Thursday, October 21, 2010

ஓம்சக்தி அடிகளாரின்(?) மகன் புதுக்கட்சி

மேல் மருவத்தூர் ஓம் சக்தி  பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன் தமது பிறந்த நாளன்று புதுக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக கல்கி செய்தி வெளியிட்டுள்ளது. அவிக காலேஜ்ல ரெய்டு நடந்த பிற்பாடு தங்களுக்கும் ஒரு அரசியல் பின்னணி இருக்கனும்னு நினைச்சு இந்த ஏற்பாட்டை செய்யறதா பக்தர்கள் சொல்றாய்ங்களாம்.

(கீழே  உள்ள அடிகளார் படத்தை பாருங்க தலைக்கு பின்னாடி ஆரா என்னா சூப்பரா இருக்கு - அடங்கொய்யால  ஆல் லைட்ஸ் ஆஃப்னுட்டு இன்ஃப்ரா ரெட் கேமரால  பெரியாரை படம் எடுத்திருந்தா ஒளி வெள்ளத்துக்கு நடுவுல தெரிஞ்சிருப்பாரு.  இதை நான் எப்படி கன்ஃபார்மா சொல்றேன்னா எண்ணம் செயலாகனும்னா அளவற்ற ஆத்ம சக்தி இருக்கனும். பெரியார் எண்ணங்கள் நூத்துக்கு நூறு சதவீதம் இல்லைனாலும் எந்த அளவுக்கு செயல் வடிவம் பெற்றிருக்குன்னு சரித்திரத்தை புரட்டிப்பாருங்க..

இந்த பங்காரு அடிகளாரோட  ஃபோட்டோ பின்னாடி இருக்கிற ஆரா ஜஸ்ட் டிஜிட்டல் டச்சுங்கண்ணா)

அரசியல் சாசனப்படி இந்திய குடிமகனா உள்ள , மேஜரான  எவன் வேணம்னா  கட்சி ஆரம்பிக்கலாம். ஆனா கன்ஷிராம் சொன்ன எம்3 ( மணி,மாஃபியா,மீடியா) இருக்கிற பிக்காலி எல்லாம் கட்சி ஆரம்பிச்சுட்டா நாடு தாங்காது பாஸ். 

மணி:(Money)

வெறும் மணி (தெரு நாய் பேரு கிடையாதுப்பா.. பணம்-பைசா-ருப்யா-மால்) பலத்தோட கட்சி ஆரம்பிச்ச பன்னாடையெல்லாம் தாராந்து பூட்டது இந்திய ஜன நாயகத்தோட வலிமைய காட்டுது.

என்னதான் ஜன நாயகம் கெட்டு கீரை வழியாகியிருந்தாலும் வெறும் மணி பலத்தை வச்சிக்கிட்டு கட்சி ஆரம்பிச்சா நாக்கைத்தான்  வழிக்கனும் . இந்த ஃபார்முலா சக்ஸஸ் ஆகியிருந்தா டாட்டா,பிர்லா,அம்பானி,வாடியா எல்லாம் ஆளுக்கு அரை டஜன் கட்சி ஆரம்பிச்சுருப்பாய்ங்க.

மாஃபியா :

இதுவும் மணி மாதிரி தான் வெறுமனே மாஃபியாவை வச்சு எவனும் சக்ஸஸ் ஆக முடியாது. கூடவே மாமா,மச்சான், அக்காவை வச்சிருக்கிறவன் எவனாச்சும் ஏற்கெனவே லாஞ்ச் ஆகியிருந்தா அவன் குண்டி பின்னாடி நின்னு ஒர்க் அவுட் பண்ணி அப்பாறம் தனியா வந்து பேர் சொல்லலாம்.

மீடியா:

சக்ஸஸ் ஆக 00.01% வாய்ப்பிருந்தா கூட விகடன் க்ரூப்ஸ் எம்.டி.விட்டிருப்பாரா? இல்லே  நைனா அதனாலதான் விட்டு வச்சிருக்காய்ங்க. தேவி மாதிரி ஒரு பத்திரிக்கைய வச்சுக்கிட்டு ஒரு மெர்க்கன்டைல் வங்கி விவகாரத்துலயே  ஜெயிச்சு வர முடியலை. கட்சி ஆரம்பிச்சு சக்ஸஸ் ஆறதெல்லாம்  ச்சொம்மா புஸ்ஸு தான்

கன்ஷிராம் போய் சேர்ந்துட்டாரு. அவரு உசுரோட இருந்திருந்தா எம்3 யோட இன்னொன்னை சேர்த்திருப்பாரு. அதென்னாடான்னா மிஸ்டிசம் அதாவது சாமியாருங்க. ராம் தேவ் பாபா கட்சி ஆரம்பிக்கிறேன்னாரு ( ஆரம்பிச்சுட்டாரா தெரியாது.. இப்போ பங்காரு


