Saturday, October 23, 2010

சேர்ந்து வாழ சுப்ரீம் கோர்ட் நிபந்தனை

கண்ணாலம் கட்டாமயே சேர்ந்து வாழனும்னா அதுக்கு நீங்க சுப்ரீம் கோர்ட் நிபந்தனைகளை பின்பற்றனும்

1.ரெண்டு பேருக்கும் திருமண வயது வந்திருக்கனும் ( மைனர் பெண்ணோட வாழ்ந்தா களிதான்)
2.ரெண்டு பேருக்கும் வேற பார்ட்டியோட கண்ணாலமாகியிருக்க கூடாது ( அப்போ அது அடல்ட்ரி)

3.ச்சொம்மா வீக் எண்ட்ல மட்டும் கட்டிக்கிட்டு படுத்தா போதாது குறிப்பிட்ட காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கனும்.

4.கணவன் ,மனைவிங்கற ஃபீலிங் வந்திருக்கனும்

5.ஊர் உலகமும் உங்களை கணவன் மனைவியா அங்கீகரிச்சிருக்கனும்

( என் பாலிசி என்னன்னா கண்ணாலமானவங்க எல்லாம் கண்ணாலமே நடக்கலைன்னு  நினைச்சு சேர்ந்து வாழறது பெட்டர். அதுலயும் இன்னொருத்தன் கிட்டே விவாகரத்து வாங்கிட்டு வந்த பார்ட்டினு நினைச்சா இன்னம் த்ரில்லா இருக்கும் )

பட்டா இல்லாத நிலத்துல எவ்ளதான் உழுதாலும் வெள்ளாமை வீட்டுக்கு வந்து சேருமா?

முக்கியமா நிலத்துக்கு சொந்தக்காரவுக ரோட்ல போறவனை எல்லாம் நிலத்துல இறக்கி விட்டுட்டா ..பஞ்சாயத்துக்காரன் தானே மண்டைய பிச்சிக்கனும் . ரோசிங்கப்பா..

விலங்கு வேணாம்னு தானே விலங்கா வாழறது. அப்பாறம் என்னத்தை ஜீவனாம்சம் கேட்டு கோர்ட்டுக்கு போறதும் - கேஸு நடத்தறதும் - ஜட்ஜுங்க பாவம் .. அயோத்தி பஞ்சாயத்து மாதிரி நடுவாந்தரமா தீர்ப்பு கொடுக்க எந்த அளவு மண்டைய உடைச்சிக்கிட்டாய்ங்களோ?