். ஆனால் நல்லாவே இருப்பான். அதை கமெண்ட்ல போட்டு என்னை குடைய நினைக்காதிங்க. ப்ராக்கெட்ல போட்ட கேள்விக்குறிய பாருங்க அதுவே பதில் சொல்லும்.

இதே கெட்டவனுக்கு கெட்டது பண்ணா அந்த கெட்டவன் பண்ண கெட்டதுல மாட்டி முழிச்சவுக வாழ்த்துவாய்ங்க. அந்த கெட்டவனோட வைப்ரேஷன்ஸ் ஆல் இண்டியா ரேடியோ மாதிரி கொரகொரங்கும். (இன்னைக்கு செல்ஃபோன்,டிவில்லாம் வந்த பிற்பாடு இன்னம் மோசமுங்கோ)

அதனாலதான் ஆறாம் பாவத்துல பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு விதி வச்சிருக்காய்ங்க.

ஆக மத்த பாவங்கள் ( 6,8,12 தவிர ) சுபபலமானா சுபம். இந்த 6,8,12 மட்டும் கெட்டு குட்டிசுவரானாதான் சுபம். இந்த 6,8,12 அதிபதிகள் இந்த பாவங்களிலேயே மாறிமாறி உட்கார்ந்தா தூள்.

ஓகே பாஸ்.. நாளைக்கு ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்,வப்பாட்டி எல்லாத்தையும் காட்டற 7 ஆமிடத்தை ஸ்கான் பண்ணுவோம் .தற்சமயத்துக்கு உடு ஜூட்