நான் இன்னா பண்ணட்டும் பாஸ் . சப்ஜெக்ட் தானா வந்து மாட்டுது. ஜோதிஷம்னு குறிப்பிட்டா அதை ஜோதிஷமா ஜோதிடமானு திருத்த சனம் இருக்கு. "சாமி"ன்னா அது வெள்ளை சாம்பார் மாதிரி இருக்கு.ஸ்மாமின்னா ஓனர்னு அர்த்தம். எவனொருத்தன் தனக்கு தானே ஓனரா கீறானோ அவன் தான் உண்மையான ஸ்வாமி/சன்யாசி/காட் மேன் .(God Man ங்கற வார்த்தைய தமிழ்ல படிக்கிறச்ச Cot Manன்னு கூட படிக்கலாம். அதனாலதான் நிறைய God Man Cot Man ஆயிட்டானுவ. Cotன்னா  கட்டில் ( ஞா வருதே ஞா வருதே - நித்யானந்தா..)


சன்னியாசி பூனை வளர்த்த கதை தெரியுமா? தெரியாதவுகளுக்கு சொல்றேன். ஒரு சன்யாசி தன்னோட கோவணத்தை எலி கடிச்சுருச்சுன்னு பூனை வளர்க்க முடிவு செய்தாராம். அதுக்கு பால் வேணுமேன்னு பசு வளர்த்தாராம். அதைபார்த்துக்க ஆள் வேணமேனு ஒரு பொம்பளை ஆளை போட்டாராம்.  கடேசில பார்த்தா ஏதோ கசமுசா நடந்து  சம்சாரியாவா ஆயிட்டாராம். அந்த கதையாத்தான் இருக்கு அடிகளார் கதை.

பொஞ்சாதிக்கு நகராட்சி சேர்மன் பதவி (தேவையா?) காலேஜு தேவையா? இன்னைக்கு அது புதுக்கட்சில கொண்டு வந்து விட்டிருக்கு. பூனை வளர்க்க போயி சம்சாரியான கதைதான்.

எனக்கு ஒரே ஒரு சின்ன மேட்டர் புரியமாட்டேங்குது பாஸ். இந்த மாதிரி காட் மேன் எல்லாம் நம்ம பத்தி என்னதான் நினைச்சிக் கிட்டிருப்பாய்ங்க. கேணைங்கன்னா?  அது நெஜமோ என்னமோ தெரியலை. நான் தான் ஆதிபராசக்திங்கற பார்ட்டி பொஞ்சாதிய நகராட்சி சேர்மனாக்கித்தான் நல்லது பண்ணனுமா என்ன?

சரி ஓஞ்சு போவட்டும் காலேஜ் ஏன் நடத்தனும். நடத்தினா போகுது .கணக்கு வழக்கெலாம் கரீட்டா வச்சுக்க வேண்டியதுதானே. ரெய்ட்ல மாட்டற மாதிரி ஏன் திருட்டு கணக்கு எழுதனும்?

நீ தி.க எழுதினே ரெய்டு உட்டாய்ங்க. நீ காட் மேனோ இல்லையோ அட்லீஸ்ட் மென்டல் மெச்சூரிட்டி இருக்கிற பார்ட்டியா இருந்தா என்ன பண்ணனும் கணக்கு வழக்கையெல்லாம் ஒழுங்கா வச்சிக்கிற வழிய  பார்க்கனும். அதை விட்டுட்டு மகனை விட்டு கட்சி ஆரம்பிக்கசொல்றேன்னா என்ன அர்த்தம்?

உனக்கு ஃப்யூச்சர்ல கூட ஒழுங்கா கணக்கு வச்சுக்கிற ஐடியாவே இல்லை. திருட்டு கணக்கு எழுதற நீ சக்தி அவதாரமா?   நாம ஹார்ட்வேர் வச்சிருக்கலைன்னாலும் எதை எழுதினாலும் "ஆணி"த்தரமா எழுதித்தான் வழக்கம்.

அடிகளாரை பத்தி மேலதிக தகவல் எதாச்சும் பெயருதா பார்ப்போம்னு கூகுல்ல தமிழ்ல அடிச்சு  தேடினா 2 விஷயம் ரிப்பீட்டு. ஒன்னு ரெய்டு,இன்னொன்னு ஒரு கோடி ரூ  நலதிட்ட உதவி. ரெண்டுமே அடிகளாரோட பண வசதியைத்தான் காட்டுது.

மேலும் முக்கி முக்கி தேடினதுல பூகம்பத்துக்கு 25 லட்ச ரூ கொடுத்த மேட்டர் சிக்கி மேற்சொன்ன வசதி பாயிண்டைத்தான் உறுதி படுத்துது.

மேலும் தேடினதுல மங்கையர் உலகம் "அம்மாவின்" புகழ் பாடுது. அப்பாறம் ஒரு விண்டோ சைஸுக்கு "அம்மா" படத்தோட ஒரு ப்ளாக் மாட்டுச்சு. தாளி வரலாறுன்னு அடிச்சி தேடினா ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

சுகுமார்ஜி கரீட்டா சொன்னாரு. இணையமே ஒரு குப்பை. அதுல நாம தேடறது மட்டும் கிடைக்காது.. இப்போ தினமணி சைட்ல  வசம்மா  மாட்டிக்கிச்சு .

அதை ஒரு ஓட்டு ஓட்டுவம்.


//தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்மருவத்தூர் என்ற சிறிய கிராமத்தில், 3.3.1941}ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் கோபால நாயகர், தாயார் பெயர் மீனாம்பிகை அம்மாள். அவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். அடிகளார் குடும்பத்தில் இரண்டாவது மகன்.//

நானே கடவுள்ங்கறது ஒரு மனவியாதி. கமல் ஒரு படத்துல சொல்வாரு. கடவுள் இருக்கிறாருங்கறவனை கூட நம்பிரலாம். நான் தான் கடவுள்ங்கறவன் ரெம்ப டேஞ்சர். அவன் மட்டும் நம்பினா அவனுக்கு மட்டும் டேஞ்சர் . ஊரே நம்ப ஆரம்பிச்சுட்டா நாட்டுக்கே டேஞ்சர். இந்த மனவியாதி அடிகளாருக்கு வர மொத காரணம் : அவர் பிறந்தது சின்ன  கிராமத்துல அதுவும் பி.ப குடும்பத்துல அதுலயும் விவசாய குடும்பத்துல.

ஏழ்மை கியாரண்டி. அவமானங்கள்  நிச்சயம், ஃப்ரீ ஹவர்ஸ் அதிகம்.இத்தனை பாயிண்ட் ஒன்னு சேர்ந்தா என்னாகும்? இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் அதுலருந்து வில் டு பவர். அதுலருந்து கலாம் சொன்ன கனவு காணுதல். எல்லாமா சேர்ந்து ஒரு வழியாக்கிருச்சு.

//அருள்திரு அடிகளாரிடம் இளமையிலிருந்தே கல்வியில் அதிக ஆர்வம் இல்லை//

இருந்திருந்தா பாவம் கலெக்டராகி  யாராச்சும் மந்திரி ஆசிரமத்துக்கு போக அவர் செருப்புக்கு காவலா இருந்திருப்பாரு. கல்வியில ஏன் ஆர்வமில்லைன்னா கனவு,கற்பனை.

//உலக வாழ்க்கைக்காக இளநிலை ஆசிரியர் தகுதி பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார்.//

ஸ்கூல் வாத்தியாருங்களுக்குன்னே ஒரு செனேரியோ இருக்கு தெரியுமா? அதுலயும் இவிக ரிட்டையர் ஆயிட்டாய்ங்கனு வைங்க கொலை பண்ணிருவாய்ங்க. அடிகளார் மூலமா ஆத்தா பேசலை நைனா .அந்த கால ஆசிரியர் தான் பேசறாரு..

//1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசிரியர் பணியைத் துறந்து முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபட்டார். //

வில் டு பவர், ஈகர் டு பவர் ,கனவு கற்பனை உள்ளவன் ப்ராக்டிக்கல் லைஃப்ல சூட் ஆக முடியாது.

//தான் பட்டம் பெறாவிட்டாலும் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க, பிற்காலத்தில் ஆன்மிகத்தோடு கல்விப் பணியை மேம்படச் செய்து மேல்நிலைப் பள்ளி முதல் மருத்துவக் கல்லூரி வரை பன்னிரெண்டு கல்வி நிறுவனங்களை நிறுவினார். ஆன்மிகத்தில் இருந்து கொண்டு கல்விக்கு அடிகளார் ஆற்றும் தொண்டு மிகவும் போற்றுதலுக்குரியது.//

பாவம் தொண்டு ரெம்ப ஓவரா போயிட்டதாலத்தான் ரெய்டு. அடங்கோத்தா கல்விங்கறது லைசென்ஸ்ட் க்ளப், பார் அண்ட் ரெஸ்டாரண்ட் மாதிரி ஒரு வியாபாரமாகி பல யுகமாகிப்போச்சு. இதுல சேவை, கார சேவைல்லாம் எங்க வருது.

அடிகளாருக்கு படிப்பு ஏறலை, வாத்தியார் வேலைல தொடர முடியல. நார்மல் பீயிங்ஸ் எல்லாம் வேற வேலை பார்க்க போயிருக்கும்.ஆனால் அடிகளார் மாதிரி கேரக்டர் எல்லாம் எசன் ட் ரிக்.. தாளி எனக்கா படிப்பு வராது வாத்தியாராகி காட்டறேன். தாளி என்னையா வாத்தியார்  வேலைலருந்து தூக்கறிங்க ( ஓடிப்போக வைக்கிறிங்க) - நானே ஸ்கூல்,காலேஜ் நடத்தறேம்பாருங்கற கேரக்டர் இதெல்லாம்.

இத்தீனி வருஷம் அருள்வாக்கு சொல்லியும் இந்த கேரக்டர் மாறலை பாருங்க. தாளி எனக்கா ரெய்டு விடறிங்க. நான் விடறேன் ரெய்டுங்கற சைக்காலஜி இது. ( ஆமாங்கண்ணா ஜா -ஜெ பீரியட்ல ஜானகி அம்மாவுக்கு ஆசியெல்லாம் வழங்கினாரே அப்பாறம் ஏன் ஜா பாவம் போணியாகாம போயிட்டாய்ங்க.

// அருள்மிகு அடிகளாரின் பேச்சு சாதாரண நடையில்தான் இருக்கும். ஆனால் அவர் அருள்வாக்குக் கூறுமிடத்து நடை மாறிவிடும். //

இதெல்லாம் மனவியாதில, சைக்காலஜில சகஜமப்பா..


//தத்துவங்கள் சரளமாகவும், வேகமாகவும் இருக்கும்//

ஒன்னு ரெண்டையாச்சும் எடுத்துக்கிட்டு கிழிக்காம விடுவமா என்ன? வெய்ட் ப்ளீஸ்

//அருள்வாக்கைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினம்தான். எல்லோருக்கும் ஓரளவுக்குத்தான் புரியும். மகளிர் அறநிலைக்கு அருள்வாக்கு கூறும்போது மெதுவாகவும், வேகமாகவும் கூறும்போது புரிந்துகொண்டு எழுதுவது சற்றுக் கடினமாக இருக்கும்.//

த பார்ரா இதான் சக்ஸஸ் ஃபார்முலாவா.. இனிமே ஜாதக பலன் எழுதறப்ப இதையே ஃபாலோ பண்ணீர வேண்டியதுதான். மன நிலை பாதிக்கப்பட்டவனோட பேச்சு புரிஞ்சிக்கிற மாதிரியா இருக்கும்

//அருள்மிகு அடிகளார் கடுமையான விரதங்கள் இருப்பதில்லை.//

விரதம்னு போயிட்டா சொந்த ஊர்ல பத்துவட்டிக்கு கடன் வாங்கி, வளையல் மூக்குத்தி அடகு வச்சி மருவத்தூர் வந்து சனங்க  கொட்டிட்டு போறதை எல்லாம் அனுபவிக்கிறது எப்படியாம்?

//விழா நாட்கள், விசேட நாட்கள், அமாவாசை, பெüர்ணமி ஆகிய நாட்களில் மெüன விரதம் இருப்பார். மெüன நாட்களில் அவசியம் ஏற்பட்டால் சுவற்றிலும், கையிலும் வலதுகை ஆட்காட்டி விரலால் எழுதிக் காட்டுவார்.//

த பார்ரா.. உண்மையான மவுன விரதம்னா என்ன?  மைண்ட்ல எண்ணங்களே நின்னு போயி அதனால பேச வேண்டிய அவசியமே இல்லாம போயிர்ரதுதான். இவரு விரல்ல எழுதிக்காட்டுவாராம். இந்த மயித்துக்கு டிவி கேம்பியர்ங்க மாதிரி பேசித்தள்ளவேண்டியதுதானே .என்ன  மயித்துக்கு மவுன விரதம்?

அடிகளார் படம் தனியா கிடைக்கும். ஆனா ஆதிபராசக்தி படம் தனியா கிடைக்காது. ஜூவியும் அடிகளாரும் ஒரு தாட்டி காட்டா குஸ்தில இறங்கின மேட்டர் ஞா வருதா?

சிகப்பாடையோட எஃபெக்ட் என்ன? இவர் ப்ரிஸ்க்ரைப் பண்ற திஷ்டி முதல் தியானம் வரை மக்களுக்கு எந்தளவுக்கு உதவுது  . இந்த க்ரூப்ல சேர்ரவுக நோக்கம் என்ன? அவிக சைக்காலஜி என்ன? ஓம் சக்தி க்ரூப்ல மட்டும் அடல்ட் ரி ஏன் அதிகமா நடக்குது .இது மாதிரி   நிறைய வில்லங்கமான கேள்விகளுக்கெல்லாம் பதில் .....
( அடுத்த பதிவில்